Blogger Widgets

சமீப இடுகைகள் -

♥உங்கள் விஜயின் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி!.. நன்றி!.. நன்றி!.. கருத்திட்டு களம் விலக தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்...♥

Friday, 10 August 2012

கே உறவு தவறானது ஏன்?

இப்போது நம் கே பற்றிய புரிதலும், மனநிலையும் தெளிவாக இருந்தாலும், நாம் கடந்து வந்த பாதையில் நாம் கேள்விப்பட்ட விஷயங்கள் நம்மை பதின் வயதுகளில் குழப்பி இருக்கும்.... அப்படி நான் சந்தித்த ஒருசில பதின்வயது நிகழ்வுகளையும் காலம் மாறும்போது உண்டான என் மனநிலை மாற்றத்தை பற்றியும் இப்போ இங்கே கூறப்போகிறேன்..... அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.... அரும்பிய மீசையும், குழம்பிய மனதும் தொடங்கிய வயது...... செக்ஸ் பற்றிய அரைகுறை புரிதலோடு, எல்லாம் தெரிந்ததைப்போல திரிந்த நாட்கள்.... அப்படி ஒருநாள் பள்ளிக்குள் நுழைந்தது முதல் பலரும் ஆங்காங்கே கிசுகிசுத்து கொண்டிருந்தனர்..... ஏதோ, ஒரு விஷயம் மாட்டி இருக்கு போல என்று நினைத்த நான் அங்கு நின்ற என் சக வகுப்பு தோழனிடம் , "என்னடா? என்ன பேசிட்டு இருக்கீங்க?" என்றேன்..... அவன் என் காதருகே மெல்ல வந்து , "நம்ம கெமிஸ்ட்ரி சார் இருக்கார்ல, அவர் ஹோமோ'வாம்டா" என்றான்..... "ஓ அப்படியா?" என்று அவனிடம் கூறிவிட்டு எவ்வித அதிர்ச்சியும் காட்டாமல் நான் சென்றது என் வகுப்பு தோழனுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்.... ஆனால், நான் அமைதியாக போனதுக்கு காரணம், அவன் சொன்னதற்கான அர்த்தம் புரியாததால்தான்னு இப்போவரை யார்கிட்டயும் சொல்லல..... ஆனாலும் அந்த பேச்சு பல இடத்திலும் பிரபலமாக இருக்கவே, என் செக்ஸ் குருவிடம் சென்றேன்..... அவனும் என் வகுப்புத்தோழன் தான்.... செக்ஸ் பற்றி என்னைப்போன்ற என் நண்பர்கள் பலருக்கு பாலபாடம் எடுப்பது அவன்தான்..... அவன் அண்ணன் யாருக்கும் தெரியாமல் வாங்கி வைத்திருக்கும் செக்ஸ் புத்தகங்களை அவருக்கே தெரியாமல் படித்து,  அடுத்தநாள் பள்ளியில் அதை "மதன்ஸ் திரைப்பார்வை மதன்" ரேஞ்சுக்கு விமர்சனம் செய்வான்...... எங்கள் பலநேர உணவு இடைவேளைகள் அவன் கதைகளில்தான் கழிந்திருக்கிறது..... அவனை நான் ஒருவாராக தேடிக்கண்டுபிடித்தேன்...... நான் எதிர்பார்த்ததைப்போலவே எனக்கு முன்னால் பலரும் கெமிஸ்ட்ரி சாரின் விஷயத்துக்கு அர்த்தம் புரியாமல் அவனை சுற்றி அமர்ந்திருந்தனர்...... "அப்பாடா!.... என்னைப்போலவே இதுக்கு அர்த்தம் தெரியாமல் பலபேர் இருக்காங்க" என்ற சந்தோஷத்தில் அவன் அருகில் சென்றேன்.... என்னை பார்த்ததும் புன்னகைத்த என் குரு, அவன் அருகில் இருந்த இடத்தில் அமருமாறு சைகை காண்பிக்கவே நானும் ஜோதியில் ஐக்கியமானேன்..... எங்கள் கெமிஸ்ட்ரி சார் ஒரு கே என்பதை அவன் ஒரு திரைப்படமாகவே எங்கள் கண்முன்னால் காண்பித்தான்..... "நம்ம ப்ளஸ் டூ சதீஷ்  அண்ணன் இருக்கார்ல, அவர் நைட் ஸ்டடி'க்காக ஸ்கூலுக்கு வந்திருக்கார்..... படிச்சு முடிச்சுட்டு நம்ம சவந்த் கிளாஸ் ரூம்ல படுத்திருக்கார்.... அந்த நேரம் பார்த்து நம்ம கெமிஸ்ட்ரி சார், நம்ம சதீஷ் அண்ணன் பக்கத்துல படுத்து......................" என்றவாறே தன் கண்முன்னால் நடந்த விஷயம் போல விவரித்ததை கண்கொட்டாமல் கேட்டுக்கொண்டிருந்தோம் நாங்கள்..... இத்தகைய விஷயங்கள் எனக்கு ரொம்பவே புதிதாக இருந்தது.... அன்றைக்கு மட்டுமல்லாமல் இந்த கெமிஸ்ட்ரி சார் கதை பல நாட்கள் சுவாரசியம் குறையாமல் பள்ளியில் ஆங்காங்கே கிசுகிசுக்கப்பட்டது..... இதை நான் ஆரம்பத்தில் நம்ப மறுத்தாலும் ஒருநாள் என் குரு, எங்கள் முன்னால் அந்த சதீஷ் அண்ணனிடமே இதை கேட்டான்.... அவனும் இதை உண்மை என்று சொல்லவே, அன்றுமுதல் குரு சொன்னதை வேதவாக்காக கருத தொடங்கினோம்.....  சிறு கதையாக தொடங்கிய கெமிஸ்ட்ரி சார் கதை, தொடர் கதையாக குருவைப்போல பலராலும் வழிமொழியப்பட்டது..... ரெக்கார்ட் நோட் கையெழுத்து வாங்கப்போன அவர் ரூமுக்கு போன ப்ளஸ் ஒன் படிக்கும் ராஜெசையும் அவரையும் இணைத்து கதையை கிளப்பிவிட்டதும் இந்த குருதான்.... பின்னாளில் அந்த ராஜேஷ் அழுதபடியே அதை மறுத்தபோதுதான், குருவும் தன் கதையை மாற்றிக்கொண்டான்..... இந்த கதைகள் மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், எங்கள் ஆசிரியர்கள் மத்தியிலும் பேச்சாக இருந்தது..... தொழில் போட்டியின் காரணமாக பல ஆசிரியர்களும் எங்கள் முன்னே எங்கள் கெமிஸ்ட்ரி சாரை பற்றி தவறாக பேசத்தொடங்கினார்...... அப்படி ஒருநாள் பள்ளியில் இன்ஸ்பெக்சன் நடக்க இருந்த நாளில் எங்கள் பள்ளி பாத்ரூமிற்கு வெளியே ஒரு கூட்டம்.... அருகில் சென்று பார்த்த நான் அதிர்ந்தேன்.... அங்கே "கெமிஸ்ட்ரி ஒரு ஹோமோ பு***" "சதீஷ், ராஜேஷ், அடுத்த இலக்கு யார்?" இப்படி பாத்ரூம் சுவர் முழுக்க எழுதப்பட்டிருந்தது.... இன்ஸ்பெக்சன் வருகிறார்கள் என்பதால் முதல்நாள்தான் வெள்ளை அடிக்கப்பட்ட சுவற்றில் அப்படி யாரோ எழுதி வைத்திருந்தனர்..... பின்னர், அதை சுண்ணாம்பு பூசி யாருக்கும் தெரியாமல் அழித்தனர்....அதுவரை ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் மட்டும் இருந்த பேச்சு, பின்பு ஆயம்மா, வாட்ச்மென், டிரைவர் வரைக்கும் போய்விட்டது...... கெமிஸ்ட்ரி சார் தனிப்பட்ட முறையில் ரொம்ப நல்லவர்.... வாங்கும் சம்பளத்தைவிட அதிகமாகவே மாணவர்களுக்கு சொல்லிக்கொடுக்கும் ஒரு ஆசிரியர்..... தனிவகுப்பு எடுப்பார்.... அதனாலே மாணவர்களுக்கு அவர் மீது கோபம் இருந்தது..... ஆசிரியர்களுக்கும் அவர் மீது தொழில் போட்டி இருந்தது..... இத்தகைய காரணங்களால் அவரை பற்றிய கட்டுக்கதைகள் அதிகமாகவே பெருகியது..... சதீஷ் பற்றிய கதை தவிர மற்ற அனைத்தும் அவர் மீது சுமத்தப்பட்ட பொய் கரைகள்..... அத்தகைய நிகழ்வுகளுக்கு பிறகு அவர் யாரிடமும் பேசுவதையே குறைத்துக்கொண்டார்..... ஏளன பேச்சுகள் அவர் காதுகளில் விழுந்தாலும், கண்டுகொள்ளாமல் சென்றுவிடுவார்..... பல நேரங்களில் அவர் அறையில் அவர் அழுததை நான் கண்டிருக்கிறேன்..... இப்போதுதான் அவர் எவ்வளவு கொடுமையை அனுபவித்திருப்பார் என்று உணர முடிகிறது..... இந்த சம்பவம் நடந்த சில மாதங்களில் எங்கள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வேறு ஊரில் வேறு பள்ளியில் சேர்ந்துவிட்டார் என்ற தகவல் தெரிந்தது..... அவர் சென்ற பிறகுதான் அந்த கட்டுக்கதைகளும் கொஞ்சம் குறைய தொடங்கியது.... முதன்முதலாக நான் ஒரு கே'வை பற்றி தெரிந்துகொண்டது அப்போதான்.... இத்தகைய நிகழ்வே பிற்காலத்தில், என் அடையாளத்தை மறைத்து வாழ நிர்பந்தித்தது...... கெமிஸ்ட்ரி சாருக்கு பிறகு கே பற்றி நான் கேள்விப்பட்டது என் பதினொன்றாம் வகுப்பில்......
பதினொன்றாம் வகுப்பின் இறுதி நாட்கள்.... பன்னிரண்டாம் வகுப்பின் மன அழுத்தம் தொடங்கப்ப்கும் நாட்கள்..... அப்போதுதான் எனக்குள்ளும் ஓரின உணர்வுகள் கிளர்ச்சி அடைந்திருந்த நாட்கள்..... எங்கள் டியூசன் பக்கத்தில் ஒரு உணவகம் இருக்கும்..... எங்கள் டியூசன் மாடிப்படிகளில் ஏறி மாடிக்கும் செல்லும்போது அந்த உணவகத்தினை முழுமையாக பார்க்கலாம்..... புதிதாக தொடங்கப்பட்ட உணவகம் என்பதால் கூட்டம் எப்போதும் அங்கே அதிகமாகவே இருக்கும்..... உணவகத்தின் முற்பகுதியிலேயே சுவர் ஓரத்தில் சைனீஸ் வகை உணவுகள் தயார் செய்யப்படும்.... நூடுல்ஸ், ப்ரைட் ரைஸ், சிக்கன் வகைகள் என்று அங்கு செய்வார்கள்.... அதை செய்பவர் ஒரு நேபாளி.... பார்ப்பதற்கு நம் "ஏழாம் அறிவு" படத்தின் வில்லன் போலவே இருப்பான்.... என்னைவிட ஒன்றிரண்டு வயது அதிகம் இருக்கலாம்.... ஒரு டி ஷர்ட்டும், சாட்சும் போட்டிருப்பான்..... பல நாட்கள் அவனை சைட் அடித்திருக்கேன்..... அவன் அறியாமல் சைட் அடித்திருக்கேன்..... ஒருநாள் அந்த உணவகத்தை பற்றி என் நண்பர்களிடம் டியூசனில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு நண்பன் என்னிடம் சொன்ன விஷயம் அதிர்ச்சியாக இருந்தது.... ஆம், அந்த நேபாளி மாஸ்டர் ஒரு கே என்பதுதான் அந்த செய்தி.... நிச்சயமாக பார்ப்பவர்களை கொஞ்சம் கிறங்கடிக்கும் அழகன் அவன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.... அதனால், என் நண்பன் சொன்னதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை..... மேலும், அவனைத்தேடி பல இளைஞர்கள் வருவதை நானே பார்த்திருக்கிறேன்..... அதிகம் யாருடனும் பேசாமல் தன் வேலையை பார்ப்பான், வித்தியாசமாக பலர் அவனிடத்தில் வந்து ரகசியம் பேசுவதை பார்த்திருக்கிறேன்..... ஒரு விடுமுறை தினத்தில் என் டியூசன் மாடியில் நின்று நான் பார்த்தபோது, ஒரு முத்த காட்சியை நானே பார்த்திருக்கிறேன்..... .  அந்த உணவகத்தின் உரிமையாளர் மகனுடன், இந்த நேபாளி அப்படி செய்ததை நான் பார்த்ததும் அவசர அவசரமாக விலகி ஓடினார்கள் இருவரும்.... நான் பார்த்ததை இருவரும் பார்த்துவிட்டனர்.... அன்றிலிருந்து என்னை பார்த்தால் அசடு வழிவார் அந்த உணவாக உரிமையாளரின் மகன்.... ஆனால், இந்த நேபாளிதான் என்னை குழப்பினான்..... காரணம், என்னை எப்போது அவன் பார்த்தாலும் ஒரு கண் அடித்து, மெல்ல சிரிப்பான்..... அந்த செயலுக்கும், சிரிப்பிற்கும் எனக்கு இன்றுவரை அர்த்தம் புரியவில்லை.... அதனாலேயே அந்த உணவகத்திற்கு நான் செல்வதையே தவிர்ப்பேன்..... ஒருமுறை வேறு வழியின்றி அங்கு நண்பனுடன் சென்றேன்.....  எப்போதும் சமையல் செய்யும் இடத்தை விட்டு நகராத அந்த நேபாளி, என்னிடம் நெருங்கி நெருங்கி பரிமாறினான்..... எனக்கோ உள்ளூர பயம்..... அதன்பின்பு, நான் அவனை அவனுக்கே தெரியாமல் பார்ப்பேன்.... அதை எப்படி அவன்  கண்டுபிடிப்பானோ தெரியாது, சரியாக திரும்பி பார்ப்பான், கண் அடிப்பான், சிரிப்பான்..... மனதிற்குள் பயம் இருந்தாலும், நானும் அதை ரசித்தேன்.... ஆனால், அதை தாண்டி செல்ல எனக்கு தைரியம் இல்லை.... அவன் என்னை நோக்கி வந்தாலும், விலகி ஓடிவிடுவேன், அல்லது நண்பர்களுக்கு மத்தியில் நின்ருகொள்வேன்..... அவன் மனதிற்குள் என்ன நினைக்கிறான் என்று எனக்கு புரிந்தாலும், தயக்கமும் பயமும் அவனிடம் என்னை விலக்கியே வைத்தது...... பின்னர் பன்னிரண்டாம் வகுப்பு வந்ததும், டியூசன் போவதை நிறுத்திவிட்டேன்..... நேபாளியை பார்த்தே மாதக்கணக்கில் ஆகிவிட்டது..... ஒருமுறை என் நண்பர்களிடத்தில் எதேச்சையாக உணவுகளை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது என் நண்பன் ஒருவன், "சிவா ஹோட்டல்ல நூடுல்ஸ் நல்லா இருக்கும்டா..... அந்த நேபாளி போனதுலேந்து இப்போ எதுவுமே அங்க நல்லா இல்லையாம்" என்றான் அவன்..... நீண்ட நாட்களுக்கு பிறகு நேபாளியின் கண் சிமிட்டலும், சிரிப்பும் எனக்கு நினைவில் வரவே, கொஞ்சம் ஆர்வமாக அவனிடம் ,"ஏண்டா அவன் இப்போ அங்க இல்லையா?" என்றேன்..... "அவன் ஹோமோ டா..... எயிட்ஸ் வந்திடுச்சாம், இப்போ அவன் செத்துட்டான்னு சொன்னாங்க" என்றான் அவன்.... தூக்கி வாரி போட்டது எனக்கு..... "எயிட்ஸா?" என்று வாயை பிளந்தேன்.... நூழிலையில் தப்பித்ததை எண்ணி கொஞ்சம் ஆறுதல் ஆனேன்... அவனுக்கு எயிட்ஸ் என்றால் உணவகத்தின் உரிமையாளர் மகனுக்கும் இப்போ வந்திருக்கணுமே, அவன் நல்லா இருக்கானே என்று நினைத்தேன்.... இருந்தாலும் அதைப்பற்றி பெரிதாக நான் அலட்டிக்கொள்ளவில்லை.... தப்பித்ததை எண்ணி கொஞ்சம் நிம்மதி மட்டும் அடைந்தேன் .... பின்னர் நான் கல்லூரி சென்று, மூன்று வருடங்களுக்கு பிறகு ஒருமுறை குடும்பத்தோடு ஒரு உணவகத்திற்கு சென்றோம்.... (இது வேறு உணவகம்)..... கை கழுவ செல்லும் வழியில் சமையல் அறையை எதேச்சையாக நோட்டமிட்டபோது அதிர்ந்தேன்..... அங்கு நூடுல்ஸ் போட்டுக்கொண்டிருந்தான் அந்த நேபாளி..... ஆனாலும் ஒரு குழப்பம், பொதுவாக நேபாளிகள் எல்லோரும் ஒரே தோற்றத்தில் இருப்பார்கள்.... அப்படி யாரையோ பார்த்து அவன் என்று நினைக்கிறேன் என்று எனக்கு நானே பதில் கூறிவிட்டு கை கழுவி வரும் வழியில் என்னை அவன் பார்த்துவிட்டான்..... என்னை பார்த்ததும் அதே கண் சிமிட்டல், அதனை தொடர்ந்த சிரிப்பு..... ஒரு நிமிடம் இதயமே நின்றுவிட்டது..... என்ன காரணத்துக்காகவோ திடீரென்று காணாமல் போன நேபாளி, கே என்ற ஒரே காரணத்துக்காக, அவன் மீது எயிட்ஸ் பழியும், இறந்துவிட்டான் என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது..... பதிலுக்கு நானும் சிரித்துவிட்டு (முதல் முறையாக அவனை பார்த்து இப்போதான் சிரித்தேன், ஆனால் எதுவும் பேசவில்லை) டேபிளுக்கு போனேன்....  ஊருக்குள் நேபாளியை பொறுத்தவரை இப்போதும் இறந்துவிட்டாம் என்றுதான் சொல்கிறார்கள்...... இறந்ததற்கு காரணமாக அவன் கே பழக்கத்தைதான் சொல்கிறார்கள்..... என் கெமிஸ்ட்ரி சாரும், இந்த நேபாளி மாஸ்டரும் தாங்கள் கே என்பதால் ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு நாளும் இந்த சமூகத்தால் பழிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள்.... இவர்கள் இருவரும் கே பற்றி பேசினால், இப்போதும் என் கண் முன்னால் வந்து போகிறார்கள்....
இதுவரை கே பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை கூறினேன்..... கே பற்றி நம்மை போன்றவர்களே என்ன நினைக்கிறார்கள்? எப்படி நினைக்கிறார்கள்? என்று பார்ப்போம்..... உண்மையில் பெரும்பாலான ஓரின விரும்பிகள் மற்ற கே'க்களை வெறும் "செக்ஸ் மெஷின்"களாக மட்டும்தான் பார்க்கிறார்கள்.... இதுதான் உண்மையும்.... ஒருவர் கே என்று தெரிந்தாலே, அடுத்த நொடி அவனை எப்போ படுக்கையில் பார்க்கலாம் என்ற எண்ணம்தான் இங்கு தோன்றுகிறது.... இப்போதெல்லாம் நான் ஆர்குட் வரும்போது "invisible" ஆக இருப்பதற்கு காரணமே பலரும் செக்ஸ் நோக்கத்துடனே இருப்பதால்தான்..... ஏன் என்றால், "hi, u u frm?" "ur likes" "asl" "do u hav place?"...... இதைத்தவிர வேறு எதைப்பற்றியும் பேச யாருக்கும் மனம் இருப்பதில்லை.... ஆச்சரியமாக சிலர் நலம் விசாரிப்பார்கள்.... அவ்வளவுதான்..... இந்த பரஸ்பர உரையாடல்களுக்கு பிறகு படுக்கைக்கு போக நேரமும் இடமும் குறித்துவிடுகிரார்கள்...... இதுதான் இப்படி என்றால் எல்லாமும் முடிந்தபிறகு இருவரும் விடைபெறும் முன் ஒரு சம்பிரதாயத்துக்கு கூட நன்றி சொல்வதில்..... அடுத்து சூடேறி காமம் தேவைப்படும் நேரம்தான் மீண்டும் அவன் நினைவுக்கு வருகிறான்...... புகைப்படம் கேட்டு வாங்கும் நபர்கள், பார்த்தபின் பதிலே சொல்லாமல் போய்விடும் அதிநவீன நல்ல பழக்கமும் இங்கு இருப்பதை நொந்து சில நண்பர்கள் சொல்வதை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது..... இங்கு யாருக்கும் நல்ல மனம் இல்லையோ என்று ஒருசில நேரங்களில் தோன்றுகிறது..... நல்ல குணம் யாருக்கும் தேவைப்படுவதில்லையோ என்று பல நேரம் யோசிப்பதுண்டு.... இதனால்தான் என்னவோ பலருக்கும் கே உறவு என்பது காதலாக மலரவோ, வாழ்க்கையில் நிலைக்கவோ வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது போலும்.... சில மாதங்களுக்கு முன்புவரை நானும் அப்படித்தான் நினைத்தேன்..... இங்கு கதை எழுத வந்திருக்காவிட்டால், பல நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டாமல் இருந்திருந்தால் நிச்சயம் நானும் அந்த எண்ணத்தில்தான் இப்போதும் இருந்திருப்பேன்.....கே நட்பு எவ்வளவு முக்கியம் என்பதும், கே காதல் எந்த அளவிற்கு சாத்தியம் என்பதும் இங்கு நான் கண்டேன்.... என் நெருங்கிய நண்பனிடமோ, உறவுகளிடமோ சொல்ல முடியாத, பகிர முடியாத விஷயங்களை இந்த நண்பர்களிடத்தில் பகிர்ந்துகொண்டேன்.... பகிர்ந்துகொண்டும் இருக்கிறேன்..... இவ்வளவு காலம் மனதிற்குள் அடைபட்டிருந்த சோகங்களை இத்தகைய நண்பர்களிடத்தில் பகிரும்போதும், பேசும்போதும் நிறைய மனமாற்றங்கள் நடப்பதை என்னால் உணரமுடிகிறது.... ஆனால் இந்த குழுமத்தை தாண்டி கே நட்பு அதிகம் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது..... படுக்கையை நோக்கியே பார்வைகள் போவதை என்னால் ஏற்கமுடியவில்லை..... கே உறவில் மட்டும்தான் செக்ஸ் பற்றிய சிந்தனைகள் அதிகம் உள்ளதோ என்று தோன்றுகிறது...... பார்க்கும் பார்வைகள் அனைத்துமே காமப்பார்வையாக இருக்கிறதாக தோன்றுகிறது...... ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையில் கொண்ட உடலுறவுகளை எண்ணிக்கையாக சொன்ன ஒரு இழையை நான் பார்த்தேன்.... அதில் சொன்ன பெரும்பாலானவர்கள் குறைந்தபட்சம் ஐம்பது முறை உறவு கொண்டதாக சொல்கிறார்கள்..... நானும் ஒன்னும் ராமன் இல்லை.... அப்படி இருந்தவன்தான்.... ஆனால், இதை எல்லோரும் உணர்வார்களா? உணர விழைவார்களா? என்பது சந்தேகம்..... மனம் விட்டு அத்தகைய நபர்களிடம் பேசினாலே, இந்த நட்பில் உள்ள ஆழம, வீரியம் , வலிமை எல்லாம் நமக்கு புரியும்.... ஆனால், அதை புரிந்துகொள்ளும் பக்குவமும், மனநிலையும் இங்கு இருக்கிறதா? என்றால் அது பெரிய கேள்விக்குறிதான்..... ஸ்ட்ரைட் நபர் ஒருவரால் திருமணம் வரை விர்ஜினாக இருக்க முடிகிறது, பெரும்பாலும் அப்படி இருக்கிறார்கள்.... ஆனால் கே உறவில் நாட்டமுள்ள ஒருவன் நிச்சயம் பதின் வயதை தாண்டும் முன்னரே விர்ஜினிட்டி'யை இழந்துவிடுகிறான்..... சுகம் கண்ட உடலும் மனமும் அதை மீண்டும் மீண்டும் ருசிக்க தூண்டுகிரதன் பயனாக இத்தகைய சீர்கேடுகள் கே உறவில் நடக்கின்றன...... சரி, கே நட்பின் அவசியத்தை பார்த்தோம்..... கே காதலின் சாத்தியத்தை பற்றியும் இங்குதான் நான் பார்த்தேன்..... இங்குள்ள சில நண்பர்களின் காதலை பற்றி இங்கு சொல்லியாக வேண்டும்.....
என் கதைகளின் மூலம் அறிமுகமான நண்பர்களின் காதல்கள் எனக்கு அந்த பாடத்தை கற்றுத்தந்தது.... முதலில் இங்குள்ள நண்பர் ஒருவரின் காதல் என்னை புருவத்தை உயர்த்த வைத்தது.... தானும் தன் காதலரும் பதினான்கு வருடங்களாக காதலித்து வருவதாக கூறினார்.... குடும்ப நிற்பந்தத்தினால் திருமண வாழ்க்கையை ஏற்றுக்கொள்ளாமல் தன் காதலனுடன் வாழ்ந்து வரும் அந்த நண்பருக்கு வயது முப்பதை தாண்டிவிட்டது..... என் கதைகளில் மட்டுமே சாத்தியம் என்று நான் நினைத்த ஒன்றை தன் வாழ்க்கையில் நடைமுரையாக்கி இருக்கிறார் அந்த நண்பர்.... முதலில் அவர் காதலுக்கும், அடுத்து அவர் துணிச்சலுக்கும் ஒரு சபாஸ்......  அடுத்த நண்பரின் காதல் கொஞ்சம் வித்தியாசமானது..... இங்கு நிறைய பேர் தத்தமது திருமணம் வரை காதலித்துவிட்டு பின்னர், வருத்தத்தோடு காதலை துறப்பது வாடிக்கை..... பலரது வாழ்விலும் இதுதான் எழுதப்படாத நியதி..... ஆனால் நான் சொல்லும் இந்த இரண்டாம் நபரின் காதல் திருமண பந்தத்திற்கு பின்பும் தொடர்கிறது.... குடும்ப சூழலாலும், நிற்பந்தங்களாலும் திருமணம் செய்துகொண்ட இந்த நண்பர், திருமணத்திற்கு பின்பும் அவர் காதலனுடன் காதலித்து வருகிறார்....இருவருக்கும் திருமணம் முடிந்து, குழந்தைகளும் இருக்கிறது.... ஆனாலும், காதல் இன்னும் குறையவில்லை என்று கூறுகிறார்..... "இப்போதெல்லாம் தோள் சாய்ந்து பேசவும், பகிரவும் தான் அதிகம் இந்த காதல் தேவைப்படுகிறது... உடல் சுகம் மட்டுமே காதல் இல்லையே" என்று கூறுவதை இன்னும் வித்தியாசமாகத்தான் பார்க்கிறேன்..... அடுத்து மூன்றாவது நபரின் காதல்..... இவர் ரொம்பவே வித்தியாசமானவர்.... பேஸ்புக்கில் அறிமுகமான ஒரு நண்பரை காதலிக்கிறார்.... அவர் கே'யா அல்லது ஸ்ட்ரைடா? என்று இன்னும் புரியாமல் தவிப்பது நிஜமாகவே பாவமாக இருக்கிறது.... இவர் காதலை அந்த நபரிடம் தெரிவித்துவிட்டார்.... பிடிக்கவில்லை என்றால் விலகி இருக்கலாம், பிடித்திருந்தால் எற்றுக்கொண்டிருக்கலாம்.... ஆனால், எந்த பதிலும் சொல்லாமல் இருக்கிறாராம் அவர் நண்பர்.... "அவரை விட்டுட்டு அடுத்தவரை பார்க்கலாமே" என்று நான் கூறியபோதும், இன்னமும் அந்த காதலரை எண்ணியே தினம் தினம் புலம்புகிறார்.... இது சரியா? தவறா? என்பதெல்லாம் அவர் கவலை இல்லை, வாழும் வரை அவனுடனே வாழவேண்டும் என்பது மட்டுமே அவர் நோக்கம்.... காதல் வெற்றிபெற்றுவிட்டால் எத்தகைய எதிர்ப்பையும் மீறி அவனுடனே மீதி வாழ்வை அற்பநிப்பதாகவ் அவர் கூறியது அவர் மனதார கூரியதாகவே இருந்தது......  அடுத்தவர் நான்காவது நபர் , இறுதி நண்பர் இதுவரை தான் விர்ஜின் என்று சொன்னதை இப்போவரை ஆச்சரியமாகத்தான் பார்க்க முடிகிறது..... காதளித்துக்கொண்டிருக்கிறார் ஒருவரை.... இதுவரை இருவருக்குள்ளும் உடல் சார்ந்த பிணைப்பு நடக்கவில்லை என்று அவர் சொல்வது இன்னும் ஆச்சரியமாக உள்ளது.... தன் காதலனுடன் இறுதிவரை ஒன்றாக வாழவேண்டும் என்று அவர் சொல்வது எவ்வளவு தூரம் சாத்தியம் என்று எனக்கு தெரியவில்லை, ஆனாலும் சாத்தியமாகவேண்டும் என்பதுதான் என் எண்ணமும்....  இந்த நபர்களின் காதலும் சூழலும் வேறுவேறாக இருந்தாலும், ஆழ இருக்கும் உணர்வு ஒன்றுதான்.... ஓரின சேர்க்கையில் காதலும் நட்பும் எவ்வளவு முக்கியம், எந்த அளவு சாத்தியம் என்றெல்லாம் நாமாக உணரும்வரை புரியாது.... நான் மேற்சொன்ன நான்கு நபர்களும் யாரோ அல்ல..... இந்த தளத்தில், தினம் தோறும உங்களோடும் என்னோடும் பேசிக்கொண்டும், பழகிக்கொண்டும் , கருத்துகளை கூறிக்கொண்டும், கதை எழுதிக்கொண்டும், இருக்கும் நபர்கள்தான்....  அவர்கள் விருப்பப்பட்டால் அவர்கள் யாரென்று சொல்கிறேன், அதுவரை அவர்களின் காதலை நீங்கள் உணருங்கள்..... கே தவறு இல்லை என்பதை ஆழ்ந்து சிந்தியுங்கள்....  சரி, இத்தோடு இந்த கட்டுரைகளுக்கு கொஞ்சம் இடைவெளி விட்டுவிட்டு, ஒரு கதை எழுதலாம்னு இருக்கேன்......

