(இந்த கட்டுரை முழுவதும்
என்னுடையது கிடையாது... பேஸ்புக் பிரபலம் திரு கிஷோர் சுவாமி அவர்களின் பேஸ்புக்
ஸ்டேட்டஸ் பலவற்றையும் தொகுத்து இங்கே பதிந்திருக்கிறேன்... இந்து மதத்தின் மீது
தீவிர பற்று கொண்டவராக இருந்தாலும், கிஷோர் அவர்களின் பாலீர்ப்பு தொடர்பான எண்ணங்கள்
முற்போக்கு சிந்தனை நிறைந்தவை... மத ரீதியிலான உதாரணங்களின் வழியாகவே ஒருபால்
ஈர்ப்பை அங்கீகரிக்க மதவாத அமைப்புகளுக்கு கோரிக்கை விடுக்கும் கிஷோர் அவர்களின்
பதிவுகள் உங்களுக்காக.... எங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து குரல் கொடுக்கும்
கிஷோர் அவர்களுக்கு நன்றிகள்!)
ஸ்டேட்டஸ் 1..
இது கொஞ்சம் 18 + ரக
பதிவு என்றும் சொல்லலாம் தான் .... ஆனால் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை கேள்வி கேட்க
வேண்டிய விஷயங்களில் முக்கியானவை .
ஓரின சேர்கை குறித்து ஆர் எஸ் எஸ் என்ன
சொல்கிறது ? அது கூடவே கூடாது , தடைச்
செய்யப் பட வேண்டும் என்கிறது . சரி . சாவர்க்கர் ஓரின சேர்கையில் ஈடு பாடு
கொண்ட்டவராக இருந்தார் என்பதைக் கூட ஒதுக்கி வைத்து விடுவோம் . நாம் கேட்கப்
போகும் கேள்வி ஓரின சேர்க்கையை எல்லோரும் ஏற்க வேண்டுமா இல்லையா என்பது
பற்றியதில்லை .
நமது கேள்வி , தனி
மனித உரிமைகளில் ஆர் எஸ் எஸ் இன் நிலைப்பாடு ஹிந்து மதத்திற்கு ஒத்து இருக்கிறதா
என்பது தான் . ஓரினச் சேர்க்கையை ஆர் எஸ் எஸ் ஏற்கவில்லை என்றாலும் ஹிந்து மதம் தவறு
என்று சொல்லவில்லை . அதற்கு ரிக் வேதம் முதற்கொண்டு பல உதாரணங்களை என்னால் முன்
வைக்க முடியும் ....
உதாரணத்திற்கு சிவ புராணத்தை எடுத்துக்
கொள்வோம் .
சிவ புராணத்தின் படி , கார்த்திகேயன் , போர்களின் தலைவன் . ஞானத்தின் இருப்பிடம்
, சம்பிரதாயங்களின் உறைவிடம் . சுப்பிரமணியன் என்றும் குமரா
( மரா என்கிற அரக்கனை அழித்தவர் ) என்றும் முருகன் என்றும் அவரை அழைக்கிறோம்
. குஹா என்றும் அழைக்கிறோம் ( குகைகளின் வாழ்பவர்) ...
ஆனால் முக்கியமாக அவருக்கு இருக்கும் பெயர்
ஸ்கந்தன் என்பது தான் இப்பொழுது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது . சாந்தன்
என்கிற பெயர் , ஸ்கந்த்ரி என்கிற சொல்லிலிருந்து வந்தது , அதாவது , தாக்கி , பாய்ந்து எழுந்து
சிந்துவது என்பது தன அதன் பொருள் . சிந்தப் பட்ட விந்தின் விதை என்பது தான் உள்
அர்த்தம் .
மகாபாரதத்தில் என்ன குறிப்பிடப் பட்டுள்ளது ? முருகன் , அக்னியின் மகன் . அக்னியின் விந்தை
க்ரித்திகைகள் என்கிற ரிஷி பத்தினிகள் மீது மோகம் கொண்டு அவர்களில் ஒருவரான ஸ்வாஹா
என்பவற்றின் கையில் சிந்திவிட , அவர் அதை குளத்தில் எரிந்து
விட , அதிலிருந்து முளைத்தவர் ஸ்கந்தன் என்கிற கார்த்திகேயன்
என்பது தான் . க்ரித்திகைகள் பாலூட்டி வளர்த்தால் அவரை கார்த்திகேயன் என்று
அழைப்பதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது .
