Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday 21 September 2012

"நெஜமாவா சொல்றீங்க?" - பகுதி 1 ....



 "கவலப்படாத.... நீ நினச்சபடி உனக்கு நடக்க வைக்கிறேன்.... நீ சொன்ன மாதிரி, அடுத்த திருவிழாக்குள்ள எனக்கு தங்கத்துல கலசம் செஞ்சு வை..." என்றார் சாமியாடி.... சாமியாடியிடம் திருநீறை பயபக்தியோடு வாங்கிக்கொண்டு செல்கிறார் கவுன்சிலர் அம்மா....... தஞ்சை திருச்சிக்கு இடையில் வல்லத்திளிருந்து சில தூரம் சென்றால் இருக்கின்ற ஊர் "பசுஞ்சோலை" கிராமம்.... அங்கே இருக்கின்ற காளி கோவிலில் நடக்கும் திருவிழாவில்தான் நாம் பார்த்த மேற்க்கண்ட காட்சி நடந்தது..... ஊரே திரண்டு வந்திருந்தது.... "நம்ம கவுன்சிலர் அம்மா மகன் பெரிய படிப்பு படிச்சிருக்காம்.... அதான் கெடா வெட்டி பூசை போடுறாக" என்று கிடா விருந்திற்கு காரணம் புரியாமல் வந்த பெண்ணிடம் விருந்திற்கான காரணத்தை விளக்கிக்கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.... எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்த அந்த விழாவில் நம் நாயகன் பிரபாகரன் மட்டும் அமைதியாக தயங்கி தயங்கி நின்றுகொண்டிருந்தான்..... அவன் அருகில் வந்த மாணிக்கம், "என்னடா மாப்ள, இங்குண நிக்கிற?... ஊரே உம்பேரை சொல்லி கறி சோறு திங்கிராணுக, நீ இங்க நிக்கிற.... வா, வந்து கெத்தா நில்லுடா" என்று பிரபாவின் கையை பிடித்து இழுத்தான்....
"சும்மா இரு மாமா... நான் என்னத்த சாதிச்சேன்னு இவ்வளவு அளப்பற?.... வெக்கமா இருக்கு மாமா" என்று தயங்கினான் பிரபா....
"என்ன மாப்ள இப்டி சொல்லிட்ட?.... நம்ம ஊர்லயே, நம்ம சொந்தக்கார பயலுகள்ளயே இவ்வளவு படிச்சவன் நீதாண்டா.... மாமா மட்டும் இருந்திருந்தா அவரும் இந்நேரம் இப்படித்தான் செஞ்சிருப்பாரு" என்று பிரபாவின் தலையை கோதிவிட்டான் மாணிக்கம்.....
"மாமா, நான் பன்னண்டாவதுதான் பாஸ் பண்ணிருக்கேன்..... இதுக்கு இதெல்லாம் ரொம்ப ஓவர் மாமா"
"அட ஆமா மாப்ள.... அடுத்த வருஷம் எலெக்சன் வருது.... இந்த தடவையும் அக்கா அன்னபோஸ்டா ஜெயிக்கனும்னா இப்டிலாம் லந்து குடுக்கணும் மாப்ள.... இது ரொம்ப கம்மி... இதவிட ஒன்னு பெருசா பண்ணலாம்னு நான் நினச்சேன், அக்காதான் வேணாம்னு சொல்லிடுச்சு" என்றான் மாணிக்கம் கொஞ்சம் வருத்தத்துடன்.....
"என்னது இதுக்கு மேலா?... அப்புடி என்ன பண்ணலாம்னு நினச்ச?" என்றான் ஆச்சரியத்துடன் பிரபா....
பிரபாவின் தோளை தொட்டு தன் மீசையை ஒதுக்கிவிட்டபடி தொடங்கினான் மாணிக்கம், "பட்டிமன்றம் வைக்கலாம்னு இருந்தேன்.... தலைப்பு என்ன தெரியுமா?... மாப்ள பிரபாவின் இந்த வெற்றிக்கு பெரிதும் காரணம் ஆசிரியர்களா? மாமா மாணிக்கமா?...... நடுவர் யார் தெரியும்ல, திண்டுக்கல் லியோனி..... கவலப்படாத மாப்ள, அடுத்த பரிச்சை முடியுரப்போ பாத்துக்கலாம்.... உனக்கு நடக்கப்போற ஒவ்வொரு செமஸ்டருக்கும் கடா விருந்து, கரகாட்டம் எல்லாம் உண்டு...."
"அய்யய்யோ ஆளைவிடு சாமி" என்று ஓட்டம் எடுத்த பிரபாவை துரத்தினான் மாணிக்கம்...... சரி, கதைக்கு போறதுக்கு முன்னாடி பாத்திரங்களை கொஞ்சம் விலக்கி விளக்கிடுறேன்..... நம் நாயகன் பிரபாவை பற்றிதான் தெரிந்திருக்குமே, பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு தஞ்சை சரபோஜி கல்லூரியில் கல்லூரி படிப்பை தொடங்க இருக்கிறான்..... அவன் அம்மா கமலா.... கமலா என்பதைவிட கவுன்சிலர் அம்மா என்று சொன்னால்தான் ஊருக்குள் தெரியும்.... பிரபாவின் அப்பா கவுன்சிலராக இருந்தபோது இறந்துவிட்டார்.... அதன்பிறகு அந்த பதவியை ஊர் மக்களே கமலா அம்மாவுக்கு கொடுத்திருக்கிறார்கள்.... அடுத்து நம் கதையின் முக்கிய பாத்திரம் மாமா மாணிக்கம்..... கமலா அம்மாவின் தம்பி..... பிரபாவின் மாமா என்றதும் வயதானவர்னு நினச்சிடாதிங்க..... இருபத்தி ஐந்து வயதுதான்.... ஆனாலும் நாற்பது வயதிற்குரிய முதிர்ச்சி.... தோற்றத்தில் இல்லை, தெளிவில்.... அக்கா கவுன்சிலராக இருந்தாலும் முழு நிர்வாகத்தையும் கவனிப்பது மாணிக்கம்தான்.... கமலா அக்காவுக்கு திருமணம் ஆனபோது அக்காவுடன் முந்தானையை பிடித்துக்கொண்டு வந்தவன், குடும்ப சண்டையில் கமலாவுக்கு எதிராக அவன் குடும்பமே வருத்தத்தில் இருந்தாலும் மாணிக்கம் மட்டும் அக்கா பாசத்தால் வீட்டிலேயே இருந்துவிட்டான்..... இவன்தான் நம் கதையின் தூண மட்டுமில்லை, ஜன்னல், கதவு முதல் வாசற்படி வரை இவன்தான்.... பிரபாவுக்கு மாமா என்றாலும் கூட நெருங்கிய நண்பர்களை போல இருப்பார்கள்.... சயின்ஸ் பாடம் முதல் சகிலா படம்வரை பிரபா எல்லாவற்றையும் கற்றது, கற்றுக்கொண்டிருப்பது மாணிக்கத்திடமிருந்துதான்... "களவையும் கத்து மறக்கட்டுமே" என்று பிரபாவின் வழியில் விட்டுவிடுவான் மாணிக்கமும்.... இருவரும் நண்பர்களை தாண்டியும் எல்லா விஷயங்களை பற்றியும் பேசுவார்கள்.... பிரபாவுக்கு மட்டுமல்லாமல், அவன் நண்பர்களுக்கும் மாணிக்கம் "மாமா" ஆகிவிட்டான்.... அப்படி கூப்பிட்டு பழகியதால் மாணிக்கமும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.... இவ்வளவு தெளிவும் குணமும் இருக்கும் மாணிக்கம் படித்தது வெறும் பத்தாம் வகுப்புதான்.... அதற்குமேல் பள்ளி படிப்பை அவன் விரும்பாமல் தன் அக்கா கணவனோடு தொழிலை கற்றுக்கொள்ள தொடங்கிவிட்டான்..... அத்தகைய அனுபவப்பாடம்தான் பிரபாவின் அப்பா இறந்தபிறகு இந்த குடும்பத்தை தூக்கி நிறுத்த இவனுக்கு கைகொடுத்தது.... விவசாயம், வட்டித்தொழில், ஒப்பந்த பணிகள், மேலும் அக்காவின் கவுன்சிலர் நிர்வாகம் என்று எல்லாம் இவனுக்கு அத்துப்படி... பிரபாவின்மீதும், தன் அக்காவின் மீதும் எல்லைகடந்த பாசம் வைத்திருப்பவன்.....

சரி, கதைக்கு போகலாம்....
கெடா விருந்து முடிந்த அடுத்தநாள் காலை தன் விசையுந்து (பைக்) மூலம் வல்லம சென்றான்.... பசுஞ்சோலைக்கும் வல்லத்திற்கும் மூன்று கிலோமீட்டர் தூரம்தான்....
பேருந்துக்கு செல்லவோ, கடைத்தெருவுக்கு போகவோ வல்லம செல்வதுதான் இந்த கிராமத்தில் வழக்கம்.... தும்பைப்பூ நிறத்தில் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து தன் விசையுந்தில் வல்லம சென்றான்.... கழுத்தை ஒட்டிய மைனர் செயின், நெற்றியை அலங்கரித்த கூலிங் கிளாஸ், சட்டை பையிலிருந்து எட்டிப்பார்க்கும் ஐந்நூறு ரூபாய் பணம் என்று மாணிக்கம் , மாணிக்கக்கல் போல ஜொலித்தான்.... மாநிறமாக இருந்தாலும் மாசற்ற முகம் கொண்டவன்.... மீசையின் முனியை அடிக்கடி முறுக்கிவிட்டுக்கொண்டே பேசுவது ஒரு தனி அழகு.... வல்லம பேருந்து நிறுத்தத்தை அடைந்துவிட்டான் மாணிக்கம்.... அங்கிருந்த மரத்தடியில் பைக்கை நிறுத்திவிட்டு , பைக்கில் சாய்ந்து நின்றுகொண்டு பற்றவைக்காத சிகரட்டை வாயில் வைத்துக்கொண்டு யாருக்காகவோ காத்திருந்தான்.... சரியாக அந்த நேரம் கல்லூரி மாணவர்கள் பேருந்து ஏறும் நேரம்.... இவன் கண்டுகொள்ளாதவனைப்போல நின்றான்.... காற்றில் மாணிக்கத்தின் வேட்டி ஒதுங்கியத்தில், அவன் தொடைகள் பளீரிட்டன.... அதை பேருந்துக்காக காத்திருந்த ஒருவன் ஓரக்கண்ணால் பார்ப்பதை கவனித்த மாணிக்கம், மெல்ல அந்த மாணவன் அருகில் நின்றான்.... மாணிக்கம் அருகில் வந்ததும் கொஞ்சம் பதட்டமானான் அந்த மாணவன்.... வேட்டியின் நினியை ஒரு கையால் பிடித்தவாறு, இன்னொரு கையை அந்த மாணவன் தொடையில் படுமாறு நகர்த்தினான்.... இன்னும் மெல்ல நெருங்கி, புடைத்திருந்த தன் ஆண்மையை அந்த மாணவன் மீது படுமாறு செய்தான்... அந்த மாணவன், அதை எற்பதுபோல ஈடுகொடுத்தான்.... தனக்கு வேண்டிய சமிக்கை வந்ததை உணர்ந்த மாணிக்கம், மெல்ல அந்த மாணவனின் காதருகே வந்து “பக்கத்துலதான் வீடு இருக்கு போகலாமா?” என்றான்.... பின்னர் இருவரும் மாணிக்கத்தின் பைக்கில் பசுஞ்சோலைக்கு சென்றனர்.... பிரபாவும் மற்றவர்கள் எல்லோரும் கீழே தங்கி இருப்பார்கள்... மாடியில் உள்ள அறையில்தான் மாணிக்கம் தங்கி இருப்பான்.... அதுதான் மாணிக்கத்தின் அறை, அலுவலகம் எல்லாமே.... அறைக்குள் சென்றதும் ஆட்டத்தை தொடங்கினான் மாணிக்கம்.... அதே நேரம் ஒரு பேப்பரை கையில் எடுத்துக்கொண்டு மாடியில் மாணிக்கத்தை தேடி வந்தான் பிரபா.... மூடியிருந்த கதவை சட்டென திறந்த பிரபா, உள்ளே மாணிக்கமும் இன்னொருவனும் கட்டிப்புரண்ட காட்சியை கண்டதும், “ச்சி ச்சீ...... “ என்று வெளியே ஓடிவந்து விட்டான்.... இரண்டொரு நிமிடங்கள் முடிந்ததும், இருவரும் ஆடைகளை மாட்டிக்கொண்டு வெளியே வந்தனர்..... அந்த மாணவனை பேருந்தில் ஏற்றிவிட்டு பிரபாவை பார்த்து அசடுவழிய சிரித்தான் மாணிக்கம்..... “ஏண்டா மாப்ள, உள்ள வர்றதுக்கு முன்னாடி கதவ தட்டிட்டு வரணும்னு தெரியாதா உனக்கு?” என்றான் மாணிக்கம்....
“இதெல்லாம் பண்றதுக்கு முன்னாடி கதவ தாப்பா போடணும்னு உனக்கு தெரியாதா?.... நான் வந்ததால சரி, இதுவே அம்மா வந்திருந்தா என்ன ஆவுறது?” என்று மாணிக்கத்தின் தலையில் கொட்டினான் பிரபா....
“அக்காவுக்கு மூட்டு வலி.... அதால மாடிப்படி ஏற முடியாதுள்ள மாப்ள.... அதனால அது வராதுங்குற நம்பிக்கைதான்.... இந்த நேரத்துல நீ வந்து நிப்பன்னு நான் என்ன கனவா கண்டேன்... சரி வந்த விசயத்த சொல்லு....” என்று பேச்சை திசை திருப்பினான் மாணிக்கம்....
கையில் இருந்த தாளை காட்டிய பிரபா, “மாமா, இந்த அப்ளிகேஷன் பார்ம்ல அட்டேஸ்டேசன் வாங்கணும்.... வல்லத்துல எதாவது டாக்டர் கிட்ட வாங்கிட்டு வரலாம் வா” என்று மாணிக்கத்தின் கையை பிடித்து இழுத்தான்....
இருவரும் வல்லம நோக்கி விரைந்தனர்.....
செல்லும் வழியில் மாணிக்கத்தை அழைத்த பிரபா, “ஏன் மாமா இந்த அசிங்கமெல்லாம்.... பேசாம ஒரு கல்யாணத்த பண்ணிக்கிட்டு இதெல்லாம் அனுபவிக்காம, ஆம்பளைங்க கூடல்லாம் தேவையா?.... கல்யாணமே பண்ணிக்கலைனாலும் வேற பொண்ணுக கிடைக்கலையா உனக்கு?” என்றான்....
“அப்டி இல்லடா மாப்ள... இதெல்லாம் அவனவன் அனுபவிச்சாதான் புரியும்.... அதோட மட்டுமில்லாம, நம்ம ஊர்ல ஒரு பொண்ணு கூட பேசுனாவே அருவாள எடுத்து வாயில வெட்ட வாராணுக.... இதுல எங்குட்டு பொண்ணுகள இந்த விஷயத்துல எதிர்பார்க்க முடியும்....?... பசும்பால் பக்கத்துல இருக்குறப்போ, பால் பவுடர் வாங்க பாகிஸ்தான் போகனுமா என்ன?” என்று கொள்கை விளக்கம் கொடுத்தான் மாணிக்கம்....
“உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?.... நீ இப்டி சொல்லி சொல்லியே ஊருக்குள்ள பலபேரு இப்புடி கிளம்பிட்டாணுக.... ஒன்னுக்கு இருக்க ஒதுங்குனாகூட ஒரு மாதுரி பாக்குறாணுக” என்று சிரித்தான் பிரபா....
ஒருவாறு இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒரு மருத்துவமனை வந்துவிட்டது..... உள்ளே சென்ற பிரபா சுருங்கிய முகத்துடன் வெளியே வந்தான்...
“என்னடா மாப்ள?.... என்ன கையெழுத்து போட மாட்ரானா?” என்றான் மாணிக்கம்....
“இருநூறு ரூபாய் கேக்குறான் மாமா.... நான் தன்ஜாவூர்லையே வாங்கிக்கறேன், அம்பது ரூபாய்க்கு அஞ்சு கையெழுத்து போடுவாங்க அங்க...” என்றான் பிரபா.....
கொஞ்சம் யோசித்த மாணிக்கம், “இவனை சும்மா விடக்கூடாது மாப்ள, இரு ஒரு வேலை பண்ணிட்டு வரேன்” என்று உள்ளே சென்றான் மாணிக்கம்....

வேட்டியை சுருட்டி பிடித்தவாறு அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான்.... அங்கு நின்ற செவிலியரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்..... மாணிக்கத்தை பார்த்ததும், “டோக்கன் படிதான் வரணும்.... வெளியே போங்க” என்றார்.....
“டாக்டர் சார்.... ரொம்ப அவசரம்” என்று வேட்டியை பிடித்தவாறு பதறினான் மாணிக்கம்....
“அப்டியா?... உக்காரு.... என்ன ப்ராப்ளம்?” என்றார் மருத்துவர்.....
“குஞ்சு எந்திரிக்கவே மாட்டேங்குது டாக்டர்”
“என்னது?”
“ஆமா டாக்டர்.... எப்பவும் காலைல அதுபாட்டுக்கு எந்திருச்சிடும்.... நல்லா வேலையாடும்.... ஆனா, இன்னைக்கு காலம்பற அது எந்திரிக்கவே இல்ல.... “ என்று மாணிக்கம் கூற கூற பதறி எழுந்தார் மருத்துவர்.... அருகில் நின்ற செவிலியரை பார்த்து, “நீ கொஞ்சம் வெளில போம்மா..... நான் இவர டீல் பண்ணிக்கறேன்” என்றார்..... சிரிப்பை அடக்கியபடி வெளியே ஓடினார் செவிலியர்..... செவிலியர் சென்றதும் மாணிக்கத்தை பார்த்து, “என்னங்க, இப்டிலாம் ஓப்பனா பேசுறீங்க?.... “ என்று கூறிவிட்டு அருகில் இருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்தார்.....
“கொஞ்சம் பதற்றத்துல பேசிட்டேன்.... அப்புறம் முன்னாடிலாம் நல்லா செவப்பா இருந்துச்சு, இப்போ கருப்பாகிடுச்சு.... அதுக்கும் நீங்கதான் வழி பண்ணனும்” என்று கூறிய மாணிக்கம், மேலும், “வேணும்னா நீங்களே பாருங்க” என்று கூறிவிட்டு வேட்டியை அவிழ்க்க முயல பதறிய மருத்துவர், “யோவ்.... யோவ்.... என்ன பண்ற?.... பாக்குறவன் எவனாச்சும் தப்பா நினைச்சுக்க போறான்..... வேட்டிய முதல்ல கட்டு” என்று பேசிக்கொண்டிருக்கையில் தன் வேட்டிக்குள் வைத்திருந்த சிறிய கூடைக்குள் இருந்த கோழிக்குஞ்சை எடுத்து மருத்துவர் முன் நீட்டினான்..... மாணிக்கத்தின் செயலால் வியர்த்து விறுவிறுத்து இன்னும் பதட்டம் விலகாமல் நின்றார் மருத்துவர்..... இதை எதையும் கண்டுகொள்ளாதவனைப்போல மாணிக்கமா, “பரவால்ல டாக்டர்.... உங்கள பார்த்தோன எந்திருச்சுடுச்சு.... நீங்க ரொம்ப மொகராசி டாக்டர்..... வெளில எல்லார்கிட்டயும் போயி நீங்க என் குஞ்சை எந்திரிக்க வச்சிட்டிங்கனு சொல்லி உங்க பேர ஊர்பூரா சொல்லி விளம்பரம் பண்றேன்.....
“அய்யய்யோ சாமி..... யாருப்பா நீ?... உனக்கு என்னதான் வேணும்.... ஏற்கனவே ஊருக்குள்ள நான் பணம் அதிகமா வாங்குறதா கொல்ல பேரு கோவத்துல இருக்கானுக.... நீ வேற எதாச்சும் சொல்லி நெருப்புலநெய்யை ஊத்திடாத.... பணம் எதாவது வேணும்னா தரேன்” என்று ஒரு ஐந்நூறு ரூபாய் தாளை எடுத்து கொடுக்க, சிரித்துக்கொண்டே வெளியில் வந்தான் மாணிக்கம்.... நடந்தவற்றை பிரபாவிடம் சொல்லி சிரிக்க.... பிரபாவோ,
“அடப்பாவி மாமா.... இனி எவன்கிட்டையும் ட்ரீட்மென்ட் பாக்க கூட அந்தாளு காசு வாங்க மாட்டான்....” என்று கூறி தலையில் கொட்டினான்.... ஒருவாராக வேறு மருத்துவர் ஒருவரிடம் கையெழுத்து வாங்கி தன் வேலையை முடித்தான் பிரபா....
அன்று மாலை வழக்கம்போல மாணிக்கத்தின் அறையில் கச்சேரி கலைகட்ட தொடங்கியது.... ஏழெட்டு இளவட்டங்களுக்கு மத்தியில் மாணிக்கத்தின் அறையில் இருந்த தொலைகாட்சி பெட்டியில் குடும்பப்படம் ஒளிபரப்பாக தொடங்கியது.... இதுநாள்வரை சின்ன பையனாக இருப்பதால் கீழே அனுப்பிவிடப்படும் பிரபா, இப்போதெல்லாம் பெரிய மனுஷனாகி ஜோதியில் ஐக்கியமாகிவிடுவான்..... திரைப்படம் ஓடாத நாட்களில் மாணிக்கத்தின் சொற்பொழிவு நடக்கும்.... பெரும்பாலும் செக்ஸ் பற்றிய உரைகள்தான் அதிகம் இடம்பெறும்.... பெயருக்கு மட்டுமல்லாமல் நிஜமாகவே மாணிக்கம் “மாமா”வா என்று தோன்றும் அளவிற்கு பேசுவான்.... அன்று வள்ளத்தில் பிடிபட்ட கல்லூரி மாணவனுடனான உறவை பற்றி விவரித்தான்.... பலர் இப்படிப்பட்ட கே கதைகளை கூறும்போது, பிடிக்காததைப்போல சென்றுவிடுவார்கள்.... காலப்போக்கில் அதுவும் அந்த நண்பர்கள் மத்தியில் சகஜமானது..... இப்படியே சிலநாட்கள் கழிந்தது.... கல்லூரி முதல்நாள் இன்று... வழக்கம்போல தாமதமாக எழுந்து அவசர அவசரமாக எழுந்து கிளம்பி வீட்டை விட்டு வெளியே வந்தான் பிரபா.... மகன் கல்லூரிக்கு கிளம்புவதை பெருமிதத்துடன் வீட்டு முற்றத்தில் நின்று பார்த்துக்கொண்டிருந்தார் அம்மா.... “மொத மொதலா காலேஜ் போற.... இன்னைக்கு உன்ன தடபுடலா அனுப்பனும்னு நினச்சேன்.... அக்கா வேண்டாம்னு சொல்லிடுச்சு மாப்ள” என்றான் மாணிக்கம்....
“என்ன பண்ணலாம்னு இருந்த?” என்றான் பிரபா.....
“புதுக்கோட்டைல இருந்து கரகாட்டம், பேராவூரணிலேந்து நாட்டிய குதிரைன்னு என்னன்னவோ நினச்சேன்.... எல்லாம் போச்சு மாப்ள” என்று கூறிய மாணிக்கம் பிரபாவை பார்த்து சிரிக்க பிரபாவோ, “மாமா, இன்னைக்காவது என்கிட்டே அடிவாங்காம இரு.... வண்டிய எடு, வல்லத்துக்கு பஸ் வர லேட் ஆகிடுச்சு” என்று கூறிவிட்டு இருவரும் கிளம்பினர்....
பேருந்தில் ஏறியவுடன் மாணிக்கத்தை பார்த்த பிரபா, "மாமா, ஒழுங்கா வீடு போயி சேரு..... இன்னைக்கு காலேஜ் வர்றவனெல்லாம் என் காலேஜ் பசங்களா இருக்கும்..... என் மானத்த வாங்கிடாத" என்று கூறி சிரிக்க, மாணிக்கமோ, "பாக்கலாம் மாப்ள..... நல்லா படி" என்றவாறே பேருந்து நிறுத்தத்தை நோட்டமிட தொடங்கினான்.... பிரபாகரனை கல்லூரி நிறையவே ஆச்சரியப்பட வைத்தது..... இதுவரை குண்டு சட்டியில் குதிரை ஓட்டியவன் கல்லூரி நிகழ்வுகளால் ஆச்சரியமும், ஆனந்தமும் அடைந்தான்..... இப்போதெல்லாம் சகமாணவர்களை பார்க்கும்போது தனக்கு வித்தியாசமான கிளர்ச்சி உண்டாவதை உணர்ந்தான் பிரபாகரன்..... சிறுவயது முதல் பழகியதால்  தன் ஊர் நண்பர்களிடம் தோன்றாத உணர்வு, புயல் காற்றுபோல இவனை திக்கற்று யோசிக்க வைத்தது.... எந்த விஷயத்தை மாமா செய்யும்போது அறிவுரையும், ஆலோசனையும் சொன்னானோ, அதே எண்ணம் தனக்குள் ஏற்படுவதை நினைத்து குழம்பினான்..... இதையெல்லாம் பேசவும் , தீர்க்கவும் யாரை அணுகுவது மாணிக்கத்தை விட்டால்.... அதற்கான தருணம் அன்று வைத்தது..... மாணிக்கத்தின் அறைக்கு வெளியே இருந்த மாடி சுவற்றில் இருவரும் அமர்ந்து வீதியை வேடிக்கை பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்தனர்....

"என்ன மாப்ள, காலேஜெல்லாம் எப்டி இருக்கு?.... பொண்ணுக யாரையாச்சும் பழக்கம் புடுச்சியா?" என்றான் மாணிக்கம்.....
"காலேஜ்'ல என்ன பொண்ணுகள வச்சு வியாபாரமா பண்ணுறானுக.... படிக்க போற இடத்த பத்தி கேக்குறது இப்டிதான் கேப்பியா?..... அப்டியே நான் பழக்கம் புடிச்சாலும், அதெல்லாம் உனக்கு மகள் முறை வரும் மாமா.... இப்டிலாம் கேக்கலாமா?"