Sunday, 5 August 2012

கே பற்றிய வரலாற்று ஆய்வுகள்....

கே உறவு பற்றி கொஞ்சம் வரலாற்றை பார்ப்போமா?.....

முதன்முதலில், 1800 முற்பகுதியில் ரிச்சர்ட் வான்க்ராப்டிங் எபிங் இவர்தான் முதன்முதலில் ஓரின சேர்க்கை என்பதும், ஓரின விருப்பம் என்பதும் ஒரு குழந்தை கருவில் இருக்கும்போதே தீர்மானிக்கப்படுகிறது....... அது தவறில்லை..... உடல் குறைபாடும் இல்லை என்றார்.... முதன்முதலில் மக்கள் ஓரின சேர்க்கை பற்றி அறிந்தது இவர் மூலம்தான்...... குரு விட்டு சென்ற பணியை சிஷ்யர் தொடர்வதுதானே மரபு...... அது போல, இவரின் மாணவர் சிக்மன்ட் ப்ராயிடுதான் இதைப்பற்றி மேலும் ஆய்வுகள் செய்தார்.........


வியன்னாவில் இருந்த சிக்மன்ட் பிராயிடு அடிப்படையில் நரம்பியல் மருத்துவர் என்றாலும் உளவியல் ரீதியாகவும் செக்ஸ் பற்றியும் நிறைய சொன்னவர் இவர்.... கனவுகள் பற்றியும், ஆழமான வேட்கைகள் பற்றியும் கூறிய இவர் கருத்துகளைவிட செக்ஸ் பற்றிய கருத்துகள் இவரை விமர்சனத்திற்கு ஆளாக்கியது.... இவர் சொன்ன இரண்டு கருத்துகள்தான் இன்னும் அருமையானது..... ஒன்று, கே உணர்வு என்பது ஒருவரின் சிறுவயது பாலியல் நிகழ்வுகள்தான் தீர்மானிக்கிறது..... இரண்டு, எந்த ஆணும் சூழ்நிலையின் காரணமாக கே'வாக மாறும் வாய்ப்பு உள்ளது...... இந்த கருத்துகளை நான் நிச்சயமாக நம்புறேன்..... இவருக்கு பின்பு பலர் பல கருத்துகளை கூறினாலும், நான் இந்த கருத்துகளை முழுமையா நம்புறேன்.....ப்ராயிடு இருந்த காலத்தில் இன்னொரு செக்ஸ் ஆராய்ச்சியாளரும் ஓரின சேர்க்கை பற்றி எழுதி பரபரப்பானார்...... அவர் வில்லாதி வில்லன் என்றுதான் சொல்லணும்..... கே பற்றிய கருத்துகளில் புரட்சியை இவர் ஏற்படுத்தினார் என்று சொன்னாலும் அது மிகையாகாது.....



அவர்தான் ஹர்ஸ்ஃபீல்ட் .... ஹிட்லர் வாழ்ந்த காலத்தில் அவரைவிட ஜெர்மனியில் 1800 களின் பிற்பகுதியில் ஒருவர் பாப்புலராக வாழ்ந்தார் என்றால் அது இந்த ஹர்ஸ்ஃபீல்ட்தான்..... இவர் அடிப்படையில் TRANSVESTISM எனப்படும் பாதிப்பு இவருக்கு இருந்தது..... அதாவது CROSS DRESSERS என்று நாம் சொல்கிறோம் அல்லவா.... அதேதான்.... இவர் ஓரின பிரியர் என்பதோடு மட்டும் இல்லாமல் இவருக்கு இத்தகைய பாதிப்பும் இருந்தது..... இந்த TRANSVESTISM என்கிற வார்த்தையை இதற்கு சூட்டியதே இந்த ஹர்ஸ்ஃபீல்ட் தான்.... இவர்தான் முதல் முதலில் அரவானிகளுக்கும், ஓரின விரும்பிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உலகிற்கு உணர்த்தினார்..... GAY , transvestism , transgender மூன்றும் வேறு வேறு என்று விளக்கம் கொடுத்தவர் இவர்தான்.... ஆரம்பத்தில் மொத்தமாக செக்ஸ் பற்றி எழுதி பேசி வந்தாலும், பிற்காலத்தில் முழுக்க முழுக்க ஓரின சேர்க்கை பற்றி மட்டுமே கருத்தரங்கங்கள் நடத்தினார்....

அந்த கால கட்டத்தில் ஓரின சேர்க்கை சட்டப்படி குற்றம் என்று ஜெர்மனி அரசு சொன்னது...... ஆனால் கோபமுற்ற ஹர்ஸ்ஃபீல்ட் ஒரு இயக்கத்தை தொடங்கி ஓரின உரிமைகளுக்காக போராடினார்..... அவர் சொன்ன கருத்துகள் பலரையும் யோசிக்க வைத்தது.... அதாவது, "பெரும்பாலானோர் வலது கை பழக்கம் உடையவர்கள் என்பதற்காக , இடது கை பழக்கம் உடையவர்களை குற்றம் சொல்ல முடியுமா?... அதைப்போல பெரும்பாலானவர்கள் அடுத்த பாலினத்தின் மீது நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதற்காக, ஓரின விரும்பிகளை குற்றம் சொல்ல கூடாது.... அது இயற்கை..... அதை ஏற்பதுதான் மனிதத்தன்மை" என்றார்..... எவ்வளவு ஆழமான கருத்து...... இப்போது இந்தியாவில் நாம் பேச முடியாத கருத்தை, ஒரு மனிதர் 1800 களின் இறுதியில் ஹிட்லர் போன்ற ஒருவன் ஆட்சி நடத்திய நேரத்தில் சொல்ல துணிகிறான் என்றால் உண்மையாகவே ஹர்ஸ்ஃபீல்ட் ஓரின விரும்பிகளின் காவல் தெய்வம்தான்.... இவரின் முன்னெடுப்பால் பெர்லின் மற்றும் பல நகரங்களில் கே நண்பர்களுக்கான பார்கள், நடன அரங்குகள், சந்திப்பு இடங்கள் என்று பட்டவர்த்தனமாக நிறுவப்பட்டது..... கிராமத்து இளைஞர்கள் மத்தியில் கூட விழிப்புணர்வு உண்டானது..... ஆனாலும் இதற்கெல்லாம் ஹர்ஸ்ஃபீல்ட் வாங்கிய பரிசுகள் அடிகளும் உதைகளும்தான்....
ஆனாலும் ஓரின சேர்க்கை பற்றி முதன்முதலாக ஒரு திரைப்படம் வெளிவந்தது இவரின் ஆதரவோடு .... யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஐரோப்பிய கண்டம் முழுவதும் ஹிட் ஆனது அந்த படம்.... வீடுகளில் கூட ஓரின சேர்க்கை பற்றி பேசும் அளவிற்கு ஹர்ஸ்ஃபீல்ட் அனைவரையும் தன் வசம் ஆக்கி இருந்தார்..... இதெல்லாம் பார்த்த ஹிட்லர் சும்மா இருப்பாரா?..... ஹிட்லருக்கு பிடிக்காத இருவர் யூதர்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் என்று சொல்வதுண்டு..... அவர் வெறுக்கும் பட்டியலில் ஓரின சேர்க்கையாளர்கள் வருவதற்கு முக்கிய காரணமாக ஹர்ஸ்ஃபீல்ட் இருப்பார் என்றே நினைக்கிறேன்..... ஹர்ஸ்ஃபீல்ட் தாக்கப்பட்டார்..... அவரின் நூலகம் சிதைக்கப்பட்டது.... அவரது ஆதரவாளர்கள் கொல்லப்பட்டனர்...... பின்னர் பிரான்ஸ் சென்ற ஹர்ஸ்ஃபீல்ட் இரண்டு வருடங்களில் இறந்துவிட்டார்..... ஆனால் விதி ஹிட்லரை வேறு வடிவத்தில் ஓரின சேர்க்கை மூலம் துரத்தியது...... அது ஹிட்லரின் நாஜி  படைத்தளபதி எர்னஸ்ட் ரோம் மூலமாக....  ரோமின் படையில் ஐந்து லட்சத்திற்கும் மேலான குண்டர்கள் இருந்தனர்..... ஹிட்லர் வலிமையே இந்த ராணுவம்தான்..... ரோம் ஓரின விரும்பி என்பதால் அவர் படையில் இருந்த பெரும்பாலானோர் ஓரின விரும்பிகளாகவே இருந்தனர்...... நேரடியாக ரோமை ஹிட்லரால் எதிர்க்க முடியவில்லை..... காரணம் ரோம் சொன்னால் ஹிட்லரையே கொல்லும் அளவிற்கு அந்த படையினர் இருந்தனர்...... ஹிட்லரே ஒரு ஓரின சேர்க்கை விரும்பிக்கு பயந்தார் என்பதுதான் வரலாற்று உண்மை...... ஆனாலும் இதை ஹிட்லர் ரசிக்கவில்லை..... நேரம் பார்த்து ரோம் மற்றும் அவரின் சகாக்கள் பல நூறு பேரை தூங்கும்போது சுட்டுக்கொன்று விட்டார் ஹிட்லர்..... ரோம் பாதுகாப்பாக இருந்திருந்தால், இந்நேரம் வரலாறு தலைகீழாக இருந்திருக்கும்.....

அடுத்தவர், கின்சி 1945 ஆண்டின் ஆராய்ச்சியில் அமெரிக்காவில் பெரும்பாலான ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது ஓரின சேர்க்கை எத்தகைய இன்பத்தை தரும் என்று அனுபவித்து பார்த்திருக்கிறார்கள்.... அதில் பெரும்பாலானோர் அந்த இன்பத்தில் மயங்கி தொடர்ச்சியாக ஓரின பிரியர்கலாகவே இருந்திருக்கிறார்கள்..... அப்போது அமெரிக்காவில் புறக்கணிக்கப்பட்ட கின்சி  தான் இப்போது உலகமே புகழும் செக்சாலஜியின் தந்தை என்று போற்றப்படுகிறார் ..... பல்வேறு தாக்குதலுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளான கின்சி வாழ்க்கை ஆலிவுட் திரைப்படமாக வெளிவந்தது............ செக்ஸ் பற்றிய ஆய்வாளர்கள் எல்லாம் ஒரு முறையாவது அவருடைய ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்றுவர வேண்டும் என்பது இப்போது எழுதப்படாத விதி.....
சில வருடங்களுக்கு முன்னால் வாசிங்க்டனில் ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர் டீன் ஹாமர் என்பவர் ஓரின விருப்பத்திற்கு XQ 28 எனும் ஜீன் தான் காரணம் என்றார்..... அதாவது ஓரினம் விரும்பும் ஆண்களுக்கு மட்டும் இந்த ஜீன் இருப்பதாகவும் கூறினார்..... ஆனால் லேச்பியங்களுக்கு அப்படி எதுவும் ஜீன் இல்லை என்றும் சொன்னார்........ இந்த ஆய்வு இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், ஆய்வு அளவில் இருக்கிறது.... இதை நிரூபித்து காட்டுவதாக ஹாமர் உறுதி பூண்டு ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்...... இதை மட்டும் அவர் நிரூபித்துவிட்டால் நிச்சயம் மருத்துவ உலகில் பெரிய மாற்றம் நிகழலாம்....
சரி இந்தியாவிற்கு வருவோம்..... இந்தியாவின் ஓரின வரலாற்றை அறிய நிச்சயம் இந்து மதத்தை வைத்துதான் பார்க்க வேண்டும்..... அப்படி பார்க்கையில்....