சரி அது மகாபாரதம் , அடுத்து சிவ புராணத்தில் என்ன சொல்லப் பட்டுள்ளது ? சிவனின்
விந்தை முழுங்கிய அக்னி யின் செயலை கண்டித்தார் பார்வதி . அது குற்றம் என்றும்
தவறு என்றும் அவர் சொல்ல .. அக்னிக்கே உடல் முழுவதும் எரிச்சல் ஏற்பட , ரிஷி பத்தினிகளின் கருவில் அந்த விந்தை அக்னி ஊற்றிட , அவர்கள் அதை கங்கையில் ஊற்றிவிடுகிரார்கள் . கங்கையிலிருந்து ஒரு புள்
வெளியில் விழுந்த அந்த விந்து அழகிய கார்த்திகேயனாக உருவெடுக்க , அந்தக் குழந்தையை எடுத்து வளர்கிறார் பார்வதி தேவி .
ஸ்கந்த புராணம் ( 1.1.27)
என்கிற பாகத்தில் வரும் வரிகளில் குறிப்பிடுவது என்ன ? அக்னி , ஒரு ரிஷியாக வேடமணிந்து , சிவனும் பார்வதியும் உறவு கொண்டிருந்தப் பொழுது இடையில் நுழைந்து ,
சிவனின் விந்தை தனது கையில் வாங்கி அதை உட்கொள்கிறார் , அதன் விளைவில் பிறந்தவர் தான் கார்த்திகேயன் ...
சரி , இப்பொழுது மேலே
குறிப்பிட்டுள்ளவை அனைத்துமே ஹிந்து மதத்தின் உயரிய படைப்புக்கள் தான் , அதில் சந்தேகமே இல்லை . ஓரின சேர்கை ஏற்கப் பட வேண்டுமா வேண்டாமா என்கிற வாதத்திற்க்குள்ளும்
நான் செல்லவில்லை . அது தனி மனித விருப்பு வெறுப்பு சார்ந்தது ... ஆனால் ஹிந்து
மதம் அதைச் சகித்துக் கொள்வதாகவே புராணங்களும் கூட நமக்கு உணர்த்துகிறது ....
ஆனால் ஆர் எஸ் எஸ் சகித்துக் கொள்ள மறுக்கிறது .
இப்பொழுது சொல்லுங்கள் ஹிந்து மதத்தின்
அடிபப்டையான சகிப்புத் தன்மைக்கு எதிரானது தானே ஆர் எஸ் எஸ் ?
******************************
ஸ்டேட்டஸ் 2…
கீர்த்திவாச இராமாயணம் , வங்க தேசத்தில் ( மேற்கு வங்கம் ) போற்றப் படுகிறது .... பத்ம புராணத்தை
அடிபப்டையாகக் கொண்டு படைக்கப் பட்டதாக கருதப் படுகிறது , தமிழில்
நாம் கம்ப இராமாவதாரத்தை எப்படி போற்றுகிறோமோ அதைப் போல அவர்கள் கீர்த்திவாச
இராமாயணத்தை போற்றுகிறார்கள் ...
அதில் ஒரு சுவாரசியமான விஷயம் குறிப்பிடப்
பட்டுள்ளது ... அது மட்டுமில்லாமல் சுஷ்ருத சம்ஹிதம் என்பதை அடிப்படையாக வைத்து
மேற்கோள் காட்டப் படும் விஷயம் அது .
என்ன சொல்கிறது சுஷ்ருத சம்ஹிதம் ? - இரண்டு பெண்கள் உறவு கொண்டு அதனடிப்படையில்
பிறக்கும் குழந்தைக்கு எலும்புகள் இருக்காது என்பது ... வெறும் சதைப் பிண்டமாக
குழந்தை இருக்கும் என்பது தான்
.jpg)
மன்னன் இறந்து விட , வாரிசு இல்லாத அரசாங்கமானது அயோத்தி , இரண்டு
ராணிகளும் சோகத்தில் ஆழ்ந்தனர் , பிரம்மனுக்கும் இந்திரனுக்கும்
கவலை , இதே வம்சத்தில் தானே ஸ்ரீமன் நாராயணன் அவதாரம் எடுக்கப்
போகிறார் , வாரிசு இல்லாமல் வம்சம் எப்படி தழைக்கும் என்று .
இது குறித்து பரமசிவனிடம் முறையிட , சிவ பெருமான்
ராணிகளுக்கு தரிசனம் தந்ததுடன் ......