"அடப்பாவி..... பழகுனியா?நு ஒரு வார்த்த தானடா கேட்டேன்.... அதுக்குள்ளையும் எனக்கு மக மொற வரைக்கும் போயிட்டியே" என்ற மாணிக்கம் யாரோ மாடிப்படி ஏறி வருவதை அறிந்து திரும்பினான்.... அவன் அடுத்த தெருவில் வசிக்கும் முத்து..... "மண்டை" முத்து என்று அழைக்கப்படும் காரணம் அவன் தலையின் அளவை வைத்துதான் என்பது பார்த்ததும் நாம் கண்டுபிடித்துவிடலாம்..... மாமா மாணிக்கத்தின் ஆஸ்தான சிஷ்யர்களுள் இந்த மன்டையரும் ஒருவர்..... வழக்கமாக இந்த இருட்டில் வருவது செக்ஸ் ஆலோசனைக்காகத்தான்..... இதற்கு முன்பு ஒருமுறை "சுய இன்பம்" பற்றிய குழப்பத்தை தீர்க்க நபர்கள் யாருக்கும் தெரியாமல் இதேபோல இருட்டிய பிறகு வந்தான்..... அதனால், இப்போதும் அதேபோன்ற ஒரு விஷயமாகத்தான் வருகிறான் என்று உணர்ந்த மாணிக்கம், "வாடா மண்ட.... என்ன இந்த நேரத்துல?.... பொதுவா ரவக்கி நீ வீட்ட விட்டு வெளியவே வரமாட்டியே..... என்ன பிரச்சன?" என்றான்..... சொல்ல வந்த விஷயத்தை பிரபாவை பார்த்து சொல்ல தயங்கியபடி நின்ற முத்துவை பார்த்த மாணிக்கம், "இந்தாடா.... பரவால்ல சொல்லு..... பிரபா இப்ப பெரிய மனுஷன் ஆகிட்டான்..... அதனால தைரியமா சொல்லு" என்றான்.....
"பிரபா பெரிய மனுஷன் ஆகிட்டானா?" என்று மீண்டும் அதையே கேட்டான் முத்து....
"ஆமா.... அவன் பெரிய மனுஷன் ஆகிட்டான்.... அடுத்த வாரம் சடங்கு வச்சிருக்கோம்.... வந்து மாமன் சீர் செஞ்சுட்டு போ..... வந்த விஷயத்தை சொல்லுடான்னா, தேவை இல்லாம பேசிட்டு இருக்க" என்று அதட்றினான் மாணிக்கம்.....
பதறியபடி சொல்ல தொடங்கினான் முத்து, "ஒன்னுமில்ல மாமா..... பசங்க கூட 'எல்லாம்' செய்றது தப்பில்லைன்னு நீங்க சொன்னிங்கள்ள..... ஊர்லேந்து என் அத்த மகன் வந்திருக்கான்.... ரொம்பநாளா அவன் மேல எனக்கு ஒரு கண்ணு.... நாளைக்கு போய்டுவான்.... அவனுக்கு இதெல்லாம் பிடிக்குமான்னு எனக்கு தெரியல...... அப்படி நான் அத தெரிஞ்சுக்கறது?.... நானும் அவனும் ரவக்கி ஒன்னாதான் படுப்போம்..... எதாச்சும் நான் செஞ்சு அவன் கத்திட்டான்னா மானமே போய்டும்...... என்ன பண்றதுன்னு சொல்லுங்க மாமா" என்றான்.....
"உன் அத்த மவனா?..... அடப்பாவி, என் கண்ணுலேயே காட்டலயேடா நீ..... ரெண்டு நாளா உன்ன இந்த பக்கம் காணும்னு நம்ம பயலுக சொன்னப்பவே நினச்சேன்..... சரி, மாமன தேடி உதவின்னு வந்துட்ட..... சொல்றேன் கேட்டுக்க..... பேசாம போயி இப்ப தூங்கு.... அவன் தூங்கிட்டான்னு நல்லா தெரிஞ்ச பின்னாடி, மெல்ல அவன் மேல தூக்கத்துல புரளுராப்புல உன் கைய்ய போடு..... மெல்ல உன் கையை நகத்தி, ஈசானி மூலைக்கு கொண்டுபோ" என்று மாணிக்கம் சொன்னபோது குறிக்கிட்ட பிரபா, "ஈசானி மூலையா?" என்றான்..... "நீ சின்ன பையன்னு அடிக்கடி நிரூபிக்குற..... அதாண்டா, குஞ்சு மணி...." என்று கூற சிரித்தான் பிரபா......
"அவன் தூங்கிகிட்டு இருக்குறப்போ அது முழிச்சு இருந்துச்சுன்னா, நீ தாராளமா அடுத்தடுத்த வேலைகள ஆரமிச்சுடு..... ஏன்னா, அவன் தூங்குற மாதிரி நடிக்குரான்னு அர்த்தம்..... ஒருவேளை பிடிக்காம உன் கையை எடுத்து விட்டுட்டான்னா, நீ உன் வாயையும் அதையும் மூடிகிட்டு பேசாம தூங்கு" என்று ஆலோசனைகளை மாணிக்கம் கூறி முடிக்க , எல்லாவற்றையும் தன் மனதிற்குள் நிறுத்தியபடி முத்து, "ரொம்ப நன்றி மாமா..... இது மட்டும் நல்லபடியா நடந்தா, நாளைக்கு வல்லத்துலேந்து உனக்கு குவாட்டரும், கோழி பிரியாணியும் நான் வாங்கித்தரேன்" என்றான்.....
"அடப்பாவி..... இத தொழிலா ஆக்கிடாதடா..... என்ன நடந்துச்சுன்னு நாளக்கி வந்து சொல்லு, அது போதும்" என்று முத்துவை வழி அனுப்பி வைத்தான் மாணிக்கம்....
முத்து சென்றபிறகு தன் சந்தேகங்களை பற்றி  மாணிக்கத்திடம் கேட்க சரியான தருணம் இதுதான் என்று நினைத்த பிரபா, "மாமா.... இது தப்பில்லையா மாமா?" என்றான்.....
"நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்லடா மாப்ள"
"செய்றதெல்லாம் நித்தியானந்தா வேலை, டயலாக் மட்டும் வேலு நாயக்கர் டயலாக்கா?.... ஒழுங்கா சொல்லு மாமா"
"இல்ல மாப்ள.... ஒன்னும் தப்பே இல்ல..... நம்ம ஊர்லதான் இத தப்புன்னு சொல்றோம்... அமேரிக்கா காரனெல்லாம் இத சட்டப்படி தப்பில்லைன்னு யேத்துகிட்டான்..... அதனாலதான் நாம நிலா சோறு தின்ன நேரத்துல அவன் நிலாவுக்கு போனான்..... செவ்வாய் கிழமை விரதம் இருக்க நேரத்துல அவன் செவ்வைல காலடி எடுத்து வைக்கிறான்.... அது மாதிரி இதையும் நம்மாளுக புரிஞ்சுக்கிட கொஞ்சம் நாளாகும் அவ்வளவுதான்..... இன்னும் காந்தி, எம்ஜிஆர் எல்லாம் உயிரோட இருக்குறதா நம்பிகிட்டு இருக்குற ஆளுகதான் நம்மகிட்ட அதிகம்...... எனக்கும் இன்னொருத்தனுக்கும் எடைல நடக்குற ஒரு விஷயத்தை மூனாவதா ஒருத்தன் தப்புன்னு சொல்ல அவனுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு?" என்று மாணிக்கம் நீட்டி முழக்கி பிரபாவே வாய் பிளக்கும் அளவிற்கு விளக்கம் கொடுத்தான்.... மாணிக்கம் அவ்வப்போது இப்படி அதிபுத்திசாலித்தனமாக பேசுவதுண்டு..... அவன் அறை முழுக்க இருக்கும் புத்தகங்கள் அழகிற்கு வைக்கவில்லை, அதை அறிவுக்கு வைத்திருக்கிறான் என்று பிரபா உணர்ந்தான்..... எல்லா விளக்கத்திற்கு பிறகும், "அடுத்தவர்களுக்கு இம்சை கொடுக்காத எந்த விஷயமும் தவறில்லை, கே'யும் தவறில்லை " என்பதை உணர்ந்துகொண்டான் பிரபா....
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை .... வழக்கமாக இந்த நாளில் சூரியன் உச்சிக்கு வரும்வரை பிரபா படுக்கையை விட்டு எழமாட்டான்..... ஆனால் அன்று விரைவாக எழுந்து, வீட்டு வாசலை பார்த்தபடியே அமர்ந்திருந்தான்.... அந்த காத்திருப்புக்கு காரணம் முந்தையநாள் மாமா சொன்ன யோசனைப்படி நடந்திருப்பானா?.... மாமாவின் யோசனை சரிதானா?.... அப்படி செய்திருந்தால் அதன் விளைவு என்ன?..... இத்தனை கேள்விகளுடன் காத்திருந்தான் பிரபா..... இது தேவைதானா? என்ற எண்ணம் அவனுக்குள் இருந்தாலும், அவனின் எதிர்பார்ப்பு அந்த எண்ணத்தை பின்னுக்கு தள்ளியது....... "என்னடா அதிசயமா இருக்கு?.... இவ்வளவு சீக்கிரமா எந்திருச்சு எந்த ப்ளைட்ட புடிக்க போற?" என்று சிரித்த அம்மாவை முறைத்தபடி எழுந்து மாடிக்கு சென்றான்.... மாமா இன்னும் எழுந்திருக்கவில்லை.... பின்னர் அவரையும் எழுப்பி பேசிக்கொண்டு இருந்தான் பிரபா..... அன்றைய பொழுது முழுவதும் பிரபாவிற்கு ஏமாற்றமே மிச்சம்.... முத்து அந்த பக்கமே வரவில்லை..... அந்தியும் சாய்ந்துவிட்டது.... மாலையில் மாமாவே முத்துவைபற்றி பேச்சை எடுத்ததும் ஆர்வமானான் பிரபா.....
"அந்த மண்டப்பய இன்னும் வரவே இல்ல பாரு..... என்ன நடந்துச்சுன்னு ஒரு எட்டு வந்து சொல்லக்கூட முடியாம இருக்கான் போல.... வரட்டும்... அடுத்து எதாவது யோசனை கேட்டு வர்றப்ப, மொகரயில அடிச்சு பத்திடுறேன் பாரு" என்று மாணிக்கம் சொல்லிக்கொண்டு இருக்கும்போது வீதியில் முத்து வருவதை பார்த்துவிட்டான் பிரபா.... "வந்துட்டான் மாமா..... மூஞ்சி பேய் அறஞ்ச மாதுரி இருக்கு மாமா" என்றான் பிரபா.....
"அப்புடித்தாண்டா இருக்கும்.... மொத தடவைல.... கொஞ்சம் பயந்திருப்பான்" என்று மாணிக்கம் விளக்கம் கொடுத்த நேரத்தில் சரியாக முத்து மாடிக்கு வந்துவிட்டான்.....
"வாடா மண்ட..... என்ன கண்ணெல்லாம் செவந்திருக்கு, ரவக்கி தூக்கம் இல்ல போல.... உதட்டுல காயமா இருக்கு, ரொம்ப கடிச்சுட்டானா?..... முகமெல்லாம் செவந்திருக்கு, ரொம்ப மொரட்டுத்தனமா நடந்துகிட்டானா?" என்று அடுக்கினான் மாணிக்கம்....
"அடப்போ மாமா.... எல்லாம் நாசமா போச்சு...." என்று அழுத்துக்கொண்டான் முத்து.....
"என்னடா சொல்ற?... என்னதான் ஆச்சு?.... நான் சொன்னபடி செஞ்சியா?" என்று வினவினான் மாணிக்கம்....
"எல்லாம் சரியாத்தான் செஞ்சேன் மாமா.... நீ சொன்ன மாதிரி கை போட்டேன், நகத்துனேன், அவன் தம்பி டெம்பரா நின்னுச்சு.... நீ சொன்னபடி நானும் அடுத்து கட்டிப்பிடுச்சு முத்தம் கொடுத்தேன்... அப்புறம்தான்....." என்று இழுத்தான் முத்து....
"அட கொறமாசத்துல பொறந்தவனே.... நிறுத்தாம சொல்லுடா" என்று ஆர்வமானான் மாணிக்கம்....
"நான் கட்டிப்பிடுச்சு முத்தம் கொடுத்தப்போ, எங்கம்மா பாத்திடுச்சு.... எனக்கு பொம்பள பேய் புடிச்சுடுச்சுன்னு நினச்சு, நம்ம காளி கோயில் பூசாரிகிட்ட வேப்பல அடிச்சு மந்திரிச்சுடுச்சு..... அதுலதான் முகம் வாயெல்லாம் காயம்..... நீ என்னென்னமோ கற்பனை பண்ணிட்ட" என்று கண்களை கலக்கினான் முத்து.....
"அப்புடியா?.... பூட்டுன ரூம்குள்ள உங்கம்மா எப்புடிடா வந்துச்சு?" என்றான் மாணிக்கம்....
"நான் எங்க பூட்டுனேன்?... ரூம் கதவை பூட்டலையே" என்று விளக்கினான் முத்து....
"என்னடா சொல்ற?... கதவை தாப்பா போடாமலா இதெல்லாம் செஞ்ச?" என்று புருவத்தை உயர்த்தி கேட்டான் மாணிக்கம்....
"கதவை தப்பா போடணும்னு நீ சொல்லவே இல்லையே மாமா" என்று அப்பாவியாக கேட்ட முத்துவை பார்த்து முறைத்த மாணிக்கம், "உன்ன வேப்பலையால் அடிச்சிருக்க கூடாது... வெலக்கமாத்தால அடிச்சிருக்கணும்.... ஏண்டா எரும, இது கூட சொல்லித்தான் செய்வியா?... கைக்கு எட்டுனத்தை வாய்க்கு எட்டாத மாதிரி பண்ணிட்டியேடா.... நீ செஞ்சதுக்கெல்லாம் அமைதியா இருந்து உன் அத்த மகன் ஆசைய சொல்லாம சொல்லிட்டான், நீ சொதப்பிட்டியேடா எரும... அடுத்த தடவ ஒழுங்கா செய்.... மாமனோட யோசனைய குத்தம் சொல்லாத..." என்று மாணிக்கம் விளக்கவே, ஏதோ புரிந்தவனைப்போல யோசித்தபடியே அங்கிருந்து வெளியேறினான் முத்து.... "எப்பவும் எல்லாம் புரிஞ்ச மாதிரி செய்றான், கடைசில மொத்தமா சொதப்பிடுறான்" என்று மாணிக்கம் சொல்ல, பிரபாவும் சேர்ந்து சிரித்தான்.... மறுநாள் வழக்கம் போல கல்லூரி கிளம்பினான் பிரபா.... கல்லூரியில் ஒரு நட்பு மட்டும் இப்போது பிரபாவிற்கு அமைந்துவிட்டது.... அதில் ஒருவன் மீது பிரபாவிற்கு ஒருவித ஈர்ப்பு உண்டானது.... அவன் அகிலன்.... கும்பகோணத்து அழகன்.... கனிவான பேச்சும், வெளிர்நிற தோற்றமும் மற்றவர்கள் மத்தியில் அகிலனை வேறுபடுத்தி காட்டியது.... அன்று அவன் பிறந்தநாள்.... இரவு நடக்கவிருக்கும் ட்ரீட்'க்கு பிரபாவை இருக்க சொல்லி கட்டாயப்படுத்தினான் அகிலன்....
"இல்லடா... நைட் பத்து மணிக்கு மேல எங்க ஊருக்கு பஸ் இல்ல..... போய் சேரமுடியாது" என்றான் பிரபா....
"பரவால்லடா.... என் ரூம்ல படுத்துக்கோ..... காலைல போய்க்கலாம்.... நாளைக்கு மதியம்தானே கிளாஸ், அதனால ஒன்னும் ப்ராப்ளம் இல்ல.... ஒருநாள் எங்க ஹாஸ்டல்ல இருந்து பாரு, அப்புறமெல்லாம் நீயே தினமும் இருக்கணும்னு ஆசைப்படுவ..... என்ஜாய் பண்ணலாம்டா ..." என்று மீண்டும் வற்புறுத்தவே ஒப்புக்கொண்டு அன்றைய வித்தியாசமான இரவை கல்லூரி விடுதியில் கழிக்க ஆயத்தமானான்..... வீட்டிற்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, கல்லூரி முடிந்ததும் அகிலனுடன் விடுதிக்கு சென்றுவிட்டான்..... இரவு அகிலனும் அவன் நண்பர்களும் ஒரு உணவகம் சென்று உணவருந்திவிட்டு விடுதிக்கு வந்து மேற்படி விஷயங்களை தொடங்கினர்....அதாங்க, மது விருந்து.... பிரபா மறுத்துவிட்டான்.... அகிலனும் அவன் நண்பர்களும் வயிறு முட்ட குடித்தனர்.... அகிலனை கைத்தாங்கலாக அழைத்து செல்லும் அளவிற்கு நிதானம் இழந்தான் அகிலன்.... அகிலனுக்கு அருகில் தானும் படுத்துக்கொண்டான் பிரபாவும்.....
அகிலன் மீது சிலநாட்களாகவே பிரபாவிற்கு ஒரு கண்.... அருகில் அவன் படுத்திருக்கும் நேரத்தில் பிரபாவின் மனதினுள் என்னென்னமோ எண்ணங்கள் தோன்றியது..... மனம் அவனை தீண்ட சொன்னது, அறிவு அதை தவறென்று சொன்னது.... மனதும் அறிவும் தங்களுக்குள் இப்படி சண்டையிட்டுக்கொண்டிருந்த நேரத்தில், அறிவை பின்னுக்கு தள்ளிய மனம் பிரபாவின் கைகளை அகிலனை நோக்கி செலுத்தியது.... சட்டென இது தவறென உணர்ந்து மீண்டும் கையை எடுத்துவிட்டான்..... இப்படியே இந்த போராட்டங்களுக்கு மத்தியில் ஒருவாராக தூங்கிவிட்டான்.... நிஜத்தில் அகிலன் என்றால், கனவிலும் அகிலன் என்னென்னமோ செய்ய தூண்டியதன் விளைவாக நள்ளிரவில் விழித்துக்கொண்டான் பிரபா.... விழித்துப்பார்த்தான் அகிலனை.... அகிலனின் ஆண்மை மேடிட்டு காணப்பட்டது..... கனவில் காம உணர்வின் வெளிப்பாடாக இருக்கலாம் என்று நினைத்தான் பிரபா.... அந்த நேரத்தில் ஏனோ மாணிக்கம் சொன்ன யோசனை நினைவுக்கு வந்தது.... மாணிக்கம் சொன்னபடி முதலில் அகிலனின் மார்பு மீது கையை வைக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில், அகிலனின் கை பிரபாவின் மார்பின் மீது விழுந்தது.... புரண்டு படுத்ததால் தவறி பட்டிருக்கலாமோ என்று எண்ணியபடியே அடுத்து தன் கையை எடுத்து அவன் வயிற்றுப்பகுதியில் வைக்கலாம் என்று நினைத்து கையை எடுக்கப்போன நேரத்தில் அகிலனின் கை பிரபாவின் வயிற்றுப்பகுதிக்கு நகர்ந்தது.... இதெல்லாம் தற்செயலாக நடப்பதா அல்லது தன் நோக்கத்தை அறிந்து அகிலன் செய்கிறானா? என்று மேற்கொண்டு நடக்க இருப்பதை மவுனமாக பார்க்கலானான்..... பிரபாவின் வயிற்றுப்பகுதியில் அவன் தொப்புளை சுற்றி கோலம் போடுவதைப்போல வருடினான் அகிலன் .... இப்போதே பிரபாவின் ஆண்மை அடங்க மாட்டாமல் திமிரி நின்றது..... வருடிய விரல்களால் மெல்ல கீழே கொண்டு சென்றான் அகிலன்..... பிரபாவோ மூச்சினை உள்வாங்கி அகிலனின் கைக்கு உள்ளே வழிவிட்டான்..... உள்ளே சென்ற அகிலனின் கை, ஏற்கனவே விறைப்பாக நின்ற பிரபாவின் ஆண்மையை கைகளில் பற்றி வெளியே கொண்டுவர முயன்றது.... இதற்கு மேலும் அமைதியாக இருந்தால், அது தவறாகிவிடும் என்று நினைத்த பிரபா அகிலனை கட்டி அணைத்தான்..... அனைத்த வேகத்தோடு அகிலனின் இதழ்களில் முத்த மழை பொழிந்தான்.... மதுவின் கசப்பு இன்னும் அகிலனின் உதடுகளில் இருந்தது.... கசப்பு சுவை கூட அன்று பிரபாவிற்கு தித்திப்பாக இருந்தது.... இருவரும் இரண்டற கலந்தனர்..... இருவரும் இன்பங்களை சமத்துவமாக பரிமாறிக்கொண்ட பின் களைப்பின் மிகுதியால் ஒருவர் மீது மற்றொருவர் அணைத்தபடி உறங்கலானார்கள்..... விடிந்ததும், அகிலனின் முகத்தை பார்க்க வெட்க்கப்பட்டவனாக, அகிலன் எழும் முன்னரே கிளம்பிவிட்டான் பிரபா..... அன்று வீட்டுக்கு சென்றது முதல் அதே நினைவாக இருந்தது பிரபாவுக்கு...... முதல் அனுபவம்.... ஒரு ஆணுக்குள் இத்தனை சுகங்களை ஆண்டவன் நிறைத்து வைத்திருக்கிரானா?.... இதை இத்தனை காலம் அனுபவிக்காததை எண்ணி சிரித்தான்..... சிறிது நேரம் கழித்து வந்த மாணிக்கம், பிரபா தனியாக சிரிப்பதை பார்த்தவாறே, “என்னடா மாப்ள, தனியா நின்னு கிராக்கு மாதிரி சிரிச்சுகிட்டு இருக்க” என்றவாறே பிரபாவின் முகத்தை கவனித்தவனாக, “என்னடா மூஞ்சியெல்லாம் செவந்திருக்கு, ஒதட்டுல காயமா இருக்கு..... என்னமோ தப்பா இருக்கே?” என்றான்.... மாணிக்கத்தின் அதீத அறிவை கண்டு வியப்பதா? அல்லது, தான் மாட்டிக்கொண்ட நிலையை கண்டு பதறுவதா? என்று தெரியாமல், உளறினான் “பஸ்ல வர்றப்போ கம்பில இடிச்சுகிட்டேன் மாமா.... அதான் காயம்” என்றான்.... “இது இடிச்ச காயம் மாதிரி தெரியல, யாரோ கடிச்ச காயம் மாதிரில்ல இருக்கு?” என்றான் மாணிக்கம்....
“அடச்சீ..... எப்ப பாத்தாலும் உனக்கு அந்த நெனப்புதான்.... அதான் பாக்குறதல்லாம் உனக்கு அப்படியே தெரியுது.... காமாலை வந்தவனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளா தெரியும்னு சொல்றது சரிதான்” என்று பொய்யாக கோபம் கொண்டவனைப்போல மாணிக்கத்திடமிருந்து தப்பித்து தன் அறைக்குள் சென்றான் பிரபா.... அறையில் தன் படுக்கையில் படுத்தாவறே அகிலனுடன் கலந்த அந்த நிமிடங்களை நினைத்துக்கொண்டான்.... பிறகு வழக்கம் போல கல்லூரிக்கு கிளம்பி சென்றான்.... ஆனால், என்ன இது ஒரு வித்தியாசமான மாற்றம் அவனுக்குள்?.... பார்ப்பவனை எல்லாம் படுக்க அழைக்கிறதே மனம்?... முகம் பார்த்து பேசும்போது கண்கள் ஏனோ கீழ்நோக்கியே செல்கிறதே? .... நட்பாக நண்பன் தொடும்போதும், நரம்புள்ளுள் மின்சாரம் உண்டாவதைப்போல தோன்றும் இந்த உணர்வுகளுக்கு பெயர் என்ன?.... அப்படியானால் தன்னால் இனி இயல்பாக இருக்க முடியாதா?... தான் இதற்கு அடிமையாகி விட்டேனா? என்று எத்தனையோ கேள்விகளுடனும் வகுப்பறையில் அமர்ந்திருந்த பிரபாவை பின்னாலிருந்து ஒரு கை கட்டி அணைத்தது.... பதறி விலகியவன், திரும்பி பார்த்தால் அது அகிலன்.... “டேய் லூசு... கிளாஸ்’ல இப்டியாடா செய்வ?” என்றான் பிரபா....
“ஏன்டா?... நான் எப்பவும் செய்றதுதானே.... இன்னைக்கு என்ன இப்டி பேசுற?” என்று அகிலன் சொன்னதும்தான் இது எப்போதும் அகிலன் செய்யும் விளையாட்டுதான்.... ஆனால், தான் இன்று மட்டும் ஏன் இந்த செயலுக்காக மற்றவர்களை பார்த்து அஞ்சுகிறோம்? என்று புரியாமல் நின்றான்.... மீண்டும் தொடர்ந்த அகிலன், ”என்னடா ஆச்சு உனக்கு?... நல்லாத்தானே இருந்த.... காலைல கூட ஒன்னும் சொல்லிக்காம வீட்டுக்கு போய்ட்ட?... ஆர் யூ ஆள்ரைட்?” என்றான்....
அப்படியானால் இரவு நடந்த விஷயங்கள் எதுவும் அகிலனுக்கு நினைவில் இல்லையா?.... போதையில் நடந்த நிகழ்வா அது?... கனவென்று நினைத்துவிட்டானோ? என்று மனம் வருந்தியது.....
பிரபாவின் முக வாட்டத்தை கண்ட அகிலன், “டேய் டேய்.... விட்டா அழுதிடுவ போல.... இன்னைக்கு நைட் வா, உன் கூச்சத்தை எல்லாம் மொத்தமா போக்கிடுறேன்.... நேத்து கொஞ்சம் மப்புல இருந்ததால எதையும் முழுசா செய்ய முடியல.... இன்னைக்கு மொத்தமா முடிச்சிடுறேன்” என்றான்...
இதை கேட்டதும்தான் பிரபாவின் முகத்தில் வெட்கம் கலந்த சிரிப்பு உண்டானது....
“சரி அத விடு..... எனக்கு இந்த எலேக்ட்ரோ மாக்னடிக் தியரி ரொம்ப குழப்பமா இருக்கு.... நாளைக்கு அதுல டேஸ்ட் வேற வச்சிருக்காங்க.... இன்னைக்கு சாயங்காலம் ரூம்’கு வந்து சொல்லித்தரியா?” என்றான் அகிலன்....
எந்த காரணத்தை காட்டி அவன் அறைக்கு செல்லலாம் என்று நினைத்திருந்த நிலையில் அகிலனே ஒரு வாய்ப்பை கொடுத்திருப்பதை எண்ணி மகிழ்ந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாதவனைப்போல “டெய்லி வீட்டுக்கு லேட்டா போக முடியாதுடா.... பத்து மணிக்குள்ள போனால்தான் பஸ் பிடிக்க முடியும்” என்றான்....
“உன்ன ஒன்பது மணிக்கே நான் அனுப்பிடுறேன்... கவலப்படாத” என்றான் அகிலன்.... அன்றைய மாழைப்போழுதும் எதிர்பார்த்தபடியே வந்தது.... ஐந்து மணிக்கே அறைக்கு சென்றாலும், அகிலன் படிப்பிலேயே குறியாக இருந்தான்.... பிரபாவோ குறியிலேயே பிடிப்போடு இருந்தான்.... மணி ஆறு, ஏழு என்று ஓடியது..... அகிலன் வழிக்கு வருவதாக தெரியவில்லை..... அன்று அகிலன் போட்டிருந்த டீ ஷர்ட்டும், சாட்சும் பிரபாவை கிறங்கடித்தது.... இன்றைய வாய்ப்பை தவற விடக்கூடாது என்று நினைத்த பிரபா, “என்னடா இன்னைக்கு ரொம்ப செக்சியா இருக்க?” என்றான்...
“நான் நார்மலாத்தான் இருக்கேன்.... உன் கண்ணுதான் காமத்தோட என்னைய பாக்குது.... படிக்குற வேலைய பாருடா” என்றான் அகிலன்....
இந்த வார்த்தைகள் பிரபாவை கோபம்கொள்ள வைத்தது..... “ரொம்ப உத்தமன் மாதிரி பேசுது எருமை.... இந்த பன்னிதானே நேத்து என்னைய அந்த பாடு படுத்துச்சு.... இனிமேல் இவனா கூப்பிட்டாலும் இதுக்கு நான் ஒத்துக்க கூடாது” என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான்..... இந்த முக மாற்றத்தை கண்ட அகிலன் மெல்ல எழுந்து பிரபாவின் பின்புறமாக வந்து கட்டி அணைத்தான்..... பிரபா அகிலனின் கைகளை விலக்க முயன்றும், அகிலனின் பிடி உடும்பு பிடியாக இருந்தது....
“கைய எடுடா.... ஒழுங்கா நீயும் படிக்கிற வேலைய பாரு” என்று கோபம் கொண்டான் பிரபா....
“கோபம் வந்துடுச்சாக்கும்.... எவ்வளவு வேணாலும் திட்டிக்கோ, இன்னைக்கு உன்ன நான் கதறக்கதற கற்பழிக்க போறேன்....” என்று கைகளை மெது மெதுவாக நகர்த்தி கீழே கொண்டுபோனான் அகிலன் ..... இனியும் பிரபாவால் பிடிக்காததைப்போல நடிக்க முடியவில்லை..... கண்களை மூடி ரசிக்க தொடங்கினான்.... அப்படியே பிரபாவை மெல்ல திருப்பி நெற்றியில் நிரம்பியிருந்த தலைமுடியை விலக்கி முத்தம் கொடுத்தான்..... மெல்ல கீழிறங்கி காது மடல்களை கவ்வி இழுக்க, சப்த நாடிகளும் ஸ்தம்பித்து நின்றது பிரபாவுக்கு.... அப்படியே மொத்தமும் முடிந்து களைப்பாக படுக்கையில் இருவரும் படுத்திருந்தனர்..... எதேச்சையாக கடிகாரத்தை பார்த்த பிரபா பதறி அடித்து எழுந்தான்.... மணி ஒன்பதரை ஆகிவிட்டது.... அவசர அவசரமாக கிளம்பி பேருந்தில் ஏறி வீட்டிற்கு சென்றான்.... அன்று முதல் ருசி கண்ட பூனையாக பல முறை அகிலனோடும், சில முறை மற்ற நண்பர்களோடும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இன்பம் சுவைத்தான்....மாதங்கள் சில கழிந்தது..... எப்போதும் கேண்டீன் பக்கம் தலைவைத்து படுக்காத பிரபா, அன்று சென்றான்..... எப்போதாவது நண்பர்கள் வற்ப்புறுத்தி அழைத்தாள் அங்கு வருவான், அதுவும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அங்கு இருக்க மாட்டான்.... ஏனோ அவர்கள் கல்லூரி கேண்டீன் மீது அப்படி ஒரு வெறுப்புணர்வு.... முதன்முதலில் சீனியர்களிடம் ராகிங் விஷயத்தில் மாட்டியது அங்குதான் என்பதாலா என்பது அவனுக்கே தெரியவில்லை.... அன்று கேண்டீனில் அமர்ந்து குளிர்பானம் அருந்திக்கொண்டிருந்தான்.... அப்போதுதான் அந்த குளிர்பானம் விற்கும் இடத்தில் ஒருவன் நிற்பதை கவனித்தான் பிரபா.... அவன் அழகன் அல்ல.... பேரழகன் என்று சொன்னாலும் அது அவன் அழகை பொருத்தவரை குறைவுதான்... அப்படி ஒரு தோற்றத்தோடு நின்று குளிர்பானங்களை அடுக்கிவைத்து கொண்டிருந்தான்... தண்ணீர் கிடைக்காமல் அலைந்தவன் இளநீரை பார்த்தால் சும்மா விடுவானா?.... அவனை எப்படியாவது அடையவேண்டும் என்று சத்தியப்பிரமானமே எடுத்தான் பிரபா.... அப்போது அங்கு வந்து அமர்ந்தான் அகிலன்.... பிரபா அகிலன் வந்ததைக்கூட கவனிக்காமல், அந்த வாலிபனையே கவனித்துக்கொண்டிருந்தான்..... பிரபாவின் பார்வையின் நோக்கத்தை அறிந்த அகிலன், “என்னடா பாத்துட்டு இருக்க?.... நீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் அவனோட நீ பேசக்கூட முடியாது...” என்றான்.... அகிலனின் வார்த்தைகளை கேட்ட பிரபா அதிர்ச்சியும் கோபமும் அடைந்தவாறு, “என்னடா சொல்ற?... அவன் என்ன அவ்வளவு திமிர் பிடிச்சவனா?...” என்றான்....
“ஒரு வருஷமா இங்கதான் வேலை பாக்குறான்.... இதுவரை அவன்கிட்ட யாரும் ஒரு வார்த்தை கூட பேசமுடியல.... கூல்டரின்க்ஸ் குடிச்ச்சபிறகு பணம் எவ்வளவுன்னு மட்டும் வாயை திறந்து சொல்லுவான்... அத வச்சுதான் அவன் ஊமை இல்லைன்னே எங்களுக்கு தெரியும்.... நம்ம சீனியர் பரத்லேந்து நம்ம கிளாஸ் வினோத் வரைக்கும் பலபேரு ட்ரை பண்ணிட்டாங்க.... ஒன்னும் பண்ண முடியல.... அவனை வழிக்கு கொண்டுவறேன்னு சவால் விட்டு கண்ட இடத்துலயும் கை வச்ச நம்ம குமார் மூஞ்சி வீங்க அடி வாங்குனதுதான் மிச்சம்.... அவன் பேரே ரோபோ னு வச்சிருக்காங்க.... நானும் ட்ரை பண்ணேன், ஒன்னும் முடியல... அவன் அழகுக்கும், பார்வைக்கும், உதட்டுக்கும் உயிரையே கொடுக்கலாம்டா.... அவன் முகத்த பார்த்துகிட்டு இருந்தாலே மோட்சம் கிடைச்சிடும்.... அவனைப்பத்தி பேசுரப்பவே என் தம்பி தகதிமிதா’னு நாட்டியம் ஆட ஆரமிச்சுட்டான்டா” என்றான் அகிலன்....
தொடர்ந்த பிரபா, “போதும்டா.... உன் ரோபோ புராணம் போதும்.... நீ ரொம்ப பில்டப் கொடுக்குறேன்னு நினைக்குறேன்... அவன பார்த்தா அப்படி தெரியலையே..... “ என்று கூறியவாறே அந்த வாலிபனின் அருகில் சென்று ஒரு குளிர்பானம் வாங்கினான்.... அதை குடித்தபடியே , “உங்கள நான் இங்க பாத்ததே இல்லையே?... புதுசா?” என்றான்.... அந்த வாலிபனோ அதை கண்டுகொள்வதாக தெரியவில்லை.... இருந்தாலும் விடாத பிரபா, “ஏன் பேசமாட்டிங்களா ? என்னைய பாத்தா பயமா இருக்கா?.... பயப்படாம சொல்லுங்க, நான் ஒன்னும் உங்கள பண்ணிட மாட்டேன்” என்றான்... அப்போதும் அந்த வாலிபன் அதை கண்டுகொள்வதாக தெரியவில்லை.... கடைசியாக “பதினைந்து ரூபாய் தாங்க” என்ற வார்த்தை மட்டும் அந்த வாலிபன் சொல்ல, பணத்தை கொடுத்துவிட்டு ஏமாற்றத்துடன் வந்தான் பிரபா.... 
2 அந்த வாலிபனின் குரலே கிறக்கத்தை ஏற்படுத்தியது பிரபாவுக்கு.... என்ன ஒரு ஆண்மை பீறிடும் குரல்..... நிஜமாகவே அகிலன் சொல்வது சரிதான்.... இந்த வாலிபனுக்குள் என்னவோ ஒரு காந்த சக்தி இருக்கிறது.... அதன்மூலம் எளிதாக எவரையும் ஈர்க்கும் வல்லமை இருக்கிறது என்று நினைத்தவாறே மீண்டும் வந்து அமர்ந்தான்... நடந்தவற்றை கவனித்த அகிலன், “சொன்னேனே கேட்டியா?.... இப்போ உனக்கும் பல்ப் கொடுத்துட்டான் பாத்தியா?” என்று சிரித்தான்....
அசடு வழிந்தான் பிரபா.... மீண்டும் தொடர்ந்த அகிலன், “சரி இருக்குறத விட்டுட்டு பறக்குரதுக்கு ஆசைப்படாத.... இன்னைக்கு சாயுங்காலம் வந்திடு.... நம்ம குமார் வர்றதா சொல்லிருக்கான்.... ஒன்பதுமணி வரைக்கும் இன்னைக்கு கஜகஜா தான்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.....
ஆனாலும் பிரபாவுக்கு அந்த வாலிபனின் நினைவாகவே இருந்தது.... ஒரு வருடமாக இவன் இங்கிருக்கிறான், நான் இதுவரை அவனை பாத்ததே இல்லையே என்று ஆச்சரியப்பட்டான்.... அகிலன் சொன்னதைப்போல இருப்பதை அனுபவிக்க அகிலனின் விடுதிக்கு சென்றான்.... அன்று இன்பம் கொஞ்சம் அதிகமாகவே கிடைத்தது பிரபாவுக்கு... ஆனால் அவன் மனசெல்லாம் நிறைந்து ஆக்கிரமித்தது அந்த வாலிபனின் நினைவுகள்.... அப்படியே செல்லவே, நேரத்தை கவனிக்க பத்து மணி நெருங்கிவிட்டது.... அவசர அவசரமாக பேருந்துக்கு கிளம்பி ஓடினான்.... அவன் சென்ற நேரத்திற்கு முன்னதாகவே பேருந்து சென்றுவிட்டது, மீண்டும் விடுதிக்குள் நுழைய முயன்றான் பிரபா, கல்லூரி ஆசிரியர்களும், இன்னும் சிலரும் நின்று ஏதோ விசாரித்துக்கொண்டிருந்தனர் .... காவலாளிகளை தனியே சந்தித்த பிரபாவிடம் ,விடுதி மாணவர்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்க மாட்டோம் என்று காவலாளிகள் கூறவே ஒன்றும் புரியாமல் விடியற்காலை வரும் பேருந்திற்காக பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்தான்.... விடுதியில் இவனுக்கு சாதகமான சூழல் இல்லை என்பதால் வேறு வழி இல்லாமல் நின்றான்.... கைப்பேசியோ சார்ஜ் இல்லாமல் அணைந்துவிட்டது.... பத்தரை மணிக்கு வள்ளத்தில் தனக்காக காத்திருக்கும் மாமாவிடம் இதை தெரிவிக்க வேண்டுமென்றாலும் யாரையும் அந்த நேரத்தில் அனுகமுடியவில்லை.... ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது அந்த பகுதி.... என்ன செய்வது என்று புரியாமல் குழம்பியபடி நின்றான்....
அந்த காரிருள் சூழ்ந்த தெரு இன்னும் கலவரமாக்கியது பிரபாவை.... அந்த தெருவில் இருந்த ஒரே மின்விளக்கின் ஒளியிலேயே பயம் போக்க நின்றுகொண்டிருந்தான்.... தெருவில் ஆள் அரவமே இல்லை.... யாராவது வந்தால் அலைபேசி வாங்கி மாமாவிடம் தகவல் தெரிவிக்கலாம் என்றாலும், யாரும் வருவதாக தெரியவில்லை... அப்போது அங்கு வந்த இரண்டு பேரை பார்த்து பெருமூச்சு விட்ட பிரபா, அவர்கள் அருகில் சென்றான்.... அருகில் செல்ல செல்ல மதுவின் வாடை அதிகமானது... அவர்களிடம் உதவி கேட்கவேண்டாம் என்று அவன் உள்ளுணர்வு சொன்னாலும், இந்த நிலைமையில் அவர்களை விட்டால் வேறு வழி கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சத்தால் அவர்கள் அருகில் சென்று நடந்த விஷயங்களை கூறி அலைபேசி கேட்டான்....
மேலும் கீழும் பிரபாவை பார்த்த ஒருவன் , மற்றொருவனிடம் சைகை காண்பிக்க தலை அசைத்தபடி பிரபாவை பார்த்த ஒருவன், "பரவால்லப்பா.... பக்கத்துலதான் எங்க கடை இருக்கு.... அங்க போன் இருக்கு.... பேசிக்கலாம் வா" என்று அழைக்கவே மறுக்க முடியாமல் உடனே சென்றான் பிரபா.... அந்த விளக்கின் வெளிச்சம் இருந்தவரை இருந்த மன தைரியம், விளக்கின் ஒளி மங்க துவங்குகையில் பதற்றம் அதிகமானது.... இனி விதி விட்ட வழி என்று அவர்கள் பின்னே சென்றுகொண்டிருந்தான் பிரபா.... இப்போது அந்த தெருவை முழுமையாக சூழ்ந்துகொண்டது..... முன்னால் சென்ற இருவரும் பிரபாவையும் அவன் பின்னால் சாலையையும் பார்த்தார்கள்.... உடனே ஒருவன் பிரபாவின் கையை பிடித்து முதுகோடு கட்ட, மற்றொருவன் பிரபாவின் கைப்பேசி, பணம், செயின் முதலானவற்றை கழற்றினான்.... எவ்வளவு முயன்றும் பிரபாவால் தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியவில்லை..... ஒருவன் கையில் இருந்த கத்தி, அவன் சப்த நாடிகளையும் நிறுத்தியது..... எல்லாவற்றையும் கழற்றிவிட்டு ஒருவன் செல்ல முயலும்போது மற்றொருவன் ஏதோ கூற, "சரி வேகமா முடிச்சிட்டு வா... நான் கையை பிடிச்சுக்கறேன்" என்றவாறு கைகளை பிடிக்க மற்றவன் முன்னே வந்தான்..... பணத்தோடும் பொருளோடும் போய்விடுவார்கள் என்று நினைத்த பிரபாவுக்கு இந்த செயல்கள் மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.... முன்னே வந்தவன் அவசர அவசரமாக பிரபாவின் சட்டையை கழற்றினான்.... கழற்றினான் என்று சொல்வதைவிட கிழித்தான் என்றுதான் சொல்லவேண்டும்.... சட்டை பொத்தான்கள் அந்த சாலையில் சிதறிய சத்தம் கேட்டது.... பின்னால் நின்றவன் கையில் இருந்த கத்தி, பிரபாவின் கழுத்தை வெறித்து பார்த்தபடி ரத்த சுவைக்காக காத்திருந்தது.... பிரபாவின் சட்டையை கழற்றியவன், அவன் மார்பு காம்புகளை சுவைக்க தொடங்கினான்.... அருவருப்பின் உச்சம் சென்றான் பிரபா.... சத்தம் போட முயன்ற பிரபாவின் கழுத்தை அழுத்தியது கத்தி.... முன்னால் நின்றவனின் கை இப்போது பிரபாவின் பேன்ட்டை நோக்கி விரைந்தது.... காட்டுமிராண்டியைப்போல இருந்தது அந்த நபரின் செயல்.... இதற்கு மேல் உயிரே போனாலும் கவலை இல்லை என்று நினைத்த பிரபா சத்தம் போட தொடங்கினான்.... அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அங்கே வந்த ஒருவன் அந்த இருவரையும் பிடித்து தள்ளி, கன நேரத்தில் நடந்து முடிந்தது ஒரு சிறு சண்டை.... ஏற்கனவே போதையில் இருந்த அந்த முரடர்களால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாமல் பின்வாங்க முயலவே, தன்னிடமிருந்து பறித்த பொருட்களை பிரபா அவர்களிடத்தில் இருந்து பிடுங்கினான்....
பயந்து ஓடினர் அந்த முரடர்கள் இருவரும்..... பின்னர் பிரபாவும் அவனை காப்பாற்றியவனும் வெளிச்சத்தை நோக்கி வந்தனர்.... பிரபா திகைத்தான்... காரணம், அன்று காலையில் கேண்டினில் பார்த்த அந்த அழகன் அவன்.... உயிர் பிழைத்த சந்தோஷத்தைவிட, தன்னை காப்பாற்றியவன் அந்த அழகன் என்று என்னும்போது இன்னும் தித்திப்பானது அந்த தருணம்.... பின்னர் தன் மாமாவிற்கு அந்த வாலிபனின் கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்து தஞ்சைக்கு வர சொல்லிவிட்டான்.... எப்படியும் மாணிக்கம் வந்து சேர இன்னும் ஒருமணி நேரம் ஆகலாம்.... இதை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைத்த பிரபா, “மாமா வர இன்னும் ஒரு மணி நேரமாகும்... அதுவரைக்கும் நான் தனியா இங்க இருக்க முடியாதே?” என்றான்....