மகாபாரதத்தில் அரவானுடன் கிருஷ்ண பகவான் புணர்ந்ததும் நாம் அறிந்ததே......
அய்யப்பன் என்கின்ற கடவுள் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளை என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
பதினான்காம் நூற்றாண்டின் சமஸ்கிருத, பெங்காலி இலக்கியங்கள் (இன்றளவும் மிகப்பிரபலமான கீர்த்திவாச ராமாயணம் உட்பட) பாகிரத மன்னன் (கங்கை நதியைச் சொர்க்கத்திலிருந்து பூமிக்குக் கொண்டு வந்தவன்) இரண்டு விதவைப்பெண்களுக்குப் பிறந்ததாகக் கூறுகிறது. பாகிரதன் என்ற பெயரே இரண்டு பெண்ணுறுப்புகளுக்குப் பிறந்தவன் என்ற பொருளைத் தருகிறது. (Bhaga - Vulva) இந்து மருத்துவ நூல்களும் முதல் நூற்றாண்டிலிருந்தே பால், பால்வேறுபாடு, ஓரினச்சேர்க்கை விருப்பம் ஆகிய அறிவியல் ரீதியான பாகுபாடுகளை விளக்குகின்றன.
காமசூத்ரா நூலும் ஓரினச்சேர்க்கையை மூன்றாம் இயற்கை என்று வருணிக்கிறது.
கணிதமேதை சகுந்தலா தேவி எழுதிய ‘The world of Homosexuals’ (1977) நூலில், திருவரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சீனிவாச ராகவாச்சாரியார் அளித்த பேட்டியில், ஓரினக் காதலர்கள் முன்ஜென்மத்தில் மாற்றினக் காதலர்-களாகத் தான் இருந்திருப்பார்கள். இப்பிறவியில் பால் மாறியிருந்தாலும், அவர்களுடைய ஆன்மாவின் ஈர்ப்பு அப்படியே இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
திருமணம் என்பது ஆன்மாவின் கலப்பு, இதில் ஆண் பெண் வேறுபாடு இல்லை. இரண்டு பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்த சைவ அர்ச்சகரின் கருத்து இது.
பண்டைய மன்னர்கள் கட்டிய கோவில்கள் (குறிப்பாக கஜுஹாரோ) சிற்பங்கள் பலவற்றிலும் ஓரின சேர்க்கை தொடர்பான சிற்பங்கள் இருந்ததை வைத்து பார்க்கும்போது அப்போது இது சட்ட விரோதமான செயல் இல்லை என்று புரிகிறது.... அதாவது இதை ஒரு பொருட்டாகவே அவர்கள் நினைக்கவில்லை என்றுதான் கூறவேண்டும்..... ஏனோ இப்போ உள்ளவர்கள்தான் இதை குற்றமாக பார்க்கிறார்கள்.......

அலாவுதீன் கில்ஜியும் அவரின் அடிமை மாலிக் கபூரும் ஓரின சேர்க்கையாளர்கள் என்பது நாம் அறிந்ததே....... பின்னர் மாலிக் கபூர் கில்ஜியையே தூக்கிவிட்டு ஆட்சியில் அமர்க்கலப்படுத்தியது தனிக்கதை...... இந்த கே தான் தமிழகம் வரை ஆட்சியை பிடித்த ஒரே மொகாலய மன்னர்....... எல்லா இடத்திலும் மற்றவர்களுக்கு மத்தியில் கே நபர்கள் தனி சிறப்பொடு இருந்திருப்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது.....

ஆனாலும் சமீபத்தில் வெங்கட் மோகனை போல பலரும் துணிந்து இதில் களம் இறங்கியுள்ளதை பார்க்கும்போது நிச்சயம் மாற்றம் வரும் என்று நம்பலாம்...... இந்தியா சிமண்ட்ஸ் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் மகன் அஷ்வின் தன் காதலனோடு மும்பையில் வசித்து வருகிறார்.... தந்தை மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தியுள்ள அஷ்வின் நல்ல முன் உதாரணம்.... கிட்டத்தட்ட இருபது வருடங்களாக தன காதலனோடு வாழ்ந்து வருகிறார்.... எல்லாம் இனி மாறும் என்று நம்பலாம்... இன்னும் கே விருப்பம் உள்ள பிள்ளைகளை குற்றவாளிகளாக பார்க்கும் சித்தாந்தம் மாறவேண்டும்....ஓரின விரும்பிகளே இன்னும் தங்கள் மீது குற்ற உணர்வோடு இருப்பதை நிறுத்த வேண்டும்....... முதலில் நாம் செய்வது தவறல்ல என்பதை நாம் உணர்வோம், பின்னர் மற்றவர்களுக்கும் உணர்த்துவோம்.... சமூகம் தானாக மாறும்...... மாறும் என்று நம்புவோம்......
இந்த தொகுப்புகளை நான் பல புத்தகங்கள், இணையதளம் என்று பல இடங்களிலும் எடுத்து கோர்த்தவை....... நிறைய தேடினேன்...... இனி கிடைப்பதையும் உங்களுக்கு பகிர்கிறேன்..... இதை படித்தபிறகு உங்கள் மனதில் தோன்றுவதை கருத்தாக பதிவு செய்யவும் நண்பர்களே....

Tuesday, 31 July 2012

என் கதை - பகுதி 1

விஜயை நான் முதன்முதலில் பார்த்தது, நான் எட்டாம் வகுப்பில்
படிக்கும்போது போன டியூசனில்..... நானும் என் நண்பனும் அந்த டியூசனுக்கு
போனோம்....  அப்போது ஒரூ அறையில் இருக்க சொன்னார்கள்.... அங்கு விஜயும்
இருந்தான்... விஜய் வேறு பள்ளியில் இருந்து அங்கு டியூசனுக்கு
வந்தான்......... நல்ல கலகலப்பான பேர்வழி..... அந்த டியூசன் பத்தாம்
வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்குத்தான் முக்கியத்துவம்
கொடுப்பார்கள்.... நாங்கள் போவோம், பேசிகிட்டு இருப்போம், இருட்டிய பின்
வீட்டுக்கு வருவோம்..... அப்படி பழக்கமானவந்தான் விஜய்...... அப்போது அவன்
மீது எந்த ஈர்ப்பும் இல்லை.... ஆனாலும், அவன் அந்த குறுகிய காலத்துக்குள்
நெருங்கி பழகினோம்..... ஆனால் அந்த நட்பு சில மாதங்களோடு
முடிவடைந்துவிட்டது...... பிறகு மூன்று வருடங்கள் நான் அவனை எங்கேயும்
பார்க்கவில்லை.... குறிப்பா சொல்லனும்னா, அவனை நான் மறந்துட்டேன்....
பத்தாம் வகுப்பு முடிந்து பதினொன்றாம் வகுப்பில் நுழைந்தோம்.... நிறைய
புதிய மாணவர்கள் எங்கள் பள்ளியில் இணைந்தனர்.....
அதையெல்லாம் எங்கள் பள்ளி வளாகத்தில் இருந்த மரத்தடியில் அமர்ந்து
பார்த்துக்கொண்டிருந்தோம்.... என் நண்பர்கள் அனைவரும் புதிதாக இணைந்துள்ள
ஒருசில மாணவிகளை பற்றி பயங்கரமாக பில்டப் கொடுத்துக்கொண்டிருந்தனர்....
அப்போது நான் பார்த்தது விஜயை.... என் கண்களையே என்னால் நம்ப முடியல.....
அவன் முகம் நினைவிருன்ததே தவிர, அந்த நீண்ட இடைவெளியால் அவன் பெயர்  எனக்கு
மறந்துவிட்டது.... எல்லோரும்  அங்கு வந்திருந்த பெண்களை
பார்த்துக்கொண்டும், அவர்களை பற்றி பேசிக்கொண்டிருந்தபோதும் நான் மட்டும்
விஜயை பார்த்துக்கொண்டிருந்தேன்..... முன்பு அவனை பார்த்ததற்கும்,
இப்போதிற்கும் வித்தியாசம் தெரிந்தது.... இப்போது ஒரு ஈர்ப்பு என்னுள்
எழுந்தது.... ஆனாலும் என் நண்பர்களிடமோ, விஜயிடமோ நான் இதை
காட்டிக்கொள்ளவில்லை..... நன்றாக நினைவுபடுத்திய பிறகு அவன் பெயர் எனக்கு
நினைவுக்கு வந்தது.... ஆனாலும் அவன் என்னை மறந்துவிட்டதை போல
காணப்பட்டான்..... நானாக என்னை அவனிடம் அறிமுகப்படுத்திக்கொள்ள
விரும்பவில்லை.... ஒருவேளை அவன் என்னை மறந்துவிட்டதாக கூறிவிட்டால்,
நிச்சயமாக அந்த வார்த்தைகளை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதால்....
ஒரு வாரமும் நான் அவனை அவன் அறியாதவாறே பார்த்து ரசித்தேனே தவிர, அவனுடன்
பேச தயங்கினேன்..... ஒரு வாரத்திற்கு பிறகு எப்போதும் தாமதமாகவே பள்ளிக்கு
வரும் நான் அன்று சீக்கிரம் வந்துவிட்டேன்..... என்னை தவிர அங்கு இரண்டு
மாணவிகள் அமர்ந்திருந்தனர்..... நான் என் பெஞ்ச்சில் அமர்ந்து வெளியே
வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தேன்.... அப்போது உள்ளே நுழைந்தான்
விஜய்..... என்னை பார்த்ததும் மெலிதாக சிரித்தான்.... நானும் பதிலுக்கு
சிரித்தேன்..... ஆனால், அவன் சிரிப்பிற்கான அர்த்தம் புரியாமல் பயங்கர
குழப்பத்தில் இருந்தேன்.... யோசித்தபடியே அமர்ந்திருந்தேன்.... அப்போது
பின்னாலிருந்து என்னை யாரோ "விக்கி" என்ற பெயர் சொல்லி அழைப்பதைப்போல
உணர்ந்தேன்.... உடனே திரும்பவில்லை.... மீண்டும் அந்த குரல் ஒலிக்கவே,
திரும்பி பார்த்தேன்...... "என்னடா விக்கி, என்னைய மறந்துட்டியா?" என்றான்
விஜய்..... அப்போது எனக்குள் எழுந்த உணர்வுகளுக்கு இப்போதுவரை அர்த்தம்
கண்டுபிடிக்க முடியவில்லை..... ஆச்சரியம் ஒரு பக்கம் சந்தோசம் மறுபக்கம்
என்று திளைத்தவாறே, அசடு வழிய அவனை பார்த்து சிரித்துவிட்டு, "இல்லடா....
நீதான் மறந்துட்டியோன்னு நினச்சேன்.... " என்றவாறு அவன் அருகில் அமர்ந்து
சில நிமிடங்கள் மதிப்பெண்கள் பற்றியும் எங்கள் பள்ளி பற்றியும்
பேசிக்கொண்டிருந்தோம்.... சிவபூசையில்  கரடி புகுந்ததைப்போலன்னு
சொல்வாங்க.....ஆனால் எங்கள் பூஜையில் பல கரடிகளின் கூட்டமே புகுந்ததைப்போல
என் நண்பர்கள் ஒவ்வொருவராக வகுப்பறைக்குள் நுழையவே மனதில் கொஞ்சம்
வருத்தத்தோடு என் இடத்திற்கு சென்று அமர்ந்தேன்..... ஏக்கத்தோடு என்
இடத்திலிருந்து அவனை பார்த்தேன்.... அவன் நண்பனோடு அவன் கலகலப்பாக
பேசிக்கொண்டிருந்தான்..... நான் எல்.கே.ஜி முதல் அந்த பள்ளியிலேயே
படிப்பவன், என்னைப்போல சிலரும் அப்படி படிப்பவர்கள்தான்.... அதனால் புதிதாக
பதினொன்றாம் வகுப்பில் இணைந்த மாணவர்களோடு என் நண்பர்கள் அவ்வளவாக இணக்கம்
காட்டவில்லை.... அதனால் நானும் விஜயுடன் அடிக்கடி பேசும் வாய்ப்பு
கிடைக்கவில்லை....

என் பென்ச்சிலிருந்து பின்னால் திரும்பி நண்பனுடன் பேசுவதைப்போல விஜயை
பார்த்துக்கொண்டே இருப்பேன்.... எதேச்சையாக எப்போதாவது என்னை பார்த்தால்
அவன் சிரிப்பான், அவ்வளவுதான்..... அப்படியே சில மாதங்கள் ஏக்கப்பார்வையோடு
கழிந்தன..... நானும் என் நண்பர்கள் சிலரும் பன்னிரண்டாம் வகுப்பு பாடங்களை
படிப்பதற்காக வெளியில் டியூசன் செல்ல முடிவெடுத்து, நான் எட்டாம்
வகுப்பில் சேர்ந்த டியூசனில் சேர்ந்தோம்.....
 என்னோடு சேர்ந்து என் நண்பர்கள் ஏழெட்டு பேர் ஒன்றாக அங்கு சேர்ந்தோம்.... எங்களை ஓர் அறையில் அமர சொன்னார் அந்த ஆசிரியர்.... முதன்முதலில் நான் விஜயை பார்த்த அதே அறைதான் அது.... ஆனால் அப்போது அங்கு விஜய் இல்லை..... பெருமூச்சோடு அங்கு அமர்ந்தேன்.... ஆசிரியர் வந்து அறிமுக வகுப்பு எடுக்க தொடங்கினார்.... அப்போது வெளியிலிருந்து ஒரு குரல் ஆசிரியரை அழைத்தது.... வெளியே சென்ற ஆசிரியர், "ஏண்டா லேட்டு.... சரி, இன்னைக்கு இன்ட்ரோ கிளாஸ் தான்.... வா உள்ள" என்றார்..... உள்ளே வந்த அந்த மாணவர் வேறு யாருமில்லை, என் விஜய் தான்..... மீண்டும் ஒரு இன்ப அதிர்ச்சி எனக்கது.... அப்போதுதான் தெரிந்தது, விஜய் எட்டாம்  வகுப்பு முதல் அந்த டியூசனில்  தொடர்ந்து படிப்பதும், அதனால் ஆசிரியரோடு அவன் மிகவும் நெருக்கம் என்றும் தெரிந்தது.... எங்களை பார்த்ததும் சிரித்த விஜய், என் அருகில் அமர என்னை நோக்கி வந்தான்.... அப்போது என் நண்பன் ஒருவன் என் பக்கத்தில் நெருங்கி அமர்ந்து, விஜயை வேறு பக்கம் அமருமாறு கூறினான்..... "பாசத்த காட்டுற நேரமாடா  இது?"நு மனதிற்குள் என் நண்பனை நொந்துகொண்டேன்..... விஜயுடன் அங்கு வேறு யாரும் அறிமுகம் இல்லை என்பதால் அமைதியாக யாருடனும் பேசாமல் அமர்ந்திருந்தான்..... விஜயின் வீடும் என் வீடும் ஒரே பக்கம்தான் என்பதால் , டியூசன் விட்டு போகும்போதாவது அவனுடன் பேசிக்கொண்டு போகலாம் என்று ஏழு மணி ஆகும் வரை என் கடிகாரத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்..... டியூசன் முடிந்து என் பாசக்கார நண்பர்களை ஒரு வழியாக வழி அனுப்பிவிட்டு விஜய்க்காக என் சைக்கிளில் காத்திருந்தேன்.... ஐந்து நிமிடங்கள் கழித்து சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்த விஜயோடு இன்னொரு மாணவனும் வந்தான்..... நன்றாக கவனித்தபோதுதான் தெரிந்தது அது விஜயின் தம்பி என்று..... இந்த உலகத்தில் கரடிகளுக்கு பஞ்சமில்லை என்பது அப்போதுதான் நான் உணர்ந்தேன்....  அப்போதும் என்னை தாண்டி செல்லும்போது அதே சிரிப்பு விஜயிடமிருந்து.... வேறு வழியின்றி தனியாக ஏமாற்றத்தோடு என் வீட்டை நோக்கி கிளம்பினேன்.....
நாளாக நாளாக இன்னும் சில நண்பர்களும் அந்த டியூசனில் இணைந்தனர்..... இப்போது விஜய் எல்லாருடனும் ஓரளவு பழகிவிட்டான்..... வகுப்பறையில்தான் அவனுடன் அமரமுடியவில்லை என்றாலும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் டியூசனில் அவன் அருகில்தான் அமருவேன்...... அவனுடன் நான் நன்றாகவே நெருங்கி பழகினேன்....

 அவன் நட்பாக என்னுடன் பழக, எனக்குள் இருந்த ஒரு மிருகம் அவனை அடையவேண்டும் என்ற  நோக்கத்துடனேயே என்னை அவனுடன் பழக வைத்தது.... விளையாட்டாக அவன் அருகில் அமரும்போது அவனை ஆங்காங்கே தொடுவதை போல தொடுவேன்... ஆரம்பத்தில் அதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றதும் நான் அத்துமீற தொடங்கினேன்.....என் வயதும், என் ஹார்மோன்களும் நான் என்ன செய்கிறேன் என்பதை மறக்கடித்தன..... என் அருகில் யார் இருக்கிறார்கள் என்பதை கூட கவனிக்காமல் பல முறை அவனிடம் அத்து மீறி இருக்கிறேன்.....  அந்த நிலைமையில் அவன் எப்படி குறுகி இருந்திருப்பான் என்று இப்போதுதான் எனக்கு புரிகிறது..... அவன் என் அருகில் இருக்கும்போது நெஞ்சு படபடக்கும், மற்ற யார் பேசுவதும் தெளிவாக கேட்காது, அவனை தவிர யாரும் இல்லை என்ற உணர்வே மேலோங்கும்.... சுருக்கமா சொல்லனும்னா , நான் நானாக இருக்க மாட்டேன்..... அவனை அடையவேண்டும் என்ற ஒன்றைத்தவிர அப்போது வேறு எதுவும் முக்கியமாக தோன்றவில்லை..... நான் அவ்வளவு தொந்தரவு செய்தபோதும் அடுத்தடுத்த நாள் அவன் என்னை விட்டு விலகி செல்வதில்லை .... அதை நான் எனக்கு அட்வாண்டேஜாக எடுத்துக்கொண்டு நான் அவனிடம் சில்மிஷங்களை செய்தேன்..... அது தவறா? அவனுக்கு பிடிக்கிறதா? நான் ஏன் இப்படி செய்கிறேன்? என்ற எந்த கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை.... இப்படிப்பட்ட கேள்விகளே என்னுள் எழவில்லை என்றுதான் சொல்லணும்..... என் செய்கைகளால் நான் சிலநேரம் அவனுடன் பேச வெட்கப்பட்டாலும், அவனாகவே என்னுடன் சகஜமாக பேசுவான்..... அதுவரை நான் அப்படி அடுத்தவர்களிடம் நடந்துகொண்டதில்லை, அவனை காணும்போது மட்டும் நான்  ஏன் அப்படி செய்தேன் என்று எனக்கு புரியவில்லை..... ஆனால் என் எண்ணம் என்ன என்பதை அவனுக்கு புரியவைத்துவிட்டேன், அது புரிந்தும் ஏன் என்னை அவன் இன்னும்  வெறுக்கவில்லை என்ற கேள்வியும் என்னை துழைத்தது.... தனியாக சந்தித்து அவனிடம் பேசவேண்டும் (பேசவேண்டும் என்றா நினைத்தாய் என்று நீங்கள் கேட்பது புரியுது) என்று முடிவு செய்தேன்.... அப்போது விஜய் என் சகநண்பர்கள் பலரிடமும் CNC MATHS GUIDE பன்னிரண்டாம் வகுப்பு புத்தகம் படிப்பதற்காக கேட்டான் .... என்னிடம் அந்த புத்தகம் இருந்தது .... அவனாக கேட்கட்டும், பிறகு கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன்.... ஆனால், இப்போது அந்த புத்தகத்தை சாக்காக வைத்து அவனை வீட்டிற்கு வரவழைக்க நினைத்தேன்.... அன்று மாலை அம்மா ஒரு நிகழ்ச்சிக்கு சென்றிருந்ததால், அவனை அன்று மாலை எப்படியாவது வீட்டிற்கு வரவழைத்துவிடவேண்டும் என்று நம்பியார் ரேஞ்சுக்கு திட்டம் தீட்டினேன்......

