Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Monday 28 October 2013

"சமூக விரோதிகளின் களமாகிறதா "கே தளங்கள்?" (Gay Sites)...

              டந்த வாரம் பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்ட சென்னையில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களை பற்றி படித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்... பரவலாகவே பலருக்கும் அதிர்ச்சியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ள அந்த கொலைகளை பற்றிய ஒரு சின்ன முன்னுரையை இப்போ பாருங்கள்....
வேளச்சேரியை சேர்ந்த கூட்டுறவு வங்கி மேலாளர் நாகராஜன் (வயது 57), வெளியிலிருந்து பார்ப்பவர்களை பொருத்தவரை நிறைவான குடும்பத்தின் தலைவர் அவர்... வெளிநாட்டில் குடியேறிய மகளை பார்க்க, மனைவி சென்றிருந்த நேரம் கொலைசெய்யப்பட்டிருக்கிறார் நாகராஜன்... காசிமேடு பகுதியில் இருக்கும் சில இளைஞர்களுடன் இவருக்கு ஓரினசேர்க்கை தொடர்பு இருந்துள்ளது... அந்த இளைஞர்களுக்கு பணமும், மதுவும் கொடுத்து தன் இச்சைகளை அதுவரை எவ்வித சிக்கலும் இல்லாமல் தீர்த்து வந்தார்... அப்படி வழக்கம்போல சில இளைஞர்களை வீட்டிற்கு அழைத்து, மது அருந்திய சமயத்தில்தான் அந்த இளைஞர்களால் நாகராஜன் கொலை செய்யப்பட்டிருக்கிறார்... கொலை செய்த நான்கு நபர்களில் மூவர் பதினெட்டு வயதை தாண்டாத சிறுவர்கள் என்பது இங்கு மேலும் அதிர்ச்சிக்குரிய விஷயம்... பணம், நகை, இருசக்கர வாகனம் என எல்லாவற்றையும் திருடிக்கொண்டு தலைமறைவான அந்த நால்வரும், இப்போது காவல் துறையின் கைது வளையத்திற்குள்....
இந்த வேளச்சேரி சம்பவம் நிகழ்ந்து இரண்டொரு நாட்களில் இன்னொரு கொலை சம்பவம் தாம்பரம் அருகே நிகழ்ந்தது.... கணினி நிறுவனம் ஒன்றில் வடிவமைப்பாளராக பணிபுரிந்து வந்த விஜயகுமார் (24 வயது), தன் பிளானட் ரோமியோ தளத்தின் மூலம் உருவான நண்பர்கள் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார்... வழக்கமாக பிளானட் ரோமியோ மூலம் படுக்கைக்கு நாள் குறிக்கும் எண்ணற்ற நபர்களை போலத்தான் விஜயகுமாரும், அந்த பரிச்சயம் இல்லாத மூன்று நபர்களை வீட்டுக்கு அழைத்துள்ளார்... அழைத்த நண்பர்கள், பணம் மற்றும் பொருளுக்காக கொலைகாரர்களாக மாறிவிட்டதுதான் அதிர்ச்சியின் உச்சம்....
நிச்சயம் இந்த இரண்டு சம்பவங்களும் அதிர்ச்சியை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்காது... முன்பின் பரிச்சயம் இல்லாத நபர்களை, வெறும் “asl” மூலம் நம்பி, படுக்கை அறை வரை அழைத்து செல்லும் அத்தனை நபர்களுக்கும் இந்த கொலைகள் அடித்திருப்பது ஒரு “அபாய அலாரம்”...