“பக்கத்துல தான் ஒரு ஹோட்டல் இருக்கு.... அங்க ஆள் நடமாட்டம் இருக்கும், அங்க இரு” என்றான் அந்த வாலிபன்....
“அங்கயும் அந்த ரவுடி பசங்க வந்துட்டாங்கன்னா என்ன பண்றது?” என்று தன் முகத்தை அப்பாவியாக வைத்தவாறே கேட்டான் பிரபா....
“அப்படின்னா நீ ஒரு ஆட்டோ பிடிச்சு பஸ் ஸ்டாண்ட் போயிடு....” என்றான் வாலிபன்...
“ஏங்க, இவ்வளவு சொல்றேனே....ஒரு வார்த்தைக்கு உங்க ரூம்ல வந்து இருக்க சொல்ல மாட்டிங்களா?” என்று கொஞ்சம் கோபத்தோடு கேட்டான் பிரபா....
“சரி வா” என்று அழைத்துக்கொண்டு போனான் அந்த வாலிபன்.... சற்று முன் வரை அச்சத்தையும், பீதியையும் உண்டாக்கிய அந்த இருள் சூழ்ந்த சாலை இப்போது சொர்க்க லோகத்தை போல காணப்பட்டது பிரபாவுக்கு..... செல்லும் வழியெல்லாம் பிரபா வாயை மூடாமல் பேசிக்கொண்டே வர, அந்த வாலிபனோ அமைதியாகவே வந்தான்....
“எப்டி நான் கஷ்டத்துல மாட்டுனப்போ ஹீரோ மாதிரி கரெக்டா வந்தீங்க?”
“............”
“உங்க பேரு என்ன?...உங்க சொந்த ஊர்....” என்று பிரபா தொடங்குவதற்கு முன் இடைமறித்த அத வாலிபன், “இதைப்பத்திஎல்லாம் கேக்குறதா இருந்தா இத்தொட நீ நின்னுக்க, நான் கிளம்புறேன்.... என்னைப்பற்றி எதுவும் கேக்க கூடாது.... இதை ஒத்துகிட்டா மேற்கொண்டு வா” என்றான்....
“சரி கோபப்படாதிங்க..... நான் எதுவும் கேட்கல.... சரி என் பேரு பிரபா.... பிரபாகரன்.... நம்ம காலேஜ்ல பஸ்ட் இயர் முடிக்க போறேன்.... சொந்த ஊர் வல்லம் பக்கத்துல ஒரு கிராமம்” என்று சொல்லிக்கொண்டிருந்தபோது இடைமறித்த அந்த வாலிபன், “என்ன பேரு சொன்ன?” என்றான்....
“பிரபா.... பிரபாகரன்..... ஏன் என்னாச்சு?” என்றான் பிரபா....
“ஒன்னுமில்ல.... என் பேரு சாந்தன்.... இப்போதைக்கு இது போதும் உனக்கு.... மற்றதை தருணம் வர்றப்போ நானே சொல்றேன்” என்றான் அந்த வாலிபன்...
“அப்பா.... இதுவரைக்கும் சொன்னதே பெரிய விஷயம்தான்.... ஆமா, என்னைவிட உங்க பாடி ஒன்னும் பயங்கரமா இல்ல... ஒல்லியாத்தான் இருக்கீங்க.... எப்புடி அந்த ரெண்டு போரையும் அடிச்சிங்க.... அந்த தைரியம் எப்டி வந்துச்சு உங்களுக்கு?” என்றான் பிரபா....
“தைரியம் உடம்புல இல்ல, உன் மனசுல இருக்கு.... உருவத்துல இல்ல, உன் உள்ளத்துள இருக்கு” என்றான் சாந்தன்....
“அட இவ்வளவு பேசுவீங்களா நீங்க?.... உங்களுக்கு திக்கு வாயோன்னு நினச்சேன்.... இவ்வளவு அழகா பேசுறீங்க.... நெறைய பேர் உங்கள ஊமைன்னே நினைச்சுகிட்டு இருக்காங்க நம்ம காலேஜ்ல” என்று பிரபா சொன்னதை கேட்டு மெலிதாக சிரித்தான் சாந்தன்....
தொடர்ந்த பிரபா, “அடடே... உங்களுக்கு சிரிக்க கூட தெரியுமா?... நரசிம்மராவ் மாதிரி சிரிக்கவே மாட்டிங்களோன்னு நினச்சேன்.... சிரிச்சா ரொம்ப அழகா இருக்கீங்க.... அதிகமா சிரிக்காதிங்க, பல பேர் கண்ணு வச்சிடுவாங்க” என்று கூற, அடக்கமாட்டாமல் மீண்டும் சிரித்தான் சாந்தன் ....
அப்படியே சாந்தன் தங்கி இருக்கும் அறைக்கு வந்தார்கள் இருவரும்... அங்கும் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருக்கையில் மாமா வந்துவிட்டார்.... சாந்தனுக்கு நன்றி கூறிவிட்டு பிரபாவும் மாணிக்கமும் ஊரை நோக்கி புறப்பட்டனர்.... நடந்த விஷயங்களை மாணிக்கத்திடம் முழுமையாக சொல்லவில்லை பிரபா....
“மாப்ள, அந்த பையன் செமையா இருக்கான்டா.... எங்கயோ பாத்த மாதிரி இருக்கு... எந்த ஊர்?” என்றான் மாணிக்கம்...
“அட போ மாமா... அவன் என்னமோ பாகிஸ்தான் தீவிரவாதி ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குறான்.... எதையும் சொல்ல மாட்றான்.... எங்க கேண்டின்ல வேலை பார்க்குறான்....” என்று பிரபா கூற சிரித்த மாணிக்கம், “தீவிரவாதியா?... அப்போ துப்பாக்கி நல்லா பெருசா வச்சிருப்பானோ?” என்றான்....
“உன்ன திருத்தவே முடியாது.... ரோட்டை பாத்து வண்டிய ஓட்டு” என்று கூறிவிட்டு தலையில் கொட்ட, சிரித்தவாறே இருவரும் வீட்டை அடைந்தனர்.... மறுநாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தாமதமாக எழுந்தான் பிரபா.... மாணிக்கமோ விடியற்காலையிலேயே எழுந்து வேட்டைக்கு புறப்பட்டான்.... வல்லத்திற்கு சென்றும் ஒன்றும் சிக்காத சோகத்தில், தன் ஊரில் முன்பு ஒருமுறை உறவாடிய ஒருவனை பார்த்தான்.... அவனை பார்த்ததும் உள்ளுக்குள் மகிழ்ச்சியான மாணிக்கம், அவன் அருகில் சென்று, “டேய் பாண்டி.... எப்புடிடா இருக்க?.... உன்ன பாத்தே பல நாள் ஆச்சே?.... எங்க போன?” என்றான்....
“பாத்து பல நாள் ஆச்சா?.... நேத்துதான் நீ கம்மாய்ல குளிக்கிரப்ப பாத்தேன்.... என்ன இப்ப புதுசா கேக்குற?.... வேற எவனும் மாட்டலைன்னு இப்போ வர்றியா நீ?” என்றான் பாண்டி....
“நான் என்ன அப்புடிப்பட்ட ஆளாடா?... சரி பழச விடு.... வா இப்ப போகலாம்....” என்று நேரடியாகவே சொல்லிவிட்டான் மாணிக்கம்....
“ஐயோ வேணாம்பா... ஆடி மாசத்துல ஒன்னு சேரக்கூடாதாம்.... எங்க அக்கா கூட அதுனாலதான் இப்ப எங்க வீட்ல இருக்கு..... சாமி குத்தம் எதுவும் ஆயிட போவுது....” என்று பதறினான் பாண்டி....
சிரித்த மாணிக்கம், “டேய்.... ஆடியில சேர்ந்தா, சித்திரையில புள்ள பொறக்கும்.... அதனால, சித்திரை வெயிலு குழந்தைக்கு ஆகாதுன்னு அப்புடி சொல்வாங்கடா.... நம்ம ஆடில மட்டுமில்ல, ஆவணி, புரட்டாசினு எப்ப சேர்ந்தாலும் புள்ள பொறக்காது.... கவலைப்படாம வாடா” என்று விளக்கம் கொடுத்தான்...
“அடப்போ மாமா.... காளி கோயில்ல காப்பு கட்டியாச்சு..... ஊரே சுத்தபத்தமா இருக்கு..... நீ இப்புடி எதாச்சும் பண்ணிக்கிட்டு திரியாம , தலையில தண்ணிய ஊத்திகிட்டு போயி தூங்கு.... நான் கெளம்புறேன்” என்று பாண்டி கிளம்பிவிட்டான்....
“அடச்ச.... இந்த பயலுக திருந்தவே மாட்டானுக.... நமக்கிருக்க தெளிவுக்கும், அழகுக்கும் அமெரிக்காவுல இருந்திருக்கணும்.... “ என்று தன் நிலையை நொந்தவனாக வீட்டிற்கு தனியாக கிளம்பினான் மாணிக்கம்....
காலையில் எழுந்தது முதல் பிரபாவுக்கு சாந்தனின் நினைவாகவே இருந்தது.... அவன் சிரிப்பு, பேச்சு, முரடர்களிடமிருந்து காப்பாற்றியபோது எதேச்சையாக அவன் மீது பட்ட அந்த தொடுதல் என்று எல்லாவற்றிலும் சாந்தன் நினைவே இருந்தது.... வழக்கமான ஞாயிற்றுக்கிழமை எப்போதும் ரசிக்கும்படி இருந்தாலும், இன்று என்னவோ வெறுக்கும்படி இருந்தது.... எப்போது திங்கள் கிழமை வரும்? எப்போது சாந்தனை பார்க்கலாம்? என்ற நினைப்பே மேலோங்கி நின்றது.... மாணிக்கம் தன் கவலையில் மூழ்கி இருந்ததால் பிரபாவை பற்றிய அதிகம் சிந்தனை செய்யவில்லை.... மறுநாள் வழக்கம் போல கல்லூரிக்கு கிளம்பினான் பிரபா, ஆனால் வழக்கத்திற்கு மாறான உற்சாகத்துடன்....
“சாப்பிட்டு போடா” என்றார் அம்மா....
“இல்லம்மா லேட் ஆச்சு... நான் கிளம்புறேன்” என்று அவசரமாக வெளியே வந்தான் பிரபா....
“அப்போ காலேஜ் கேண்டின்’லயாவது எதாவது சாப்பிடுப்பா” என்றார் அம்மா.... அந்த “கேண்டீன்” என்ற வார்த்தை பிரபாவின் காதுகளில் இன்னும் அழுத்தமாக விழுந்திருக்கலாம்.... அதை கேட்டவுடன் மெலிதாக ஒரு சிரிப்பு அவனை அறியாமல் அவன் முகத்தில் படர்ந்தது..... வல்லம் செல்லும் வழியில் மாமா வழக்கம்போல வாயை மூடாமல் பேசிக்கொண்டுவர, பிரபாவோ வேறு உலகத்தில் சாந்தனோடு நடனம் ஆடிக்கொண்டிருந்தான்.... ஒருவாராக கேண்டீன் சென்றுவிட்டான் பிரபா....
தன் இடத்தில் கருமமே கண்ணாக குளிர்பான புட்டிகளை அடுக்கி வைத்துக்கொண்டிருந்தான் சாந்தன்.... அருகில் சென்று புன்னகைத்தான், பதிலுக்கு லேசாக ஒரு மெல்லிய புன்னகையை மட்டும் உதிர்த்தவாறு தன் வேலையை தொடர்ந்தான் சாந்தன்.... முந்தைய நாள் இரவு நிகழ்வுகளை மறந்தவனைப்போல கண்டுகொள்ளாமல் இருந்தான் சாந்தன்.... இது பிரபா எதிர்பார்த்த ஒன்றுதான்.... “ஹாய் பிரபா... நல்லா இருக்கியா?.... இப்போ ரிலாக்ஸ் ஆகிட்டியா?” என்று சாந்தன் கேட்டிருந்தால்தான் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்திருக்க வேண்டும்.... இது சாந்தனிடம் எதிர்பார்த்த ஒன்றுதானே.... பொதுவாக தன்னை ஒருவன் புறக்கனிக்கிரானோ? என்ற சந்தேகம் வந்தால் கூட அவர்களிடத்தில் உள்ள நட்பையும் உறவையும் முறித்துக்கொள்ளும் குணம் உடையவன் பிரபா, ஆனால் ஆச்சரியமாக சாந்தன் விஷயத்தில் தலைகீழாக மாறி இருந்தான்.... சாந்தனை சந்தித்தது முதல் வெறும் அவமானங்கள்தான்... ஆனாலும் அவனை விட்டு விலக முடியவில்லை... அவமானமும், மரியாதை இன்மையும் தான் கிடைக்கப்போகிறது என்று தெரிந்தே மனம் அவனை நாடியே செல்வது பிரபாவுக்கே விந்தையாக தெரிந்தது....
அப்படியே சிலநாட்கள் சென்றது....மனதிற்குள் வருத்தம் இருந்தாலும் , வருத்தத்தை தாண்டிய ஒரு உணர்வால் தினமும் சாந்தனை பார்ப்பான் பிரபா.... வழக்கம்போல அன்றும் கேண்டீன் வந்தான்.... கேண்டீனோ பூட்டப்பட்டிருந்தது.... வெளியில் சில மாணவர்கள் விவாதித்துக்கொண்டிருந்தனர்..... விசாரித்தபோது கேண்டீனில் எக்ஸ்பைரி ஆன குளிர்பானம் விற்கப்பட்டதும், அதை குடித்ததால் ஒரு மாணவருக்கு வயிற்றுப்போக்கு என்றும் கூறினார்கள்.... "குளிர்பானம் கவனிப்பது சாந்தனாச்சே.... அச்சச்சோ... அப்போ அவனுக்கு எதுவும் பிரச்சினையோ?" என்றுதான் முதலில் பதறினான்.... உடனே விசாரித்து சாந்தன் இருக்கும் இடத்தை அடைந்தான்.... சோகமாக ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தான் சாந்தன்.... "என்ன ஆச்சு சாந்தன்? என்றான் பிரபா....
முதலில் தயங்கிய சாந்தன், வேறு வழியின்றி தொடங்கினான், "கூல்ட்ரிங்க்ஸ் பாட்டில் காலாவதி ஆகிடுச்சுன்னு தெரியாமல் சப்ளை பண்ணிட்டேன்.... அத குடிச்சதால யாருக்கோ உடம்பு சரி இல்லையாம்.... பாதிக்கப்பட்டவங்க புகார் கொடுத்திட்டா, பாவம் எங்க கேண்டீன் முதலாளி'யோட லீசை கேன்சல் பண்ணிடுவாங்கலாம்.... பாவம் அவரு.... ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த ஒப்பந்தம் இது, இப்டி என்னால போனா ரொம்ப கஷ்டமா இருக்கும்" என்றான்... முதல்முதலாக பிரபாவிடம் இவ்வளவு பேசியதே இப்போதுதான்... இந்த ஒரு விஷயம் போதாதா..... புயலென புறப்பட்டான் பிரபா.... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பாதிக்கப்பட்ட மாணவன் நம்ம "அகிலன்".... இதை தெரிந்ததும், பிரச்சினை முடிந்ததாக நினைத்துக்கொண்டான் பிரபா.... நேராக மருத்துவமனைக்கு சென்றான் பிரபா.... பிரபாவை பார்த்ததும் மகிழ்ந்த அகிலன், "வாடா.... நீயாச்சும் வந்தியே.... காலைலேந்து ஒரு தண்ணி பாட்டில் வாங்கித்தர கூட ஆள் இல்லடா.... சிங்கமா சுத்துன என்னைய, இப்புடி சாச்சுப்புட்டாங்களேடா மச்சான் .." என்று நொந்துகொண்டான்....  "பரவால்ல விடுடா..... அதே நெனச்சுக்கிட்டு இருக்காத... ஆமா, கம்பளையின்ட் எதுவும் குடுக்கலையே?" என்றான் பிரபா....
"இல்லடா இன்னும் குடுக்கல.... அந்த ரோபோ தான் என் மேல உள்ள கோபத்துல என்னமோ பண்ணிருக்கான்.... டிஸ்சார்ஜ் ஆகி போன உடனே முதல்வேலையா டீன் கிட்ட கம்ப்ளயின்ட் பண்ணனும்..." என்று கோபத்துடன் கூறினான் அகிலன்....
அதிர்ந்த பிரபா, "வேண்டாம்டா... பாவம்... தெரிஞ்சே யாராவது இப்புடி பண்ணுவாங்களா?.... அவன் பாவம்டா , புகார்லாம் வேண்டாம் விட்ரு" என்றான்....
"ஓஓஹோ.... நீ அவனுக்காகத்தான் இப்ப வந்தியா?.... பாசத்தோட வந்தன்னு நினச்சேன், இப்படி வேஷம் போட்டு வந்திருக்கியேடா?" என்றான் அகிலன்....
"இப்புடி ரைமிங்கா பேசுறதை நிறுத்து.... கம்ப்ளைன்ட் எதுவும் கொடுக்காத,... அப்புறம் கொடுத்தின்னா உன்மேல அவன் செக்ஸ் புகார் கொடுப்பான்.... அதுக்கு நான் சாட்சியும் சொல்லுவேன்.... உங்க அம்மா அப்பா காலேஜ்'கு வந்து விசாரணை நடந்து.... யோசிச்சு பாரு,... இதெல்லாம் உனக்கு தேவையா?" என்றான் பிரபா....
இதையெல்லாம் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தான் அகிலன், "அடப்பாவி... அவன் மேல ஆசைப்பட்டது என்னமோ உண்மைதான்.... நீ அதுக்குள்ள அம்மா அப்பா வரைக்கும் போய்ட்டியேடா.... வேண்டாம்பா, அப்படி எதுவும் செஞ்சிடாத.... நான் கம்ப்ளயின்ட் எதுவும் கொடுக்கல..... கடைசில உன் போதைக்கு என்னைய ஊறுகாயா ஆக்கிட்டியேடா" என்று நொந்துகொண்டான்....
ஒருவழியாக இந்த செய்தியை சாந்தனிடமும் அவன் முதலாளியிடமும் தெரிவிக்க மகிழ்ந்தார்கள் இருவரும்.... "தாங்க்ஸ்.... ரொம்ப நன்றி" என்று பிரபாவின் கையை பிடித்தான் சாந்தன்..... அத்தனை நாட்களின் தவத்தையும், அந்த ஒரு நிமிட தொடுதல் சுக்கு நூறாக்கியது.... அதன் பிறகு இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கினார்கள்.....  இப்போது சாந்தன் ஓரளவு சகஜமாக பேசினான் பிரபாவிடம்.....
சாந்தன் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகினாலும், பிரபாவின் மனதிற்குள் அவனை அடையவேண்டும் என்ற எதிர்பார்ப்பே மேலோங்கி இருந்தது.... இதில் தவறு இருப்பதாக அவன் உணரவில்லை.... காரணம், இருவருக்கும் இன்பம் தரும் விஷயத்தில் தயங்கிட தேவை இல்லை என்ற எண்ணம்தான்.... அதற்கான தருணத்தை நோக்கி காத்திருந்தான்.... அன்று அப்படி ஒரு வாய்ப்பை ஏற்ப்படுத்திக்கொண்டான் பிரபா.... அன்று கல்லூரி கலைவிழா என்பதால் எல்லோரும் கல்லூரியில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் கழித்தனர்..... பிரபாவின் நண்பர்களின் வர்ப்புருத்தளால் முதன்முறையாக கொஞ்சம் மது அருந்தினான் பிரபா.... பத்து மணியை கடந்துவிட்டது நேரம்.... அகிலன் மற்றும் நண்பர்களிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் பிரபா.... தடுத்த அகிலன், "மச்சான்.... மணி பத்து ஆகிடுச்சு.... தண்ணி வேற அடிச்சிருக்க.... வீட்டுக்கு போறது ரிஸ்க்..... பேசாம என் ரூம்லேயே தங்கு, எல்லாத்தையும் முடிச்சிட்டு காலைல போகலாம்" என்று கண்ணடித்தான்..... "எல்லாம் எனக்கு தெரியும்டா.... நா பாத்துக்கறேன்... இதுக்குத்தான் இவ்வளவு நாளா காத்திருந்தேன்" என்று கூறிவிட்டு கிளம்பினான் பிரபா.... முதல் முறை மது அருந்தினாலும் போதையில் இல்லை பிரபா... ஆனால் ஒருவித அசட்டு தைரியம் மனதிற்குள் இருந்தது.... பத்தரை மணியை கடந்தபோது, பிரபா சென்றது சாந்தனின் அறைக்கு.....
கதவை திறந்த சாந்தன் பிரபாவை பார்த்து அதிர்ச்சியானான், "என்ன இந்த நேரத்துல?.... எதுவும் முக்கியமான விஷயமா?" என்றான்.....
"ஒன்னுமில்ல.... இன்னைக்கும் பஸ் மிஸ் பண்ணிட்டேன்.... அதான்...." என்று இழுத்தான்.... சாந்தனோ தன் கையில் இருந்த அலைபேசியை எடுத்து பிரபாவிடம் கொடுத்து, "உங்க மாமாவ வரச்சொல்லு" என்றான்.... "நான் போன் பண்ணாலும் அவர் வரமுடியாது.... அவர் ஒரு வேலை விஷயமா நாகப்பட்டினம் போயிருக்காரு...." என்றான்.... கொஞ்சம் யோசித்த சாந்தன், "தண்ணி அடிச்சுருக்கியா?" என்றான்....
"இல்ல ப்ரெண்ட்ஸ் கம்பல் பன்னதால கொஞ்சம்....." என்றான் தயங்கியபடியே பிரபா....
முகத்தை மாறவைத்த சாந்தன், "இது எனக்கு சரியா படல.... நான் கீழ தங்கி இருக்கங்ககிட்ட பைக் வாங்கிட்டு வரேன், நானே உன்ன கொண்டு விட்டுட்டு வரேன்" என்றான் ....
"வேண்டாம் சாந்தன்.... தண்ணி அடிச்சதோட வீட்டுக்கு போகமுடியாது.... தப்பா நினைச்சுக்காத" என்றான். பிரபா.....
"அப்போ நான் ஒன்னும் பண்ண முடியாது" என்று கைவிரித்தான் சாந்தன்....
"இவ்வளவு பேசுற நீ, உன் ரூம்ல தங்கிக்கோனு ஒரு வார்த்தை சொல்ல மாட்டியா?... இன்னுமா என்மேல உனக்கு நம்பிக்கை வரல?" என்று போலியாக கோபம் கொண்டான் பிரபா....
சற்று யோசித்த சாந்தன், "இல்ல.... என் ரூம் உனக்கு வசதிப்படாதுன்னு தான் யோசிக்குறேன்...." என்றான் தயங்கியபடியே.....
"அதை நான் பாத்துக்கறேன்" என்று சொன்னபடியே சாந்தனை விலக்கி உள்ளே நுழைந்தான் பிரபா.... மிகச்சிறிய அறை, அதில் ஒரே ஒரு பழைய கட்டில்... அதை தாண்டி கீழே இன்னொருவர் படுக்க முடியாது.... உள்ளே சென்ற பிரபா, முகம் கழுவி புத்துணர்ச்சி ஆனவுடன் அந்த கட்டிலில் படுத்தான்.... சாந்தனோ அருகில் இருந்த ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு தூங்க முயன்றான்....
"ஏய், நீ ஏன் அங்க தூங்குற?.... பரவால்ல வா... கட்டில்ல படுத்துக்கோ, நான் ஒன்னும் உன்ன கடிச்சு தின்னுட மாட்டேன்" என்று சிரிக்க, சாந்தனும் படுத்தான்.... நெருங்கித்தான் இருவரும் படுக்க வேண்டும் என்ற நிலைமையில் தான் அந்த கட்டில் இருந்தது.... இப்படி ஒரு நிமிடத்தை தான் பிரபா இவ்வளவு காலம் எதிர்பார்த்தான்.... சாந்தனின் மூச்சுக்காற்று பிரபாவை இன்னும் சூடாக்கியது.... அரைமணி நேரம் கழித்து, சாந்தன் தூங்கிவிட்டதைப்போல உணர்ந்தான் பிரபா.... தன் வேலையை தொடங்கலாமா? என்று யோசித்தான் பிரபா.... மனம் படபடக்க தொடங்கியது.... இதயம் இடி போல துடித்தது.... உடலெல்லாம் வியர்த்து விறுவிறுக்க தொடங்கியது..... சாந்தன் தூங்கிவிட்டான் என்று உறுதி செய்துகொண்ட பிரபா, தன் கையை சாந்தனின் மீது வைக்க முயன்றபோது , "பிரபா.... தூங்கிட்டியா?" என்றான் சாந்தன்.... தூக்கி வாரிப்போட்டது பிரபாவுக்கு... நல்லவேளையாக கை வைக்கவில்லை என்றி தன்னை தேற்றியவாறே, "இல்ல .... சொல்லு..." என்றான் பிரபா . ... "இன்னைக்கு ஏன் திடீர்னு இந்த புதுப்பழக்கம் உனக்கு?" என்றான் சாந்தன்.... ஒரு நிமிடம் இதயம் நின்றது பிரபாவுக்கு... ஆனாலும் காட்டிக்கொள்ளாமல், "என்ன.... எத சொல்ற?" என்றான்....
"தண்ணி அடிச்சததான் கேக்குறேன்" என்று சாந்தன் சொன்னதும்தான் பிரபாவுக்கு உயிரே வந்தது.....
"ப்ரெண்ட்ஸ் லாம் கம்பல் பண்ணாங்க.... அதான் ஒரு தடவ ட்ரை பண்ணலாம்னு..." என்று இழுத்தான் பிரபா....
"அந்த அகிலனை சொல்றியா?"
"ஆமா.... அவனும் மத்த பசங்களும்தான்"
"அகிலன் உனக்கு ப்ரெண்ட் மட்டும் தானா?... இல்ல...." என்று சாந்தன் வினவியது பிரபாவை அதிர்ச்சி ஆக்கியது.... இருந்தாலும் அதை தெரியாதது போல, "ப்ரெண்ட் தான்... ஏன் கேக்குற?" என்றான்...
"இல்ல... அவன் ஒரு மாதிரின்னு எனக்கு தெரியும்...."
"ஒரு மாதிரின்னா?"
"அதான்... ஆம்பள பசங்க கூடவே செக்ஸ் வச்சிக்கறது... அப்புடித்தான்" என்று சாதாரணமாக கேட்டான்....
இருந்தாலும் இதை தெரியாதவன் போல காட்டிக்கொண்ட பிரபா, "அப்புடியா?.... எனக்கு தெரியாதே" என்றான்....
"என்கிட்டயே ஒருதடவை ஒரு மாதிரி நடந்துகிட்டான்.... மூஞ்சில ஒரு அடி விட்டேன்.... அப்போலேந்து என்கிட்டே எதுவும் வச்சிக்க மாட்டான்..." என்று சொன்ன சாந்தன் சிரித்தான்....
இவ்வளவு பெரிய ஒரு விஷயத்தை இவ்வளவு சாதாரணமாக சாந்தனால் எப்படி சொல்ல முடிகிறது என்று ஆச்சரியப்பட்டான் பிரபா.... அதே நேரம் சாந்தன் வேறு ஒரு மாணவனை அடித்ததாக அகிலன் கூறியதை நினைத்து, "அவனே அடிவாங்கிட்டு, யாரோ அடிவாங்குன மாதிரி சொல்லிருக்கான் அந்த நாய்... பாத்துக்கறேன் அவனை" என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் பிரபா....
"அப்புடியா?....ஆச்சரியமா இருக்கு... இது எனக்கு தெரியாதுடா" என்றான் பிரபா....
"ஆமா... எனக்கே ஆச்ச்சரியமாத்தான் இருக்கு.... அவன் மட்டுமில்ல... நிறையபேர் என்னைய அப்புடி ஒரு கண்ணோட்டத்துலதான் பாக்குறாங்க.... அதனாலேயே நான் யார்கிட்டயும் பேசுறதை குறைச்சுக்கிட்டேன்.... எல்லாருக்கும் நான் ஒரு போகப்பொருளாதான் தெரியுறேன்.... அதுல நீ மட்டும்தான் மொத்தமா மாறி இருக்க.... நல்ல மனசோட ஒரு நண்பனா பழகுறது நீ மட்டும்தான்.... நீ வந்த பின்னாடிதான், நான் இப்போலாம் இயல்பா ஆகிருக்கேன்... இல்லைனா, யாரை பார்த்தாலும் எரிச்சலாவே இருக்கும்.... ரொம்ப நன்றி பிரபா" என்று பிரபாவின் கைகளை பிடித்தான் சாந்தன்... இந்த வார்த்தைகளை கேட்ட பிரபா அதிர்ச்சியில் உறைந்தான்.... முகத்தில் அறைந்ததைப்போல உணர்ந்தான்.... "இவ்வளவு உயர்வா என்னைய நினைச்சுகிட்டு இருக்குற ஒருத்தன்கிட்ட, நான் எவ்வளவு கேவலமா நடந்துக்க துணிஞ்சேன்.... அசிங்கமா இருக்கு" என்று தன்னை நொந்துகொண்டான்.... அன்றைய இரவு முழுவதும் பிரபாவின் குற்ற உணர்ச்சி அவனை உறுத்தியது..... "ஒருவேளை சாந்தனை தவறான நோக்கத்தோடு அணுகி இருந்தால், ஒன்று என்னை அடித்து விரட்டி இருப்பான், அல்லது உலகிலேயே கேவலமான ஒரு ஜந்துவாக என்னை பார்த்திருப்பான்.... அப்படி ஒரு அசிங்கத்தை சுமந்திருப்பதிலிருந்து தப்பித்தேன்" என்று நினைத்துக்கொண்டான்.... மறுநாள் காலை விடியும் முன்னரே, சாந்தனிடம் சொல்லிவிட்டு கிளம்பினான் பிரபா....
இரவு முழுக்க தூக்கம் இல்லாததால், வீட்டிற்கு சென்று பகல் முழுவதும் தூங்கினான் பிரபா....
அதன் பின்பு குற்ற உணர்வு நாள் ஆக ஆக குறைந்து இயல்பாக பழகினான் பிரபா.... செமஸ்டர் விடுமுறையும் வந்தது.... மறுநாள் முதல் பத்து நாட்கள் விடுமுறை.... சாந்தனிடம் விடைபெற்று செல்வதற்காக கேண்டீன் வந்தான்... கர்ம சிரத்தையோடு பத்து நாள் விடுமுறைக்காக கேண்டீனில் பரமாரிப்பு வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தான்.... பிரபாவை பார்த்ததும் சிரித்த சாந்தன், "வாங்க சார், என்ன லீவுக்கு எங்க போகப்போறிங்க ?...." என்றான்....
"எங்க போறது?... ஊர்ல நாளைக்கு திருவிழா ஆரமிக்குது.... அதுனால ஒரு வாரத்துக்கு ஊர்லதான் குப்ப கொட்டணும்... அப்புறம் என்னத்த நான் வேற எங்கயும் போறது?" என்று சிரித்தான் பிரபா.... மேலும் யோசித்தவனாக, "ஆமா, நீ எங்க போற?... சொந்த ஊருக்கு போறியா?... இதுவரைக்கும் நீ எங்கயும் போயி பாத்ததே இல்லையே?" என்றான் பிரபா.... சிரித்த சாந்தனின் முகம் சுருங்கிப்போனது, "இல்லப்பா.... இங்கதான்.... " என்று சோகம் தொனிக்க கூறினான்... பிரபாவும் சோகமானததை கவனித்த சாந்தன், "ஒரு பத்து நாள் ரெஸ்ட் எடுக்கலாம்ல" என்று பொய்யான சிரிப்பை உதிர்த்தான்.... ஆனாலும், பிரபா ஏதோ சிந்தித்தவனாக, "சரி.... நாளைக்கு காலைல உன்ன வந்து கூட்டிட்டு போறேன்" என்றான் ..... பதறிய சாந்தன், "எங்க?" என்றான்....
"ஹ்ம்ம்.... உனக்கு பொண்ணு பாக்க.... " என்றான் பிரபா கிண்டல் தெறிக்க....
"ஏய், என்ன கிண்டலா?... ஒழுங்கா சொல்லு" என்று இயல்பாக்கினான் சாந்தன்....
தொடர்ந்த பிரபா, "எங்க வீட்டுக்குதான்.... ஊர்லயும் இப்போ திருவிழா நடக்குது.... அதை பாத்த மாதிரியும் இருக்கும்.... அப்புறம் எங்கயாவது சுத்திப்பாக்க போகலாம்... நீயும் இருந்தின்னா எனக்கு டபுள் சந்தோஷம்டா" என்று கூறினான்.... உள்ளுக்குள் இதில் உடன்பாடு இருந்தாலும், அதை காட்டிக்கொள்ளாதவனாக "இல்ல வேண்டாம்டா.... நான் இங்கயே இருந்திடுறேன்" என்றான் ....
"உன்ன நான் வர்றியா?னு கேக்கல.... வரணும்னு உத்தரவு போடுறேன்.... நாளைக்கு காலைல பத்து மணிக்கு உன்னைய கூட்டிட்டு போக உன் ரூமுக்கு வருவேன்.... டிரெஸ்'லாம் எடுத்து வச்சுகிட்டு தயாரா இரு" என்று கூறிவிட்டு சாந்தனின் பதிலை எதிர்பார்க்காமல் வீட்டிற்கு கிளம்பிவிட்டான் பிரபா..... வீட்டிற்கு வந்தவுடன் மிகவும் பொறுப்பாக, தன் அறையை சுத்தப்படுத்த தொடங்கினான் பிரபா.... மறுநாள் தன் மனம் கவர்ந்த இளவரசன் தன்னுடன் இருக்கப்போகும் இடம் அல்லவா, அதனால் அன்று உற்சாகமாக தூய்மை படுத்தினான் பிரபா.... சரியாக அந்த நேரத்தில் வந்த மாணிக்கம், "என்னடா மாப்ள புதுசா?.... உலகமே தலைகீழா சுத்துனாலும், நீ இப்டி பொறுப்பா வேலை பாத்து நான் பாத்ததே இல்லையே?" என்றான்....
சிரித்த பிரபா, "என்ன மாமா நக்கலா?..... நாளைக்கு திருவிழாக்கு என் ப்ரெண்ட் ஒருத்தன கூப்பிட்டுருக்கேன்.... அவனும் நாளக்கி தங்கனும்ல, அதான் கொஞ்சமாச்சும் சுத்தமா இருக்கட்டுமேன்னு பண்றேன்.... நீ தெனமும் ஒருத்தன வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாலும், ஓட்டடடைளையும், தூசியிளையும் தான் புரலுற.... அப்புடி நான் இருக்க முடியுமா" என்று மாமாவை வாரினான் பிரபா....
"அதான் சங்கதியா?.... நீ என்னமோ திருவிழாக்காக உன் ரூமை சுத்தப்படுத்துறன்னு அக்கா பெருமையா சொல்லிக்கிட்டு இருக்கு.... அதானே பாத்தேன், கத அப்புடிப்போகுதா?" என்று பீடிகை போட்டான் மாணிக்கம்...
"லூசா மாமா நீ.... கோவில் திருவிழான்னா கோவிலை சுத்தப்படுத்துறது ஓகே.... ரூமல்லாம் சுத்தப்படுத்துவாங்களா?... கொஞ்சமாவது மண்டைல இருக்குற மூளைக்கு வேலை கொடு மாமா.... அது சரி, இன்னக்கி நம்ம காண்ட்ராக்டர் ராமுவோட நீ உன் ரூமுக்கு போனியாமே?.... என்ன விஷயம்?" என்று ஓரக்கண் பார்வையை காட்டினான் பிரபா.... தடுமாறிய மாணிக்கம், "ஒன்னுமில்ல மாப்ள, சும்மா கணக்கு பாக்கத்தான்.... அதல்லாம் உன்கிட்ட யாருதான் சொல்றதோ" என்று புலம்பினான் ....
"கணக்கு பாத்தியா?.... சரி சரி.... கதவை தப்பா போட்டு பாத்தியா? இல்லையா" என்று மீண்டும் பிரபா வாரவே, பதுங்கியபடி அந்த அறையை விட்டு வெளியே சென்றான் மாணிக்கம்....
அன்று இரவு முழுவதும் பிரபாவுக்கு சாந்தனின் வருகை பற்றிய சிந்தனையே மேலோங்கி இருந்தது.... அவனிடமிருந்து நிச்சயம் தான் எதிர்பார்த்த உடல் சுகம் கிடைக்காது என்று தெரிந்தும், சாந்தனை இன்னும் ஏன் தன்னால் அவனிடமிருந்து விலக முடியவில்லை என்று புரியாமல் குழம்பினான் பிரபா... ஆனாலும் பெயர் தெரியாத இந்த உறவு அத்தனை அழகாக இருந்தது பிரபாவுக்கு..... மறுநாள் நாளை விடியற்காலையிலேயே எழுந்து மாணிக்கத்தின் விசையுந்தை எடுத்துக்கொண்டு தஞ்சை விரைந்தான்.... சாந்தன் மனதிற்குள் எவ்வளவோ ஆர்வமும் ஆசையும் இருந்தாலும், பிரபாவிற்கு சிரமம் கொடுக்க மனம் மறுத்தது.... இவையெல்லாம் புதிதாக இருந்தது சாந்தனுக்கும்... இத்தனை நாட்களும் யாரிடமும் இவ்வளவு நெருக்கம் காட்டியதில்லை சாந்தன்.... பிரபா மீதான இந்த உறவை பற்றி பல நாட்கள் சிந்தித்தும் விடையில்லாமல் வெறுமை மட்டுமே மிச்சமானது அவனுக்கு.... பிரபா இப்போது சாந்தனின் அறைக்கு வந்துவிட்டான்.... "சரி போகலாமா?... வா..." என்று சாந்தனை அழைத்தான் பிரபா.... கொஞ்சம் தயங்கி தயங்கி, "அது சரியா வராது பிரபா.... நான் இங்கயே இருந்திடுறேனே..... எனக்கு இதல்லாம் பழக்கம் இல்ல" என்று உதடுகள் பொய் சொன்னதை உணர்ந்த பிரபா, "இத இனிமேல் பழகிக்கலாம்.... ஆமா, உனக்கு வர விருப்பமில்லாமதான் டிரெஸ்'லாம் இந்த பையில எடுத்து வச்சிட்டு எனக்காக காத்திருக்கியா?.... ஏன்டா உன்னையே ஏமாத்திக்கற?.... வா போகலாம்" என்று பிரபா மீண்டும் அழைக்கவே, அசடு வழிய சிரித்தபடியே மறுபேச்சு பேசாமல் பிரபாவின் பின்னால் சென்றான் சாந்தன்.... விசையுந்து சாந்தன் அமர்ந்ததும் சீறிப்பாய்ந்தது.... தேவலோகத்து இந்திரனின் ரதமா? அல்லது, செவ்வாய் மனிதர்களின் பறக்கும் தட்டா? எனும் அளவிற்கு அவ்வளவு மென்மையாகவும், வேகத்துடனும் பறந்தது அன்று விசையுந்து..... செல்லும் வழியெல்லாம் பிரபா எல்லாவற்றையும் விளக்கிக்கொண்டு வர, ஆச்சரியமாக கேட்டு வந்தான் சாந்தன்.... பசுமாடு நிற்பதை பார்த்து "அது பசுமாடு" என்று பிரபா சொன்னால் கூட, அதை சாந்தன், "அப்படியா?" என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தது அந்த இருவரின் வார்த்தை பரிமாற்றங்கள்.... ஏதாவது சாந்தனிடம் பேசவேண்டும் என்று பிரபாவும், எதையாவது சொல்லி பிரபாவின் பேச்சை மீண்டும் மீண்டும் கேட்கவேண்டும் என்ற சாந்தனின் எண்ணமும் அவ்வளவு அழகாக வல்லம் செல்லும் வழியெல்லாம் நிறைந்து காணப்பட்டது.... வல்லத்திளிருந்து பசுஞ்சோலை செல்லும் வழியெல்லாம் பசுமை பொங்கும் சோலையாகவே காணப்பட்டது.... ஊர் எல்லையை நெருங்கியதும் எல்.ஆர் ஈஸ்வரியின் “கருணை உள்ளம் கொண்டவளே முத்துமாரியம்மா..... “ பாடல் காதுகளை கிழித்தது..... பசுஞ்சோலைக்கு உள்ளே நுழைந்ததும், திருவிழாவிற்கான முஸ்தீபுகள் தெரிய தொடங்கின.... ஊர் எல்லையில் "பசுஞ்சோலை மாகாளி அம்மன் கோவில் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தகோடிகளை வரவேற்கிறோம்" என்ற போஸ்டரில் மாணிக்கத்தின் புகைப்படம் பளீரிட்டது.....
வண்ண நிற தோரணங்கள், புத்தாடைகள் உடுத்தி ஊர் மக்கள், வீடு தோறும் மாவிலை தோரணங்கள், அரிசி மாவு கோலங்கள் என்று திருவிழாவின் இலக்கணங்கள் அத்தனையும் இலக்கண பிழையின்றி இனிதே காண முடிந்தது.... வீட்டு வாசலை அடைந்ததும் கமலா அம்மா இருவரையும் உள்ளே அழைத்து சாப்பிட வைத்தார்....
 இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் பரபரப்பாக இயங்கியபடி வந்தான் மாணிக்கம்.... இருவரும் சாப்பிட்டுக்கொண்டிருந்ததை பார்த்த மாணிக்கம், "வாங்க.... உன்னைத்தான் கூட்டிட்டு வர்றதா சொன்னானா?... ஆமா, துப்பாக்கி எடுத்துட்டு வந்திருக்கிங்களா?" என்று சிரித்தான்.... ஒன்றும் புரியாமல் விழித்த சாந்தனை பார்த்த பிரபா, "சும்மா வம்பிழுக்கிறார்டா" என்று கூறிவிட்டு, மாணிக்கத்தை பார்த்த பிரபா, "மாமா.... ஒழுங்கா போறியா? இல்ல, மண்ட முத்து உன்ன தேடிட்டு இருக்கான், போட்டு குடுக்கவா" என்றதும் பயந்தவனைப்போல வெளியேறினான் மாணிக்கம்.... சாப்பிட்டு முடிந்ததும் இருவரும் கோவிலை நோக்கி சென்றனர்.... ஊரே அன்று மஞ்சள் புடவையும், சிவப்பு புடவையுமாக காட்சி அளித்தது.... குச்சி ஐஸ், ஜவ்வு மிட்டாய், கை ராட்டினம், ஹார்ட்டின் பலூன் என்று குழந்தையாகவே மாறிவிட்டார்கள் இருவரும்.... ஆங்காங்கே அடித்த பறையின் சத்தம் இருவருக்குள்ளும் ஒருவித விழாவின் உற்சாகத்தை கொடுத்தது.... சாந்தன் அந்த அளவிற்கு உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்து பிரபா பார்த்ததில்லை... தன்னால் இந்த சந்தோஷத்தை சாந்தனுக்கு கொடுக்க முடிந்ததை எண்ணி தனக்குள் பெருமிதப்பட்டுக்கொண்டான் பிரபா .... மாலை வரை அந்த விழா களிப்பில் இருந்த இருவரும் வீட்டை நோக்கி விரைந்தனர்.... சிறிதுநேரம் ஓய்வு எடுத்துக்கொண்டனர்..... மீண்டும் இருவரும் இரவு உணவை உண்ட பிறகு, இரவு நிகழ்ச்சிகளுக்கு கிளம்பினார்கள்..... செல்லும் வழியில் வந்த மாணிக்கம், "மாப்ள.... எங்க போற?" என்றான்....
"வள்ளி திருமணம் நாடகத்துக்குதான்.... வேற எங்க போறதாம்?" என்று எதிர்கேள்வி கேட்டான் பிரபா....
"என்னடா மாப்ள, இப்டி சொல்லிட்ட.... நம்ம ஏற்பாட்டுல புதுக்கோட்டை திலகவதி செட்டு கரகாட்டம் போட்டுருக்கோம்... அங்குண வாடா மாப்ள...." என்று சொல்லிவிட்டு கரகாட்டக்காரர்களுக்கு உணவு கொண்டுவர சென்றுவிட்டான் மாணிக்கம்.... மாணிக்கம் சொன்னபடியே கரகாட்டம் பார்க்க சென்றனர் இருவரும்..... நேரம் நள்ளிரவை தாண்டியபோது அங்கிருந்து கிளம்பலாம் என்று பிரபா கூற, சாந்தனோ, "ஏன்டா... நல்லாத்தானே இருக்கு.... பாக்கலாமேடா" என்றான்....
"அப்டி இல்லடா.... இதுக்கு மேல கரகாட்டம் வேற மாதிரி போகும்.... அத நாம பாக்குறத பாத்தா, வீட்ல போட்டு குடுத்திறுவாங்க.... வா போகலாம்" என்று அழைத்து வள்ளி திருமணம் நாடகம் நடக்கும் அரங்கிற்கு அழைத்து சென்றான் பிரபா.... இது மிகவும் வித்தியாசமாக இருந்தது சாந்தனுக்கு.... பபூனுக்கும், டான்சுக்கும் நடக்கும் நகைச்சுவை பரிமாற்றங்களை ரசித்து விழுந்து சிரித்தான் சாந்தன்.... சாந்தனுக்கு இவ்வளவு சிரிக்க தெரியும் என்பதே பிரபா அப்போதுதான் தெரிந்துகொண்டிருப்பான்.... ஆன்மிக பாடல்களும், இடையிடையே சினிமா பாடல்களும், நாட்டுப்புற பாடல்களும் என்று மிகவும் ரசிக்க தூண்டியது அந்த நாடகம்..... நேரம் போனதே தெரியாமல் இருவரும் ரசித்து லயித்து பார்த்துக்கொண்டிருந்தனர் இருவரும்.... நாடகம் முடியும்போது விடியற்காலை ஆகிவிட்டது.... முடிந்ததும் வீட்டிற்கு செல்லும் வழியெல்லாம் அந்த நாடகத்தை பற்றியே சிலாகித்து பேசிக்கொண்டு வந்தான் சாந்தன்.... வீட்டை அடைந்ததும், இருவரும் அடித்து போட்டது போல உறங்கினர்..... ஒருவாராக மதியம் அம்மா வந்து சாப்பிட இருவரையும் எழுப்பிருக்கா விட்டால், அவர்கள் எப்போது எழுந்திருப்பார்கள் என்று இருவருக்குமே தெரியாது..... எழுந்து குளித்து சாப்பிட தயார் ஆனார்கள் இருவரும்....
நல்லா சுண்டப்பசித்தது இருவருக்கும்.... வாழை இலையில் பொன்னி அரிசி சோறும், குறும்பாட்டு கறிக்குழம்பும், நாட்டுக்கோழி திறக்களும், அயிரை மீன் வறுவலும் என்று ஒரு அசைவ உணவகமே அப்பாவியாக கிடந்தது.... ஆச்சரியத்துடன் பார்த்த சாந்தன், "கோவில் திருவிழாக்கு சைவமா இருக்க மாட்டிங்களா?" என்றான்.... இதை கவனித்த அம்மா, "நேத்தோட விரதம் முடிஞ்சிரும்பா.... இன்னைக்கு காப்பு கலஞ்சாச்சு... அதனால ஊர்ல எல்லா வீட்லயும் இன்னக்கி இப்படித்தான் இருக்கும்..... நாளக்கி நம்ம கோவில்லையே கெடா விருந்து நடக்கும்பா" என்றார்.... நீண்ட நாட்களுக்கு பிறகு இத்தகைய உணவை ஒரு பிடி பிடித்தான் சாந்தன்....
உண்ட மயக்கத்தால் சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு, ஊரை சுற்றிப்பார்க்க கிளம்பினர்.... திருவிழா தோரனைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஊரைவிட்டு விலக ஆரமித்தது.... திருவிழாக்கு பிறந்த வீட்டுக்கு வந்த மகளை பிரிய மனம் இல்லாமல் வழி அனுப்பி வைக்கும் அப்பா, திருப்பூர் கோவை என்று பல இடங்களிலும் பணிபுரியும் இளைஞர்கள் திருவிழாவை சாக்காக சொல்லி வந்துவிட்டு மீண்டும் குடும்பத்தினரை விட்டு பிரிந்து செல்லும் வருத்தம், திருவிழாவில் கடை போட்டு காசு பார்த்த ரத்தினனாதன் சுவீட் ஸ்டால் வண்டி ஊரை விட்டு கிளம்பும் காட்சி என்று ஊரில் ஒவ்வொரு திசையும் ஏதோ ஒரு மெல்லிய சோகத்தை தனக்குள் புதைத்து வைத்திருப்பதைப்போல உணர்ந்தான் சாந்தன்.... நெடுந்தூர நடைக்கு பின்னர் ஊரின் கண்மாயை அடைந்தனர்.... ஒரு பக்கம் வெயிலின் உக்கிரத்தை தணிக்க எருமை மாடுகள் கழுத்தளவு தண்ணீரில் குளிர் பாய்ச்சின... மற்றொரு புறம் பிரபாவின் நண்பர்கள் தண்ணீரில் விளையாடி மகிழ்ந்தனர்.... பிரபாவை பார்த்ததும் அவன் நண்பன் முத்து, "டேய் பிரபா.... வாடா வெளையாடலாம்... உங்கவீட்டு பாதரூம்குள்ளயே குளிச்சு என்னத்த கண்ட.... வா இன்னக்கி இங்க குளிக்கலாம்" என்று அழைக்கவே மனதிற்குள் ஆசை இருந்தாலும் சாந்தனும் இருந்ததால் மறுத்தான்.... ஆனால் சாந்தனோ, "வா பிரபா.... குளிக்கலாம்.... எனக்கும் ஆசையா இருக்கு" என்று கூற, இதை பிரபா மறுத்தால்தான் அது ஆச்சரியம்.... இருவரும் தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆடைகளை களைந்து தண்ணீரில் இறங்கினர்.... அப்போதுதான் முதன்முதலில் சாந்தனின் உடலை பார்த்தான் பிரபா.... எத்தனை அழகு? எவ்வளவு பளபளப்பு?..... அந்தி சாயும் நேரம் என்பதால் சூரியன் உதிர்த்த மஞ்சள் நிற கதிர்கள் தண்ணீரில் பட்டு சாந்தனின் உடலில் பிரதிபளித்ததை காணும்போது தங்கத்தை உருக்கி அதில் பொற்சிலை செய்ததைப்போல காணப்பட்டான்.... இந்திரன் சாந்தனை படைக்கும்போது நிச்சயம் காம உணர்வில் திளைத்திருக்க வேண்டும்.... ஒரு சிறு மாசு மறு கூட இல்லாமல், அழகியலின் எடுத்துக்காட்டாக காணப்பட்டான் சாந்தன்.... இப்படி சாந்தனை பிரபா அணு அணுவாக ரசித்துக்கொண்டிருக்கையில் எதேச்சையாக திரும்பி பார்த்தால், அங்கு குளித்துக்கொண்டிருந்த இன்னும் சிலரும் சாந்தனை வெறித்து பார்த்தபடி திகைத்து நின்றனர்.... ஏனோ தான் அவனை ரசிக்கையில் இனித்த சாந்தனின் உடம்பு, மற்றவன் பார்க்கிறான் எனும்போது மனதிற்குள் பற்றி எரிந்தது.... உடனே சாந்தனை பார்த்த பிரபா, "சாந்தா, போகலாமா?.... அம்மாகிட்ட சொல்லாம வந்துட்டோம்" என்றான்... சிரித்த சாந்தன், "ஏய்... அதல்லாம் அம்மா ஒன்னும் தேட மாட்டாங்க.....
3 இன்னும் கொஞ்ச நேரம் குளிச்சிட்டு போகலாம்டா" என்றான்.... பிரபாவின் பக்கத்திலிருந்த முத்து, "ஆமாம் பிரபா..... குளிக்கட்டுமே.... நல்லாத்தானே இருக்கு" என்று பிரபாவை பார்த்து சொல்லிவிட்டு, சாந்தனை பார்த்து, "நான் வேணும்னா முதுகு தேச்சூடவா பாஸ்" என்றான்.... கோபத்தின் உச்சத்தில் சென்ற பிரபா, முத்துவின் காதருகே வந்து, "ஒருதடவ நீ வேப்பல அடி வாங்குனது பத்தாதா?.... வெலக்கமாத்துளையும் அடிவாங்குனாதான் நீ திருந்துவியா?.... உங்க அம்மாகிட்ட ஒரு வார்த்த சொன்னா போதும்..." என்று கூறவே பதறியபடியே பின்னால் சென்றான் முத்து....
எப்படியோ அன்றைய குளியல் முடிந்து சாந்தனை கற்போடு வீட்டிற்கு கொண்டு செல்வதற்குள் ஒரு பெரிய யுத்தமே நடத்திவிட்டான் பிரபா.... பெருமூச்சுடன் இருவரும் வீட்டை அடைய இரவாகிவிட்டது.....
திருவிழா களிப்பிளிருந்து இன்னும் மீளாத மாணிக்கம் இன்னும் வீட்டிற்கு வரவில்லை என்பதால் பிரபாவும் சாந்தனும் மாடிக்கு சென்றார்கள்.... வீட்டை சுற்றி இருந்த மரங்கள், ஆடிக்காற்றைகூட தென்றலாக மாற்றித்தந்தது..... நிலவு வெளிச்சம் இன்றைக்கு கொஞ்சம் வித்தியாசமாகவே இருந்தது பிரபாவுக்கு.... எங்கோ ஒரு வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும் இளையராஜாவின் இன்னிசை கீதங்கள் இயல்பாகவே ஒரு இனிமையையும் அமைதியையும் கொடுத்தது இருவருக்கும்.... "ரொம்ப நன்றிடா .... இந்த ரெண்டு நாள் மாதிரி நான் சந்தோஷமா இருந்ததே இல்ல.... என் வாழ்க்கை முடியுற வரைக்கும் இந்த நாளை நான் மறக்கவே மாட்டேண்டா.... வாழ்க்கையில இப்டியல்லாம் சந்தோசம் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லடா.... ரொம்ப நன்றி" என்று பிரபாவின் கையை பிடித்து உருக்கமானான் சாந்தன்.... "ஏய்.... இதல்லாம் ஒரு விஷயமா?.... இனிமே இந்த நன்றி, சாரி இதல்லாம் கேட்டின்னா உத தான் விழும் பாரு" என்று செல்லமாக கோபித்துக்கொண்டான் பிரபா.... அப்படியே மெல்ல சாந்தனின் தோளில் சாய, சாந்தனும் அதை ஏற்பது போல சாய்ந்துகொண்டான்.... இந்த இரண்டு நாட்களிலும் உண்மையில் சாந்தனைவிட பிரபாவே அதிகம் மகிழ்ச்சியாக இருந்தான்.... இனி எந்த ஒரு சூழலிலும் சாந்தன் இல்லாமல் இருக்க முடியாது என்ற முடிவில் தீர்மானமாக இருந்தான்.... ஆனால், சாந்தனிடம் இருக்கும் ஆண்-ஆண் உறவை பற்றிய தவறான புரிதலை எப்படி எதிர்கொள்வது?... அதை எப்படி கணிப்பது? என்று பிரபாவுக்கு புரியவில்லை.... அதனால் காலம் வரும் என்று காத்திருந்தான்.... மறுநாள் கடா விருந்தும் வித்தியாசமாக இருந்தது சாந்தனுக்கு.... தண்ணியை போட்டுவிட்டு மாணிக்கம் கொடுக்கும் அளப்பரையாக இருக்கட்டும், ஊரே திரண்டு வந்து பாகுபாடே இல்லாமல் பனை ஓலை பட்டையில் கறி சோறு உண்பதாக இருக்கட்டும், சாமியாடி பக்தர்களுக்கு குறி சொல்வதாக இருக்கட்டும் எல்லாமே சாந்தனை புருவத்தை உயர்த்த வைக்கும் ரகமாகவே இருந்தது.... ஒருவழியாக எல்லாவற்றையும் முடித்துவிட்டு சாந்தன் தஞ்சைக்கு செல்லும் முன்பு, மனோரா செல்வதாக முடிவெடுத்தனர்..... மனோராவிளிருந்து நேராக தஞ்சை செல்வதாக திட்டம்..... எல்லோரிடமிருந்தும் விடைபெற்று பிரபாவும் சாந்தனும் விசையுந்தில் மனோரா நோக்கி புறப்பட்டனர்.... கொஞ்சம் அதிக தூரம்தான் என்றாலும், அந்த தூரத்தைதான் பிரபா விரும்பினான்..... செல்லும் வழியெல்லாம் வழக்கம்போல பிரபாவின் அளந்து விடுதல்களும், சாந்தனின் அப்படியா'க்களும் நிறைந்தே இருந்தன.....
மனோரா ஒரு கடற்கரை சுற்றுலாத்தளம்.... பிரபலமான அந்த தளம் பல வருடங்களாகவே பராமரிப்பு இல்லாமல் கேட்பாரற்று கிடக்கிறது.... பிரபாவும் சாந்தனும் பைக்கை நிறுத்திவிட்டு கடற்கரையை நோக்கி விரைந்தனர்.... சாந்தனிடம் தன் மனதில் இருப்பதை கூறிட இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தான் பிரபா.... பிரபா விளையாடிக்கொண்டிருக்கையில் சாந்தன் கடலை நோக்கி விரித்த விழிகளோடு பார்த்துக்கொண்டிருந்தான்.... சாந்தனின் பின்னால் அமர்ந்த பிரபா, "சாந்தா.... நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்" என்றான்.... சாந்தன் பதிலே சொல்லவில்லை.... மீண்டும் அழைத்தும் அவன் திரும்பவில்லை.... ஒன்றும் புரியாமல் எழுந்த பிரபா, சாந்தனின் முன்னால் சென்று பார்த்து அதிர்ந்தான்.... சாந்தனின் கண்களில் கண்ணீர் கொப்பளித்து வழிந்தது.... பிரபா அழைப்பதைக்கூட சாந்தன் கவனிக்காமல் ஏதோ சிந்தனையில் இருந்தான்.... மீண்டும் சாந்தனின் தோளை பிடித்து உலுக்கவே நிதானம் வந்தவனாக, "என்ன பிரபா? என்னாச்சு?" என்றான் சாந்தன்....
"அத நான் உன்கிட்ட கேக்கணும்.... என்னாச்சு உனக்கு.... இங்க வர்ற வரைக்கும் நல்லாத்தான் இருந்த.... திடீர்னு ஒரு மாதிரி ஆகிட்ட.... நான் பேசுனது எதுவுமே கேக்கலையா உனக்கு?... உடம்பு எதுவும் சரி இல்லையா?" என்று சாந்தனின் நெற்றியில் கைவைத்து பார்த்தான் பிரபா....
மாற்றம் எதுவும் தெரியாததால் மீண்டும் அதைப்பற்றி கேட்கவே தொடர்ந்தான் சாந்தன், "நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.... இதுவரை யார்கிட்டயும் சொல்லாத விஷயங்கள்.... இப்போ உன்கிட்ட சொல்லியே ஆகவேண்டிய விஷயம்.... இதுவரை நான் சொன்னதுக்காக என்னைப்பற்றி நீ எதுவுமே கேட்டதில்ல.... இப்போ நானா சொல்லப்போறேன்" என்று சாந்தன் கூறியது பிரபாவை குழப்பியது.... இருந்தாலும் குறுக்கிடாமல் சாந்தனின் வார்த்தைகளை கவனித்தான்....
"நான் சாந்தன்.... கருப்பையா சாந்தன்.... சொந்த ஊர் மட்டக்களப்பு... சொந்த ஊர்னு வெறும் வாய்மொழியாத்தான் சொல்லனும்.... இப்போ எங்களுக்கு யாருக்குமே சொந்தம் இல்லாத ஊரா போச்சு.... இப்போ தமிழ்நாடுதான் சொந்த ஊர், வாழும் ஊர், வாழ்க்கை கொடுக்கும் ஊர் எல்லாமே.... உங்க மொழியில சொல்லனும்னா நான் ஒரு இலங்கை அகதி...." என்று சாந்தன் தொடங்கும்போதே அதிர்ச்சி குண்டை போட்டான் ..... அதிர்ச்சியிலிருந்து பிரபா மீள்வதற்குள் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை வெளியிட்டான் சாந்தன்.... "ஒன்பது வயசா இருக்கும்போதே அகதியா தமிழ்நாட்டுக்கு வந்துட்டோம்.... நானும் என்ட மாமாவும் மண்டபம் அகதிகள் முகாமில தங்கி இருந்தம்.... ரெண்டு வருடத்துக்கு முன்னால் என்ட மாமா நெஞ்சு வலியில இறந்துட்டார்... அதுக்கு பொறவு எனக்கு அங்க இருக்க பிடிக்க இல்ல... அதான் கெளம்பி வந்துட்டன்... ஒரு வருடம் முன்னாடி இந்த கேண்டீனில வேலைக்கு சேர்ந்தம்... மொதலாளியை தவிர வேற யாருக்கும் இந்த விடயம் தெரியாது.... தருணம் வர்றப்போ உனக்கு சொல்லனும் என்று கனகாலமாக காத்திருந்தன்.... தருணம் இப்போதான் கிட்டியது" என்று வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு கொஞ்சம் இடைவேளிவிட்டான் சாந்தன்..... அதிர்ச்சி விலகாமல் கேட்ட பிரபா, "அப்போ உன் அம்மா அப்பா.. குடும்பமெல்லாம்?" என்று கேட்டான்....
"அம்மா அப்பா எல்லாரும் ஷெல்லடியில் இறந்துட்டாங்க... செஞ்சோலை பள்ளியில விமானம் நடத்திய குண்டுவீச்சில பல குழந்தைகள் கருகினாங்கள்ள, அதில என்ட அக்காவும் ஒருத்தி.... அதுல மிஞ்சினது நானும் என்ட மாமாவும்தான்....ஊர்ல பல ஏக்கர் நிலத்துல விவசாயம் பண்ணின நாங்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டு இங்க வந்தோம்.... இங்க கூலி வேலை பாக்க கூட ஆயிரம் நிபந்தனைகள் போடுறாங்க.... " என்று வருத்தம் கலந்த சோகத்தை பகிர்ந்தான் சாந்தன்....
கடலை நோக்கி கையை காட்டிய சாந்தன், "இதோ, இங்கிருந்து சில மையில் தூரத்துல இருக்க எங்கட சனம் கதறி துடிக்கையில இங்க இருக்குற உங்களால ஒன்டும் செய்ய முடியல ... கேட்டா, இது அயல்நாட்டு பிரச்சினை என்டு உங்களையும் அடக்கிடுறாங்க.... சரி... இதை உன்கிட்ட சொல்லலைன்னு ரொம்ப நாளா உருத்துச்சு.... இப்போ சொல்லிட்டேன்" என்றான் சாந்தன்....
"சாந்தா.... இவ்வளவு நாள் சாதாரணமா பேசுன.... இப்போ திடீர்னு நீ உங்க தமிழ்ல்ல பேசுற... இதுல எது உண்மை பேச்சு?" என்றான் பிரபா....
"தமிழில் உங்க தமிழ், எங்க தமிழ்னு பிரிக்காதிங்க.... உலகத்துல நீ எந்த மூலையில எந்த அடையாலத்துல இருந்தாலும், வலி வந்தா 'அம்மா'னு தான் அலறுவ.... அதுதான் தாய்மொழி.... அதேபோல நான் உணர்ச்சிவசப்படுறப்போ எங்க வழக்கு வந்திடுச்சு.... அவ்வளவுதான்.... இதுல உண்மை பொய் எதுவும் இல்லை.... முகாமில இருக்குற வரையில எங்கட சனத்தோட இப்படித்தான் பேசினம்... அங்கருந்து வந்ததுலேந்து பேச்சு வழக்கை மாத்திகிட்டன்.... என்ட அடையாளத்தை யார்கிட்டயும் காட்டிக்க வேண்டாமெண்டு கனகாலமாய் அதிகம் பேசாமல் இருந்தன்.... இப்போ சாதாரணமா பேச பழகிட்டதால பேசுறன்.... அவ்வளவுதான்.... சரி வா போகலாம்.... ரூம்ல விட்டுடு என்னைய" என்று பிரபாவை அழைக்க பிரபாவும் அமைதியாக சென்றான்.... வரும்வழியில் பேசிக்கொண்டே வந்த இருவரும், இப்போது பேசுவதைவிட பல யோசனைகளில் ஆழ்ந்துவிட்டனர்.....அதனால் அமைதியாகவே இந்த பயணம் அமைந்தது.... சாந்தன் சொன்னதையெல்லாம் இன்னும் பிரபாவின் மனம் கிரகித்துக்கொண்டு இருந்தது..... சாந்தனுக்கோ தன் குடும்ப நினைவு வந்துவிட்டது.... ஒருவாராக சாந்தனின் அறைக்கு வந்துவிட்டார்கள் இருவரும்... சாந்தனை விட்டுவிட்டு கிளம்பும் முன்னர் கொஞ்சம் தயங்கியபடி நின்றான் பிரபா....
பிரபாவின் தயக்கத்தை உணர்ந்த சாந்தன், “என்னடா?.... என்னமோ சொல்லனும்னு நினைக்குற... ஆனா தயங்குற..... தயங்காம சொல்லு” என்றான்.....
சாந்தனின் முன்னால் வந்து நின்ற பிரபா, “இத இப்ப சொல்லலாமா? என்னனு தெரியல....ஆனாலும், நீ உன் மனசுல இருந்ததெல்லாம் கொட்டிட்ட, நான் மட்டும் இத மறச்சு உன்னோட பழக விரும்பல.... நீ தப்பா நினைச்சாலும் பரவால்ல, இப்ப நான் அத சொல்ல போறேன்” என்று தலையை கவிழ்த்தபடியே சொல்லி முடித்தான்.....
“என்னடா?... சொல்லு.... என்கிட்டே சொல்ல உனக்கு என்ன தயக்கம்?” என்று சாந்தன் பிரபாவின் கன்னத்தை பிடிக்க கொஞ்சம் மன தைரியத்துடன் தொடர்ந்தான் பிரபா, “நான் உன்ன விரும்புறேன் சாந்தா.... உன்கூட கடைசி வரை வாழணும்னு ஆசைப்படுறேன்.... இதப்பத்தி நீ என்ன நினைச்சாலும் பரவால்ல, உன் கூடத்தான் இனி நான் சாகுற வரைக்கும் வாழனும்.... உனக்காக அழனும், சிரிக்கணும், உன்கூட சண்டை போடணும், விளையாடணும்.... எல்லாமே..... உன்னை நான் காதலிக்கிறேன்டா “ என்று சொல்லிக்கொண்டிருக்கையில் சாந்தன் கோபமுற்று பிரபாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.... இதை சற்றும் எதிர்பாராத பிரபா திகைத்து நிற்கையில், சாந்தன், “அடச்சீ.... கடைசில நீயும் ஒரு சாதாரண மனுஷன் தான்னு நிரூபிச்சுட்ட.... அகிலனுக்கும் உனக்கும் பெரிய வித்தியாசம் இல்ல.... என்னோட உடம்புதானே உனக்கு பெருசா போய்டுச்சு.... அதுக்காகத்தான் நீ இவ்வளவும் பண்ணியா?.... உன்னை ஒரு நல்ல நண்பனா நினச்சேன், ஆனா நீயும் ஒரு சாமானியன் தான்னு காமிச்சுட்ட..... இத்தோட போய்டு.... இனிமே உன் மூஞ்சியிலேயே நான் முழிக்க மாட்டேன்....” என்று சொன்னவாறே அறையின் கதவுகளை அழுத்தி சாத்தினான்.... நிச்சயம் இவ்வளவு பெரிய அதிர்ச்சியை எதிர்பார்த்திருக்கவில்லை பிரபா.... அந்த நேரத்தில் எதையும் யோசிக்கவும் அவனால் முடியவில்லை.... கண்களில் கண்ணீர் கட்டுக்கடங்காமல் வழிந்தது.... அந்த குழப்பத்திலும், இயலாமையிலும் அழுதபடியே தன் விசையுந்தை செலுத்தினான் பிரபா......

