Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Thursday 22 November 2012

மகாத்மா காந்தியின் "ஓரின காதல்"....



         தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களை பற்றிய சர்ச்சைகளுக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது... ஆனால், தேசத்தந்தை என்கிற தெய்வத்திற்கு இடமான இடத்தில் அவரை பார்ப்பதால், ஒரு இயல்பான மனிதனுக்கு உரிய சில குணாதிசயங்களை அவர் பெற்றிருந்தாலும், அதை நம்ப பலர் மறுக்கிறார்கள்.... அப்படி ஒரு விஷயம்தான் காந்தியின் ஒருபால் ஈர்ப்பு உணர்வும்.... வரலாற்று அறிஞர் ஜோசப் லெலிவெல்ட் வெளியிட்ட "மகாத்மா காந்தியின் இந்திய போராட்டம்" என்ற புத்தகத்தில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.... இந்த கருத்து இடம்பெற்றிருப்பதால் இந்த புத்தகத்தை நம் நாட்டில் தடை செய்தனர்.....

            மகாத்மா காந்தி அவர்கள் ஜெர்மன் நாட்டின் யூத இனத்தை சேர்ந்த உடல் பயிற்சியாளர் ஹெர்மன் கல்லென்பக் என்பவர் மீது காதல் கொண்டிருந்ததாக அந்த புத்தகத்தில் ஜோசப் குறிப்பிட்டுள்ளார்..... ஹெர்மன் கல்லென்பக் தன் வாழ்நாள் முழுவதும் திருமண பந்தத்தில் இணையாதவர் என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம்.... இருவருக்கும் உண்டான நாற்பத்தி ஒரு வருட நட்பில், தங்களுக்குள் பகிர்ந்துகொண்ட பல கடிதங்களில் இருவரும் தங்களது ஒரு பால் ஈர்ப்பு காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.... இருவரும் காதலை அவ்வளவு வர்ணித்து எழுதியுள்ளதாக கூறுகிறார்.....  அந்த ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட கடிதங்களை லண்டனிலிருந்து நம் இந்திய அரசு 1.28 மில்லியன் டாலர் பணம் கொடுத்து வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்க விஷயம்.... வேறு யார் கையிலும் அந்த கடிதங்கள் கிடைத்துவிடாமல், பலத்த சிரத்தை எடுத்து இந்திய அரசு இந்த கடிதங்களை ஏன் வாங்க வேண்டும்? என்பது பலரது கேள்வியாக எழுந்துள்ளன.... 

          மகாத்மா காந்தியின் ஒருபால் ஈர்ப்பு எண்ணத்தை மறைப்பதில் அரசு இவ்வளவு அக்கறை காட்டுவது பல வரலாற்று அறிஞர்களையும் கேள்வி கேட்க வைத்துள்ளது.....

         கல்லென்பக்கின் படத்தை படுக்கை அறையில் மாட்டிவைத்து, அதை பார்த்து ரசிப்பதாக காந்தி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.... கல்லென்பக் இறந்த பின்பு பல கடிதங்களை காந்தி எரித்துவிட்டதாக கூறப்படுகிறது..... பயத்தாலா? அல்லது விரக்தியாலா? அந்த கடிதங்களை எரித்தார் என்பது கேள்விக்குறிதான்..... இந்திய அரசோ, அந்த கடிதங்கள் உட்பட காந்தியின் அனைத்து பொருட்களையும் பொக்கிஷம் போல சேமித்து வைக்கவே அந்த கடிதங்களை வாங்கியதாக கூறுகிறது..... எது எப்படியோ, இனி வரும் காலங்களில் இதைப்பற்றிய பல கேள்விகளுக்கு இந்தியா பதில் அளித்தே ஆகவேண்டும்.... கடவுள் கூட சமபால் ஈர்ப்பில் தொடர்புடையவராக நம்பும் நாம், காந்தியையும் அவரின் உணர்வுகளையும் மறைத்து , விஷயங்களை திரிப்பது என்பது காந்திக்கே நாம் செய்யும் துரோகம்தான்....

மகாத்மாவிற்குள் இருக்கும் உன்னத ஆத்மா இதை பார்த்து சிரித்துக்கொண்டு இருக்கிறது.....

No comments:

Post a Comment