இதுவரை பணம், நகைகள், செல்போன், ஏடிஎம் கார்டுகள், இரு சக்கர வாகனம் என்று மட்டுமே தன் எல்லைகளை கட்டுப்படுத்தியிருந்த ஆபத்துகள், இப்போது கொலை மூலம் அடுத்த பரிணாம வளர்ச்சியை எட்டி இருக்கிறது...
உண்மையை சொல்லனும்னா இப்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடும் பெரும்பாலானவர்கள் ஓரின சேர்க்கையாளர்கள் இல்லை.. பிளானட் ரோமியோ போன்ற ஓரின சேர்க்கை தளங்களில், தங்களை உறுப்பினர்களாக இணைத்து புகைப்பட பரிமாற்றம் மூலம் ஒருபால் ஈர்ப்பு நபர்களின் வீட்டுக்கு சென்று கொள்ளைகளில் ஈடுபடுவது என்பது “திருடர்களின் விஞ்ஞான வளர்ச்சி”...
இது அப்படி சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரொம்ப எளிதான முறையாகிவிட்டது... வழக்கமாக நம் வீட்டிற்கு பால் பாக்கெட் போடும் நபரை நம்பாமல் வாசலோடு பேசி அனுப்பும் நாம், வீட்டிற்கு தேவையான விற்பனை பொருட்களை கொண்டுவரும் பிரதிநிதிகளை வாசலில் கூட அனுமதிக்க தயங்கும் நாம் எவ்வித முன் யோசனையும் இல்லாமல், வெறும் “asl, likes, ur number” மூலம் மட்டுமே ஒருவரை படுக்கை அறை வரை அழைத்து செல்வதுதான் அந்த சமூக விரோதிகளுக்கு வசதியான அம்சமாகிவிட்டது... அதுமட்டுமில்லாமல், அப்படி வீட்டிற்கு வரும் நபர்கள் நம்மை மிரட்டி நம் உடமைகளை கொள்ளை அடிக்கும்போதும் கூட, பலராலும் காவல்துறையை நாடமுடிவதில்லை... காரணம், அந்த விஷயம் பூமராங் மாதிரி ஆபத்து நம்மையே திருப்பி தாக்கும் என்பதால்தான்... அதாவது, நம் பாலீர்ப்பு வெளியே தெரிந்துவிடும் என்கிற பெரும்பாலானோரின் அச்சம்தான் அதற்கு காரணம்....
இந்த எளிமையான அணுகுமுறைகளும், நம் அச்சமும் மேலும் மேலும் இந்த சமூக விரோத நபர்களை நம்மை நோக்கி நகர்த்துகிறது.... இதன்மூலம் இதுவரை ஒருபால் ஈர்ப்பு நபர்களுக்காக மட்டுமே செயல்பட்டு வந்த பிளானட் ரோமியோ போன்ற சமூக தளங்கள், இப்போது கொலை மற்றும் கொள்ளைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்கு புகுந்த வீடாக மாறிவருகிறது....
ஊடகங்கள் இதை ஓரின சேர்க்கையால் விளையும் சமூக குற்றங்கள் என்று வர்ணிக்கிறது... அது தவறான வாதம்... இந்த ஓரின சேர்க்கையை தங்களுக்கு வசதியான களமாக பிடித்துள்ள சமூக விரோதிகளின் செயல்களை வைத்து, இந்த கொலைகளுக்கு மொத்தமாக “ஓரின சேர்க்கை சமூக விரோத செயல்கள்” என்கிற சாயத்தை பூசிவிடாதீர்கள்....
கடந்த ஆண்டு இதே போல நிகழ்ந்த இரண்டு கொலைகளையும் நண்பர் ஒருவர் மூலம் அறிந்தேன்....