இரண்டு நாட்களாக சாந்தன் பிரபா கூறியதை நினைத்து பலவிதமாகவும் யோசித்தான்..... தூக்கம் மறந்து, உணவை துறந்து, நினைவை இழந்து இரண்டு நாட்களும் கண்ணீர் தீரும்வரை யோசித்தான் சாந்தன்..... ஒவ்வொரு நிமிடமும் மனம் வெதும்பி நொந்தான்... இரண்டு வருடங்கள் தனிமையில் இருந்தபோதும், உணராத ஒரு வெறுமையை இந்த இரண்டு நாட்களும் பிரபாவை பிரிந்த உணர்வால் உணர்ந்தான்..... ஆணோடு ஆண்கள் காதலிக்க முடியுமா? என்ற எண்ணம், இப்போது முழுமையாக மறைந்து வாழ்ந்தால் அவனோடுதான் வாழனும் என்று மாறிப்போனது..... அறிவை மனம் வென்று, இந்த காதலை ஏற்க மனம் உவந்தான் சாந்தன்.... நிச்சயம் இந்த தனிமையை வெகுவாக மனம் நொந்து அனுபவித்தான் சாந்தன்.... பலவாறும் யோசித்த சாந்தன் ,ஒருவழியாக ஒரு முடிவுக்கு வந்தான்.... "பிரபா என் உடலை நேசித்திருந்தால் நிச்சயம், அதற்கான வாய்ப்பு பலமுறை அவனுக்கு கிட்டியபோதும் அதை அவனுக்கு சாதகமாக்கிக்கொள்ளவில்லை..... பல நாட்கள் ஒன்றாக ஒரே படுக்கையில் படுத்தும், விரல் கூட என் மீது பட்டதில்லை.... அப்படிப்பட்டவன் நியாயமான தன் காதலை இவ்வளவு மரியாதையாக சொல்லும்போது, இப்படி காட்டுமிராண்டிபோல நடந்துகொண்டேனே..... பிடிக்கவில்லை என்றால் நேரடியாக முகம் பார்த்து சொல்லி இருந்திருக்கலாம்.... ஆனால், மிருகம் போல அவனிடம் நடந்துகொண்டது எவ்வளவு பெரிய இழிவான செயல்.... நிச்சயம் பிரபா என் வாழ்க்கையில் கிடைக்க முடியாத சொத்து.... அவனை நிச்சயம் விலகி என்னால் வாழமுடியாது.... ஒவ்வொரு முறை நான் அவனை அவமானப்படுத்தும்போதும், புறக்கனித்தபோதும் அவனே மீண்டும் என்னை அனுகுவான்.... இம்முறை நானே அவனிடம் சென்று மன்னிப்பு கேட்கவேண்டும்.... ஆனால், இந்நேரம் என்னை பார்க்க வந்திருக்க வேண்டியவன், இதுநாள் வரை வராதது என் மீதுள்ள கோபத்தாலா?.... அப்படியானால், எனக்கு உரிமையான ஒன்றை என் அவசர புத்தியாலும், முன்கோபத்தாலும் நானே இழந்ததுவிட்டேனா?... இல்லை.... நிச்சயம் இழக்க மாட்டேன் இழந்த உறவுகளை விதியின் வசத்தால் இழந்துவிட்டேன்....இனி இந்த உறவையும் இழந்தால், இனி வாழ்க்கை வாழவே நான் தகுதியற்றவன்.... நாளை கல்லூரி திறந்ததும் முதல் ஆளாக நானே அவனிடம் சென்று மன்னிப்பு கேட்கவேண்டும்.... இனி எந்த காரணத்திற்காகவும், எந்த தருணத்திலும் பிரபாவை விட்டு விலகக்கூடாது... என் ஈகோ, முன்கோபம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனிடம் நான் முழுமையாக சரணடைய வேண்டும்.... என்னையே நான் அவனுக்கு அர்பணிக்க வேண்டும்.... காலம் முழுக்க அவனுக்காக வாழவேண்டும்...." என்று தனக்குள் ஒரு நிலையான முடிவை நிலைநிறுத்திக்கொண்டான் சாந்தன்..... மறுநாள் காலை எப்போதையும்விட பரபரப்பாக கேண்டீனில் வேலைகளை தொடங்கினான் பிரபா.... காலை முதல் கேண்டீன் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான் சாந்தன்.... பிரபா மதியம் வரை வரவில்லை.... அவன் அலைபேசிக்கு அழைத்தால் அது அனைத்துவைக்கப்பட்டிருந்தது.... மதிய உணவுக்கு வந்த பிரபாவின் நண்பர்களிடம் விசாரித்தபோதுதான், பிரபா அன்று கல்லூரிக்கு வரவில்லை என்பது சாந்தனுக்கு தெரிந்தது.... மனதிற்குள் ஒரே படபடப்பாக இருந்தது....
அன்று மாலை பிரபாவின் வீட்டுக்கே சென்று பார்த்துவிட முடிவு செய்தான் சாந்தன்.... எப்படியும் பிரபாவை இன்று பார்த்தே தீரவேண்டும் என்ற நோக்கத்தோடு ஒரு அழகான “காதல் அட்டை”யை வாங்கி, அதில் தான் கேட்க நினைத்த மனிப்பையும், தன் காதலையும் எழுதி பிரபாவுக்கு கொடுக்க தன் சட்டைக்குள் மறைத்தபடியே வைத்திருந்தான்.... நினைத்தபடியே மாலை நேரத்தில் தஞ்சை பேருந்து நிலையத்தில் வல்லம் செல்லும் பேருந்திற்காக காத்திருந்தான்.... எதேச்சையாக அங்கு பேருந்திற்காக காத்திருந்த ஒருவன் பிரபாவின் நண்பனைப்போல இருந்தது.... ஆம், அது முத்துவேதான்.... அவனிடம் விசாரிக்கலாமே என்று அருகில் செல்ல, முத்து சாந்தனை அடையாளம் கண்டு சிரித்தான்.....