உங்கள் இருவரில் ஒருவருக்கு மகன் பிறப்பான்
என்று ஆசிர்வதிக்கிறார் ... அதைக் கேட்ட ராணிகள் , " நாங்கள்
இருவரும் விதவைகள் , அப்படியிருக்க எங்களுக்கு எப்படி
குழந்தை பிறக்கும் என்று வினவ .... " நீங்கள் இருவரும் உடலுறவு கொள்ளுங்கள் ,
எனது ஆசிர்வாதத்துடன் உங்களுக்கு மகன் பிறப்பான் என்று கூறி
மறைகிறார் .....
அப்படிப் பிறந்த மகன் பாகிரதன் , சதைப் பிண்டமாக மட்டுமே இருக்க சரையு நதிக்கரையில் அஷ்டவக்ர முனிவரின்
ஆசியினால் அழகிய வடிவைப் பெறுகிறார் , அவரது தந்தை மற்றும் மூதாதையர்கள்
கங்கையை கொண்டு வர முயற்சி மேற்கொண்டதைப் பற்றி அறிந்த பாகிரதன் தனது மூதாதையர்
செய்ய முடியாத செயலான கங்கையை கொண்டு வரும் முயற்சியில் இறங்க ..... கடும்
தவத்திற்குப் பின்னர் கங்கையை மேல் லோகத்திலிருந்து நமக்கு கொண்டு வந்தார் .....
இதை மனதில் வைத்து தான் கடுமையான செயல்களை பகீரத பிரயர்த்தனம் என்று
குறிப்பிடுவதுண்டு ......
சரி இரண்டு பெண்கள் உறவு கொள்வது என்பதை
புராணங்கள் அனுமதிக்கிறது , அப்படிச் செய்யுங்கள் என்று சிவ பெருமானே
கூறுகிறார் .... ஆர் எஸ் எஸ் அதை எதிர்பதேன் ? இரண்டு
பெண்கள் உறவு கொண்டு பிறந்த பகீரதன் கொண்டு வந்த கங்கை புனிதமானது , இரண்டு பெண்கள் உறவு கொள்வது கலாச்சார சீர்கேடா ? என்னப்பா
உங்க லாஜிக்
பி . கு : அந்த வம்சத்தில் அதற்கு பிறகு பிறந்தவர்
தான் ஸ்ரீ இராமர்
********************************
ஸ்டேட்டஸ் 3…
டாக்டர்
சேகர் என்பவர் சபரிமலா பிள்க்ரிமேஜ் (SABARIMALA PILGRIMAGE ) என்கிற புத்தகம் ஒன்றை வெளியிட்டார் , அதில்
அர்த்தசாஸ்திரத்திலும் , மனு ஸ்ம்ரிதியிலும் வரும்
வார்த்தையான அயோனி ( யோனியின் உதவியில்லாத ) என்பது தான் அயோனி ஜாதா என்கிற
பெயருக்கு காரணம் என்றும் , அதுவே ஐயப்பன் என்று பெயர்
மருவியதாகவும் குறிப்பிடுகிறார் . அதாவது யோனியின் உதவியில்லாமல் , இரண்டு ஆண்களின் உறவில் பிறந்த குழந்தை என்று புலப்படுகிறது ....
ஆக ஆண்கள் கடவுளாக இருக்கையில் உறவு
கொள்ளலாம் , மனிதர்கள் என்று வரும் பொழுது தான் ஆர் எஸ் எஸ்
எதிர்க்கும் என்று இதை பொருள் கொள்ளலாம் தானே
**********************************
ஸ்டேட்டஸ் 4…
பிள்ளையார் உருவான கதை குறித்து பல
கோணங்களில் பல புராணங்களில் கூறப் பட்டுள்ளது , அதில்
ஒருபடைப்பு ஜெயத்ரதர் எழுதிய ஹரிசரித சிந்தாமணி ....
அதில் குறிப்பிடப் பட்டுள்ளது என்னவென்றால் ,பார்வதி தேவி குளித்து முடித்தப் பின்னர் அவர் குளித்த நீரானது அவரது உடல்
அழுக்குகளுடன் கங்கையில் சேர்கிறது , அந்தத் தண்ணீரை மாலினி
என்கிற பெண் யானை குடித்து விட , அது கற்பமாகி விடுகிறது ,
அது பெற்ற குழந்தை தான் பிள்ளையார்
ஒரு பென் குளித்த வீரியத்துடன் இருக்கும்
நீரை குடிப்பதால் இன்னொரு பெண்ணுக்கு கரு உண்டானதாக
சொல்லப் பட்டுள்ளது . அதாவது இரண்டு பெண்கள் உறவு கொள்வதற்குச் சமமாக
கூறப்பட்டுள்ளது ....