பள்ளி முடிந்து வீட்டிற்கு எல்லோரும் கிளம்ப போன நேரம் நான் விஜயை அழைத்தேன்...... அவன் நண்பர்களிடம் ஒரு நிமிடத்தில் வருவதாக சொல்லிட்டு வந்தான்..... "MATHS GUIDE செல்வாகிட்ட கேட்டியா?" என்றேன்.....
"ஆமாம்டா.... அவன்கிட்ட இல்லையாம்...." என்றான் அவன்.....
"ஏன் என்கிட்டே கேட்க மாட்டியா?" என்றேன்.....
"உன்ட்ட இருக்கா?.... மறந்துட்டேண்டா..... நாளைக்கு வரும்போது எடுத்துட்டு வரியா?" என்றான்.....
"ஏற்கனவே என் பேக் புல்லா இருக்குடா.... அந்த கைடையும் எடுத்துட்டு வர முடியாது.... சாயந்திரம் வீட்டுக்கு வா.... தரேன்" என்று கொக்கியை போட்டேன்.....
கொஞ்சம் யோசித்துவிட்டு, "டியூசனுக்கு எடுத்துட்டு வாடா" என்று மீண்டும் நழுவினான்.....
"நான் இன்னைக்கு டியூசன் வரமாட்டேன்.....வேணும்னா வந்து வாங்கிக்கோ..... வேண்டாம்னா விட்டுடு" என்று கோபத்தில் கூறுவதைப்போல கூறினேன்.....
"சரிடா வரேன்..... டியூசன் போறதுக்கு முன்னாடி வந்து வாங்கிட்டு போறேன்" என்றான்.... "ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம் காத்திருந்தேன்" என்பதைப்போல இந்த வார்த்தையை கேட்கத்தான் நான் இவ்வளவு நாளா காத்திருந்தேன்

உடனே வீட்டிற்கு ஓடினேன்.... சாதாரணமா நான் பள்ளியிலிருந்து வீட்டுக்கு போனவுடன் ஒரு குட்டித்தூக்கம் போடுவேன்... ஆனால்,அன்று அதையெல்லாம் மறந்துட்டேன்..... என் பியர்ஸ் சோப் கரையும்வரை குளித்தேன்..... எனக்கு பிடித்த கருப்பு நிற சட்டை அணிந்து, வீட்டை கொஞ்சம் சுத்தம் செய்தேன்.... குறிப்பா என் படுக்கையை சுத்தம் செய்தேன்..... பேசணும்னு சொல்லிட்டு எதுக்கு நான் படுக்கையை சுத்தப்படுத்துறேன்னு திட்டாதிங்க..... எல்லாம் ஒரு முன் எச்சரிக்கைதான்.... வீடு முழுக்க வாசனை திரவத்தை கமகமக்க வைத்தேன்..... எல்லாம் முடிந்து ஐந்து மணி முதல் வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருந்தேன்.... ஐந்தரை மணிக்கு வழக்கமாக டியூசன் தொடங்கும்.... அதனால் அவன் ஐந்து மணிக்கு வந்திடுவான்னு கணித்திருந்தேன்.... எட்டு மணிக்கு அம்மா வந்திடுவாங்க.... அதற்குள் எல்லாத்தையும் முடிச்சிடனும்னு ஒரு ஐந்தாண்டு திட்டமே தீட்டினேன்.... மணி ஆறை நோக்கி சென்றதும் எனக்கு படபடப்பு அதிகமானது.... இப்போது வீட்டு வாயிலிலேயே உட்கார்ந்துட்டேன்.....இவ்வளவு நேரம் அவன் வரவில்லயேன்னு கொஞ்சம் ஏமாற்றத்துடன் அமர்ந்திருந்தேன்..... ஏழு மணி ஆகிவிட்டது..... இதற்குமேல் அவன் வரமாட்டான் என்று நொந்தவாறே வீட்டிற்குள் சென்றேன்.... சரியாக அந்த நேரம் வீட்டு வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.... மனதிற்குள் படபடப்பு அதிகமானது..... டியூசன் முடிந்து வீட்டிற்கு வந்திருக்கான் போல என்று நினைத்தவாறே, அருகில் இருந்த கண்ணாடியை பார்த்து கொஞ்சம் டச்சப் செஞ்சுட்டு கதவை திறந்தேன்..... அதிர்ச்சியாக வேண்டிய நான், பேரதிர்ச்சியானேன்.... காரணம் அங்கு நின்றது என் அம்மா.... எச்சிலை விழுங்கியவாறே, "என்னம்மா அதுக்குள்ள வந்துட்டிங்க?" என்றேன்.....
"பங்க்சன் முடிஞ்சிருச்சு... அதான் வந்துட்டேன்..... நீ எங்க கிளம்பிருக்க?" என்று கேட்டார்கள்....
"எங்கயும் இல்ல.... சும்மாதான்.... " என்றவாறு என் அறைக்குள் நுழைந்தேன்.....
"இன்னைக்கு டியூசன் இல்லையா?..... நான் வர்ற வரைக்கும் வெளிலே உட்கார்ந்திருந்தியாம்.... கலா அம்மா சொன்னாங்க..... அவ்வளவு பாசமா உனக்கு" என்றார்....
"அந்த கலா அம்மாவுக்கு என்னைய கண்காணிக்கிறத தவிர வேற வேலை இல்லையா?..... டியூசன் இன்னைக்கு லீவ்.... அதான் சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன்" என்று சமாளித்துவிட்டு படுக்கையில் படுத்துவிட்டேன்..... விஜய்க்காக விரித்த படுக்கை, இப்படி தனியா புரள விட்டானே என்ற கோபம் இன்னும் எனக்குள் அதிகமானது....
மறுநாள் அவனை பார்த்து இதைப்பற்றி கேட்கனும்னு ஒரு முடிவோட இருந்தேன்..... மறுநாள் அவனிடம் இதைப்பற்றி கேட்க விரைவாகவே பள்ளிக்கு சென்றேன்....
சிறிது நேரத்திற்கு பிறகு விஜய் உள்ளே வந்தான்..... ஆனால் சில மாணவர்கள் அங்கு இருந்ததால் வந்த வேகத்தில் அவனிடம் இதைப்பற்றி கேட்கவில்லை..... ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் வழக்கம்போல என்னை பார்த்து புன்முறுவல் செய்ததோடு தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்..... அவன் வராததுகூட எனக்கு  கோபமில்லை, ஆனால் வராததற்கான காரணத்தை கூட சொல்லாமல் அவன் வேலையை பார்த்துக்கொண்டிருக்கிறான் என்ற கோபம்தான் எனக்கு அதிகமானது..... அவன் இருக்கைக்கு அருகில் சென்று அமர்ந்தேன்..... என்னை பார்த்ததும், "ஏய், இன்னைக்கு சாயங்காலம் டியூசன்ல டெஸ்ட் இருக்கு..... நேத்து மாதிரி கட் அடிச்சிடாத" என்றான்.... "நீ ஏன்டா நேத்து கைடு வாங்க வீட்டுக்கு வரல?" என்றேன்..... "ஓ அதுவா, என் வீட்டு பக்கத்துல ஒரு அண்ணன்கிட்ட கேட்டிருந்தேன், அவர் நேத்துதான் தந்தாரு.... அதான் வரல" என்றான் சாதாரணமாக..... "டேய், நீ வருவன்னு எவ்வளவு நேரம் வெயிட் பண்ணேன் தெரியுமா?.... ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல?" என்றேன்.... சிரித்தவாறே, "இதுக்கு நீ ஏன்டா டென்சன் ஆகுற..... கைடு எனக்கு தேவை..... நான் அதுக்காக டென்சன் ஆனா கூட பரவாயில்ல.... " என்றான்..... அவன் கேள்வியிலும் நியாயம் இருக்கிறது.... ஆனால் என் கோபத்திற்கான காரணத்தை நான் அவனிடம் சொல்ல முடியாதல்லவா.... அதனால் அமைதியாகிவிட்டேன்..... இப்படியே ஏக்கத்திலும் ஏமாற்றத்திலும் பதினொன்றாம் வகுப்பு இனிதே முடிந்தது..... இப்போது பன்னிரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைத்துவிட்டோம்..... முன்பு போல டியூசன் போக நேரம் யாருக்கும் இல்லை.... காலை எட்டு மணிக்கு தொடங்கும் வகுப்புகள் மாலை ஆறை தாண்டியும் சில நேரம் நடக்கும்.... அதற்கு மேல் வீட்டிற்கு சென்று படிக்கத்தான் நேரமிருக்கும்.... இதற்கிடையில் நான் எங்கே விஜயிடம் பழகுவது..... இரண்டு மாதங்கள் வறண்ட பாலைவனம் போல சென்றது பன்னிரண்டாம் வகுப்பு..... பின்னர் பள்ளி நிர்வாகம் எங்களுக்கு "நைட் ஸ்டடி (NIGHT STUDY ) " பள்ளியில் படிக்க அனுமதி கொடுத்தது.... பெரும்பாலான என் நண்பர்கள் வீடும் என் வீடும் பள்ளிக்கு வெகு அருகிலேயே இருந்ததால் தினமும் இரவு வந்து படித்து அங்கேயே உறங்கி, விடியற்காலை வீட்டிற்கு செல்வதை வழக்கமாக செய்து வந்தோம்..... அவ்வளவு ஜாலியாக இருந்தன அந்த இரவுகள் ..... இதைப்பற்றி வகுப்பில் பல மாணவர்களும் அறிய நாளடைவில் பல மாணவர்கள் இரவு பள்ளிக்கு வந்துவிட்டனர்..... அப்படி ஒரு நாள் விஜயும் அவன் நண்பனுடன் அங்கு வந்தான்..... எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி ..... இன்றைக்கு எப்படியாவது அவனை அடைந்துவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தேன்..... நள்ளிரவை தாண்டியவுடன் நண்பர்கள் பலரும் படுக்க சென்றுவிட்டனர்... விஜய் படுக்கும்போது அவனருகில் படுக்க வேண்டும் என்பதால் நான் தூங்காமல் விழித்துக்கொண்டே  இருந்தேன்.....இரண்டு மணி ஆகிவிட்ட போதிலும் விஜயும் அவன் நண்பனும் உறங்குவதாக தெரியவில்லை.....
 அதற்கு மேல் கண்விழிக்க முடியாமல் என் நண்பர்கள் படுத்திருந்த வகுப்பறையில் பென்ச்ச்களை அடுக்கி அதன் மீது படுத்தேன்..... நன்றாக ஆழ்ந்து உறங்கிய நேரம் அருகில் யாரோ  புரண்டு படுப்பது தெரிந்தது.... பக்கத்தில்  படுத்திருந்தவனின் கை என் மீது இருந்தது..... என்னால் கண்களை திறக்க முடியவில்லை .... எப்படியோ முயன்று திறந்து பார்த்த எனக்கு ஆச்சரியம்..... அது என் விஜய்..... எப்போது அவன் படுத்தான்?... எதற்காக அவன் என் பக்கத்தில் படுத்தான்?... அவனுடைய  கை என் மீது போட்டிருப்பதன் காரணம் என்ன?... அவன் நிஜமாகவே இப்போது உறங்கிவிட்டானா? என்ற ஆயிரம் கேள்விகள் என்னை துழைத்தன..... அவன் கைகளை  எதேச்சையாக போட்டிருந்தாலும் கூட , அப்போது நான் காரணத்தோடுதான் போட்டிருப்பான்னு நினைத்தேன்..... விஜயிடம் சில்மிஷங்கள் செய்வது ஒன்றும் புதிதல்ல..... முயற்சி செய்து பார்க்கலாம்....என்று நினைத்தவாறே என் வேலைகளை தொடங்கினேன்.... எல்லாம் முடிந்தபிறகும் அவனிடமிருந்து ஒரு பதிலையும் காணவில்லை..... எல்லாம் முடிந்த களைப்பில் சில நிமிடங்கள் படுத்திருந்தேன்.... இப்போது ஓரளவு விடிந்துவிட்டது...... எழுந்து சென்று வெளியில் ஒரு நாற்காலியில் அமர்ந்தேன்..... அப்போது விஜய் எழுந்து வருவதை கவனித்தேன்..... கண்டுகொள்லாதவனை போல புத்தகத்தை புரட்டினேன்....  அவனுடன் முகம் கொடுத்து பேச என் மனம் உறுத்தியதால் அவ்வாறு செய்தேன்..... வெளியே வந்தவன், என்னை பார்த்ததும் , "என்ன விக்கி, ரொம்ப படிக்காத..... என்ன படிச்சாலும் டெஸ்ட்ல காட்டிரு எனக்கு" என்று சிரித்தான்.... அவன் சகஜமாக பேசியது எனக்குள் குழப்பத்தை அதிகமாக்கியது... அப்படியானால் இரவில் நடந்த எதுவும் அவனுக்கு தெரியாதா?..... அந்த இரவை நினைத்து மகிழ்ச்சியாவதா அல்லது அவனுக்கு இவை தெரியவில்லையோ என்று குழம்புவதா என்பதும் எனக்கு புரியவில்லை.... அடுத்த நான்கு நாட்கள் அவன் நைட் ஸ்டடி வரவில்லை.... ஆனால், வழக்கம்போல என்னிடம் பார்க்கும் நேரங்களில் பேசினான்.... அவன் மனதில் என்ன இருக்கிறதென்று என்னால் புரிந்துகொள்ளவே முடியாமல் குழம்பினேன்.... அதை எப்படி புரிந்துகொள்வது என்றும் எனக்கு தெரியவில்லை.....
சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அன்று இரவு பள்ளிக்கு வந்தான் விஜய்.....

ஆனால் இம்முறை அவன் விருப்பத்தை அறியாமல் எதுவும் இனி செய்ய வேண்டாம் என்ற முடிவோடு பத்து மணிக்கெல்லாம் நான் படுக்க சென்றுவிட்டேன்.... என்னோடு சில நண்பர்களும் படுத்திருந்தனர்..... ஆழ்ந்து உறங்கிய நேரம்.... மணி நிச்சயம் ஒரு மணிக்கு மேல் இருக்கலாம்..... கடந்த முறையை போலவே என் மீது ஒரு கை பட்டது..... மெல்ல விழித்து பார்த்தேன்.... எதிர்பார்த்தது போலவே அது விஜய்தான்.... ஆனால் இம்முறை நான் அவரசப்பட விரும்பவில்லை.... அமைதி காத்தேன்.... அந்த கை என் மீது வருட தொடங்கியது..... என் மனம் முழுக்க மகிழ்ச்சியும், ஆனந்தமும் நிரம்பின.... அவன் கைகள் என் கன்னங்களை வருடின.... அதற்கு மேல் என்னால் அமைதி காக்க முடியாமல் அவனை கட்டிப்பிடித்தேன்....  ஆனால் கடந்த முறையை போல எங்களால் சகஜமாக தழுவ முடியவில்லை.... எங்கள் இருபுறத்திலும் நண்பர்கள் சூழ்ந்து இருந்ததால் அமைதியாக இருந்தேன்.... அப்போது விஜயின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி, "மாடில இருக்குற கிளாஸ்'கு போகலாம் வா" என்றேன்..... நான் அவ்வாறு கூறிவிட்டு எழுந்து முன்னே சென்றேன்.... அப்போதும் சில மாணவர்கள் வெளியே படித்துக்கொண்டிருந்ததால் அவர்களுக்கு தெரியாமல் மாடிக்கு சென்றேன்.... நான் அவன் காதுகளில் கூறினேனே தவிர அவன் வருவானா? என்ற ஐயம் எனக்குள் இருந்தது.... நான் சொன்ன வகுப்பறையில் அந்த இருளில் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தேன்..... ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் அவன் வரவில்லை..... அப்படியானால் விஜய் இவற்றை எல்லாம் அவன் தெரிந்தே செய்யவில்லையா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது..... கீழே இறங்கி போகலாம் என்று படிகளில் இறங்கியபோது விஜய் மேலே வருவதை கண்டேன்.... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.... என்னை பார்த்ததும் அவன், "என்னடா இங்க நிக்குற?..... தூக்கம் வரலையா?" என்றான்..... மீண்டும் ஒருமுறை என்னை குழப்பினான்..... அப்படியானால் நான் சொன்னதனால் அவன் அங்கு வரவில்லையா? என்று எனக்கு நானே கேட்டுக்கொண்டவாறு நின்றேன்...... என் பதிலை எதிர்பார்க்காமல் அவன் நேராக நான் சொன்ன வகுப்பறையில் கிடந்த பெஞ்ச்களில் படுத்தான்..... இப்போது நான் என்ன செய்வது என்று குழம்பி நின்றேன்.... இருந்தாலும் ஆனது ஆகட்டும் என்று நினைத்தவாறு நானும் அந்த வகுப்பறையில் அவனருகில் படுத்தேன்.... படுத்து ஐந்து நிமிடத்திற்குள் அவன் உறங்கிவிட்டதைப்போல இருந்தான்.... என்னை முழுக்க சூடேற்றி விட்டதன் விளைவாக அவனை கட்டிப்பிடித்து என் வேலைகளை தொடங்கினேன்..... அந்த இரவும் அவன் உறக்கத்தில் இருந்ததைப்போலவே இருந்துவிட்டான்..... ஒன்று மட்டும் எனக்கு புரிந்தது.... அவனுக்கு இவையெல்லாம் பிடித்திருந்தது, ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ள தயங்குகிறான் போல என்று நினைத்துக்கொண்டேன்.....

அவனை எப்படியாவது அந்த கூச்ச்சத்திளிருந்து விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.... அந்த வார ஞாயிற்று கிழமையில் அம்மா ஒரு திருமணத்திற்கு செல்ல போகிறார் என்று தெரிந்தது.... அந்த நாளை நான் அவனுக்கான நாளாக குறித்துவைத்துக்கொண்டேன்...... சனிக்கிழமை மாலை பள்ளி முடிந்து அவன் வீட்டிற்கு செல்லும் முன் அவன் காதருகில், "நாளைக்கு காலையில வீட்டுக்கு வாடா..... அப்பா அம்மா ரெண்டு பெரும் ஊருக்கு போய்ட்டாங்க..... மதியம்தான் வருவாங்க" என்றேன்..... அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அவன் வீட்டிற்கு சென்றான்..... ஞாயிற்றுக்கிழமை அவன் வருவானா ? என்கிற குழப்பத்தில் சனிக்கிழமை மாலை கழிந்தது..... வழக்கம்போல சனிக்கிழமை நள்ளிரவில் சூர்யா டிவியில் போடும் சகிலா படத்தை ரசித்துவிட்டு உறங்க ஒரு மணி ஆகிவிட்டது..... மறுநாள் காலை எழும்போதே விஜயின் நினைவுகளடு எழுந்தேன்.... அவன் வரமாட்டான் என்ற எண்ணமே எனக்குள் இருந்தது..... மணி ஒன்பது ஆகி இருந்தது..... மெதுவாக எழுந்து குளித்துக்கொண்டிருக்கும்போது வீட்டு அழைப்பு மணி அடித்தது..... அவசர அவசரமாக துண்டை கட்டிக்கொண்டு கதவை திறந்தேன்..... அது எனக்கு இன்ப அதிர்ச்சி..... ஆம், அங்கு நின்றது விஜய்.... ஆனால் வழக்கம்போல அவன் வேறு ஒரு காரணத்துடன் வந்ததாக கூறினான்.... என்னை பார்த்ததும் சிரித்த விஜய், "உன்னோட சயின்ஸ் புக் ஒரு நிமிஷம் தாடா.... என்னொடத ஸ்கூல்ல விட்டுட்டு வந்துட்டேன்" என்றான்.... இவனை திருத்தவே முடியாது என்ற எண்ணத்தில் அந்த புத்தகத்தை நான் எடுத்துக்கொடுத்தேன்.... புத்தகத்தை வாங்கியவன் வீட்டிற்கு செல்லாமல் கொஞ்சம் மருகியபடி நின்றான்.... அதை புரிந்துகொண்ட நான், கதவை தாழிட்டேன்.... அவனை பின்புறமாக நின்று கட்டி அணைத்தேன்....அவன் மறுப்பேதும் காட்டவில்லை..... அதற்கு மேல் அவனும் மறுக்காமல் திரும்பி கண்களை மூடிக்கொண்டு என்னை ஆரத்தழவி முத்தம் கொடுத்தான்.... அந்த நிமிடம் விஜய்க்குள் இருந்த அந்த கூச்சம் காற்றோடு கரைந்துபோனது..... அப்படியே அவனை கட்டிலில் கிடத்தி அவனை முழு நிறைவோடு அடைந்தேன்..... முழுவதுமாக அடைந்தேன்...... அன்றைய நாளை என்னால் மறக்க முடியாது..... பத்து மணி அளவில் வந்தவன், அவன் வீட்டிற்கு திரும்பும்போது பன்னிரண்டு மணியை தாண்டி இருந்தது.... இம்முறை அவன் என்னுடன் எதுவும் பேசவில்லை.... பொதுவாக நான் தான் அவனுடன் பேச தயங்குவேன், இம்முறை வெட்க மிகுதியால் செல்லும்போது கூட சிரிப்பை மட்டுமே உதிர்த்தவாறு சென்றான்......
அதன் பிறகு வாரத்தில் நான்கு நாட்களாவது எங்கள் உறவு பள்ளியில் ஏதேனும் ஒரு வகுப்பறையில் அரங்கேறும்..... இரண்டு மூன்று மாதங்கள் அவ்வளவு இனிமையான வாழ்க்கையை அதன் பிறகு நான் இதுவரை உணரவே இல்லை....