சென்னை பழவந்தாங்கலில் கொலைசெய்யப்பட்ட பள்ளி ஆசிரியர் ராமசுந்தர மணியின் இறப்பும் அதே போன்ற ஒரு ஆபத்தின் விளைவுதான்... தன் நண்பரை மது மூலம், மதியிழக்க வைத்து உறவில் ஈடுபட வைக்க முடியும் என்று நம்பிய எண்ணற்ற நபர்களை போலத்தான் அந்த ஆசிரியரும்... மதுவை கொடுத்து அத்துமீற முயன்ற ஆசிரியரின் தலையில், அந்த மது புட்டியின் மூலமே ஓங்கி அடித்து பதில் தந்துவிட்டார் அவர் நண்பர் முத்துக்குமார்....
அதே போல, தனியார் நிறுவன மேலாளராக பணியாற்றிய சசி குமார் என்ற வாலிபரை, சமூக வலைத்தளம் மூலம் பொது இடத்திற்கு வரசொல்லிய  செந்தில் என்கிற நபர்,  சசிகுமாரை கொலை செய்து, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து சென்றுவிட்டார்.... இந்த சம்பவத்தை மிக சாதுர்யமாக சிசி டிவி காமிரா மூலம் கண்டுபிடித்து, கடந்த வருடம் செந்திலை கைது செய்தது காவல்துறை....
நாம் முன்பு பார்த்த இரண்டு கொலைகளுக்கும், இந்த இரண்டு கொலைகளுக்கும் நிறைய வித்யாசம் உண்டு... “ஸ்ட்ரைட் நண்பனை” செட்யூஸ் செய்ய ஐடியாக்கள் தேடிக்கொண்டிருக்கும் அத்தனை நபர்களுக்கும், பழவந்தாங்கல் பள்ளி ஆசிரியரின் கொலை ஒரு பாடம்....
அதே போல புத்திசாலித்தனமாக பொது இடத்தில் சந்தித்து, தங்கள் உறவை படுக்கை அறையை நோக்கி நகர்த்தலாம் என்கிற எண்ணத்தில் இருப்பவர்கள் பலருக்கும் சசிகுமாரின் கொலை ஒரு பாடம்....
அப்போ என்னதான் செய்ய சொல்றீங்க?.. “வீட்டுக்கு அழைக்கக்கூடாது, அவங்க சொல்லும் இடத்துக்கு போகக்கூடாது, நம் நண்பர்களை செட்யூஸ் செய்யக்கூடாதுன்னு வரிசையா சொன்னா, காமத்தை முழுசா விட்டுவிட சொல்றீங்களா?”னு சிலர் கேட்பீர்கள்....
நிச்சயம் நான் அப்படி சொல்லவில்லைங்க... பசி, தூக்கம் போல காமமும் மனிதனுக்கு இருக்க வேண்டிய இயல்பான உணர்வுதான்... அதை முழுமையாக முடக்க நாம் ஒன்றும் ஞானிகள் இல்லை... அதே நேரத்தில், குறைத்துகொள்வதில் நமக்கு அதிகம் சிரமம் இருக்காதே!... பசியையும் தூக்கத்தையும் போல, அளவோடு காமத்தையும் அணுகுங்கள்னுதான் சொல்றேன்.... நான் மேற்சொன்ன நிகழ்வுகளின் ஆபத்தை நீங்கள் புரிந்துகொண்டாலே உங்களுக்கு நிச்சயம் ஒரு பயம் வரும், அந்த பயம் என்கிற விஷயம் தான் நமக்கான  “தற்காப்பு உணர்வு மூலம்” ஒரு எல்லையை வகுத்துக்கொடுக்கும்....
நாம் எவ்வளவுதான் சொன்னாலும் சிலரால் காம எண்ணங்களை தவிர்க்க முடியாது... அப்படிப்பட்டவர்களுக்கு சில பாதுகாப்பு வழிமுறைகளை சொல்கிறேன், குறைந்தபட்சம் அப்படிப்பட்டவர்களின் உயிரையும், உடமையையும் பாதுகாக்கவாவது இந்த வழிமுறைகள் பயன்படும் என்று நம்புகிறேன்...