இதை எதற்காக குறிப்பிடுகிறேன் என்றால் , மதத்தை கொச்சை படுத்துவதற்கு என்பதை விட , பல
கோணங்களில் நமது மதம் பார்க்கப் பட்டுள்ளது , அதை எல்லாமும்
உள் வாங்கும் மதமாக அது இருந்ததால் தான் இன்றளவும் அது நிலைக்கிறது ... இந்த ஆர்
எஸ் எஸ் போன்ற மத வெறி கும்பல்கள் , ஒரு குறுகிய கோணத்தில்
மட்டுமே மதத்தை பார்க்க வேண்டும் என்கிற சிந்தனையை திணிப்பதால் , மதத்தின் அடித்தளத்தையே அசைக்கிறார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்
*****************************
ஸ்டேட்டஸ் 5…
சரி
அடுத்த சுவாரசியமான விஷயத்தை பார்ப்போமா ... இது பத்ம புராணத்தில் இருக்கும்
விஷயம் .
அர்ஜுனன் ஒரு முறை ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவரது
ராச லீலையைக் காண வேண்டும் என்று
கோரிக்கை விடுக்க , அதைக்
அர்ஜுனன் காணக் கூடாது என்று ஸ்ரீ கிருஷ்ணர் தடுத்து விடுகிறார் , ஆனால் அர்ஜுனனோ பிடிவாதமாக இருக்க , திரிபுரசுந்தரி
தேவியை அர்ஜுனன் வணங்கினால் , தனது ராச லீலையை காணும் அனுபவம்
கிட்டும் என்று சொல்கிறார் ....

அர்ஜுனனும் அவ்வாறு வேண்டிக் கொள்ள , தேவி திரிபுர சுந்தரியும் அர்ஜுனனுக்கு காட்சியளித்து , கிழக்கு திசையில் இருக்கும் குளத்தில் குளித்து விட்டு ஸ்ரீ கிருஷ்ணரின்
ராச லீலையை அனுபவிக்குமாறு ஆசி வழங்கி மறைகிறார் ....
அவ்வாறு அர்ஜுனனும் குளத்தில் முங்கி
எழுந்தப் பொழுது , , அர்ஜுனனுக்கு ஆச்சரியம் , அவர்
ஒரு அழகிய பெண்ணாக மாறியிருந்தார் . அர்ஜுநியாக மாறியிருந்த அர்ஜுனன் , பின்னர் அங்கே தோன்றிய கோபியர்களால் அலங்கரிக்கப் பட்டு , ராதா தேவியை வணங்குகிறார் . ராதா தேவி அவரை ஸ்ரீ கிருஷ்ணரிடம் அழைத்துச்
செல்கிறார் .
ஸ்ரீ கிருஷ்ணரின் அங்கங்கள் ஒவ்வொன்றையும் அர்ஜுனி
ரசித்து அனுபவிக்கிறார் .... கிருஷ்ணரின் ஆணுறுப்பு மஞ்சள் நிற துணியால் மூடப்
பட்டிருக்கிறது என்பது வரை விவரிக்கப் படுகிறது . இதை எல்லாம் பார்த்த அர்ஜுனிக்கு
மோகம் தலைக்கேற .... ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனியின் கரங்களை பற்றி இழுத்து , காட்டுக்குள் அழைத்துச் சென்று உறவு கொள்கிறார் ....
உறவு கொண்டு முடிந்தப் பின்னர் , அவரது தோழியரை அழைத்து , அர்ஜுணியை மேற்கில்
இருக்கும் குளத்தில் முங்கி எழச் செய்யச் சொல்லி கட்டளையிட , அவ்வாறே அவர் அழைத்துச் செல்லப் படுகிறார் , குளத்தில்
முங்கி எழுந்தப் பின்னர் அவர் மீண்டும் அர்ஜுனனாக மாறுகிறார் .
அதாவது எல்லா வித இச்சைகளுக்கும் சகிப்புத்
தன்மையை கொண்டிருந்த மதம் தான் ஹிந்து மதம்.
****************************