இந்த உலகத்தில் என்னைவிட சந்தோஷமானவன் வேறு யாருமில்லை என்று நான் உணர்ந்த அந்த நாட்களை இன்னும் நினைவு கூர்ந்து மகிழ்வேன்..... ஆனால் அப்போது எங்களை தற்காலிகமாக பிரித்தவர் ஐயப்பன்..... கடவுள் அய்யப்பனைத்தான் சொல்றேன்.... ஆம், சபரிமலை கோவிலுக்கு அவன் மாலை போட்டான்.... நாற்பது நாட்கள் விரதம் என்றதும் மனமுடைந்து போனேன்.... ஆனாலும் நானும் கடவுள் மீது நம்பிக்கை உள்ளவன் என்பதால் அமைதியாகிவிட்டேன்..... எப்போதாவது சந்தித்து பேசிக்கொள்வோம், மற்றபடி வேறு எதுவும் எங்களுக்குள் இல்லை..... அந்த நாற்பது நாட்கள் என்னை மிருகமாக்கியது..... நைட் ஸ்டடிகளில் என் வேலைகள் தொடங்கியது..... விஜய் கொடுத்த தைரியத்தால் வேறு சில நண்பர்களுடன் எனக்கு பழக்கம் உண்டானது..... சிலரை நான் தேடி சென்றேன், சிலர் என்னை தேடி வந்தனர்..... அந்த நாற்பது நாட்களும் விஜயின் பிரிவை நான் உணரவே இல்லாத அளவிற்கு புதுப்புது அனுபவங்கள் என்னை திசை திருப்பியது..... ஏழெட்டு நண்பர்களுடன், தினம் ஒருவன் என்று என் பதின வயதிற்கு விருந்து வைத்தனர்..... அந்த வயது என்னை வேறு திசையை நோக்கி சிந்திக்க வைக்கவில்லை..... எனக்கு அப்போதைய சிற்றின்பம் தான் தேவைப்பட்டதே தவிர, மற்ற எதைப்பற்றியும் யோசிக்க கூட என் மனம் விரும்பவில்லை..... நாற்பது நாட்களுக்கு பிறகு விரதம் முடிந்து பள்ளிக்கு வழக்கம் போல இரவு வந்தான் விஜய்..... அவன் பார்வையில் ஏக்கமும் காமமும் தெரிந்தது.... நானும் அவனை அனுபவிக்க ஆவலாகத்தான் இருந்தேன்.... இருந்தாலும் நான் சீக்கிரம் படுக்க சென்றேன்.... அங்கே ஏற்கனவே ஒரு நண்பன் படுத்திருந்தான்.... விஜய் வரும்வரை அவனை சீண்ட வேண்டாம் என்று உறங்க ஆயத்தமானேன்..... ஆனால், என் அருகில் படுத்திருன்தவன் என்னை சீண்டவே, நான் மறுக்க முடியாமல் அவனுக்கு ஒத்துழைத்தேன்...... எல்லாம் முடிந்து நான் கைகளை கழுவிவிட்டு மீண்டும் உறங்க முயன்றபோது விஜய் என் பக்கத்தில் வந்து படுத்தான்.... எனக்கு தர்ம சங்கடமான நிலைமை.... என்னால் அப்போதைக்கு அவனுடன் கலக்க முடியாது என்பதால் உறங்கிவிட்டதை போல நடித்தேன்.... அவன் கைகளை என் மீது போட்டான்..... ஆனால் எனக்கு அது பிடிக்கவில்லை..... நான் அவனை புறக்கணிப்பதை போல வேறு பக்கம் திரும்பி படுத்தேன்..... இந்த விஷயம் அவனை எந்த அளவிற்கு துன்புறுத்தி இருக்கும் என்பதை இப்போதுதான் உணர்கிறேன்.... அதுதான் அவனுடனான என் கடைசி இரவு என்பதையும் நான் அப்போது அறிந்திருக்கவில்லை.... அதன் பிறகு அவன் என்னை தொந்தரவு செய்யவில்லை... நானும் அவனை பொருட்படுத்தாமல் உறங்கிவிட்டேன்....  நள்ளிரவை தாண்டி எனக்கு விழிப்பு வந்தது.... இப்போது விஜயை ஒரு வழி பண்ணிடலாம் என்ற எண்ணத்தோடு திரும்பினால் அவனை அங்கு காணவில்லை..... எங்கு சென்றிருப்பான் என்று எனக்கு புரியவில்லை..... வெள்யே சென்று வேறு வகுப்பறைகளில் படுத்திருக்கிரானா என்று தேடினேன்.... எங்குமில்லை.....

அப்போது அங்கு படித்துக்கொண்டிருந்த என் நண்பனிடம், "எங்கடா விஜயை காணும்?..... டீ குடிக்க போயிருக்கானா?" என்றேன்..... அதற்கு அவன், "இல்லடா.... அவன் பதினொரு மணிக்கு வீட்டுக்கு போய்ட்டான்.... இருட்டுல ஏன் போறான்னு தெரியாமல், காலைல போடான்னு சொன்னேன்.... அவன் கேட்காமல் போய்ட்டான்" என்றான்.... அவன் எந்த அளவிற்கு மனம் நொந்திருப்பான் என்று எனக்கு புரிந்தது.... ஆனாலும் அதை அறிந்து அதை களைய எனக்கு தோன்றவில்லை.... காரணம், அப்போதைக்கு எனக்கு தேவைப்பட்டது அனுபவிக்க ஒரு உடல்.... விஜய் இல்லாவிட்டாலும் , அதை எனக்கு கொடுத்திட பலர் இருந்தனர்..... அதனால் விஜயை நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன்.....
அதற்கு பிறகு இருவரும் சிலநாட்கள் பேசிக்கொள்ளவில்லை......  பொதுவாக நான் உறவு கொள்ளும் நபர்களிடம் பெரும்பாலும் பேச்சு குறைந்துவிடும்.... அப்போதெல்லாம் நான் பெரிதாக கவலைப்பட மாட்டேன்.... ஆனால் விஜயுடன் பேசாமல் இருந்த நாட்களில் ஏதோ பெரிய இழப்பை சந்தித்தவனைப்போல காணப்பட்டேன் ..... எப்போதும் ஒருவித எரிச்சலுடனே இருந்தேன்.... விஜயுடன் பேசவேண்டும், பழகவேண்டும் , சண்டை போடவேண்டும் , பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று என்னென்னமோ தோன்றியது .... ஆனால் முன்பை போல எனக்கு அவன் உடல் இப்போதைக்கு பெரிதாக படவில்லை .... அதனால் நானாகவே வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு அவனுடன் பேச முற்பட்டேன்..... சிறிது தயக்கத்திற்கு பின்பு அவனும் என்னுடன் பழையபடி பேசினான்..... நான் பலருடனும் தொடர்பில் இருப்பது அவனுக்கு முன்னரே தெரியும், அவன் என்னை தவிர வேறு யாருடனும் தொடர்பில்லை என்பது எனக்கு தெரியும்.... இப்போது நாங்கள் பழகும் உறவிற்கு என்ன அர்த்தம் என்பது எங்கள் இருவருக்கும் புரியவில்லை.... அவன் நட்பு மட்டும் எனக்கு  தேவைப்படவில்லை, அதே நேரத்தில் அவன் உடல் மட்டும் எனக்கு தேவைப்படவில்லை.... நட்பினை தாண்டிய, காமத்திற்கு முந்தைய அந்த உறவிற்கு என்ன பெயர்?.... கே உறவுகளே பெரிய தவறு என்று நான் கருதிய காலம் அது.... எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் கே செயல்களில் ஈடுபட்டார் என்பதால் அவருடன் பேசவே நாங்கள் தயங்கிய நேரம் அது.... அந்த அளவிற்கு கே பற்றிய எந்த புரிதலும் எங்களுக்கு இல்லை.... அந்த நேரத்தில் நான் விஜய் மீது கொண்டுள்ள அந்த ஈர்ப்பை காதலாக என்னால் கருத முடியவில்லை.... நடைமுறை சாத்தியமில்லாத விஷயம் என்பதால் அந்த உறவிற்கு பெயர் சூட்டாமலே இருவரும் பழகினோம்..... அப்போதும் அவன் இரவு படிப்பதற்கு பள்ளிக்கு  வருவான்.... ஆனால் அதன்பிறகு நான் அவனை ஒருமுறை கூட உறவு கொள்ளவில்லை..... பள்ளியின் மூன்றாம் தளத்தில் அமர்ந்து சில நாட்கள் விடியும்வரை பேசுவோம்.... நிலவு வெளிச்சத்தில் நாங்கள் இருவரும் பேசிய அந்த நாட்கள் இன்றைக்கும் நீங்காத நினைவுகள்தான்..... பலவற்றை பற்றியும் பகிர்ந்துகொண்டோம்..... சில வாரங்கள் அப்படி கழிந்தது..... பொதுத்தேர்வு வந்தது..... அவனுடன் பேசக்கூட நேரமில்லாத அளவிற்கு மன அழுத்தம் இருந்த நாட்கள் அது.... ஆனாலும் அவ்வப்போது பேசிக்கொள்வோம்..... தேர்வுகள் முடிந்து கல்லூரியில் இணைந்த பிறகு எனக்கும் அவனுக்கும் இடையில் இருந்த அந்த பெயர் இல்லா உறவும் முற்று  பெற்றது..... என் நண்பர்களுக்கும் அவன் நண்பர்களுக்கும் இடையிலான இணைப்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது..... அப்போது அலைபேசியும்  புழக்கத்தில் இல்லை என்பதால் தொடர்பற்று போய்விட்டோம்..... என் முதல் வருட விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது அவன் வீட்டு பகுதியில் விசாரித்தேன்......

குடிபெயர்ந்த அவன் குடும்பம் அவர்களின் சொந்த ஊருக்கு போய்விட்டதாக அவர்கள் உறவினர்கள் கூறினார்கள்..... அதற்கு முன்பும் பின்பும் நான் பலருடன் தொடர்பில் இருந்தாலும் கூட இப்போதும் அவன் நினைவை என்னால் அகற்ற முடியவில்லை..... எவ்வளவோ முயன்றும் அவன் அலைபேசி எண்ணை கூட நான் கண்டுபிடிக்க முடியவில்லை..... எட்டு மாதங்களுக்கு முன்பு என் நண்பன் திருமணத்திற்கு சென்றேன்..... அங்கு நான் மீண்டும் விஜயை பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை..... ஆள் கொஞ்சம் கூட மாறவில்லை..... மீசை மட்டும் கொஞ்சம் வளர்ந்திருந்தது..... அவனை பார்த்த அதிர்ச்சியில் திகைத்து நின்றேன்..... வழக்கம்போல என்னை பார்த்த அவன் சிறு அதிர்ச்சியும் ஆகாமல் அவனுடைய வழக்கமான புன்சிரிப்பை உதிர்த்தான்..... அந்த திருமணத்தில் நான் அவனை எதிர்பார்க்கவே இல்லை..... என் பேச்சை எப்படி தொடங்குவது என்று எனக்கு தெரியவில்லை.... வழக்கம்போல அவனே தொடங்கினான்.... நானும் அவனும் விரிவாக பேச அது நேரமில்லை என்றாலும் அந்த ஐந்து நிமிடங்கள் எங்களுக்கு போதுமானதாக இருந்தது..... பரஸ்பர விசாரிப்புகளுக்கு பிறகு அவன் அலைபேசி எண்ணை கேட்டேன்..... கொடுத்தான்.... பதிலுக்கு அவன் என் எண்ணை கேட்பான் என்று எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்தான் மிச்சம்.... அவன் கேட்கவில்லை.... எல்லாவற்றையும் மறந்துவிட்டானோ என்று கொஞ்சம் மனம் வருந்தியது.... இருந்தாலும் நான் விடுவதாக இல்லை.... என் அலைபேசியிளிருந்து அவன் அலைபேசிக்கு அழைத்தேன்..... அவன் யாருடைய எண் என்று தெரியாமல் குழம்புவான் என்று நினைத்த எனக்கு வியப்பு.... காரணம் நான் அழைத்த மறுகணம் எண்ணை பார்த்து "எதுக்குடா கால் பண்ணின?" என்றான்..... என் எண் அவனிடம் எப்படி என்று புரியாம, "என் நம்பர் உனக்கு தெரியுமா?" என்றேன்.... அவன் அலைபேசி திரையை எனக்கு காட்டினான், அதில் என் பெயர் சேமிக்கப்பட்டுஇருந்தது.... ஆச்சரியத்துடன், "எப்போடா உனக்கு கிடச்சுது?" என்றேன்..... "ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி" என்று கூறிவிட்டு சிரித்தான்..... என் முகத்தில் அறைந்ததை போல இருந்தது அவன் பதில்.... இத்தனை வருடங்களாக அவனை தேடினேன், அவன் தொடர்பு எண்ணை தேடினேன்னு சொல்வதெல்லாம் என்னை  சமாதானப்படுத்திக்கொள்ளத்தான்...... அவன் எப்படியோ என் அலைபேசி எண்ணை வாங்கி வைத்திருக்கும்போது நான் நிச்சயம் தோற்றுவிட்டேன் என்றுதான் சொல்லணும்.... அவன் இரண்டு மாதம் கழித்து பொங்கலுக்கு  ஊருக்கு வருவதாக கூறினான்.... நான் அவன் எண்ணை வாங்கினேன் தவிர அவனிடம் என்ன பேசுவது? எதை பேசுவது? என்று புரியாமல் சில நாட்கள் பார்வட் மெசேஜ்'கள் மட்டும் அனுப்பினேன்.... பொங்கலுக்கு  இரண்டு நாட்களுக்கு முன்பு அவனுக்கு நான் குறுந்தகவல் அனுப்பினேன்.....

"ஹாய் விஜய்"
"ஹாய்டா"
"எங்க இருக்க?.... "
"சென்னைல"
"ஊருக்கு எப்போ வருவ?"
"பொங்கலுக்கு  அடுத்தநாள் அங்க பாட்டி வீட்டுக்கு வருவேன்..."
"வரும்போது மெசேஜ் பண்ணு.... உன்ன பார்க்கணும்"
"கண்டிப்பாடா"....

இதுதான் நானும் அவனும் கடைசியாக பரிமாறிய குறுந்தகவல் கூட..... போகி அன்று நான் வழக்கம் போல என் நண்பர்களை சந்திக்க போனேன்.... அப்போது கடையில் நின்ற ராஜேஷை கவனித்தேன்..... விஜயின் உற்ற நண்பன்..... அவனை பார்த்து பேசினேன்.... "என்ன ராஜேஷ்.... ஆளே பார்க்க முடியல..... விஜயை நம்ம ராஜா கல்யாணத்துல பார்த்தேன்.... அதுக்கு கூட நீயல்லாம் வரலயேப்பா..." என்றேன்...."ஆமா..... சிங்கப்பூர்ல  இருக்கேண்டா நான்.... இப்போதான் லீவுக்கு வந்தேன்.... விஜய் கூட இந்த லீவுக்கு இங்க வர்றதா சொன்னாண்டா" என்றான்.....
நான் அதை தெரிந்ததைப்போல காட்டிக்கொள்ளாமல், "ஓ அப்படியா?.... சரி சரி" என்று பேசிவிட்டு கிளம்ப போகும் முன் அவனிடம், "அடுத்து எப்போடா பார்க்கலாம்??" என்றேன்.....
"அடுத்து நிச்சயம் விஜய் கல்யாணத்துல பார்க்கலாம்" என்றான்.....
அதை கேட்ட நான் அதிர்ச்சியானாலும் அதை காட்டிக்கொள்ளாமல், "என்னடா சொல்ற?... அதுக்கு இன்னும் எத்தனை வருஷம் இருக்கோ" என்றேன்....
"இல்லடா..... இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள ஆகிடும்.... பொண்ணு கூட பார்த்துட்டாங்கடா.... கண்டிப்பா எல்லாரையும் கூப்பிடுவான்.... நீயும் வந்திடு" என்றான்.... அந்த கனம் நான் கட்டிவைத்த கனவு கோட்டைஎல்லாம் இடிந்து விழுந்தது.... அவன் பிடிபடாமல் குறுந்தகவல் அனுப்பியதன் நோக்கம் எனக்கு புரிந்தது.... அவன் கூறியதை போல பொங்கல் சமயத்தில் எனக்கு அவன் குறுந்தகவலும் அனுப்பவில்லை.... நானும் அவனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்..... இன்னும் சில மாதங்களுக்கு பிறகு அவனுக்கு திருமணம் ஆக இருக்கிறது.... அதற்குத்தான் இனி அவன் என்னை  அழைப்பான் என்றும் எனக்கு தெரியும்..... அரும்பும் முன்னரே கருகிய காதலாக மாறிவிட்டது....  ஆனாலும் அந்த நினைவுகளை இப்போது நினைத்து ரசிப்பது கூட ஒரு சுகமான சுமையாகத்தான் இருக்கிறது..... அவனை இனி மறக்க முடியுமா என்று எனக்கு தெரியவில்லை.... ஆனா நிச்சயம் வேறு ஒருவரை நினைக்க முடியாது என்பது மட்டும் தெரிகிறது.... கே உறவு என்பது உடல் உறவுக்கு அப்பாற்பட்ட உணர்வுகள் என்று தெரியாமல் நான் உண்டாக்கிய விரிசல்தான் இன்றைக்கு பெரியதொரு பிளவாக மாறிவிட்டது..... கரண்ட் கம்பத்தை காணும் நாய் காலை தூக்குவது போல, அழகான ஆண்களை பார்க்கும்போது  _ளை தூக்குவது மட்டும் கே அல்ல.... அதையும் தாண்டிய புனித உறவுகளும் உணர்வுகளும் இருக்கிறது என்று சொல்லாமல் சொன்ன என் காதலன் விஜய்தான் நான் எழுதிய இத்தனை கதைகளுக்கும் உயிர் கொடுத்தவன்.....  அந்த சூழலையும், சமுகத்தையும், என் வயதையும், ஹார்மோன்களையும் குற்றம் சொல்லிவிட்டு இதிலிருந்து நான் தப்பிக்க விரும்பவில்லை..... என் தவறுதான் பிரதானமானது..... என் தவறுக்காக அவனிடம் ஒரு "மன்னிப்பு" கேட்கும் சந்தர்ப்பத்தையாவது அந்த கடவுள் எனக்கு உருவாக்கி தருவார் என்று நம்புகிறேன்.... மன்னிக்கும் அளவிற்கு சிறிய தவறுகளை நான் செய்யவில்லை என்பதும் எனக்கு தெரிகிறது.... அவன் உடலை மட்டுமே ரசித்து அவன் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் விட்டது எவ்வளவு இழிவான செயல் என்று எனக்கு இப்போது தெரிகிறது.... ஆனால் இது காலம் கடந்த சிந்தனை.... இதனால் யாதொரு பயனும் இனி இல்லை.... அதற்கு பின்பு சிலருடன் எனக்கு ஈர்ப்பு உண்டானாலும் அவையெல்லாம் நிச்சயம் காதல் இல்லை என்பது இப்போதுதான் எனக்கு உணர்த்துகிறது விஜயின் நினைவுகள்.... இதுவரை என்றாவது எங்கள் காதல் வெல்லும் என்ற நம்பிக்கை எங்கோ என் மனதின் ஓரத்தில் இருந்தது..... அந்த நம்பிக்கையில் இருந்த நான், இனி மொத்தமாக என்னைவிட்டு விலகப்போகிறான் என்று நினைக்கும்போது மனது வலிக்கிறது..... என் கதையின் தலைப்பு போல காதல் - ஒரு வலி மிகுந்த சுகம்தான்..... விஜய்- என் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்தவன்.......

Monday, 2 July 2012

"கூடா நட்பு" - சரித்திர கதை.....