·        வெறும் சில நிமிட சாட் மூலம் மட்டுமே ஒருவரை நம்பி படுக்கை அறை வரைக்கும் அழைத்து செல்ல வேண்டாம்... குறைந்தபட்சம் ஒரு சந்திப்புக்கு முன்பு நான்கு முறைகளாவது சம்மந்தப்பட்டவருடன் அலைபேசியில் பேசுங்கள்... பெரும்பாலும் சமூக விரோத நபர்கள் பொதுத்தொலைபேசி மூலமே பேசிடுவார்கள், காவல்துறையில் சிக்கிக்கொள்ள தயங்கி தங்கள் அலைபேசி மூலம் பேசுவதை தவிர்ப்பார்கள்....
·        முதல் சந்திப்பை மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வைத்துக்கொள்ளுங்கள்... சமூக விரோதிகள், பொது மக்கள் மத்தியில் உங்களோடு இணைந்து பொது இடங்களில் செல்வதை விரும்பமாட்டார்கள்.....
·        ஒருவர் பார்வை மூலம், அவர் ஒருபால் ஈர்ப்பு நபரா? என்பதை உங்களால் ஓரளவு கணிக்க முடியும்... கொஞ்சம் சந்தேகம் வந்தாலும், மேற்கொண்டு அடுத்த கட்டம் செல்வதை தவிர்த்துவிடுங்கள்....
·        சமூக வலைத்தளம் மூலம் ஒருவரை சந்திக்க இருக்கிறீர்கள் என்றால், உங்களை மேலும் அழகுபடுத்திக்கொள்ள “செயின், மோதிரம், விலையுயர்ந்த வாட்ச், ஏடிஎம் அட்டைகள், கரன்சி நோட்டு கத்தைகள்” போன்றவற்றோடு சென்று சந்திக்காதீர்கள்...
·        உங்கள் வீட்டிற்கு வரும் நபர், அத்துமீறும் நிலைமை வந்தால், உங்கள் பயத்தை அவரிடம் காட்டிவிடாதீர்கள்... கொஞ்சம் எகிறி பாருங்கள், உடனே கதவை திறந்து வெளியே செல்ல இருப்பதாக அவனை நம்ப வையுங்கள்.... அவனை பயமுறுத்த முயற்சி செய்யுங்கள், உங்கள் பயத்தை வெளிக்காட்டி விடாதீர்கள்...
·        எக்காரணத்தை முன்னிட்டும் “க்ரூப் செக்ஸ்”இல் ஈடுபடுவதை தவிருங்கள்... பெரும்பாலான கொலைகள் மற்றும் கொள்ளைகளில் இந்த க்ரூப் செக்ஸ் விஷயம் அதிகம் அடிபடுகிறது என்பதால் இதை சொல்கிறேன்...
இப்படிப்பட்ட விஷயங்கள் மூலம் ஓரளவு ஆபத்துகளின் பிடியில் இருந்து நீங்கள் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது.... என்றாலும், முன்பின் தெரியாத, அறிமுகமில்லாத நபர்களுடன் “இன்ஸ்டன்ட்” உறவுகளை தவிர்ப்பது மூலம் மட்டுமே நீங்கள் முழுமையான பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துவிட்டதாக அர்த்தம்... உங்களை ஆபத்துகள் சூழ்ந்திருக்கிறது என்பதையும், ஆபத்தானவர்கள் நோக்கிக்கொண்டே இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து செயல்பட்டால் நிச்சயம், நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பது மட்டும் உறுதி...
(சில தகவல்களை தந்து கட்டுரைக்கு உதவிய நண்பர்கள் திருப்பூர் நவீன் மற்றும் சரத் ஆகியோருக்கு நன்றிகள்!)