முத்து அருகில் சென்ற சாந்தன், "என்னை ஞாபகம் இருக்கா?... பிரபாவோட ப்ரெண்ட்.... திருவிழாக்கு உங்க ஊருக்கு வந்தேனே?" என்று தன்னை அறிமுகப்படுத்துவதைப்போல விளக்கினான்....
"என்ன பாஸ், உங்கள மறக்க முடியுமா?.... கம்மாயில ஒன்னா குளிச்சோமே...." என்று ஜொல்லினான் முத்து....
"ஆமா.... பிரபா எப்டி இருக்கான்?" என்றான் சாந்தன்....
"ஹ்ம்ம்... இப்ப பரவால்ல.... கெட்டதுளையும் ஏதோ நல்லது நடந்திருக்கிறது சாமி அருளாலதான்" என்றபடி கையை மேலே காட்டினான் முத்து.... சாந்தனுக்கு ஒன்றும் புரியவில்லை.... பிரபாவை பற்றி விசாரித்தால், இவன் என்னவல்லாமோ பேசுகிறானே என்ற குழப்பத்தில், "என்ன சொல்றீங்க?....ஏன் என்னாச்சு.... நான் நம்ம பிரபாகரனை பத்தி கேட்டேன்" என்று மீண்டும் விளக்கினான்....
"அதத்தான் நானும் சொல்றேன்... அப்ப நடந்ததெல்லாம் உங்களுக்கு நெஜமாவே தெரியாதா?" என்று புருவத்தை உயர்த்தி கேட்டான் முத்து....
பதறிய சாந்தன், "என்ன சொல்றீங்க?.... தயவு செஞ்சு கொஞ்சம் தெளிவா சொல்லுங்க.... பிரபாவுக்கு என்னாச்சு?" என்றான் ....
"முந்தாநாளு அவன் பைக்ல வர்றப்ப வல்லத்துகிட்ட பெரிய ஆக்ஸிடன்ட்.... லாரியோ என்னமோ மோதி, பைக்லேந்து பறந்து கீழ விழுந்தானாம்.... ரெண்டுநாளா பேச்சு மூச்சே இல்லாம, இன்னக்கிதான் கண்ணு முழிச்சிருக்கான்.... இப்ப அவன இங்க ஆஸ்பத்திரியில பாத்துட்டுதான் ஊருக்கு போய்கிட்டு இருக்கோம்.... அனு ஆஸ்பத்திரியிலதான் சேத்திருக்குறாங்க.... போய் பாருங்க முதல்ல" என்று முத்து சொல்லி முடித்ததும்தான் தாமதம், துடித்துப்போனான் சாந்தன்.... முத்துவிடம் எதுவும் கூறாமல், அவசர அவசரமாக தானி ஒன்றை வாடகைக்கு எடுத்து மருத்துவமனையை நோக்கி விரைந்தான்.... செல்லும் வழியெல்லாம் கண்ணீர் தாரை தாரையாக தஞ்சை சாலைகளை நிறைத்தது.... இழப்பின் வலியை உணராத வயதில் குடும்பத்தை இழந்தான், பல ஆண்டுகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மாமா இறந்தபோதும் பெரிய துக்கம் அவன் மனதில் உண்டாகவில்லை.... ஆனால், பிரபாவின் இழப்பை நிச்சயமாக தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று உணர்ந்தான்.... தன் மீதே கோபம் கொண்டான், தன் அவசர புத்தியால் வந்த விளைவை எண்ணி நொந்தான்.... ஒருவாராக மருத்துவமனையை அடைந்ததும், உள்ளே படபடப்புடன் ஓடினான்.... ஒரு அறையின் வெளியே மாணிக்கம் நிற்பதை கவனித்த சாந்தன், "எப்டி.... எப்டி இருக்கான் இப்ப?" என்றான்.....
"பரவால்லபா.... இந்த ரூம் தான்... உள்ள அவன் இருக்கான்... அக்கா, கீழ கோயிலுக்கு போயிருக்கு....; நான் மருந்து வாங்கிட்டு வந்தர்றேன்..... நீ கொஞ்ச நேரம் உள்ள இருப்பா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் மாணிக்கம்....கதவை திறந்து உள்ளே நுழைந்தான் சாந்தன்... உள்ளே கழுத்து வரையில் போர்வை போர்த்தி இருந்தது.... கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டு இருந்தது.... உறங்குகிரானா? மயக்கி இருக்கிறானா? என்று தெரியவில்லை.... சாந்தன் பிரபாவை நெருங்க நெருங்க உடல் உதற தொடங்கியது, வியர்வை கொட்ட தொடங்கியது, கண்ணீர் பெருக்கெடுத்தது..... பிரபாவின் அருகில் சென்று அமர்ந்த சாந்தன், அவன் கையை பிடித்து, தன் கண்ணில் ஒட்டியவாறு அழத்தொடங்கினான்..... இதில் விழித்துவிட்ட பிரபா, "சாந்தா...." என்றான்.... பிரபா தன் பெயரை அழைப்பதில் அந்த துன்பத்திலும் ஒரு மெல்லிய புன்னகை உதிர்த்தான் சாந்தன்..... "எப்டிடா இருக்க?" என்று வாய் குழறியபடி கேட்டான் சாந்தன்....
"இருக்கேண்டா.... பொழைக்க முடியாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு.... அனேகமா இன்னிக்கோ, நாளைக்கோ முடிஞ்சிடும்டா" என்று மயக்கத்தில் இருந்தவனைப்போல பேசினான் பிரபா..... இதை கேட்டு, அடக்க முடியாமல் வீரிட்டு அழுதான் சாந்தன்... "டேய் டேய்.... அழாதடா.... சும்மா சொன்னேன்" என்று கூறியவாறே போர்வையை விளக்கினான் பிரபா.... கையில் மட்டும் கட்டு கட்டி இருந்தது... மற்றபடி நன்றாகவே இருந்தான்..... மேலும் சாந்தனின் கண்களை துடைத்தபடியே, "சும்மா சொன்னேன்டா..... நல்லா இருக்கேன்.... லேசா ப்ராக்சர்.... அவ்வளவுதான்... நாளைக்கே டிஸ்சார்ஜ் ஆகிடலாம்டா.... நீ அழாதடா" என்று சமாதானம் சொன்னாலும் அதை சாந்தன் ஏற்பதாக இல்லை..... "பொய் சொல்ற.... நான் அழுககூடாதுன்னு நீ மறைக்குற... உன் ப்ரெண்ட் முத்து எல்லாத்தையும் சொல்லிட்டான்" என்று மீண்டும் அழுதான் சாந்தன்..... "ஹ ஹ ஹா..... வேணும்னா நீ நர்ஸ் கிட்ட கேட்டுக்கோ.... நெஜமாவே நான் நல்லா இருக்கேண்டா" என்றான் மீண்டும் பிரபா....
"அப்போ முத்து சொன்னது?" என்று கேட்டான் சாந்தன்....
"அவன் கதைகாரன் டா... ஒரு நாள் எங்க மாமாவுக்கு வந்த காய்ச்சல, காலரான்னு கெளப்பி விட்டான், இன்னொருத்தனுக்கு இருமல் வந்ததுக்கு, எயிட்ஸ்'னு கெளப்பி விட்டுட்டான் அவன்..... அதுவுமில்லாம அவனுக்கு எம்மேல ஒரு கோபம் கொஞ்ச நாளா.... அதான் இப்டி பன்னிருக்கான்.... இருக்கட்டும், ஊருக்கு போனப்புறம் அவனுக்கு பொங்கல் வச்சிடுறேன்" என்று சிரிக்கவே, அப்போதுதான் சாந்தனும் இயல்பு நிலைக்கு திரும்பினான்.... இயல்பான பிறகு கட்டு கட்டப்பட்டிருந்த கையை எடுத்து வருடிக்கொண்டிருந்தான்....
சரியாக அந்த நேரத்தில் பிரபாவின் அம்மா வந்து, பிரபாவின் நெற்றியில் விபூதியை இட்டுவிட்டு சாந்தனிடம் நடந்த விஷயங்களை விளக்கிக்கொண்டிருந்தார்..... சாந்தனின் பரபரப்பையும், அந்த பேச்சையும் ரசித்தபடி படுத்துக்கொண்டே பார்த்து ரசித்தான் பிரபா..... ஒருவாராக எட்டு மணி ஆகிவிட்டது....
"சரிடா.... மணி எட்டாச்சு.... நீ கெளம்புடா" என்றான் பிரபா....
"நான் கெளம்புறதா?... ரூம்க்கு போனாலும் தூங்க முடியாது என்னால... இங்கயே இருந்திடுறேன்.... நீ டிஸ்சார்ஜ் ஆகுற வரைக்கும் நான் வேலைக்கும் போகப்போறதில்ல" என்று சாந்தன் கூற சிரித்த பிரபா, "எனக்கும் கூட நீ இருக்கணும்னு ஆச தாண்டா.... உன் வேலை கெட்டுடக்கூடாதேனு தான் அப்டி சொன்னேன்..... சரி இரு.... அம்மாவையும் மாமாவையும் எப்டியாவது கழட்டி விட்டுடுறேன்" என்று கூறும்போது அம்மா பிரபாவுக்கு உணவு எடுத்துக்கொண்டு வந்தார்.... "அம்மா.... நாளக்கி கவுன்சில் மீட்டிங் இருக்குன்னு மாமா சொல்லுச்சு..... நீயும் ரெண்டுநாளா வீட்டுக்கே போகல.... ரெண்டுபேரும் போய்ட்டுவாங்க.... சாந்தன் இருப்பான்..." என்று நாசுக்காக அம்மாவிடம் கூறினான் பிரபா.... "வேணாம்பா.... மீட்டிங்க்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.... நான் இருக்குறேன்" என்று கூறிய அம்மாவை எப்படியோ பேசி வீட்டிற்கு அனுப்பிவிட்டான்..... இப்போது அந்த அறையில் பிரபாவும் சாந்தனும் மட்டும் தனிமையில் இருந்தனர்.... அப்போது பிரபா இடது கையால் ஸ்பூன் வைத்துக்கொண்டு இட்லியை சாப்பிட முயன்றான்... அதைக்கண்ட சாந்தன், "ஏய்.... ஏன்டா இப்டி சாப்பிடுற?....இட்லிய ஸ்பூன்ல சாப்பிட முடியுமா?" என்றான்....
"ஸ்பூன் ல சாப்பிட முடியாதுன்னு எனக்கு தெரியும்.... எலும்பு முறிஞ்ச கையால சாப்பிட முடியாதுன்னு உனக்கு தெரியாதா?" என்று பிரபா கூறும்போதுதான் பிரபாவின் வலது கையில் காயம் உள்ளதை உணர்ந்தான் சாந்தன்.... உடனே கையை கழுவியவன், பிரபாவிடமிருந்து தட்டை வாங்கி உணவை ஊட்ட தொடங்கினான்.... பிரபாவின் வாயில் முதல் இட்லி துண்டை வைக்கும்போது அவன் எச்சில் பட்டு சிலிர்த்தது சாந்தனுக்கு.... பிரபாவும் இதை வெகுவாக ரசித்தான்.... சாப்பிட்டு முடிந்ததும், உதட்டில் ஒட்டியிருந்த உணவு துகள்களை கையால் எடுக்கும்போது பிரபாவுக்கு உடல் சிலிர்த்தது..... பின்னர், மாத்திரைகளை சாப்பிட்ட பிரபா, "சாந்தா.... என் வலது கை அடிபட்டதால நீ ஊட்டிவிட்ட சரி.... ஒருவேள இடது கை அடிபட்டிருந்தால் என்ன பண்ணிருப்ப" என்று சிரிக்க, சாந்தனோ பிரபாவின் கன்னத்தில் கில்லி சிரித்தான்.... சாந்தனின் சிரிப்பு அடங்குவதற்குள் பிரபா,
"சாரி சாந்தா" என்றான்....
"எதுக்கு?"....
"எல்லாத்துக்கும்தான்.... உன்ன கஷ்டபடுத்தினதுக்கு"....
"டேய்.... ஒரு தடவ கூட என்னைய நல்லவனா ஆகவிடமாட்டியா?"
"என்ன சொல்ற?"
"நான் உன்ன பார்த்ததும் சாரி கேக்கனும்னு நினச்சேன்..... அதுகுள்ளையும் இந்த தடவையும் நீ நல்லவனாகி என்ன கெட்டவனா ஆக்கிட்ட"
"நெஜமாவா சொல்ற?....” என்று ஆச்ச்சரியமானான் பிரபா...
"சத்தியமாடா.... அதுக்கு உன்ன பாக்கத்தான் உங்க வீட்டுக்கு போக பஸ் ஸ்டாண்ட் போனப்போதான் முத்துவ பாத்து. அவன் சொன்னதுல இங்க வந்தேன்" என்றான் சாந்தன்....
"யாரு சாரி கேட்டா என்னடா..... நம்ம சேந்துட்டோம்ல... அதுவரைக்கும் சந்தோஷம்டா.... ஆமா.... சாரி மட்டும்தானா" என்றான் பிரபா குறும்பு பார்வையுடன்....
"நீ சாரி சொல்லிட்ட, நான் வேற சொல்றேன்" என்றபடி அந்த காதல் அட்டையை பிரபாவிடம் கொடுத்தான் பிரபா.... அதை படித்ததும் உணர்ச்சிவசப்பட்ட பிரபா, அவசரமாக சாந்தனை கட்டிப்பிடித்ததில் கை கட்டில் கம்பியில் பட்டு வலி அதிகமாகிவிட்டது..... சாந்தனும் எவ்வளவோ தடவி கொடுத்தும் பிரபாவுக்கு வலி குறையவில்லை.... பிரபாவின் அந்த காயம்பட்ட கையில் அழுத்தி முத்தம் கொடுத்தான் சாந்தன்.... இன்ப அதிர்ச்சியில் வலியை மறந்து திகைத்து நின்றான் பிரபா..... சற்று நிதானித்த பிறகு, "நீயாடா இதல்லாம்.... கையில அடிபட்டதுக்கு என் முகத்துல அடிபட்ருக்கலாம்னு தோனுதுடா" என்று பிரபா சிரிக்க சாந்தனும் சிரித்தான்... கொஞ்சம் நிதானித்துவிட்டு, "அவ்ளோதானே.... இது போதுமா" என்று சொன்னபடியே பிரபாவின் கன்னத்தில் முத்தம் கொடுத்தான் சாந்தன்.... இன்னும் அதிர்ச்சியில் உறைந்தான் பிரபா.... சிரித்தவாறே, "போதும்டா.... இப்டி ஒரே நாள்ல என்ன அதிர்ச்சியாக்கி, நெஞ்சு வலி வரவச்சிடாத..... ரெண்டு நாள்ல இவ்வளவு மாறிட்டியா?" என்று சிரிக்க அதை ரசித்தான் சாந்தன்.... இந்த பேச்சு சத்தம் கேட்டு உள்ளே வந்த நர்ஸ், "தூங்குங்க சார்.... மணி பதினொன்னு ஆகிடுச்சு.... ஸ்லீப்பிங் டேப்லட் கொடுத்திருக்கோம், அவரை தூங்க விடுங்க" என்று கண்டிப்புடன் கூற சாந்தனும் அதை ஆமோதித்தபடி அருகில் இருந்த இன்னொரு படுக்கையில் படுத்தான்.... அன்றைய இரவு இருவருக்குமே நிறைவான இரவாக இருந்தது, நிம்மதியான உறக்கத்தை கொடுத்தது.....
மறுநாள் காலை அம்மாவும் மாணிக்கமும் வந்ததும் வேறு வழியின்றி சாந்தன் தன் அறைக்கு சென்றான்..... ஆனாலும் அவன் மனம் முழுக்க பிரபாவை சுற்றியே இருந்தது.... அன்று மாலையே மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு சென்ற பிரபா, மறுநாளே கல்லூரிக்கு கிளம்பினான்.... மாமாவும், அம்மாவும் எவ்வளவோ கூறியும் கையின் காயம் ஆறுவதற்கு முன்னரே அவன் கல்லூரிக்கு கிளம்பினான்.... இதை கவனித்த மாமா, “டேய், நீ இம்புட்டு அவசரப்படுறத பாத்தா, கல்விக்காக காலேஜ் போற மாதிரி தெரியல.... ஏதோ கலவிக்கு போற மாறியே தெரியுதே?” என்றான்.... எப்போதும் போல இப்போதும் மாணிக்கம் தன் நோக்கத்தை அறிந்ததை ஆச்ச்சரியப்பட்டாலும் , இம்முறையும் வழக்கம்போல மாமாவை வாய் மூட வைத்துவிட்டான்....
“மாமா.... ஒனக்கு வேற நெனப்பே வராதா?.... பெரிய நக்கீரர் மாதிரி வார்த்தையில வெளையாடுறதா நெனப்பா?.... ஒழுங்கா ஓடிப்போயிடு” என்று தட்டி கழித்துவிட்டான் பிரபா.... ஆனாலும் காயம் ஆறும்வரை மாணிக்கமே பிரபாவை தஞ்சை வரை சென்று கல்லூரியில் விட்டுவிட்டு வருவதற்கு ஒப்புக்கொண்டதால் அம்மாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்....
கல்லூரிக்கு செல்வதாக பிரபா கூறினாலும் பெரும்பாலும் கேண்டீனில் தவமாய் தவமிருந்தான்.... சாந்தனும் வேலைகளுக்கிடையே பிரபாவோடு கண்களால் பேசிக்கொண்டான்.... எப்போதும் வேலை முடிந்தாலும் கேண்டீனில் இருந்துவிட்டு இரவு தன் அறைக்கு செல்லும் சாந்தன் இப்போதெல்லாம் மாலை நேரத்திலேயே சென்றுவிடுகிறான்.... இப்படியே சிலநாட்கள் கழிந்தது.... பிரபா பூரண குணம் அடைந்துவிட்டான்.... வழக்கம்போல சாந்தனின் அறையில் அவன் மடியில் படுத்தவாறே பிரபா பேசிக்கொண்டிருந்தான்....
“என்னடா இப்பலாம் அடிக்கடி நைட் தங்கிடுற.... அம்மா எதுவும் கேக்குறதில்லையா?” என்றான் சாந்தன்....
“செமஸ்டர் வருதில்ல.... அதான் படிக்கிறேன்.... அப்டின்னு சொல்லி அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கிட்டேன்.... அந்த மாமா மட்டும்தான் ஒரு மாதிரி பாப்பார்.... அவரை சமாளிக்கிறது ஈசி தாண்டா....” என்று பிரபா விளக்கினான்...
பிரபாவின் தலைமுடியை கோதியவாறே சிரித்த சாந்தன், “உன்னையும் அவங்க நம்புறாங்க பாரு” என்று மீண்டும் சிரித்தான்....
“சரி.... அவங்க நம்புறது இருக்கட்டும்.... நீ என்னைய இப்பவாச்சும் சந்தேகமே இல்லாம நம்புறியா? இல்லையா?” என்று ஓரப்பார்வை பார்த்தான் பிரபா....
“உன்ன நான் எப்பவோ நம்ப ஆரமிச்சுட்டேன்டா”
“எப்ப?” என்று எழுந்து அவன் முகத்தை பார்த்து கேட்டான் பிரபா....
“முதல் முதலா உன் பேரை கேட்டேன் பாரு.... அப்பவே...” என்று சாந்தன் சொன்னதும் கொஞ்சம் யோசித்த பிரபா, சாந்தன் சொல்வதின் உள் அர்த்தத்தை உணர்ந்ததைப்போல “ஓ அப்டியா?... அப்போ நீ இப்பவும் என் பேரைத்தான் நம்புறியா?” என்றான்....
சிரித்த சாந்தன் “இல்ல.... இப்போ உன்னையும் முழுசா நம்புறேன்.... நம்பலைனா உன்கிட்ட நான் என்னையே குடுத்திருக்க மாட்டேன்டா” என்றான்...
“எப்படா நடந்துச்சு அதெல்லாம்.... முத்தம் மட்டும்தானே கொடுத்த.... அதுவும் கன்னத்துல” என்று அதிர்ந்தான் பிரபா....
“யே லூசு... நான் சொல்றது என் மனசை..... யார்மேலையும் அதிகமா நம்பிக்கை இல்லாம, யாரையும் நம்பாம னு வாழ்ந்த என்னை எப்படியோ மாத்திட்டடா நீ.... அதான் பயமா இருக்கு.... ஏதோ ஒரு சூழ்நிலையில உன்னவிட்டு நான் பிரியிர சூழ்நிலைக்கு ஆனாலும், நீ என்ன விட்டு பிரிஞ்சிடாதடா.... என் அவசர புத்தியால எதாச்சும் செஞ்சாலும், நீதான் எனக்கு புரியவைக்கனும்” என்று சொல்லும்போது சாந்தனின் கண்களில் இருந்த கண்ணீர் பிரபாவின் முகத்தில் விழுந்தது.... பிரபா அதைக்கண்டு திடுக்கிட்டு எழுந்து சாந்தனின் கண்களை துடைத்துவிட்டான்....