இடி விழுந்தால்கூட வெளியில் கேட்காத அளவிற்கு மரங்கள் பின்னி பினயப்பட்டது  போன்ற அடர்த்தியான காடு... அதன் நடுவில் மூங்கில் கம்புகளால் ஆன குடில் ஒன்று, அதை சுற்றியிலும் காவலுக்கு ஏழெட்டு போர் வீரர்கள்.... நன்றாக கவனித்து பார்த்தால், அதில் சிலரின் கைகளில் புலிக்கொடி பொறித்த வேல் கம்புகளும், மற்றவர்களின் கைகளில் மீன் முத்திரை பதித்த ஈட்டிகளும் இருக்க உள்ளே இருப்பவர்களுக்கு காவல் காப்பதைப்போல நின்றுகொண்டிருந்தனர்.... அந்த மூங்கில் குடிலுக்குள் என்னதான் நடக்கிறது என்று நாம் உற்றுநோக்கினால், அங்கு இரண்டு உடல்கள் உடலில் ஆடைகளின்றி பினைந்திருந்தன.... நன்றாக உற்றுநோக்கினால் அதில் ஒருவன் பாண்டிய நாட்டு இளவரசன் ஐந்தாம் வீரபாண்டியன்.... கறுத்த தேகமும், உடல் முழுக்க ஆண்மை ததும்பும் அழகும், பரந்த மார்பும், திமிறிய புஜங்களும் என்று ஊர் எல்லையில் நிற்கும் கருப்பண்ண சாமியை நினைவுபடுத்தின அவனது தோற்றம் ..... மேலும், அவன் அணிந்திருந்த முத்து மாலைகள், கறுத்த மார்புகளுக்கு இடையில் ஜொலிப்பது, இருள் சூழ்ந்த நாளில் பற்பல நட்சத்திரங்கள் மின்னுவதைப்போல காணப்பட்டது.... அவன் கண்களின் ஒளி கோபக்கனல்களை கக்குவதைப்போன்று எப்போதும் சிவந்து காணப்படும்.... ஆண்மை, அளவுக்கு மீறி திமிரி நிற்கும் அழகை காண்பவர்கள் ஒரு நிமிடம் திகைப்பது உறுதி.... இப்படிப்பட்ட ஆண்மகனுடன் படர்ந்திருப்பது அவனைவிட திறமையிலும், வீரத்திலும், அழகிலும் உயர்ந்த சோழ இளவரசன் விக்கிரமன்.... ஓரின சேர்க்கை என்பதை வாயால் கூட உச்சரிக்க அஞ்சிடும் அந்த காலத்தில், சிறு பிராயம் முதல் நட்பாக பழகி இன்று காதலர்களாக மாறி நிற்கும் இவர்களின் செயல்பாடுகள் பலரை அதிர்ச்சியாக்கினாலும், இளவரசர்கள் என்பதால் எதிர்த்து பேசிட எவரும் அஞ்சுவார்கள்.... விக்கிரம சோழனின் தேகமோ இளம் சிவப்பான , தொட்டால் கைகளின் தடம் பதியும் அளவிற்கு மென்மையானது..... விக்கிரமனின் கழுத்தில் மாட்டியிருக்கும் நவரத்தினங்களை காணும்போது, அந்தி நேரத்தில் மழை ஓய்ந்த நாளில்  தெளிவான மேகத்திற்கிடையில் காணப்படும் வானவில்லை போன்று வண்ணங்கள் மிளிர காணப்பட்டது.... விக்கிரமனின் கண்களில் ஒரு கருணை, ஒரு அன்பு எப்போதும் காணப்படும்.... பார்ப்பவர்கள் அனைவரையும் தன் வசம் ஆக்கிடும் நேர்த்தியான தெய்வீக பார்வை உடையவன்.... அத்தகைய விக்கிரமன் இப்போது வீரபாண்டியனின் மார்பினில் தலை வைத்து, தன் கைகளால் பாண்டியனின் தேகத்தை வருடிக்கொண்டிருந்தான்.... அந்த வருடலில் மயங்கிய நிலைமையில் இருந்த வீரபாண்டியன் விழித்துவிட்டான்.... எழுந்த பாண்டியன் விக்கிரமனின் முழு நிலவை போன்ற அந்த முகத்தை தன் கைகளால் பிடித்து நிமிர்த்தி, தேனில் திளைத்த சுவை மிகுந்த பழத்தை ஒத்த இதழ்களை மெல்ல தன் கைகளால் வருடினான்.... இன்னும் சிவப்பாகிய அந்த இதழ்களில் இப்போது தன் உதடுகளால் கோலமிட்டான்.... சுகம் உடல் முழுக்க பரவி, கண்களை மூடி இருந்தான் விக்கிரமன்.... அந்த நேரத்தில் வெளியில் நின்ற காவலர்களில் ஒருவன் அந்த கதவுகளை தட்டினான்.... கோபம் மிகுந்த வீரபாண்டியன் வேகமாக சென்று கதவை திறக்க, அவன் அனல் கக்கும் பார்வையில் சுட்டெரிக்கப்பட்டனர் அங்கு நின்ற காவலர்கள்.... கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக்கொண்ட ஒரு காவலன், "இளவரசே! இன்னும் சில நாழிகைகளில் சூரியன் சாய்கோணத்திற்கு வந்துவிடும்.... இப்போது புறப்பட்டால்தான் அந்தி சாயும் நேரத்திற்குள் நாங்கள் சோழ தேசம் சென்றடைய முடியும்... இளவரசரை நாங்கள் சரியான நேரத்தில் மாமன்னரிடம் கொண்டு சேர்ப்பிக்க வேண்டும் என்பது எங்களுக்கு மாமன்னர் இட்ட கட்டளை" என்று கூறிவிட்டு தலையை கவிழ்த்தபடி நின்றான் அந்த காவலன்.... இதை கேட்ட வீரபாண்டியன் சினம்  தனியாதவனாக அந்த காவலரை அடிக்க முனைய , நல்ல நேரத்தில் விக்கிரமன் பாண்டியனை சமாளித்துவிட்டு காவலர்களோடு சோழ நாட்டை நோக்கி விரைந்தான்.......
பாண்டிய இளவரசன் வீரபாண்டியனும், சோழ இளவரசன் விக்கிரமனும் இந்த அளவிற்கு நெருக்கமாகவும், காதலில் திளைக்கவும் காரணம் இருவரின் பெற்றோரும்தான்.... சோழ மன்னர் இரண்டாம் விமலாதித்தரும், பாண்டிய மன்னர் சுந்தர  பாண்டியனும் நெருங்கிய நண்பர்கள்.... உறவு முறைகளில் பெண் கொடுத்து பெண் எடுத்த நெருங்கிய உறவினர்கள்... அதனால் இந்த இளவரசர்கள் இருவருமே சிறு பிராயம் முதல் நல்ல நண்பர்களாக பழகினர்..... நாளடைவில் அது இருவருக்குள்ளும் அந்த நட்பினை தாண்டி காதல் படர்ந்தது எப்போதென்று இருவருக்கும் தெரியவில்லை.... இது தவறா? சரியா? என்று எண்ணிடும் மனநிலையில் இருவரும் இல்லை.... பதினெட்டு வயதே ஆகிடும் இந்த கட்டிளம்காளைகளுக்கு எவர்தான் கடிவாளம் போடமுடியும்?.... ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் வேட்டைக்கு செல்வது இருவருக்கும் வழக்கம்... அப்படி வேட்டை முடிந்த பின்னர், ஞாயிறு உச்சிக்கு வந்தவுடன், சிறிது களைப்பாற கட்டிவைத்த அந்த மூங்கில் குடிலுக்குள் இருவரும் காம லீலைகள் புரிந்தனர்..... அப்படி இருவரும் இப்போது சந்தித்துக்கொள்வது இம்முறையோடு பதினேழாம் திங்கள்.... இன்றும் இருவரும் எல்லாமும் முடிந்தபிறகு காம இச்சைகள் தனிந்தவர்களாக தத்தமது நாடுகளை நோக்கி பயணமானார்கள்.... ஊர் எல்லையில் இருக்கும் ஏரியில் குளித்துவிட்டு, அங்கு கம்பீரமாக நிற்கும் காளி தேவியை வணங்கிவிட்டு செல்வது விக்கிரமனின் வழக்கம்.... அன்றும் அப்படி காளி தேவியை வணங்கிவிட்டு நகருக்குள் நுழைந்தான் .... விக்கிரமனுக்கு எப்போதும் தான் இளவரசன் என்கிற கர்வம் துளியும் இருக்காது.... தன் ஐந்து அகவையிலேயே தாய் பார்வதி நாச்சியார் அவர்களை இழந்தவன் என்பதால், ஊர் மக்கள் எல்லோரும் இளவரசர் என்கிற மரியாதையை தாண்டி தங்கள் குடும்பத்திற்குள் ஒருவராய் விக்கிரமனை நினைப்பார்கள்.... விக்கிரமனும் அனைவரிடமும் மிகவும் கனிவோடும் பாசத்தோடும் பழகுவான்.... அன்று பவுர்ணமி நாள் என்பதால் விக்கிரமன் வரவிற்காக ஆங்காங்கே பலரும் காத்திருந்தார்கள்..... அனைவரும் விக்கிரமன் கம்பீரமாக குதிரையில் வருவதை பார்த்து, "சோழ இளவரசர், எங்கள் யுவராஜா விக்கிரம சோழர் அவர்கள் பல்லாண்டு வாழ்க.... பல்லாண்டு வாழ்க" என்று வாழ்த்து கோஷம் முழங்கினார்... அப்படி ஆங்காங்கே குழுமி இருந்த மக்களிடம் குதிரையில் இருந்து இறங்கி நலம் விசாரித்தும், தேவைகளை கேட்டறிந்தும் சென்றுகொண்டிருந்தான்... விக்கிரன் வேட்டையாடிய மான்களை முன்னால் சென்ற வீரர்கள் தூக்கி சென்றதை அங்கிருந்த சிறுவர்கள் அதிசயித்து பார்த்தனர்.... இப்படியாக நகரை வளம் வந்து விக்கிரமன் அரண்மனையை அடைந்தபோது அந்தி சாய்ந்து ஐந்து நாழிகைக்கு மேல் ஆகிவிட்டது..... அரண்மனை வாயிலில் தளபதி வெள்ளாளத்தேவன் பரபரப்பாக யாருக்காகவோ காத்திருந்ததை கவனித்த விக்கிரமன், தளபதியின் அருகில் சென்று, “என்ன தளபதியாரே, யாருக்காக இவ்வளவு கலக்கத்துடன் காத்திருக்கிறீர்கள்?.... போரிட யாரும் வருவதாக சொன்னார்களா என்ன?” என்று சிரித்தான்.... இன்னும் பதட்டம் விலகாத தளபதி, “இளவரசரே!... தங்களுக்காக மாமன்னர் அவர்கள் வெகுநேரமாக நந்தவனத்தில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்..... ஏன் இவ்வளவு தாமதம்?.... “ என்றார்.... “நான் என்ன சின்ன குழந்தையா தளபதியாரே?.... மன்னர் ஏன் இவ்வளவு கவலைப்படுகிறார்கள்?.... நகருக்குள் வரும்போது நம் நாட்டு மக்களிடம், நம் மாமன்னரின் ஆட்சியை பற்றியும், அவர்களின் தேவைகளை பற்றியும் குறிப்பறிந்து வந்தேன்.... அதனால் சிறிது தாமதம் ஆகிவிட்டது.... சரி வாருங்கள் இப்போதே போய் மன்னரை பார்க்கலாம்” என்று கூறிவிட்டு தளபதியுடன் நந்தவனத்திற்கு சென்றான்....
மன்னர் நந்தவனத்தில் வானில் உள்ள நிலவை பார்த்தபடியே ஏதோ குழப்பத்தில் நின்றிருந்தார்.... அருகில் சமஸ்தானத்தின் முக்கிய அமைச்சரும் , திறமை வாய்ந்த ராஜதந்திரியான வாகனூர் கிழார் நின்றுகொண்டிருந்தார்.... மன்னரை பார்த்த விக்கிரமன், “மாமன்னருக்கு அடியேனின் வணக்கங்கள்.... “ என்றான்.... திரும்பி பார்த்த மன்னர், விக்கிரமனை கண்டவுடன் மென்முறுவல் உதிர்த்தார்.... “விக்கிரமா!... நம் சோழ சாம்ராஜ்யத்தின் அடுத்த பட்டத்ததிபதி நீ தான்.... இன்னும் சிறுபிள்ளை போல நடந்துகொள்ளலாமா?...” என்றார் மன்னர்... “தந்தையே, தாங்கள் எதைப்பற்றி பேசுகிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை... நான் அப்படி செய்யத்தகாத காரியங்கள் எதுவும் செய்யவில்லையே?” என்றான் விக்கிரமன்.... “வீரபாண்டியனிடம் நீ பழகும்  விதம், முறை தவறி இருப்பதாக தெரிகிறது,,.... இதைப்பற்றி ஒரு தந்தையாக நான் உன்னிடம் கூறவே வார்த்தைகள் வர மறுக்கிறது.... சேரநாட்டு இளவரசி நந்தினி தேவியை உனக்கு மணம் முடிக்க சொல்லி சேரமான் இரும்பொறை தூதுக்கு மேல் தூதாக அனுப்பிக்கொண்டிருக்கிறான்.... நம் முன்னோர்கள் கரிகாலனைப்போல, சுந்தர சோழனை போல,ராஜராஜனை போல புலிக்கொடியை இந்த வையகம் முழுக்க பறக்க வைக்க உன்னால் மட்டும்தான் முடியும்.... அப்படி இருக்கையில், உன் முறை தவறிய செயல்களால் வரலாற்றில் நம் சோழ வம்சத்திற்கு நீங்காத பிழையை ஏற்படுத்தி விடாதே” என்ற மன்னரின் வார்த்தைகளில் எப்போதும் போல் அல்லாமல் சற்று கோபக்கனல் மிகுந்து காணப்பட்டது.... எல்லாவற்றையும் கேட்ட விக்கிரமனின் முகம் சுருங்கிப்போய்விட்டது, பவுர்ணமி நிலவாக  இருந்த விக்கிரமனின் முகம், பிறை சந்திரனாக மாறிவிட்டது.... “தந்தையே, சேரமன்னன் மகளை மணம் முடித்துதான் நம் சோழர் கொடியை உயர்த்திட வேண்டிய அவசியம் நம் சோழ சாம்ராஜ்யத்திற்கு ஏற்பட்டுவிடவில்லை ... எனக்கு உங்கள் ஆட்சியின் மீதும், என் திறமையின் மீதும், எல்லாவற்றையும்விட நம் சோழ நாட்டு வீரர்கள் மீதும் குறைவில்லாத நம்பிக்கை இருக்கிறது.... எத்தகைய பெரும் சேனைகள் வந்தாலும் அதை தவிடு பொடி ஆக்கிடும், மறக்குலத்தவர் நம் சோழ வீரர்கள்.... அதனால் அத்தகைய ஐயம் தங்களுக்கு வேண்டாம்.... மேலும், வீரபாண்டியனுடனான என்னுடைய உறவு நிச்சயமாக முறை தவறிய உறவல்ல.... நானும் அவனும் காதலர்கள்.... மொகாலய மன்னரான அலாவுதீன் கில்ஜியும், அவரின் தளபதியான மாலிக் கபூரும் எங்களைப்போன்று காதலர்கள்தான்.... வடக்கே தொடங்கிய அவர்களின் ஆளுகை தெற்கே பாண்டிய நாடு வரை ஆக்கிரமிக்கவில்லையா?.... அதைப்போல நானும் வீரபாண்டியனும் உலகம் போற்றும் ஆட்சியை நிர்மானிப்போம் தந்தையே” என்றான் விக்கிரமன்.... குழம்பிய மன்னர், “உங்கள் உறவை பற்றி விடு, அதைவிட முக்கியம் பாண்டிய மன்னர்கள்.... பாம்பின் பல்லின் விஷத்தைவிட, பாண்டியனின் நாவில் விஷம் அதிகம்..... சுந்தர பாண்டியன் மட்டும்தான் அதற்கு விதிவிலக்கு.... இந்த நேரத்தில் நமக்கு சேரனின் தோழமையும் வேண்டும்.... எல்லாவற்றையும் சிந்தித்து நல்லதொரு முடிவை எடு..... இப்போது செல்” என்றார் ..... “தந்தையே, நான் என் முடிவை சொல்லிவிட்டேன்..... இனி நான் கூறியதை வைத்து முடிவெடுக்க வேண்டியவர் தாங்கள்.... நல்ல முடிவை எடுத்து என்னிடம் தெரிவியுங்கள்” என்று கூறிவிட்டு தன் மாளிகையை நோக்கி விரைந்தான் விக்கிரமன்....
விக்கிரமன் அப்படி பேசிவிட்டு சென்ற திசையை வெறித்து பார்த்தபடியே நின்றார் மன்னர்.... மன்னரின் கண்களில் ஒரு கலக்கம் காணப்பட்டதை அறிந்த அமைச்சர் வாகனூர் கிழார், “மன்னரே, உங்கள் மனக்குழப்பம் எனக்கு புரிகிறது.... நம் இளவரசர் இன்னும் குழந்தைதான் மன்னா..... அவருக்கென்ற பொறுப்புகள் வந்துவிட்டால், எல்லாவற்றையும் உணர்ந்து செயல்படுவார்.... தாங்கள் அதற்காக வருந்த வேண்டாம்” என்றார்.... “இன்னும் எவ்வளவு காலம்தான் விக்கிரமன் குழந்தையாகவே இருப்பான் அமைச்சரே?... தாய் இல்லா பிள்ளை என்று கண்டிக்காமலே விக்கிரமனை வளர்த்ததன் விளைவு இப்போதுதான் புரிகிறது.... இவனின் செயல்களால் எப்படிப்பட்ட விளைவுகள் உண்டாகும் என்று நினைத்தாலே மனம் பதறுகிறது அமைச்சரே....” என்று மன்னர் பேச்சின் வருத்தத்தை உணர்ந்த வாகனூரார் , “இளங்கன்று பயமறியாது என்ற ஆன்றோர் சொல் இன்றுதான் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது..... எல்லாம் நன்றாகவே நடக்கும் மன்னா, தேவையற்ற கலக்கத்தை மனதிலிருந்து அகற்றிவிடுங்கள்....” என்ற ஆறுதல் வார்த்தைகளை மன்னர் ஏற்றபடி மாளிகையை நோக்கி சென்றார் மன்னர்..... தந்தையின் மீது கோபத்தில் தன் மாளிகைக்கு சென்ற விக்கிரமன், மனம் துவண்டு தன் மாளிகை மாடத்தில் நின்றபடி அருகில் இருந்த பூச்செடிகளை பார்த்துக்கொண்டிருந்தான்.... அந்த பூச்செடிகளுக்கு அருகில் ஒரு கருப்பு உருவம் நிற்பதை போல இருந்தது.... விக்கிரமனை பார்த்து சிரித்த அந்த உருவத்தின் பற்கள், வானில் ஜொலித்த நட்சத்திரங்களை ஒத்திருந்ததை கண்டபோதுதான் அது வீரபாண்டியன் என்பதை உணர்ந்தான் விக்கிரமன்.... உடனே முகமெல்லாம் புன்னகையுடனும், மனமெல்லாம் மகிழ்ச்சியோடும் அந்த இடத்தை நோக்கி ஓடி, அந்த உருவத்தை தொட்டபோது அது கானல் நீரை போன்று மறைந்துவிட்டது..... இது இன்று மட்டுமல்ல வெகு நாட்களாகவே நடக்கும் ஒன்றுதான்.... வீரபாண்டியனின் நினைவுகள் விக்கிரமனை ஒவ்வொரு நொடிப்பொழுதும் ஆட்கொண்டு ஆட்டிப்படைத்தது.... அருகில் வீரபாண்டியன் இருப்பதைப்போல உணர்வதும், அருகே சென்றால் மறைவதும் என்று விக்கிரமனை இந்த காதல் படுத்திய பாடு எழுத்துக்களால் வடிக்க முடியாத உணர்வுகள்.... சோகமும் ஏமாற்றமும் நிறைந்த மனதோடு அங்கு விரித்திருந்த பட்டு மஞ்சத்தில் படுத்தான்..... உடலெங்கும் ஆங்காங்கே வீரபாண்டியன் பதித்த தழும்புகள் மெல்லிய வலியை உண்டாக்கியது..... அவன் அன்றைய பொழுதில் விக்கிரமனை கடித்த தழும்புகள் இன்னும் சிவப்பு நிறம் மாறாமல் அவனின் லீலைகளை நினைவுபடுத்தின..... வீரபாண்டியனின் வாசம், அவனின் தழுவல், அவனுடைய வெப்பம் என்று எதுவுமே வேறு எந்த விஷயத்தாலும் ஈடுகொடுக்க முடியாதவை.... தன் உதடுகளை வருடிய விக்கிரமன், அதில் வீரபாண்டியன் பதித்த முத்தங்களை நினைத்து ரசித்தான்.... அப்படியே அவன் நினைவுகளில் தூங்கிப்போய் விட்டான்.... அடுத்த சிலநாட்களும் இந்த பனிப்போர் மன்னருக்கும் விக்கிரமனுக்கும் இடையே நடந்துகொண்டிருந்தது.... அன்றொருநாள் விக்கிரமனை சந்திக்க வாகனூர் கிழார் வந்திருந்தார்.... அவரை வணங்கிய விக்கிரமன், “என்ன ராஜ தந்திரியாரே இவ்வளவு தூரம்?... முக்கியமான விடயம் ஏதேனும் உண்டா?” என்றான்.... “ஆம் இளவரசே... மீண்டும் சேர மன்னனிடமிருந்து தூது வந்திருக்கிறது” என்றார் கிழார்.... “என்ன விடயமாக?” என்ற விக்கிரமனின் கண்கள் கோபத்தில் அகண்டன... “தங்களுக்கு அவர்களின் இளவரசியை மனம் முடிக்க இறுதி தூது அனுப்பி இருக்கிறார் இரும்பொறை..... மன்னர் இதைப்பற்றி தாங்களே கூறி அனுப்பும்படி கூறிவிட்டார்” என்ற கிழார், வெளியில் நின்ற தூதுவனை அழைத்தார்.... விக்கிரமனை வணங்கிய சேர தூதுவன், “சோழநாட்டு யுவராஜருக்கு வணக்கம்.... தங்கள் முடிவை அறிந்து வரும்படி சேரமான் அவர்கள் என்னை இங்கு அனுப்பி வைத்தார்கள்” என்றான்..... “உங்கள் இளவரசி அவ்வளவு அழகானவரா?” என்றான் விக்கிரமன்..... “அதில் எள் அளவும் ஐயம் வேண்டாம் இளவரசே.... மாசற்ற பொன்னை போன்றவர், மாறிலா அழகை கொண்டவர், மாற்றிலா உள்ளம் கொண்டவர்.... மூவுலகமும் காணாத பேரழகை உடையவர்.... காண்போர் கண்கள் சிமிட்டாமல் கண்ணீர் வரும் அளவிற்கு பேரழகி அவர்....” என்று தூதுவன் சொன்ன வார்த்தைகளை கேட்ட இடியென சிரித்தான் விக்கிரமன்.... இளவரசனின் சிரிப்பிற்கு அர்த்தம் புரியாத தூதுவனும், வாகனூராரும் விழித்தனர்..... “எதற்காக மன்னா தாங்கள் சிரிக்கிறீர்கள்? என்றான் தூதுவன்.... சிரிப்பை நிறுத்திய விக்கிரமன், “இவ்வளவு பெரிய பேரழகிக்கு பொருத்தமாக உங்கள் சேர நாட்டில் ஒரு ஆண்மகன் கூடவா இல்லை?.... மூவுலகமும் வியக்கும் அழகை உடைய உங்கள் இளவரசிக்கு இந்த சோழநாட்டை தவிர வேறு வரன் கிடைக்கவில்லையா?.... உங்கள் சேரமானிடம்  போய் கூறு, இன்னும் ஆயிரம் முறை தூது அனுப்பினாலும் உங்கள் இளவரசியை மணக்க நான் சம்மதிக்க மாட்டேன் என்று” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியே சென்றுவிட்டான் விக்கிரமன்..... இந்த வார்த்தைகளை சிறிதும் எதிர்பார்க்காத அமைச்சர் திகைத்து நின்றார்..... இதை கேட்ட தூதுவன், சிறிதும் தாமதிக்காமல் அங்கிருந்து வெளியேறிவிட்டான்..... நடந்த விடயங்கள் அனைத்தையும் மன்னரிடம் அமைச்சர் தெரிவித்ததும், மன்னர் மிகவும் வருத்தத்திற்கு உள்ளானார்....  