நன்றி,
உங்கள் விஜய் விக்கி...

23 comments:

  1. உண்மை தான்
    உங்களின் ஆலோசனைக்கு நன்றி.
    ஃபேஸ்புக் ல நான் போட்ட ஸ்டேடஸ் நினைவுக்கு வருகிறது.

    ஒரே நாள் சாட்டிங்கில் 25000 ரூபா ஃபோன் வேண்டும் என ஒர்ததன் கேட்டான்

    நான் அதை காபி செய்து ஸ்டேடஸாக போட்டேன்

    பிறகு அதை படித்து விட்டு என்னை திரும்ப கெட்ட வார்தை பேசி மிரட்டினான்.

    அதையும் ஸ்டேடஸாக போட்டவுடன் ப்ளாக் செய்து விட்டான்

    தைரியமாக இருந்தால் யாரும் ஒன்றும் செய்ய முடியாது

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஜய்.... நீங்க போட்ட அந்த ஸ்டேட்டஸ் எனக்கு நினைவிருக்கு... உங்க பதில் நடவடிக்கை ரொம்பவே சரியான ஒன்றுதான்...

      Delete
  2. Nalla post na.. Neenga sonna mathari GROUP SEXA first avoid pannanum.. Pona week nadantha engineer kolai pathi DHINA THANTHI potta news pathingala na.? Romba mosama comment pannirunthanga.. Media level la supportku edhavadu pannanum na.. Endru theerumo intha suthanthira thagam..? Kastam na..

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி... அந்த பத்திரிகை செய்தி நானும் பார்த்தேன்.... அதுக்கு நாம கோபப்படுவதைவிட, உண்மையான நிகழ்வை எடுத்து சொன்னாலே இப்போதைக்கு போதும்... நிச்சயம் எல்லாம் மாறும் தம்பி...

      Delete
  3. Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி பாலா...

      Delete
  4. விஜய், நல்ல இடுகை. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துகளுக்கு நன்றி ராகுல்...

      Delete
  5. நன்றி மில்ட்டன்...

    ReplyDelete
  6. nandrikal.mikavum sorbamana retil, ennai ponravarkal, massage seithu sxm tharukirom. Anaal bala per panam koduppatha enru enni, intha mathri vipareetha seyalkalil maatti kollapadukiraarkal. mila sirya panam kodukka maruthu kadaiiyil, perum panam kollai povathudan, uyirum parikka padukirathu. varumayil irukkum nalla nanarkalukku vasathi padaitha nanparkal panam koduthu uravu kondu udavuvathil enna thavaru. athu nimmathiyaana uravakka irukkum. avasarapattu alaikirarkal. nalla homo nanpanai adayalam kandu kondal avarkalitam natpu paraatuvathe nallathu.

    ReplyDelete
  7. very good article.. must be advertised broadly to create awareness..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பா.... ஏதோ என்னால் முடிந்ததை எழுதி, சில இடங்களில் இணைப்பையும் கொடுத்துவிட்டேன்.... மேற்கொண்டு இதை கொண்டுசெல்ல வேண்டியது உங்களை போன்ற நல்ல உள்ளங்கள்தான்...

      Delete
  8. a wonderful message to all of us by Mr.Vijay. Thanks Vijay for sharing this warning message

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பாலா...

      Delete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. Useful article to our people vikki. Thank you.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி சேகர்...

      Delete
  11. Vijay ungaloda email I'd kidaikuma... I want to discuss u a lot..ung a post ellame artham ullatha iruku..krishna

    ReplyDelete
    Replies
    1. வலைப்பூவின் வலது பக்கத்தில் எனது மின்னஞ்சல் முகவரி இருக்கும் நண்பா....

      Delete
  12. Vijay ungaloda email I'd kidaikuma... I want to discuss u a lot..ung a post ellame artham ullatha iruku..krishna

    ReplyDelete
  13. Very informative article. Such an incident happened to me and so I can relate to it. The character assassination began the very moment police came into picture.
    PR should be made a secure place, but how?

    ReplyDelete
  14. valithalangalil number parimatram seyivadai kurith ungal karuthu matrum photo share kurithum sollungal nanbare veli nttil ullavarudan number photo share seyumbodu prachanigal edavadu erpaduma nanbare

    ReplyDelete