“ஏன்டா இப்டியல்லாம் நினைக்குற?... உன்னைவிட்டு நான் எப்பவும் போகமாட்டேன்....” என்று சாந்தனின் நெற்றியில் முத்தம் கொடுத்தான் பிரபா.... இருவரும் கட்டிக்கொண்டனர்.... இருவருக்கும் இடையில் நடக்கும் அதிகபட்ச தழுவலே அவ்வளவுதான்.... ஆனாலும் பிரபா சாந்தனிடம் இதை மட்டுமே எதிர்பார்த்தான்.... இதைவிட வேறு எதுவும் இருவருக்குள்ளும் தேவைப்படவில்லை..... இவ்வளவு அன்யோன்யமாக இருந்த இருவருக்குள்ளும் ஒரு விரிசல் வந்தது..... காதலின் இனிமையை மட்டுமே அனுபவித்த இருவருக்கும் காதலின் இன்னொரு பக்கம் இருந்ததை உணரவைத்த தருணம் , மாணிக்கத்தின் திருமணம்.... ஞாயிற்றுக்கிழமை அன்று மாணிக்கம் வழக்கம்போல வேட்டைக்கு செல்ல, வேஷ்டி சட்டை எல்லாம் போட்டு தயாராக கிளம்பிக்கொண்டிருந்தான் மாணிக்கம்.... மாடிக்கு சென்ற பிரபா, “எங்க மாமா கெளம்பிட்ட?” என்று விசாரித்தான்....