விக்கிரமனை நினைத்து வருந்தி வருந்தியே மன்னரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.... வைத்தியர்கள் பலரும் பல மருந்துகள் கொடுத்தும், மன்னரின் உடல் நலம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருந்தது.... உடலின் குறைபாட்டை மருந்துகளால் குணப்படுத்திவிடலாம்..., மனதின் வருத்தங்களை எந்த மருந்தால் குணப்படுத்த முடியும்.... அதனால் சோழநாட்டின் பிரதான சோதிடர் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார்.... சோதிடம் கணிப்பதிலும், நடக்க இருக்கும் நல்ல மற்றும் துன்ப நிகழ்வுகளையும் கணிப்பதில் இவர் சிறந்தவராக சோழ நாட்டை தாண்டியும் அறியப்பட்டவர்.... மன்னரின் சோதிட குறிப்புகளையும், இளவரசரின் சோதிட குறிப்புகளையும் கவனித்த சோதிடர், வெகுநேரமாக சோழிகளை உருட்டி கணித்தார்.... இறுதியாக மன்னரை பார்த்த சோதிடர், “மன்னர் மன்னா, தங்களின் குறிப்புகள் மிகவும் நன்றாக இருக்கிறது..... இன்னும் எட்டு ஆண்டுகளுக்கு உங்களை அந்த எமதர்மன் எட்டிக்கூட பார்க்க மாட்டான்.... ஆனால் இளவரசரின் குறிப்புகள்......” என்று இழுத்தார்..... பதறிய மன்னர், “விக்கிரமனுக்கு என்ன ஆகும்?.... அவன்தான் முக்கியம்..... அதை முதலில் கூறுங்கள் சோதிடரே” என்றார்..... “இளவரசருக்கு ராகு திசையோடு, அஷ்டம சனியும் இணைந்துள்ள நேரமிது..... உயிருக்கே ஆபத்தான நிலைமை கூட இளவரசருக்கு வரலாம்.... கவனமும், கடவுள் அருளும் மட்டுமே இதிலிருந்து அவளை மீட்டெடுக்க வைக்க முடியும்....” என்ற சோதிடரின் வார்த்தைகளை கேட்ட மன்னர் திகைத்து நின்றார்..... முகமெல்லாம் வியர்த்து, வெளிரிப்போனது..... இதைக்கண்ட சோதிடர், “கலக்கம் வேண்டாம் மன்னா..... காளி தேவிக்கு சிறப்பான யாகங்களும், கால பைரவனை வழிபட்டாலும் இதிலிருந்து நிச்சயம் மீட்டுக்கொள்ளலாம்....” என்ற வார்த்தைகள் மன்னரை கொஞ்சம் நிம்மதி அடைய வைத்தது..... உடனே மன்னரின் கட்டளையால் காளி தேவிக்கு ஆயிரம் அர்ச்சர்கள் யாகம் நடத்த, பல மிருகங்களை பலி கொடுத்தும் பூசைகள் செய்தனர்..... மன்னர் கொஞ்சம் மன நிம்மதி அடைந்து இருந்த நேரம்..... அன்று பவுர்ணமி, வேட்டைக்கு விக்கிரமன் ஆயத்தமாவதை அறிந்த மன்னர் மீண்டும் கலக்கத்தில் ஆட்பட்டார்..... விக்கிரமனை தேடி சென்ற மன்னர், “விக்கிரமா!... இன்று நீ வேட்டைக்கு செல்ல கூடாது....” என்றார்.... “எதற்காக தந்தையே?..... ஏன் இந்த திடீர் கட்டளை?” என்றான் விக்கிரமன்.... “சோழநாட்டை போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நேரமிது.... இத்தகைய நேரத்தில் நீதான் இங்கிருந்து நம் சேனைகளை தயார் படுத்த வேண்டும்” என்றார் மன்னர்.... “என்ன சொல்கிறீர்கள் மன்னா?.... நம் நாட்டின் மீது படையெடுக்க யாருக்கு வீரம் பிறந்தது.... நம் சேனைகளையும், வீரத்தையும் அறிந்த பின்னர் ஒருவன் நம்முடன் போருக்கு வருவானா என்ன?” என்றான் விக்கிரமன்.... “இல்லை விக்கிரமா.... நம் மீது போர் தொடுக்க உள்ளவன் சாதாரண ஆள் இல்லை.... சேரமான் இரும்பொறை.... நம் சேனைகளுக்கு நிகரான படை வலிமை கொண்டவன்.... எதிரியை எப்போதும் குறைவாக மதிப்பிடாதே.... அதுவே நம் குறையை நிறைவாக நம்மிடம் காட்டி நம்மை ஏமாற்றிவிடும்” என்றார் மன்னர்.... “சரி தந்தையே.... ஆனால், இன்று நான் காட்டிற்கு சென்றே ஆகவேண்டும்.... சேரமான் போருக்கு வந்தால், நமக்கு உதவிட பாண்டியனிடம் கேட்டுக்கொள்வதற்காகவாவது நான் இன்று செல்ல வேண்டும்” என்று கூறிய விக்கிரமன், மன்னன் எவ்வளவோ கூறியும், அவற்றை மறுதளித்துவிட்டு வேட்டைக்கு கிளம்பினான்.....
மனம் வருத்தத்தில் வெளியில் சொல்ல முடியாத கவலையில் ஆழ்ந்தார் மன்னன்.... ஒவ்வொரு முறை வேட்டைக்கு செல்லும் முன்னரும், திரும்பும் போதும் செல்லும் காளி கோவிலுக்கு சென்று வழிபட்டான் விக்கிரமன்.... காளி தேவிக்கு தீப ஆராதனை செய்துவிட்டு படபடப்போடு வெளியே வந்தார் பூசாரி..... பூசாரியின் முகத்தின் கலக்கத்தை கவனித்த விக்கிரமன் கலக்கத்திற்கான காரணத்தை வினவினான்.... தயங்கியபடியே பேசிய பூசாரி, “சோழ பேரரசின் தீரமிகு இளவரசரே, தாங்கள் இன்று வேட்டைக்கு செல்ல வேண்டாம்.... ஏதோ ஆபத்து உங்களை ஆட்கொள்ள இருப்பதாக உணர்கிறேன்.... காளி தேவியின் கழுத்தில் போடப்பட்ட மலர் கோவை தீபாராதனை காட்டியபோது தவறி விழுந்தது.... இது இந்த கோவிலை பொருத்தவரை துர்சகுனமாக கருதப்படும் ஒன்று..... வேண்டாம் இளவரசே, உங்கள் பயணத்தை காளி தேவி விரும்பவில்லை....” என்று கூறிவிட்டு அமைதியாக வியர்க்க விறுவிறுக்க நின்றார்..... சிறிய நிதானத்திற்கு பிறகு, பூசாரியிடம் எதுவும் சொல்லாமல் வெளியே வந்தான் விக்கிரமன்.... குழம்பிய பூசாரி, “இளவரசே, அரண்மனைக்குத்தானே செல்கிறீர்கள்?.... காளியின் கட்டளையை ஏற்காமல் வேட்டைக்கு செல்ல வேண்டாம்” என்று மன்றாடினான்.... அனல் கக்கும் பார்வையுடன் திரும்பிய விக்கிரமன் "பூசாரி, போதும் நிறுத்து..... ஆபத்து வரப்போகிறது என்று சொல்வதற்கு காளி தேவி தேவையில்லை, சோதிடர் போதும்.... எத்தகைய ஆபத்தையும் கானல் நீராக மறையவைக்கும் சக்தி படைத்தவள் நம் காளி தேவி.... அவள் என்னுடன் இருக்கும்வரை நான் எத்தகைய ஆபத்தையும் சந்திக்க தயார்...."என்று கூறிவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்து குதிரையை நோக்கி நடந்தான் விக்கிரமன்.... அப்போது அருகில் வந்த காவலர்களில் ஒருவன், "இளவரசரே, ஏற்கனவே தங்களுக்கு ஆபத்து இருப்பதாக வளநாடு சோதிடர் கூறியதாக சோழநாடெங்கும் பேச்சாக இருக்கிறது, இந்நிலையில் காளி கோவிலிலும் எங்கள் கண் முன்னே துர்சகுனம் ஏற்பட்டுள்ளதாக பூசாரி கூறுகிறார், இதையும் தாண்டி நாம் காட்டிற்கு செல்ல வேண்டுமா இளவரசரே?" என்றான்..... இன்னும் கோபத்தில் கண்கள் சிவக்க, "மன்னர் நடத்திடும் நாடகத்தில் நீங்களும் அங்கத்தினரா?..... எத்தகைய தடங்கல் வந்தாலும் இன்று நான் வேட்டைக்கு செல்வது உறுதி..... உயிருக்கு அஞ்சிடும் கோழைகள் மீண்டும் நகருக்குள் செல்லுங்கள்....." என்று கூறிவிட்டு குதிரையில் ஏற முயன்றான் விக்கிரமன்....  எப்போதும் அமைதியாக நிற்கும் இளவரசரின் குதிரை, அன்று முரண்டு பிடித்தது.... பொறுமை இழந்த விக்கிரமன், "அகிலா! நீயுமா?.... எவர் வந்தாலும் வராவிட்டாலும் நீ என்னுடன் இறுதிவரை இருப்பாய் என்று எண்ணினேன்.... என் எண்ணங்களில் மண் இறைத்துவிட்டாய்.... நான் செல்கிறேன்" என்று கூறிவிட்டு நடக்க தொடங்கினான் விக்கிரமன்..... சில அடிகள் வைத்த விக்கிரமனை பின்தொடர்ந்த குதிரை, அவனிடம் மன்னிப்பு கேட்பதைப்போல குனிந்து நிற்க, நெகிழ்ந்த விக்கிரமன் குதிரையை உச்சி முகர்ந்து விட்டு அதில் ஏறி பயணிக்க தொடங்கினான்.....
விக்கிரமனும் காவலர்களும் அந்த மூங்கில் குடிலை அடைந்தபோது அங்கு ஏற்கனவே வீரபாண்டியன் வந்திருப்பதை கண்ட விக்கிரமன், மனதில் புன்னகையோடு உள்ளே நுழைந்தான்..... உள்ளே நுழைந்த விக்கிரமனை சிறிதும் தாமதிக்காமல் பின்னால் நின்றபடியே கட்டிப்பிடித்தான் வீரபாண்டியன்..... "எவ்வளவு நாழிகை உனக்காக காத்திருந்தேன் தெரியுமா?.... ஒவ்வொரு பவுர்ணமி நாள் அன்றும், உன்னை காண்பதற்காக ஒரு திங்கள் காத்திருக்க வேண்டும் என்ற வருத்தத்தை எல்லாம் உன்னை பார்த்ததும் மறந்துவிட்டேன் விக்கிரமா.....உன் உடலை வருட, இதழை சுவைக்க, உடலோடு புணர காத்திருந்த நேரமெல்லாம் உன் நினைவைவிட வேறு எதுவும் என்னை பாதித்துவிடவில்லை...." என்று கூறிவிட்டு விக்கிரமனின் முகத்தை பார்த்த வீரபாண்டியன் பதறியவனாக,"உயிருக்கு உரியவனே!... இத்தனை நாட்கள் கழித்து உன்னை பார்த்திட, மிகுந்த ஆவலுடன் வந்த என்னை உன் முகம் வேதனைகொள்ள வைக்கிறது.... எப்போதும் ஞாயிறு அனைய கதிர்களாய் சுடர்விடும் உன் முகம் இப்போது, காரிருள் மொய்த்த இருளாய் காணப்படுவது ஏன்?.... உன் மனதினுள் உள்ள வருத்தத்திற்கு காரணம் என்ன?" என்று விக்கிரமனின் கன்னத்தை வருடியபடி கேட்டான் வீரபாண்டியன்.... "எல்லாம் நம் உறவை பற்றிய சிந்தனைதான் பாண்டியா..... நம் புனிதமான உறவை மற்றவர்களுக்கு எத்தகைய வடிவில் உணரவைக்க முடியும்?.... எப்போது நம் காதல் பூர்த்தியாகும் ?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தான் விக்கிரமன்....வெடித்து சிரித்த வீரபாண்டியன், "இதுதான் உன் வருத்தத்திற்கு காரணமா?.... உனக்காக நான் நாடு, பதவி, மக்கள், என்று எதையும் துறக்க நான் தயார்..... அதைப்பற்றி நாம் இப்போது பேச நேரமில்லை, அதைவிட முக்கிய வேலைகள் இப்போது இருக்கின்றன " என்று கூறிவிட்டு விக்கிரமனின் இதழ்களில் கைவைத்து, இலஞ்சிவப்பான உதடுகளை இன்னும் சிவப்பாக்கினான்.... கவலைகளை மறந்த விக்கிரமனும் அன்றைய இணைவுக்கு ஆயத்தமானான்.... இதழோரம் உள்ள தேனினும் இனிய சாறை பருகி இன்னும் தன் உடலை சூடாக்கினான் வீரபாண்டியன்....  களவு முடிந்து வழக்கமான காம மயக்கத்தில் திழைத்திருந்தனர்  இருவரும்....  எல்லாம் முடிந்து மீண்டும் பயணத்திற்கு தயாரானபோது தான் கொண்டுவந்திருந்த குடுவையை விக்கிரம்னிடம் கொடுத்தான் வீரபாண்டியன்..... "என்ன இது பாண்டியா?" என்று வினவினான்.... "இது அரபு நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட பழச்சாறு...... மெல்லிய போதை தரும் மது வகை..... குடித்துப்பார்... வானத்தில் பறப்பதை போல உணர்வாய்" என்றான்..... மிகுந்த உற்சாகத்துடன் அதை வாங்கி பருகினான் விக்கிரமன்.... அப்போது தலை சுற்றுவதைப்போலவும், தடுமாறியதைப்போலவும் உணர்ந்த விக்கிரமன், மஞ்சத்தில் விழுந்தான்..... மூர்ச்சையாகிவிட்ட விக்கிரமன்,கண் விழித்து பார்க்கையில் எல்லாம் அவனுக்கு வித்தியாசமாக தெரிந்தது..... இப்போது தான் புல் மற்றும் பச்சை தழைகளால் ஆன படுக்கையில் கிடந்தான்....நெற்றியில் பச்சிலை பூசப்பட்டிருந்தது.... சுற்றிலும் உடல் முழுக்க விபூதிகள் பூசப்பட்டு, கழுத்திலும், உடலிலும் மனித எழும்புகளால் ஆன மாலைகள், தலை முழுக்க ஜடாமுடி என்று பார்த்ததும் அவர்கள் 'கபாலிகர்கள்' என்பதை உணர்ந்தான்..... என்ன நடந்தது? தான் எங்கிருக்கிறோம்? என்று முழுமையாக உணரமுடியாமல் படுத்திருந்த விக்கிரமன் கொஞ்சம் எட்டிப்பார்த்தான்..... அங்கு ஒரு மரத்தில் வீரபாண்டியன் பினைக்கப்பட்டிருந்தான்.....  அவனருகில் முட்டி இட்டபடி இருபதிற்கும் மேற்பட்ட பாண்டிய வீரர்கள் கைகளில் கயிற்றால் பினைக்கப்பட்டிருன்தனர்..... மற்றொரு பக்கம் தன்னுடன் வந்த சோழ வீரர்கள் காயங்களுக்கு பச்சிலை மருந்து தடவிக்கொண்டிருந்தனர்.... பதற்றத்துடன் எழுந்த விக்கிரமன், மிகுந்த கோபத்துடன் "கபாலிகர்களே! என் வாளுக்கு இரையாக வேண்டுமா நீங்கள்?.... எதற்காக வீரபாண்டியனையும் அவன் ஆட்களையும் கட்டிவைத்திருக்கிறீர்கள் ?.....உடனே அவர்களை அவிழ்த்துவிடுங்கள்" என்று கூறிவிட்டு தன் வாளை உருவினான்..... அப்போது விக்கிரமன் முன் வந்து நின்ற ஒரு கம்பீரமான கபாலிகன், விக்கிரமனை வணங்கிவிட்டு, “இளவரசரே, தாங்கள் கட்டளையிட்டால் அந்த கயவர்களை நிச்சயம் நாங்கள் விடுவிக்கிறோம்.... ஆனால் அது உங்கள் வாள் வீச்சிற்கு அஞ்சி அல்ல, சோழ பேரரசின் மீதுள்ள பற்றால்..... “ என்று கூறிவிட்டு வீரபாண்டியனையும் அவன் ஆட்களையும் விடுவித்தார் அந்த கபாலிகர்..... “சோழ பேரரசின் மீது பற்றுள்ள நபர்கள் செய்யும் செயலா இது?.... நம் நாட்டின் எல்லைக்குள் வந்த விருந்தினருக்கு தாங்கள் கொடுக்கும் மரியாதையா இது?” என்று அந்த கபாலிகர் கூட்டத்தை பார்த்து கேட்டான் விக்கிரமன்.... அப்போது ஆற்றாமையோடு ஒரு கபாலிகன், “இளவரசே, இந்த கயவர் கூட்டமா நம் நாட்டு விருந்தினர்கள்?.... எதிரியாக இருப்பவன்கூட நேருக்கு நேர் போரிட்டுத்தான் இதுவரை மாண்பாக கருதப்பட்டது.... ஆனால், உங்களை மூர்ச்சையடைய வைத்து , தங்களின் கரங்களையும் கால்களையும் கயிற்றால் பிணைத்து தூக்கி சென்றதை பார்த்தபிறகும் இந்த கயவர் கூட்டத்தை நாங்கள் உயிரோடு வைத்திருப்பதே தங்களின் உத்தரவிற்காகத்தான்..... “ என்றான்..... விக்கிரமன் ஒரு நிமிடம் யோசித்தான்..... தான் அந்த பழச்சாறு குடித்தபிறகு என்ன நடந்தது? என்று எவ்வளவோ நினைவுபடுத்த முயன்றும் நினைவிற்கு கொண்டுவர முடியவில்லை..... விக்கிரமன் யோசிப்பதை கவனித்த வீரபாண்டியன், “விக்கிரமா, இந்த கபாலிக கூட்டம் சொல்வதை நீ நம்புகிறாயா?.... ,மனித உயிரின் மதிப்பு தெரியாமல் கடவுளின் பெயரை சொல்லி நரபலி கொடுத்து, காட்டிற்குள் வருவோரை வழிப்பறி செய்தும் பிழைக்கும் இந்த நபர்கள் சொல்வதை நம்புகிறாயா?” என்றான்..... விக்கிரமன் அத்தனை நேரம் யோசித்த எண்ணங்களையும் வீரபாண்டியனின் அந்த அனுதாபப்பார்வை தவிடுபொடி ஆக்கியது...... வீரபாண்டியன் சொன்னதை கேட்ட கபாலிகர் தலைவன், “போதும் நிறுத்தடா...... கொலையே செய்தாலும், அதை நாங்கள் மறைத்தோ மறுத்தோ பேசும் இரட்டை நாக்கு எங்களுக்கில்லை.... கால பைரவனின் பிள்ளைகளாக இந்த காட்டில் மட்டும் ஆயிரக்கணக்கான கபாலிகர்கள் இருக்கிறோம்..... இதுவரை ஆண்ட மன்னர்கள் எல்லாம் எங்களை ஒழிக்க பார்த்தார்கள்.... ஆனால், எங்கள் விமலாதித்த சோழர் பெருமகனார் மட்டும்தான் எங்களை மனிதனாக மாற்றினார்.... எங்களுக்கு தேவையானவற்றை மன்னரே செய்கிறார்.... இப்போதெல்லாம் நாங்கள் வழிப்பறியோ , நரபலியோ கொடுப்பதில்லை..... இப்போது கூட தங்களுக்கு ஆபத்து நேர இருக்கிறது என்று மன்னர் மூலம் வந்த செய்தியால் இங்கு வந்தோம்..... அந்த கால பைரவன் மட்டும் எங்களை சரியான நேரத்திற்கு இங்கு சேர்ப்பிக்காதிருந்தால் இளவரசை காப்பாற்றி இருக்கும் பெரும்பேறு எங்களுக்கு கிடைத்திருக்காது...... “ என்று கூறியதை கேட்ட விக்கிரமன் கொஞ்சம் கோபத்துடன், “இப்போதுதான் புரிகிறது, இதெல்லாம் என் தந்தையின் நாடகம் தான்.... என்னையும் வீரபாண்டியனையும் பிரித்திட அவர் செய்யும் சூழ்ச்சிதான் இது.... பாண்டியா! நீ செல்.... நான் இதைப்பற்றி என் தந்தையுடன் பேசிக்கொள்கிறேன்” என்று கூறினான்....  