“நீ என்னடா அதுக்குள்ளையும் எந்திருச்சுட்ட?.... உனக்கு எதுவும் வேலையா?.... மாமன் இப்ப வேட்டைக்கு போறேன், எதுவா இருந்தாலும் பத்து மணிக்கு மேல டீல் பண்ணிக்க” என்றான் மாணிக்கம்....
“ஓஹோ.... அவ்வளவு ஆகிடுச்சா உனக்கு?... இன்னக்கி வேட்டக்கி போறதா இருந்தா, அப்டியே நாகப்பட்டினம் போயி கடல்ல குதிச்சிடு” என்றான் பிரபா....
அதிர்ச்சியான மாணிக்கம், “என்னடா சொல்ற?.... எதுவும் பிரச்சினையா?” என்றான்...
“ஆமான்னு சொல்லலாம்.... ஒனக்கு பொண்ணு பாக்க போறோமாம் இன்னக்கி” என்றான் பிரபா....
இதைக்கேட்டு வெட்கப்பட்ட மாணிக்கம், “என்னடா சொல்ற?.... நெஜமாவா?.... எந்த ஊருடா?.... தஞ்சாவூரா?” என்றான் ....
“ஐயோ வெக்கப்படாத மாமா.... ரொம்ப கேவலமா இருக்கு.... தஞ்சவூர்லையா?.... உன்ன பத்தி தெரிஞ்சவன் எவன் மாமா உனக்கு பொண்ணு கொடுப்பான்?.... மதுரைக்கு பக்கத்துக சோழவந்தான்லயாம்.... பாவம், அந்த ஆளுகளுக்கு என்ன கஷ்டமோ?” என்று மாணிக்கத்தை பார்த்து சிரிக்க.... மாணிக்கமும் பிரபாவை துரத்தினான்.... ஓடும்போதே பிரபா, “மாமா... இனிமேயாவது எல்லாத்தையும் மூடிகிட்டு இரு..... இல்லைனா மதுரைக்காரங்க வாய்ல பேசமாட்டான்கலாம்...” என்று சிரித்தபடியே ஓடினான்..... ஒருவாராக அந்த மதுரை சம்மந்தம் மாணிக்கத்திற்கு முடிவாகி திருமண நாளும் குறித்துவிட்டார்கள்.... திருமணம் பிரபாவின் இல்லத்திலேயே.... பிரபாவின் அம்மா தடபுடலாக திருமண ஏற்பாடுகளை செய்தார்....
பிரபாவின் மற்ற இரண்டு மாமாக்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபா குடும்பத்துடன் இந்த திருமணம் மூலம் இணைந்தனர்.... பிரபாவும் மாணிக்கமும் முக்கியமான இடங்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் வைத்தனர்.... செல்லும்போது மாணிக்கத்திற்கு ஒரு வித்தியாசமான யோசனை தோன்றியது.... பிரபாவை அழைத்த மாணிக்கம், "ஏன்டா மாப்ள, ஆட்டோகிராப் படம் பாத்தியா?... அது மாதிரி நான் இதுவரை தொடர்பு வச்சிருந்த பசங்க பொண்ணுகளுக்கு எல்லாம் பத்திரிக்கை வச்சு , வரிசையா அவங்க கியூல நின்னு வாழ்த்து சொன்னா எப்புடி இருக்கும்?" என்று கூறிவிட்டு சந்திராயன் விண்கலம் விட்ட விஞ்ஞானி போல வானத்தை நோக்கி அதை ரசித்தான்....
முறைத்த பிரபா, "நல்லா இருக்கும் மாமா.... ஆனா ஒரே ஒரு சிக்கல்" என்றான்...
"என்னடா சிக்கல்... சொல்லு சமாளிச்சிடலாம்" என்று சீரியஸாக கேட்டான் மாணிக்கம்...
"அப்டி நிக்கிற கியூ நம்ம வீட்லேந்து வல்லம் வரைக்கும் நிக்கும்.... ஏதோ மனித சங்கிலி போராட்டம் நடக்குதோன்னு போலிஸ் பிரச்சினை பண்ணா என்ன பண்றது" என்று பிரபா சொன்னதும்தான், தன்னை பிரபா வாருவதை உணர்ந்தா மாணிக்கம்....
ஆனாலும் சளைக்காமல் மாணிக்கம், "டேய் என்ன கிண்டலா?.... காதல் பத்தி உனக்கென்னடா தெரியும்.... சின்னப்பயலே" என்று கூறினான்....
"மாமா, அதுக்கு பேரு காதலா?.... மனசாட்சியோட பேசு.... பாக்குற கரண்ட் கம்பமெல்லாம் காலை தூக்குற நாய் மாதிரி, நீயும் கண்ட எடத்திலையும் செஞ்ச கூத்துக்கு பேரு காதலாக்கும்... மாமா, உன்னையும் நம்பி ஒருத்தர் பொண்ணு கொடுத்திருக்கார்... நீயா எதாவது கிறுக்குத்தனமா செஞ்சு, அத சொதப்பிடாத...." என்று பிரபா கூற, அதையும் யோசித்தபடி அடுத்த இடத்திற்கு பத்திரிகை கொடுக்க சென்றனர் இருவரும்...... திருமண சடங்குகளும் தொடங்கிவிட்டது.... பிரபாவின் முக்கிய சொந்தங்கள் பலரும் வீட்டிற்கு வந்துவிட்டார்கள்.... அதில் குறிப்பாக பிரபாவின் மூத்த மாமா வீர சேகரன் தான் பிரதானமாக எல்லா வேலைகளையும் வரிந்துகட்டிக்கொண்டு பார்த்தார்... ஏழு வருடங்களாக பிரபா குடும்பத்துடனும், மாணிக்கத்துடனும் பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த இந்த மனிதர் இப்போதைய இந்த திடீர் ஞானோதயத்துக்கு காரணம் தன் மகள் அமுதா'தான்.... பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் அவளை எப்படியாவது பிரபாவுக்கு மணம் முடிக்கவே இந்த மனமாற்றத்திர்கான காரணம்.... அமுதாவுடன் பிரபா சகஜமாக பேசினான்... படிப்பை பற்றி பேசினான்.... இதை பார்த்த கமலா அம்மாவுக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.... அமுதாவை அவருக்கு மிகவும் பிடிக்கும்.... ஆனாலும் இப்போதைக்கு அதைப்பற்றி பேச சமயமில்லை என்பதால் ஆசையை அடக்கி வைத்திருந்தார் .... ஆனால், அந்த நிகழ்வுகளில் பிரபாவின் மனதை கொள்ளை அடித்தவன் இன்னொருவன்.... அவன் பெண்வீட்டை சேர்ந்தவன்.... மணப்பெண் ஜனனியின் அக்கா மகன்.... அவன் பெயர் கவுதம்....... அவன் பார்ப்பதற்கு ஒரு சாயலில் சாந்தனைப்போலவே இருந்தான்.... சிறுவயதிலேயே தாயை இழந்த அவனை எல்லாமுமாக வளர்த்தவள் ஜனனி தான்.... புதிதாக ஒருசில பாத்திரங்களின் பெயர் வருவதால் குழம்பிடாதிங்க..... இந்த நபர்கள் எல்லாம் பிரபாவுக்கே இப்பதான் அறிமுகம் என்பதால், இப்போது இந்த புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதுதான் சரியானது என்பதால் இந்த திடீர் பெயர் புகுத்தல்..... தடங்கலுக்கு மன்னிக்கவும், இனி கதைக்கு வரலாம்.... அதனாலோ என்னவோ பிரபா அவனிடம் வழிய சென்று பேசுவான்....
அடிக்கடி கவுதமிடம் இப்படி தனியே பிரபா பேசுவதை கவனித்த மாணிக்கம், "மாப்ள, நாளக்கி கல்யாணம்..... இந்த கல்யாணம் நடக்கலைனா எனக்கு அறுபதாம் கல்யாணம் வரைக்கும் எவனும் பொண்ணு கொடுக்க மாட்டானுக.... அந்த பையனோட பேசுரதோட நிறுத்திக்கடா" என்று கொஞ்சம் சீரியஸாகவே கூறினான்.... சிரித்த பிரபாவும், அதை ஆமோதிப்பதைப்போல நடந்தான்.... ஆனாலும் கவுதத்தை அழைத்த பிரபா, "டேய்... என்ன படிக்குற?" என்றான்...
"லவந்த் படிக்கிறேன்" என்றான் கவுதம்....
"எதாவது படிப்புல சந்தேகம்னா என்கிட்டே கேளு... அதுவும் குறிப்பா பயாலஜினா தாராளமா கேளுடா"
என்றான் பிரபா....
"வேண்டாம்.... நான் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப்..." என்றான் சிரித்தபடியே கவுதம்..... அசடு வழிந்த பிரபா, "பரவால்ல.... அதுலயும் சந்தேகம் இருந்தா கேளு" என்றான்... எதையாவது பேசவேண்டும் என்ற நோக்கத்தில் அப்படி உளறிக்கொட்டினான் பிரபா....
"நெஜமாவா சொல்றீங்க?" என்றான் கவுதம்.....

"அட ஆமாம்டா.... நீ ஏன் சந்தேகமாவே கேக்குற" என்று அன்று முழுக்க தானாகவே வாய்ப்புகளை உருவாக்கி கவுதமிடம் பேசினான் பிரபா.... ஆனால் இதை பின்னர் யோசித்த பிரபா, தன் மீதே நொந்துகொண்டான்.... "ஏன் தேவை இல்லாமல் அவன்ட்ட இப்படி வழியனும்?.... ச்ச.... இனிமே இப்டி பண்ண கூடாது.... என்னைய நம்பி ஒருத்தன் இருக்கான்..... இருந்தாலும் சாந்தனை மாதிரியே இருந்ததால்தானே பேசினேன், அதனால அது தப்பில்ல" என்று தானே தனக்குள் ஒரு பட்டிமன்றமே நடத்தி, அதுக்கு தீர்ப்பும் கொடுத்துவிட்டான்.... ஆனாலும் அடுத்தடுத்த தருணங்களில், கவுதமிடம் பேசுவதை நிறுத்திவிட்டான் பிரபா, அதற்கு காரணம் மறுநாள் திருமணத்திற்கு சாந்தனும் வர இருப்பதாலாக கூட இருக்கலாம்... மறுநாள் திருமண நாள்.... சாந்தன், அகிலன் மற்ற பிரபாவின் நண்பர்கள் என்று பலரும் வந்தார்கள்.... அகிலன் நட்பு வட்டத்தொடு இல்லாமல், சாந்தன் தனியே அமர்ந்திருந்தான்,... அகிலனோடு பேசுவதை தவிர்க்க, பிரபாவின் ஊர் நண்பர்களோடு பேசிகொண்டிருப்பான் சாந்தன்.... ஒருவழியாக மாணிக்கத்திற்கு திருமணமும் முடிந்துவிட்டது.... பிரபாவின் நண்பர்கள் பலரும் திருமணம் முடிந்தபின் சென்றுவிட்டார்கள்.... ஆனால், சாந்தன், அகிலன் மற்றும் அகிலனின் இன்னொரு நண்பன் மூவரும் பிரபாவின் வற்ப்புறுத்தலால் அங்கு தங்கி இருந்தனர்..... எப்போதும் கலகலப்பாக இருக்கும் மாணிக்கம் அன்று படபடப்பாக காணப்பட்டான்.... அதைக்கண்ட பிரபா சிரித்தவாறே, “என்ன மாமா இப்புடி இடிஞ்சு போயி உக்காந்திருக்க?.... படாத எடத்துல எதுவும் அடிபட்ருச்சா?” என்றான்....
முகத்தில் கொஞ்சம் சோகத்துடன் மாணிக்கம், “கிண்டல் பண்ணாதடா மாப்ள.... பயமா இருக்கு..... முதல் ராத்திரிக்கு எப்புடி, என்ன பண்றதுன்னு கொஞ்சம் பதட்டமா இருக்கு” என்றான்....
“மாமா, இது ஜனனி அத்தைக்குதான் முதல் ராத்திரி..... உனக்கு அனேகமா இது முன்நூறாவது ராத்திரியா இருக்கும்..... நீ பயப்புடுறன்னு யார்கிட்டயும் சொல்லிடாத” என்று சிரித்தான் பிரபா....

“ஐயோ... சத்தம் போட்டு சொல்லாதடா..... எத்தனையோ தடவ நாம கடைல காபி குடிக்கிறதுக்கும், நாமலே காபி போட்டு குடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்குல்ல..... சரி விடு, பாத்துக்கலாம்” என்று தன்னையே ஆறுதல் படுத்தியவன், முதல் இரவுக்கு புறப்பட்டான்..... எல்லா விஷயங்களையும் முடித்து மாமாவை முதலிரவுக்கு அனுப்பிவிட்டு மாடிக்கு சென்று நண்பர்களை பார்க்கலாம் என்று மாடிக்கு சென்றான் பிரபா..... பிரபா செல்வதற்குள் அங்கு ஒரு பெரிய கலவரமே நடந்திருக்கும் என்பதை அவன் நிச்சயம் அறிந்திருக்க மாட்டான்..... ஆம், பிரபா மாணிக்கத்திடம் பேசிய அதே நேரத்தில் மாடியில் அகிலனும் அவன் நண்பனும் மதுவை ருசித்துக்கொண்டிருந்தனர்..... சாந்தன் வெகுநேரம் பிரபாவுக்காக காத்திருந்தும் அவன் வராததால், அகிலனின் புலம்பல்களை தாங்க முடியாததால் அந்த அறைக்குள் இருந்த ஒரு படுக்கையில் படுத்து உறங்கினான்....
அன்று முழுவதும் அலைச்சல் என்பதால் படுத்தவுடன் உறங்கிவிட்டான் சாந்தன்.... ஆழ்ந்து உறங்கிய சமயத்தில் தன் மீது ஏதோ ஒன்று ஊறுவதைப்போல உணர்ந்தான்.... யாருடைய கையின் தொடுதலைப்போல உணர்ந்தான்.... யாருடையதாக இருக்கும்? என்று யோசிப்பதற்குள் அந்த கை சாந்தனின் அந்தரங்கத்தை தொட்டுவிட்டது..... பதறி எழுந்த சாந்தன், அது பிரபாவாக இருக்கும் என்ற எண்ணத்தில் எழுந்தான்....

 ஆனால், எழுந்தவனுக்கு மேலும் அதிர்ச்சி.... காரணம், அங்கு போதை மயக்கத்தில் நின்றவன் அகிலன்..... எழுந்த வேகத்தில் அகிலனின் கன்னத்தில் “பளார்” என்று அறைவிட்டான்..... அகிலன் நிலைகுழைந்து கட்டிலில் விழுந்தான்.... போதை மயக்கத்தில் இன்னும் கோபமான அகிலன், “டேய்.... என்ன திமிரா?.... என்னமோ யோக்கியன் மாதிரி அடிக்கிற?” என்றான்....
இன்னும் கோபமான சாந்தன், “டேய், அதான் ஏற்கனவே இப்டி செஞ்சு என்கிட்டே அடிவாங்குனில்ல.... இன்னுமா உனக்கு புத்தி வரல?.... இது கல்யாண வீடுங்குரதாள உன்ன உயிரோட விடுறேன்....” என்று கோபக்கனல்களை கொட்டினான்.....

“டேய் டேய் நிறுத்துடா...... நான் தொட்டா வலிக்குது, பிரபா தொட்டா மட்டும் சுகமா இருக்கோ?.... ரொம்ப உத்தமன் மாதிரி பேசாத” என்று அகிலனின் வார்த்தைகள் சாந்தனை மேலும் கோபமாக்கியது....
“நிறுத்துடா.... பிரபாவை உன்னோட சேர்த்து பேசாத.... அவன் என்னை என்னவேனாலும் பண்ண அவனுக்கு உரிமை இருக்கு.... அவன் என்னோட காதலன்... உன்ன மாதிரி ஊர்ல பொருக்கி திங்குற நாய் இல்ல.... உன்னோட பழகுனதே அவன் செஞ்ச பெரிய தப்பு” என்றான் பிரபா....
4 இதைக்கேட்டு சிரித்த அகிலன், “டேய், பிரபாவ பொருத்தவரைக்கும் அவன் பாத்து அனுபவிச்ச பத்து பேர்ல நீயும் ஒருத்தன்.... அவ்வளவுதான்... ஆனால், நான் அவனுக்கு நண்பன்டா..... இன்னும் சொல்லனும்னா, உன்ன மடக்க என்கிட்டதான் சபதம் போட்டான் பிரபா..... அவன் கில்லாடி, சொன்னமாதிரியே முடிச்சிட்டான்..... நான்தான் அவன்ட்ட கத்துக்கணும் நிறைய.... அவன் இத ஆரமிச்சதே முதல்ல என்கிட்டதான்டா..... நீயல்லாம் புதுசு.... “ என்றான்....

இதைகேட்ட சாந்தன் அதிர்ச்சியானான்.... அதிர்ச்சியில் சாந்தன் உறைந்து நின்ற சமயத்தில்தான் பிரபா மாடிக்கு வந்தான்..... அகிலனையும் சாந்தனையும் அந்த கோலத்தில் பார்த்த பிரபா அதிர்ச்சியானான்.... சாந்தன் அறைந்ததில் அகிலனின் உதடு கிழிந்து ரத்தம் வரத்தொடங்கியது.... இதைக்கண்ட பிரபா அதிர்ச்சியில், “என்னடா என்னாச்சு?” என்றான்....
“என்ன அடிச்சுட்டான்டா.... ஏதோ உன் மொகத்துக்காக நான் சும்மாவிடுறேன்.... இல்லைனா நடக்குறதே வேற மாப்ள” என்று உளறினான் அகிலன்..... அகிலனின் காயத்தை துடைத்தபடியே சாந்தனை பார்த்த பிரபா, “ஏன்டா....?... அவன் போதைல எதாச்சும் பண்ணினா இப்டியா அடிப்ப... பாவமில்லையா?” என்றான்.... இது மேலும் சாந்தனை கோபப்படுத்தியது.....
இருந்தாலும் அதைக்காட்டிக்கொள்ளாமல்,”நீ அகிலனோட செக்ஸ் வச்சிருக்கியா?.... என்கூட நீ பழகுனதுக்கு காரணமும் அதானா?” என்றான் சாந்தன்....
இந்த கேள்விகளை எதிர்பார்க்காத பிரபா, நிலைமையை எப்படி கையாள்வது என்று புரியாமல் , “இல்ல.... அது..... அது வந்து....” என்று இழுத்தான்....
“மறைக்காம சொல்லு.... எல்லாத்தையும் உன் நண்பன் சொல்லிட்டான்..... இப்பவாவது உண்மையை ஒத்துக்கோ” என்று மீண்டும் உக்கிரத்துடன் வார்த்தைகளை கொட்டினான் சாந்தன்....
நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டு, எச்சிலை விழுங்கியவாறே தொடங்கினான் பிரபா, “ஆமா..... அகிலனோட நான் கான்டாக்ட் வச்சுகிட்டது உண்மைதான்.... ஆனால்....” என்று பிரபா கூறி முடிப்பதற்குள் குறிக்கிட்ட சாந்தன், “அடச்சீ.... இத சொல்ல உனக்கு அசிங்கமா இல்ல?..... இதப்பத்தி நான் உன்கிட்ட ஒருதடவை கேட்டப்பவே நீ சொல்லிருந்தா கூட பரவால்ல..... எவ்வளவு கேவலமா இத்தனை நாளும் நடிச்சிருக்க.... உனக்கு அகிலன் எவ்வளவோ பரவால்லடா.... அவன் உன்ன மாதிரி நம்பவச்சு என் கழுத்த அறுக்கல..... தப்பே செஞ்சாலும் அதை நேரடியா செஞ்சான், உன்ன மாதிரி நயவஞ்சகமா நடிக்கலா..... இதுவரைக்கும் உறவுகள் இல்லையேன்னு வருத்தப்பட்டிருக்கேன்.... முதல் முறையா, உன்னைப்போல ஒருத்தன் உறவாகலைன்னு சந்தோஷப்படுறேன்..... இனி என் மூஞ்சியிலேயே முழிக்காத.... “ என்று கண்ணீரோடு வார்த்தைகளை கொட்டிய சாந்தன், பிரபாவின் எவ்வித சமாதானத்தையும் ஏற்காதவனாக வீட்டை விட்டு கிளம்பினான்.... அதன்பிறகு பல முறை பிரபா அலைபேசி மூலம் சாந்தனை அழைத்தாலும் பதில் இல்லை..... திருமணம் முடிந்தாலும், வேலைகள் எல்லாம் பிரபா செய்யவேண்டி இருந்ததால் அவனாலும் நேரடியாக சென்று சாந்தனை பார்க்க முடியாத சூழல்.... விடிந்ததும் தன் தவறை உணர்ந்த அகிலன் பிரபாவிடம் மன்னிப்பு கோரினான்..... அகிலனைபற்றி தெரிந்தவன் பிரபா என்பதால் சிறு திட்டிற்கு பிறகு சமாதானம் அடைந்துவிட்டான்.... “நீங்க ரெண்டுபேரும் லவ் பண்றீங்கன்னு எனக்கு தெரியாதுடா...... ஏதோ ஜாலிக்காக பழகுனீங்கன்னு நினச்சேன்.... ரொம்ப சாரிடா.... நான் வேணும்னா சாந்தன்கிட்ட சாரி கேக்கவா?” என்றான் அகிலன்....
“இல்லடா வேண்டாம்..... அவனுக்கு உம்மேல இருக்குற கோபத்தவிட எம்மேலதான் கோபம் அதிகம்... நான் எல்லாத்தையும் அவன்கிட்ட மறச்ச்சதுதான் அவன் கோவத்துக்கு காரணம்.... எல்லாம் ரெண்டு மூணு நாள்ல சரி ஆகிடும்..... நீ கவலப்படாதடா” என்று அகிலனிடம் பிரபா கூறினாலும், சாந்தனை பற்றி முழுவதும் அறிந்த பிரபாவுக்கு , சாந்தன் இதற்கு எந்த அளவிற்கு கோபத்தில் இருப்பான் என்பதும், அவனை சமாதனப்படுத்தவே முடியாது என்பதும், இனி இருவரும் இணைய வாய்ப்பே மிகக்குறைவு என்பதும் தெரியாமலா இருக்கும்?.... ஆனாலும், அதை எதையும் அகிலனிடம் சொல்லவில்லை.... அகிலனிடம் சமாதானப்படுத்திவிட்டு கீழே சென்று தன் அறையில் , அடக்கமாட்டாமல் அழுதான் பிரபா.... வீட்டில் எல்லோரும் குல தெய்வ கோவிலுக்கு சென்றுவிட்டனர் என்பதால் வீட்டின் அறையில் தனிமையில் அழுதுகொண்டிருந்தான் பிரபா.... அப்போது திடீரென்று அந்த அறையின் கதவு திறக்கப்பட்டது, அதிர்ச்சியில் கண்ணீரை கூட துடைக்க மறந்தவனாக திரும்பி பார்த்தான்.... அங்கு நின்றது கவுதம்..... சாந்தனை போன்று இருந்தாலும் இவன் அவ்வளவு சாந்தமான பையன்.... ஏனோ அவனை பார்த்ததும் சாந்தன் நினைவு வந்து இன்னும் கண்ணீர் பெருக்கெடுத்தது.... அதை அவன் பார்க்காத வண்ணம் துடைத்துக்கொண்டான் பிரபா..... “சாரி அத்தான்.... என் டிரெஸ் இங்க இருக்கு... அத எடுக்க வந்தேன்.... எல்லாரும் கோவிலுக்கு போய்ட்டாங்களாம்.... நான் தூங்கிட்டேன்.... நல்லவேளை நீங்களாச்சும் கம்பனிக்கு இருக்கிங்களே..” என்று சிரித்தான்.... அவன் ஆடைகளை எடுத்துக்கொண்டிருக்கும்போது பிரபாவை பார்த்த கவுதம் , “ஆமா.... ஏன் அழறீங்க?” என்றான் ....
பொய்யாக சிரித்த பிரபா, “அதல்லாம் ஒன்னுமில்ல..... கண்ல தூசி விழுந்துடுச்சு” என்று சமாளித்தான் பிரபா....
“கண்ல விழுந்த தூசிக்கா தேம்பி தேம்பி அழுதீங்க?” என்று மீண்டும் பூடகமாக கேட்டான் கவுதம்....
“ஆமா.... இத மாமாகிட்ட சொல்லிடாத” என்று சரண்டர் ஆனான் பிரபா....
“லவ் பிரச்சினையா?”
“ஆமா.... ஆனால், அதுக்கு மேல எதுவும் கேக்காத” என்று கூறினான் பிரபா.... எதற்காக கவுதமிடம் போய் தன் காதலை பற்றியல்லாம் ஒப்புக்கொண்டான் என்று அவனுக்கே புரியவில்லை.....
சிரித்த கவுதம், “நெஜமாவா சொல்றீங்க?..... நம்பவே முடியல.... கவலைப்படாதிங்க, எல்லாம் சால்வ் ஆகிடும்.... அவசரத்துல எந்த முடிவும் எடுக்காதிங்க.... நிதானமா யோசிச்சு எதையும் செய்யுங்க..... தப்பு செஞ்சா யோசிக்காம சாரி கேட்ருங்க.... அப்புறம்....” என்று இழுத்தவனை இடைமறித்த பிரபா, “டேய் டேய் போதும்டா..... வயசுக்கு தகுந்த மாதிரி பேசு.... அதல்லாம் நான் பாத்துக்கறேன், நீ போ” என்று விரட்டினான் கவுதமை....
“முதல்ல இந்த பழக்கத்த மாத்துங்க..... ஈகோ’வ விடுங்க.... எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..... என்னைக்காவது இதை புரிஞ்சுகுவீங்க, அப்போ இந்த கவுதமை நினைச்சுக்கோங்க.... நான் இப்போ கெளம்புறேன், நீங்க அழுகையை கண்டின்யூ பண்ணுங்க” என்று சிரித்தவாறே அறையை விட்டு சென்றான் கவுதம்....பிரபா தன் சோகத்தை மறந்து சிரித்தான்.... சாந்தனைப்போலவே உருவ ஒற்றுமை இருந்தாலும், மனதில்தான் எவ்வளவு மாற்றங்கள்.... பேச வாயே திறக்காதவன் ஒருத்தன், வாயை திறந்தாள் மூடாதவன் இன்னொருத்தன்..... அப்படியே இரண்டு நாட்கள் கழிந்தது..... சாந்தன் மாறி இருப்பான் என்ற ஏதோ ஒரு மூலையில் இருந்த சின்ன நம்பிக்கையோடு அவனை தேடி போனான் பிரபா.... முகம் கொடுத்தே பேசவில்லை சாந்தன்.... கிட்டத்தட்ட ஒரு மாதமும், நாள் தவறாது சாந்தனை சந்திக்கும் பிரபா, எவ்வளவோ பேச முயன்றும் சாந்தன் கொஞ்சமும் மனம் இறங்கியதாக தெரியவில்லை.... ஆயிரம் சாரி’களும், தன் தரப்பு நியாயத்தை பல நூறு தடவையும் என்று எவ்வளவோ கேட்டும் சொல்லியும் சாந்தனிடம் எந்த பதிலும் வரவில்லை....

அன்று வழக்கம்போல தன்னிலை விளக்கம் கொடுக்க வந்தான் பிரபா, வழக்கம்போல அவனை புறக்கணிக்க எத்தனிக்கையில் சாந்தனின் கையை பிடித்து இழுத்தான் பிரபா..... கோபமான சாந்தன், பிரபாவின் கையை விலக்க முயல, இன்னும் இறுக்கிப்பிடித்தான் பிரபா.... “ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்றத கேளு..... இதுக்கு மேல நானா உன்கிட்ட எதுவும் பேசமாட்டேன்..... உன்ன தொந்தரவும் பண்ண மாட்டேன்.... அதுக்காகவாவது இந்த அஞ்சு நிமிஷம் நான் சொல்றத கேளு” என்றான்..... இதற்கு ஒப்புக்கொள்பவன் போல அமைதியாக நின்றான் சாந்தன்....
தொடங்கினான் பிரபா, “நான் தப்பு செஞ்சேன்தான்..... இல்லைன்னு மறுக்கல.... ஆனால், இப்ப நான் மாறிட்டேன்.... உன்னோட பழகுறதுக்கு முன்னாடி வரை நான் அப்டி தப்பு செஞ்சது உண்மைதான்.... ஆனால், உன்னோட பழகுனப்புறம், உன்னை மனசார காதலிச்ச பிறகு எல்லாத்தையும் விட்டுட்டேன்.... ஆரம்பத்துல உன்னை அடையனமுன்னு நினைச்சது உண்மைதான்.... ஆனால், உன்னோட பழகுன பின்னாடி உன் வெளி அழகைவிட, மனசு இன்னும் அழகா இருக்குறதை புரிஞ்சுகிட்டேன்..... இப்பவும் நான் உன் விருப்பம் இல்லாமல் தொடக்கூட மாட்டேன்.... நான் செஞ்ச தப்புக்கு உன்கிட்ட ஆயிரம் முறை மன்னிப்பு கேட்டேன்.... நான் இப்ப உனக்கு மனசளவுல எந்த துரோகமும் பண்ணலன்னு உன் மனசாட்சிக்கு தெரியும்... ஆனால், அதை நம்ப மறுக்குற.... இதுக்குமேலையும் உன்ன நான் தொந்தரவு பண்ண விரும்பல..... இன்னைக்கு சாயுங்காலம் காலேஜ் முடிஞ்ச பின்னாடி உனக்காக பஸ் ஸ்டாப்ல காத்திருப்பேன்.... உன் மனசுக்கு நான் தப்பு பண்ணலைன்னு தோனுச்சுன்னா, அங்க வா..... ஒருவேளை நீ வரலைனா எந்த காலத்துலயும் நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.... ஆனால், இன்னைக்கு சாயந்திரம் வரைக்கும் உன் மனசை நீயே கேளு, நான் தப்பு பண்ணனான்னு.... அது சொல்றதை எதுவா இருந்தாலும் செய்.... உன்னோட கடைசி வரைக்கும் வாழனும்னுதான் என்னோட ஆசை..... ஆனால், அது உன் விருப்பமா இல்லைனா நான் வற்ப்புறுத்த மாட்டேன்.... நீ சாயந்திரம் வருவன்னு நம்பிக்கைல இப்போ நான் போறேன்” என்று சொல்லிவிட்டு சாந்தனின் பதிலை எதிர்பார்க்காமல் சென்றான் பிரபா.... பிரபா அந்த இடத்தைவிட்டு சென்றபிறகும் அவன் குரல் சாந்தனின் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.... கண்ணும் உடலும் வேலைகளை கவனித்தாலும், மனம் ஏனோ பிரபா சொன்னதையே அசைபோட்டு கொண்டிருந்தது..... ஒருபுறம் இன்னும் அவன் மனதால் பிரபாவின் செயலை ஏற்கமுடியவில்லை.... மறுபுறம், இப்போது அவனிடம் பேசாவிட்டால் எப்போதும் அவனோடு வாழமுடியாதோ என்கிற பயமும் இருந்தது..... பிரபா சாந்தனிடம் அப்படி கூறிவிட்டாலும், மனம் மிகவும் படபடத்தது..... “சாந்தனின் குணம் பற்றி அறிந்தபின்பும், இப்படி ஒரு விஷயத்தை அவனிடம் எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம்..... இப்படியே விட்டிருந்தால்கூட என்றாவது அவன் மாறுவான் என்ற நம்பிக்கையோடாவது இருந்திருக்கலாம்.... இப்படி செய்ததால், அவன் வராவிட்டால் அதன்பின்பு எந்த காலத்திலும் அவனோடு இணையவே முடியாது.... “ என்று கல்லூரியில் பிரபா இருந்தாலும் அவன் மனம் முழுக்க கேண்டீனை சுற்றியே வட்டமடித்தது....
மாலை நேரமும் ஆனது..... தான் வருவதற்கு முன்பாக சாந்தன் வந்து பார்த்துவிட்டு சென்றுவிடுவானோ என்ற ஒரு முட்டாள்தனமான சிந்தனையோடு அவசர அவசரமாக பேருந்து நிறுத்தத்தை நோக்கி விரைந்தான் பிரபா.....
இன்னும் கேண்டீனிளிருந்து சாந்தன் தன் அறைக்கு செல்லவில்லை என்பதை உறுதிசெய்திகொண்டவனாக கொஞ்சம் எதிர்பார்ப்போடு காத்திருந்தான்..... நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேருந்துகளில் பயணிக்க தொடங்கினர்..... மணி ஏழு, எட்டு ஆனது..... நண்பர்கள் அனைவரும் சென்றுவிட்டனர்.... எதிர்பார்ப்பு குறைந்து ஏமாற்றம் அதிகமானது.... மனம் மிகவும் கனத்தது..... மற்ற பணியாளர்களும் தங்கள் பணிகளை முடித்துவிட்டு ஒன்பது மணி பேருந்திற்கு சென்றுவிட்டனர்.... மணி பத்தரை ஆக இன்னும் சில மணித்துளிகள் இருந்தது.... கடைசி பேருந்து வரும் நேரம்..... இன்னும் ஒருசில நிமிடங்கள்தான் தன் வாழ்க்கையை தீர்மானிக்கப்போகிறது என்கிற படபடப்பால் தான் அழுதுவிடுவேனோ என்ற அச்சம் பிரபாவை ஆட்கொண்டது..... தூரத்தில் கடைசி பேருந்து ஒலி எழுப்பியவாறு பேருந்து நிறுத்தத்தை நோக்கி விரைந்தது.... அந்த ஒலி ஒரு விசித்திரமான பயத்தை உருவாக்கியது அவனுக்குள்..... “மனுஷனா அவன்?.... அஞ்சு மணி நேரமா நான் இருக்கேன்.... ஒரு மனிதாபிமானத்தோடயாவது வந்திருக்கலாம்ல..... அவன் உண்மையாவே ரோபோதான்.... உணர்வுகளே இல்லாத ஒரு மெஷின் அவன்” என்று தனக்குள் சாந்தனை திட்டிக்கொண்டிருந்தான்..... சாந்தனை சந்தித்த நாள்முதல், இப்போதுதான் அவனை மனதளவில் பிரபா திட்டுவது இப்போதுதான்.... பேருந்து அவன் முன் நின்றது.... ஏற முயன்றபோது, பேருந்து நிறுத்தத்தை சுற்றி இருந்த இருளை கிழித்தவாறு, அந்த மின்விளக்கின் வெளிச்சத்தில் ஒரு உருவம் வந்தது..... பேருந்தில் ஏறிய பிரபா, அவசர அவசரமாக கீழே இறங்கினான்..... பேருந்து சென்றுவிட்டது.... பிரபாவின் கண்கள் ஆச்சரியம் இன்னும் அகலவில்லை..... காரணம், அங்கு வந்தவன் சாந்தன்தான்.... சாந்தனை பார்த்ததும் அவனை அறியாமல் பிரபாவின் கண்கள் குளமாகின.... அவ்வளவு தூரம் வந்த சாந்தன், பேச தயங்கியவனாக ஓரமாகவே நின்றான்..... சாந்தனை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்தான் பிரபா.... அருகில் வந்ததும்தான் சாந்தனின் கண்களும் கலங்கி இருப்பதை கவனித்தான் பிரபா.... அருகில் வந்த பிரபாவை ஓங்கி அறைந்தான் சாந்தன்.... அறைந்த அடுத்த நொடியே, கண்ணீர் வழிய பிரபாவை கட்டிப்பிடித்தான் சாந்தன்.... அந்த கட்டிப்பிடிப்பின் இறுக்கம் சாந்தனின் அன்பை உணர்த்தியது..... இரண்டு நிமிடங்கள் இருவரும் கட்டிப்பிடித்தவாறே இருந்தனர்.... எதுவும் பேசிக்கொள்ளவில்லை.... அந்த நேரத்தில் பேசவும் இருவரும் அவசியமில்லை.... கண்ணாலே இருவரும் சண்டை போட்டு, சமாதானமும் அடைந்துவிட்டனர்...... அதைப்பற்றி மேற்கொண்டு எதுவும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை..... “சரிடா.... நீ கெளம்பு.... நாளைக்கு பார்க்கலாம்” என்று பிரபாவிடம் கூறினான் சாந்தன்.....
“எங்க கெளம்புறது?.... அதான் உன்னால கடைசி பஸ்சும் போய்டுச்சே.... எப்டியும் நீ உன் ரூமுக்கு என்னை கூப்பிட மாட்ட, நான் இங்கயே இருக்குறேன்.....” என்று அலுத்துக்கொண்டு கூறினான் பிரபா....
“சரி வா.... ரூம்க்கு போகலாம்” என்று கூறிய சாந்தனுடன் பிரபாவும் அவன் அறைக்கு சென்றான்....
பிரபாவின் மனதில் மகிழ்ச்சியை அளவிட முடியவில்லை..... கடைசி நிமிடத்தில் சாந்தன் அங்கு வந்திருக்காவிட்டால், என்ன ஆகியிருப்பான் என்பது அவனுக்கே புரியவில்லை.....
சாந்தனின் அறைக்கு சென்றபிறகு, சாந்தனின் கைகளை பிடித்த பிரபா, “ரொம்ப சாரிடா..... நான் செஞ்சது எவ்வளவு பெரிய தப்புன்னு......” என்று ஆரம்பிக்க முயல, இடைமறித்த சாந்தன், “போதும்..... மறுபடியும் கிளப்பாத..... இத்தோட இந்த பேச்சைவிடு, இனிமேல் இப்படி பண்ணாம நடந்துக்க... அவ்வளவுதான்” என்று முற்றுப்புள்ளி வைக்க எத்தனித்தான்....
“டேய்.... இந்த நேரத்துல ஒரு செண்டிமெண்ட் வசனத்தை வாசகர்கள் எதிர்பார்ப்பாங்க..... நீபாட்டுக்கு அதையும் பேசக்கூடாதுன்னு சொல்ற?” என்று சிரித்தான் பிரபா....
“அதல்லாம் ஒன்னும் எதிர்பார்க்கமாட்டாங்க..... இனிமேலாவது நீ எதையும் மூடி மறைக்காம இருந்தா, அதுவே நம்ம ஒன்னா இருக்க போதுமானதுடா” என்று சாந்தன் சொல்லி முடித்ததும் , தன் உடைகளை களைய தொடங்கினான் பிரபா.... பதறிய சாந்தன், “டேய் டேய்.... என்னடா பண்ற?... எதுக்கு இப்ப சட்டைய கழட்டுற?” என்றான்....
“நீதானே எதையும் மூடி மறைக்காம இருக்கணும்னு சொன்ன, அதான் மொத்தமா உன்கிட்ட எதையும் மறைக்காம காட்டிடலாம்னு...” என்று பேன்ட்டை அவிழ்க்க முயல, அதை தடுத்த சாந்தன்,”டேய் முடியலடா.... இது ஒன்ன மட்டும் கொஞ்ச நாள் மறச்சே வச்சுக்க” என்று பிரபாவின் சட்டையை சாந்தனே மாட்டிவிட்டான்....
“ஒருவேள நான் வந்திருக்கலைனா என்னடா பண்ணிருப்ப?” என்று சாந்தன் கேட்டான்....
“பத்தரை மணி பஸ்’கு போயி வீட்ல தூங்கிருப்பேன்” என்று சிரித்தான் பிரபா....
சாந்தன் முறைக்க, சுதாரித்த பிரபா, “ஐயோ, நானே சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறேனோ?.... சும்மா சொன்னேன்டா.... என்ன பண்ணிருப்பென்னு எனக்கு தெரியல..... அனேகமா பாலா படத்து ஹீரோக்கள் மாதிரி ஏர்வாடி, குணசீலம்னு போயிருப்பேன்னு நினைக்குறேன்” என்று சிரிக்க சாந்தனும் சிரித்தான்.....
“அவ்வளவு நல்லவனாடா நீ?.... ஆமா, எனக்கே செக் வைக்குற மாதிரி இந்த ஐடியாவை எப்டிடா யோசிச்ச.... இந்த மண்டைக்குள்ள அவ்வளவு யோசனை பண்றியா?” என்றான் சாந்தன்....
“உண்மைதான்... ஆனால், உன் பாராட்டுக்கும் புகழுக்கும் காரணம் நான் இல்ல.... அகிலன்தான்....அவன் கொடுத்த ஐடியா தான் இது.... முதல்ல அவனுக்கு நாளைக்கு பிரியாணி வாங்கிக்கொடுக்கணும்” என்று கூறினான் பிரபா....
“அகிலன்” என்ற வார்த்தையை கேட்டதும் சாந்தனின் முகம் சுருங்கியது.... அகிலனோடு இந்த பிரச்சினைக்கு பிறகும் பிரபா நட்புறவாடுவது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.... ஆனால், அந்த பிரச்சினையை மீண்டும் கிளப்பி, இணைந்த பிரபாவை மீண்டும் பிரிய மனம் இல்லை சாந்தனுக்கு.... சாந்தனின் இந்த உணர்வுகளை பிரபா ஏனோ புரிந்துகொள்ளவில்லை.... ஆனால், இது எத்தகைய விளைவை பின்னால் ஏற்படுத்தப்போகிறது என்பதை இருவரும் பெரிதாக யூகிக்கவில்லை.... அதன் பிறகு எந்த பிரச்சினையும் இல்லாமல், காதல் நன்றாகவே கனிய தொடங்கியது இருவருக்குள்ளும்.....

இந்த இணைப்பு அகிலனைத்தான் மேலும் கோபப்படுத்தியது.... எப்படியேனும் இருவரையும் பிரிக்கவேண்டும் என்பது அவன் கணக்கு.... அதற்கு காரணம் பிரபாவோடு தான் பழையபடி நெருக்கம் காட்ட சாந்தனை பிரிக்க வேண்டும், இரண்டாவதாக சாந்தனை பழிவாங்குவதற்காக.... இரண்டு முறையும் சாதாரண கேண்டீனில் வேலை செய்யும் ஒருத்தன் தன்னை அடித்ததை அவனால் பொறுக்கமுடியவில்லை.... அதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க திட்டங்களை தீட்டினான் அகிலன்.... அதில் ஒரு மாபெரும் திட்டம்தான் பிரபாவை சாந்தனிடம் அப்படி கறாராக பேச சொன்னது.... சாந்தன் எப்படியும் பிரபாவை சந்திக்க மாட்டான் என்ற நம்பிக்கையில் அகிலன் தீட்டிய திட்டம், அதிர்ச்சிகரமாக இருவரின் இணைப்பிற்கு வழிவகுத்தது..... ஆனால், அந்த அகிலனின் யோசனைதான் பிரபாவுக்கு அகிலன் மீது இன்னும் கரிசனம் வர காரணமாக இருந்தது.... பல நாட்களாக எவ்வளவோ கூறியும் தன்னை ஏற்காத சாந்தன் அகிலனின் யோசனைப்படி செய்ததால் வழிக்கு வந்துவிட்டதால், அகிலனை சானக்கியனாகவே கருத தொடங்கினான்.... இந்த நம்பிக்கையை அகிலன் நன்றாக பயன்படுத்த தொடங்கினான்.... அடுத்தடுத்த நாட்களும் அகிலனின் வில்லங்கம் நடந்தபடியே இருந்தது.... குறிப்பாக சாந்தனும் பிரபாவும் ஒன்றாக பேசிக்கொண்டிருக்கும்போது, அதில் இடைபுகுந்து பிரபாவிடம் அதிகம் உரிமை உள்ளவன் போல காட்டிக்கொண்டது சாந்தனை இன்னும் எரிச்ச்சலாக்கியது..... அதுவும் பிரபாவை அவன் தொட்டு தொட்டு பேசுவது சுத்தமாக பிடிக்கவில்லை சாந்தனுக்கு.... வெகுநாட்களாக அதைப்பற்றி பேசவேண்டாம் என்று தயங்கினாலும், அன்று பேச முடிவெடுத்தான் சாந்தன்.... வழக்கம்போல தன் அறையில் பிரபாவுடன் பேசிக்கொண்டிருந்தான் சாந்தன்.... சாந்தனின் மடியில் படுக்க முயன்றபோது விலக்கி விட்டான் பிரபா.... “என்னடா? ஏன்?... நான் உன் மடில படுக்க கூடாதா?... நமக்குள்ள வேற எதுவும் இப்போ வேணாம்னு சொன்னதால நானும் அதைப்பத்தி கேட்டதில்ல உன்கிட்ட.... இதுக்கும் ஏன் மறுக்குற?” என்று கொஞ்சம் கோபத்துடனே கேட்டான் பிரபா.... இதுதான் அகிலனை பற்றி பேச சரியான தருணம் என்று நினைத்த சாந்தன், “அதான் உன்ன தொடவும், வெளையாடவும் அகிலன் இருக்கானே, நான் என்னத்துக்கு?” என்றான்....
பிரபாவின் முகம் மாறியது.... கோபத்துடன், “உனக்கு என்னதான் பிரச்சின?.... என்னை இன்னும் நம்ப மாட்டியா நீ?... அதான் சொன்னேன்ல, அவனுக்கும் எனக்கும் இடைல வேற ஒன்னுமில்லன்னு.... வேணும்னா சீதை மாதிரி உன்ன நம்ப வைக்கிறதுக்கு தீக்குளிக்கிறேன், அப்பவாச்சும் நம்புறியா?” என்று கனலாக வார்த்தைகளை தெரித்தான்.....
இதை எதிர்பார்க்காத சாந்தன், “ஐயோ அப்டிலாம் நான் உன்ன நினைக்கலடா.... அவன் மேலதான் எனக்கு நம்பிக்கை இல்ல.... அவனை எனக்கு சுத்தமா பிடிக்கல.... அதான்....” என்று சொல்லும்போதே, அதை இடைமறித்த பிரபா, “இனிமே நீ அகிலனை பத்தி பேசாத.... அவன் எனக்கு ப்ரெண்ட்.... அவனை பிடிக்கலைனா நீ அவன்கூட பேசாம இரு.... ப்ளீஸ், தேவையில்லாம பிரச்சினைய நீயே உருவாக்காதடா” என்று சொன்னவன் எழுந்து சென்று படுக்கையில் சுவரை பார்த்தவாறு படுத்தான்.... பிரபாவிற்கு இதை எப்படி புரியவைப்பது என்று சாந்தனுக்கு சுத்தமாக புரியவில்லை.... இருந்தாலும் இதைப்பற்றி மேலும் பேசி, அடுத்த சண்டைக்கான அத்தியாயத்தை தொடங்க விரும்பாமல், சமாதானப்படலத்தை தொடங்கினான்.... படுத்திருந்த பிரபாவின் அருகே அமர்ந்த சாந்தன், பிரபாவின் தலைமுடியை வருடியபடி, அவன் தலையை எடுத்து தன் மடியில் வைத்தான்.... பிரபாவின் கோபமெல்லாம் தண்ணீரில் விழுந்த நெருப்பாய் காணாமல் போனது..... இருந்தாலும் உடனே அதை காட்டிக்கொள்ளாதவனாக “ஏன், வேற எதுவும் சண்டைபோட டாபிக் கிடைக்கலையா உனக்கு?” என்றான் பிரபா....
சிரித்த சாந்தன், “இருக்கு.... ஆனால், அந்த சண்டையை உன்னால தாங்கமுடியுமான்னு தெரியலையே” என்றான்....
“பரவால்ல.... அதான் ஆரமிச்சுட்டியே சொல்லிடு..... என்ன சண்டை?... யாரை பத்தி?” என்று பிரபா சொல்லிக்கொண்டிருக்கும்போதே பிரபாவின் இதழோடு இதழ் பதித்தான் சாந்தன்... பேச்சு, மூச்சு, அவன் ரூமில் இருந்த வாச்சு கூட நின்றுவிட்டது..... பிரபா ஸ்தம்பித்தான்..... படுத்தபடியே சாந்தனின் உதடுகளை கவ்வி இழுத்தான்.... பல் பட்டு சாந்தன் வலியால், “ஆ... ஆஹ்” என்று அலறினான்.... அதை பொருட்படுத்தவெல்லாம் பிரபாவுக்கு தோன்றவில்லை.... நன்றாக தன் நாவினை உள்ளே செலுத்தி சாந்தனின் அமுதத்தை பருகினான்.... இப்போது சாந்தன் பிரபாவின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டான்..... இன்னும் இன்னும் திகட்ட திகட்ட இரண்டு உதடுகளையும் மாறி மாறி சுவைத்தான்.... இது எத்தனை காலத்து ஏக்கம், சும்மா விடுவானா பிரபா.... அப்படியே பிரபா எல்லைகளை மறந்த பாகிஸ்தான் தீவிரவாதி போல கழுத்தை நோக்கி விரையவே, இந்திய ரானுவமாய் சாந்தன் படாரென்று தள்ளிவிட்டான் பிரபாவை..... ஏக்கப்பார்வை பார்த்த பிரபாவை பார்த்த சாந்தன், “போதும்பா..... இது இப்போதைக்கு போதும்.... அடுத்தகட்ட வேலைகளை அதுக்கான நேரம் வர்றப்போ பாத்துக்கலாம்” என்றான்...
“ப்ளீஸ்டா.... கொஞ்சோண்டு, இன்னைக்கு மட்டும்டா .... ஒரே ஒரு பீஸ் குளோப் ஜாமுன் மட்டும்டா” என்று கொஞ்சலாய் கெஞ்சினான் பிரபா....
“நீ இன்னைக்கு சாப்பிட்ட சுவீட்டே போதும்.... அதிகமா சாப்பிடக்கூடாது” என்று சாந்தன் சொல்லி சிரிக்கயில்தான் பிரபா சாந்தனின் உதடுகளை கவனித்தான்.... ரத்தம் லேசாக வழிந்தது.... பதறியவனாக, “என்னடா ரத்தம் வருது?” என்று அவன் உதடுகளில் கைவைத்தான் பிரபா....
“டேய் மனுஷனா நீ?.... மாடு புல்லு மேயுற மாதிரி மேஞ்சுட்டியே?.... ரத்தமே வந்துடுச்சு.... இதுல ஒன்னும் தெரியாத மாதிரி கேள்வி வேற கேக்குறியா?.... போயி அதுல இருக்குற காட்டனை எடு?” என்றான் சாந்தன்....
பஞ்சை கையில் வைத்த பிரபா, “இவ்வளவு ரத்தத்தை வேஸ்ட் ஆக்கனுமா சாந்தன்?” என்றான்...
“ஏன்? என்ன பண்ணலாம்னு இருக்க?” என்று புரியாமல் கேட்டான் சாந்தன்....
பதிலேதும் கூறாமல் காயப்பட்ட உதட்டை தன் உதட்டால் துடைத்துவிட்டான்.... பிரபாவை தள்ளிவிட்ட சாந்தன், “டேய்.... என்னடா ரத்தக்காட்டேரி மாதிரி இப்டிலாம் பண்ணுற?” என்று சிரிக்க எப்படியோ அன்றைய சண்டை இருவருக்குள்ளும் இணைப்பை ஒருபடி மேலே உயர்த்தியது என்று சொன்னால் அது மிகையாகாது......


2 comments:

  1. vijay anna entha kathaya nan mullusa padikala.but first three paragraphlayae ennoda frnda enaku ghapaka padithiruchu.oru gaya erunthalum sex thandi frndnra uravu mattum vaenunu ninakaraen.but ....

    ReplyDelete
  2. eppa kathaya fulla paduchataen.akilan character en frnda ghapaka paduthudu.eppeavum avanta frndchp mattum than etir pakkuraen....bt avan enkoda paesurathu ella.enna reasonu purila....ellam nanmaikae..

    ReplyDelete