அப்போது அங்கு நின்ற சோழ வீரன் ஒருவன், “இளவரசே, கபாலிகர்கள் சொல்வது உண்மைதான்..... எங்களையெல்லாம் தாக்கிவிட்டு தங்களை தூக்கி சென்றது பாண்டிய நாட்டவர்கள்தான்” என்றான்..... கோபமடைந்த விக்கிரமன், “போதும் நிறுத்து..... யார் எதை செய்திருப்பார்கள் என்று நீ எனக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டாம்.... அனைவரும் சோழ நாட்டு மன்னருக்கு அளவுக்கதிகமான விசுவாசத்தோடு இருக்கிறீர்கள்..... உங்களிடம் இனி வேறு பேச்சு கிடையாது” என்று கூறிவிட்டு தன் குதிரையில் ஏறி அரண்மனை விரைந்தான்.... அன்று உடல் முழுவதும் வலியாகவும், களைப்பாகவும் இருந்ததால் நேராக தன் மாளிகைக்கு சென்று உறங்கிவிட்டான் விக்கிரமன்... மறுநாள் காலை இதுபற்றி தந்தையிடம் கேட்கவேண்டும் என்று எண்ணியபடியே உறங்கினான்.... இதற்கிடையில் நடந்த நிகழ்வுகளை விக்கிரமனுடன் வேட்டைக்கு சென்ற வீரர்கள் மன்னரிடம் தெரிவிக்க மன்னர் மிகவும் வருந்தினார்.... நாளுக்கு நாள் விக்கிரமனின் பிடிவாதமும், போக்கும் எத்தகைய விளைவுகளை உண்டாக்குமோ? என்ற அச்சத்தில் மனம் நொந்து இருந்தார்..... மறுநாள் காலை தாமதமாக எழுந்த விக்கிரமன், சிறிதும் கோபம் குறையாமல் நீராடிவிட்டு மன்னரை காண அரண்மனை சென்றான்.... எப்போதும் போல் அல்லாமல் அன்று சபை தீவிரமாக எதையோ விவாதித்துக்கொண்டிருந்தது.... மன்னர், ராஜ தந்திரியார், தளபதி, பிரதம அமைச்சர்கள், வளநாடு சோதிடர்,  இவர்களோடு இன்னும் சில நபர்களும் அங்கிருந்தனர்.... மிக முக்கியமான தருணங்களில் மட்டுமே இவ்வாறு அவசர கூட்டங்கள் போடப்படும்...... மன்னரை வணங்கிய விக்கிரமன் தன் இருக்கையில் அமர்ந்தான்..... அனைவரும் எதைப்பற்றி விவாதிக்கிறார்கள் என்று கவனித்தான்.... ஏதோ போர்தொடர்பாக பேசுகிறார்கள்... அப்படியானால், சேரன் போருக்க வரப்போகிறானா?... வரட்டும், வந்து நம் வாளுக்கு இரையாகி போகட்டும் என்று உள்ளுக்குள் சிரித்தான்.... ஆனாலும், சேரனுக்காக இவ்வளவு கலக்கம் அடையக்காரணம் என்ன?.... சேரனைவிட படை வலிமையிலும், போர் திறத்திலும் வல்லவர்கள் நாம் என்று நாடறிந்த விஷயம் எனும்போது, இந்த பெரியவர்களின் தயக்கத்திற்கு காரணம் என்ன? என்றெல்லாம் சிந்தித்த விக்கிரமனை விளித்த மன்னர், “விக்கிரமா, நம் சோழநாடு இப்போது மிகவும் இக்கட்டான நிலையில் இருக்கிறது.... இப்போது நாம் எடுக்க போகும் முடிவுதான் நம் சோழ சாம்ராஜ்யத்தையே நிர்ணயிக்க போகிறது....” என்றார்....
“மன்னா!... தாங்கள் ஏன் இவ்வளவு மன வருத்தத்தோடு பேசுகிறீர்கள்?.... தாங்கள் பேசியதை கவனித்தபோது, நம்முடன் சேரன் போருக்கு வர இருப்பதாக தெரிகிறது..... சேரனைவிட படையிலும், போர் வலிமையிலும் நாம் வலிமை பெற்றவர்கள்.... அப்படி இருக்கையில் அச்சம் எதற்கு?” என்றான் விக்கிரமன்.... “சரிதான் விக்கிரமா.... ஆனால், சேரன் மட்டும் வருவதானால் நாம் அச்சப்பட தேவை இல்லை.... இப்போது போருக்கு வர இருப்பது சேரனுடன் பாண்டியனும்.... இந்த கூட்டுப்படையை எதிர்கொள்வது பற்றித்தான் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்.....” என்ற மன்னரின் வார்த்தைகளை கேட்ட விக்கிரமன் மனம் குழம்பினான்..... அதிர்ச்சியில், “என்ன கூறுகிறீர்கள் மன்னா?.... பாண்டியன் எப்படி இதற்கு சம்மதித்திருப்பான்?.... இது வந்தந்தியாக இருக்கும்.... ஒருகாலும் பாண்டியன் நம்முடன் போருக்கு வரமாட்டான்” என்ற வார்த்தைகள் மன்னரை இன்னும் சங்கடத்திற்கு உள்ளாக்கியது..... விக்கிரமனை பரிவுடன் பார்த்த மன்னர், “நான் இதை கூறவில்லை விக்கிரமா.... நம் பிரதம ஒற்றன் செம்பியத்தேவன் கொண்டு வந்த நம்பகமான செய்தி இது.... அப்போது அந்த ஒற்றனும், “ஆம் இளவரசே, சேரன் இளவரசி நந்தினி தேவிக்கும், பாண்டிய இளவரசன் வீரபாண்டியனுக்கும் மணம் முடிக்க இருக்கிறார்கள்.... அதற்கு முன்னர் சோழ தேசத்தை கைப்பற்ற அவர்கள் தீட்டிய திட்டம்தான் தங்களை கடத்த முயன்றது கூட.... விஷயம் சோழ நாட்டிற்கு தெரிந்து நாம் சுதாரிக்கும் முன்னர் அவர்களே பெரும் சைன்யத்தை திரட்டி போருக்கு தயாராகிவிட்டார்கள்....” என்றான்..... செம்பியனை பற்றி விக்கிரமன் கேள்விப்பட்டதுண்டு.... மிகவும் நம்பகமான ஒற்றன்.... எத்தகைய சூழலையும் எளிதாக சமாளித்து தகவல் சேகரிப்பதில் வல்லவன்.... அப்படி ஒருவன் வீரபாண்டியனை பற்றி கூறியது விக்கிரமனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது..... மற்ற அனைவரும் பலவாறாக போர் வழிமுறையை பற்றி விவாதித்துக்கொண்டிருன்தனர்..... ஆனால் விக்கிரமனின் எண்ணமெல்லாம் வீரபாண்டியனை சுற்றியே சுழன்றது..... இறுதியாக விக்கிரமனை அழைத்த மன்னர், “விக்கிரமா! இந்த போரை நீதான் வழிநடத்தி செல்ல வேண்டும்....” என்றார்.... திகைத்த விக்கிரமன், “மன்னா! நான் எப்படி.... ? என்னால் முடியாது” என்று பின்வாங்கினான் .... “விக்கிரமா! சோழ நாட்டின் ஒவ்வொரு ஆண்மகனும் போருக்காக வாள் ஏந்தி முன்னால் நிற்கையில், இளவரசன் அஞ்சி நிற்பது இதுவரை சோழ தேசம் கண்டிராத விந்தை” என்றார் மன்னர்.... “,மன்னிக்கவும் மன்னா..... பாண்டியன் என் தோழன்.... நான் இப்போது பாண்டிய நாட்டோடு போரிட்டால் அது எங்கள் நட்பிற்கு இழுக்காகும்.... எதிர்கால வரலாறு கூட நம் சோழ தேசத்தை இழித்து பேச வாய்ப்புண்டு..... அதனால் நம் தளபதி தலைமையில் படை செல்லட்டும்....என்னால் ஒருகாலும் என் நண்பனை எதிர்த்து களமாட முடியாது” என்றான் விக்கிரமன்.... இதை கவனித்த வாகனூர் கிழார், “இளவரசே,படையை  வழிநடத்தி செல்ல மட்டும்தான் தளபதி.... எப்போதும் படையை  முன்னின்று அழைத்து செல்வது மன்னர்கள்தான்.... நம் மன்னரின் உடல்நிலை படையை வழிநடத்திடும் அளவிற்கு ஒத்துழைக்கவில்லை.... இந்த தருணத்தில் அடுத்த பட்டது அதிபதியான தாங்கள் படையை முன் நின்று வழிநடத்தி போரிட வேண்டும்.... அப்போதுதான் போரிட இருக்கும் வீரர்களுக்கும் ஒரு புத்துணர்வாக இருக்கும்.... உங்களை எப்போது வீரபாண்டியன் எதிர்க்க துணிந்தானோ, அப்போதே உங்கள் நண்பன் அல்ல என்றாகிவிட்டான்.... நம் சோழ தேசத்தின் மீது படைஎடுப்பவன் கடவுளாகவே இருந்தாலும், எதிர்த்து நின்று போரிடுவதுதான் வீரனின் மாண்பு.... இளவரசனாக இருக்கும் தாங்கள் சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஆட்படாமல் சோழ சைன்யத்தை காத்திட தயாராகுங்கள் இளவரசரே....” என்றார்.... விக்கிரமன் எதுவும் பேச முடியாமல் அமைதியாக நின்றான்.... இதுவரை சிறுசிறு போர்களுக்கு சென்றதுண்டு.... இப்படி ஒரு மாபெரும் போரில் பங்கேற்க வேண்டும் என்பது விக்கிரமனின் நெடுநாள் கனவு... ஆனால், அப்படிப்பட்ட தருணம் தன் நண்பனுடன் போரிடவா அமைய வேண்டும்? என்று மனம் நொந்தான்..... இப்போது வீரபாண்டியன் மீது சிறிது சந்தேகம் வந்தாலும், அதை உறுதிப்படுத்தாமல் மணம் நம்ப மறுத்தது.... பலவாறும் சிந்தனைகளில் இருந்த விக்கிரமனை பார்த்த மன்னர், “இத்தகைய திரிசங்கு நிலைமை நம் நாட்டிற்கு ஏற்படும் என்று நான் எண்ணிப்பார்க்க கூட இல்லை.... இது சோழ சாம்ராஜ்யத்துக்கே வாழ்வா சாவா ? போராட்டம்தான்.... இதில் வென்றால் விக்கிரமனுக்கு மும்முடி சோழன் என்கிற பட்டம் கிடைக்குமென நினைத்தேன்.... அவன் மறுத்தும் நான் அவனை போருக்க அனுப்ப நினைக்கவில்லை.... இன்னும் என் உடலில் உயிரும், உடலில் வழுவும் இருக்கிறது.... என் கடைசி மூச்சு உள்ளவரை என்னால் போரிட முடியும்... இந்த போருக்கு நான் தலைமை ஏற்கிறேன்..... தளபதியாரே, வீரர்களை தயார் படுத்துங்கள்.... முரசறிவித்து போர் தொடர்பான அறிவிப்பு வெளியிடுங்கள்...” என்று  மன்னர் கூறியபோது அங்கு நின்ற அத்தனை பேரின் கண்களிலும் கண்ணீர் மல்கியது..... இதை கூறிவிட்டு தன் இருக்கையை விட்டு எழுந்த மன்னர், கால் இடறி கீழே விழ முயன்றபோது விக்கிரமன் மன்னரை தாங்கி இருக்கையில் அமரவைத்தான்.... சிறிது அமைதிக்கு பிறகு விக்கிரமன், “மாமன்னா!... நானே போருக்கு செல்கிறேன்.... நம் மீது படையெடுக்க எண்ணம் வந்தாலே, இந்த போர்தான் மற்றவர்களுக்கு நினைவுக்கு வரும் அளவிற்கு எதிரி படையை ஓட ஓட விரட்டுவோம்.... இந்த போர் நிச்சயம் நம் சோழ வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் அளவிற்கு நமக்கு வெற்றியை தேடித்தரும்..... போர்க்களத்தில் நிற்பது என் வீரபாண்டியனாகவே இருந்தாலும், போர் முடிந்து வெற்றி முரசு கொட்டும்வரை அவனும் என் எதிரிதான்..... வெற்றி வேல்... வீர வேல்.... “ என்று கூறியபோது அவையில் இருந்த அத்தனை பேரும் “வெற்றிவேல்! வீரவேல்!.... சோழ மாமன்னர் விமலாதித்தர் வாழ்க, சோழர் புகழ் ஓங்குக.... இளவரசர் விக்கிரம சோழர் வாழ்க” என்ற கோஷம் இப்போதே வெற்றி முழக்கமாக மன்னரின் செவிகளில் கேட்டு, மன்னரின் மனதை நிம்மதி கடலில் மூழ்கடித்தது....
அடுத்த இரண்டு நாட்களும் விக்கிரமன் வேறு எவ்வித சிந்தனையும் இல்லாமல் தீவிர போர் பயிற்சிகளில் ஈடுபட்டான்..... இளவரசரின் ஈடுபாட்டையும் பயிற்சியையும் பார்த்து அனைத்து வீரர்களும் வீர வேங்கையாக களத்திற்கு ஆயத்தமானார்கள்.... போருக்கு செல்ல வேண்டிய நாள் வந்தது... சோழர் படையுடன், பல்வேறு குறுநில மன்னர்களின் படையும் அணிவகுத்து போர்க்களத்தை நோக்கி விரைந்தனர்.... வீரர்கள் ஒவ்வொருவர் முகத்திலும் ஆக்ரோஷம் காணப்பட்டது, வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற மன உறுதி தெரிந்தது.... யானைப்படை, குதிரைப்படை, வில் எய்தும் வீரர்கள், காலாட்படை, என்று அணிவகுத்து செல்வதை பார்ப்பவர்களின் மனதில் கூட வீரம் வரும் அளவிற்கு இருந்தது.... புலிக்கொடி தாங்கிய வீரன் முன்னே செல்ல, இளவரசன்  விக்கிரமன் , தளபதி மற்ற அமைச்சர்கள் என்று முன் நின்று படையை வழிநடத்தி சென்றார்கள்..... சில தூரம் சென்றபிறகு, எதிரில் சேரர் மற்றும் பாண்டியர் படை வருவதை கவனித்தார்கள்....  எதிரில் வந்த படையை கண்ட அனைவரும் அதிசயித்து போனார்கள்.... சேரர் மற்றும் பாண்டியர் கூட்டுப்படை எல்லைகளே இல்லாமல் வந்துகொண்டே இருந்தது....  கலிங்கத்துப்பரணியில் கூறுவதைப்போல, “பார் சிறுத்தலிர் படை பெருத்ததோ, படை பெருத்தலிர் பார் சிறுத்ததோ” எனும் அளவிற்கு உலகமே சிறியதாக தெரியும் அளவிற்கு சேரர் பாண்டியர் படை பெரிதாக இருந்தது..... மேலும், குதிரைப்படையில் இருந்த அத்தனை குதிரைகளும் அரபு நாட்டு குதிரைகள்..... படை வலிமையில் சோழர் படையைவிட சிறப்பாக இருந்தது அவர்களின் கூட்டுப்படை.... ஆனாலும் மனம் தளராத விக்கிரமன், வீரபாண்டியனுடன் பேச வேண்டும் என்று அழைத்தான்.... இரண்டு படைகளுக்கும் நடுவே வந்த வீரபாண்டியனை பார்த்த விக்கிரமன், “பாண்டியா! உன்னைப்பற்றி நான் எவ்வளவோ விடயங்கள் கேள்விப்பட்டேன்.... அத்தனையும் பொய்யாக இருக்கும் என்று நினைத்து போருக்கு வந்தேன்... ஆனால், நீயே படைக்கு தலைமை தாங்கி நிற்பதை காணும்போது மனம் வலிக்கிறது.... போர் வேண்டாம்.... நாம் எப்போதும் நட்பு நாடுகளாகவே இருப்போம்.... சேரனின் ஆசை வார்த்தைகளுக்கு விலை போய்விடாதே” என்றான்.... இடியென சிரித்த வீரபாண்டியன், “சோழ இளவரசருக்கு எங்கள் படையை பார்த்ததும் அச்சம் வந்துவிட்டது போலும்.... இன்னும் எத்தனை காலத்திற்கு சோழனின் அடிமையைப்போல எங்கள் பாண்டிய நாடு இருக்க நினைக்கிறாய்..... என் தந்தையை நட்பு என்று சொல்லியே இத்தனை காலம் எங்கள் சாம்ராஜ்யத்தை விரிவாக்க முடியாமல் செய்தது உன் தந்தை.... நானும் என் தந்தை போலவே ஏமாளியாகவும், அடிமையாகவும் இருக்க நான் விரும்பவில்லை.... சேரன் மகளை நான் மணம் முடித்து, உன் நாட்டையும் வென்று மும்முடி பாண்டியனாக என் பாண்டிய சாம்ராஜ்யத்தை விரிவாக்க வேண்டும்.... என் முன்னோர்களின் கனவை நினைவாக்க வேண்டும்..... போருக்கு பயந்தவனாக இருந்தால் இப்போதே நீ ஓடிவிடு, உயிராவது பிழைப்பாய்” என்று மீண்டும் சிரித்தான்....
கடும் கோபம் கொண்ட விக்கிரமன், “போதும் நிறுத்தடா பாண்டியா.... என் தந்தை சொன்னதைப்போல பாம்பின் விஷத்தைவிட, உன் நாவின் விஷம் கொடுமையானது என்பதை இப்போதுதான் உணர்ந்தேன்.... நட்பு, காதல் என்று பொய் வார்த்தைகளை கூறி என் நாட்டை அல்ல, என் நாட்டின் ஒரு பிடி மண்ணை கூட நீ கொண்டு செல்ல முடியாது..... ஆனால் இன்று உன் இறப்பு நிச்சயம்.... உன்னைப்போல ஏமாற்ற நினைப்பவர்கள் அத்தனை நபர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும்..... “ என்று கூறியபடியே தன் படையை நோக்கி விரைந்தான்.... இறுதியாக தன் படை வீரர்களுக்கு சில ஆலோசனைகளை வழங்கிய பின் போர் தொடங்கியது..... எதிரில் நிற்பவன் எமனாக இருந்தாலும் அஞ்சாமல் போரிட்டனர் சோழ வீரர்கள்..... சேரனின் படை வலிமை பெரிது என்பதால் போர் மிகவும் உக்கிரமாக இருந்தது.... யானைகள் ஒன்றோடொன்று மோதி, இடி போன்ற முழக்கத்தை கொடுத்தது..... பல கல் தொலைவிலும் குருதியும், மனித உறுப்புகளும் கிடக்க, பல நாழிகைகளுக்கு பிறகும் போர் நிறைவடையாமல் நடந்தது..... ஆனால், சோழ வீரர்கள் எவ்வளவோ போராடியும், வீரர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியதால் சோழர் பலம் வெகுவாக குறைந்தது..... சில குறுநில மன்னர்களின் வீரர்கள் பின்வாங்க தொடங்கினர்.... இந்த நிலையில் எதிரே வரும் ஒருவன் தலையையும் உடலோடு விடாமல் வீழ்த்தி சாய்த்தான் விக்கிரமன்.... அப்போது பாண்டிய வீரன் ஒருவன் விட்ட அம்பு விக்கிரமனின் மார்பை குறி பார்த்து வந்தது.... இதை கவனிக்காமல் வேறொருவனுடன் வாள் வீசிக்கொண்டிருந்தான் விக்கிரமன்... அப்போது விக்கிரமனை காப்பாற்றும் பொருட்டு தன் முன்னங்கால்களை தூக்கிய விக்கிரமனின் குதிரை, அந்த அம்பை  தன் மார்பில் வாங்கியது....  அந்த அம்பு பாய்ந்த மறு நொடியில் சுருண்டு விழுந்தது விக்கிரமனின் குதிரை.... நிலைமையை உணர்ந்த விக்கிரமன், “அகிலா!!!!!” என்று அலறினான்.... அந்த சத்தம் வானை பிழக்கும் அளவிற்கு ஓலமாக ஒலித்தது.... குதிரையை பார்த்து கண்ணீர் விட்ட அந்த நொடியில், பாய்ந்து வந்த ஒரு அம்பு விக்கிரமனின் கால்களில் குத்தி, அவனும் சரிந்தான்.....அதிர்ச்சியோடு  திரும்பிய விக்கிரமன், அந்த அம்பை எய்தவன் வீரபாண்டியன் என்று நினைத்தபோது மேலும் அதிர்ந்தான்.... காலில் குத்திய அம்பை எடுத்து வீசிய விக்கிரமனால் எழ முடியவில்லை.... சோழர் படை மிகவும் சுருங்கி இரட்டை இலக்கத்தை அடைந்தது....  விக்கிரமனின் நிலையை கண்ட சில வீரர்கள் பதறிப்போய் அவன் அருகில் வரவே, அவர்களையும் தூக்கி எரிந்தது பாண்டியனின் அம்புகள்.... விக்கிரமன் எல்லா நம்பிக்கைகளையும் இழந்தான்... தான் தந்தைக்கு செய்துகொடுத்த சத்தியத்தினை ஒரு மகனாக நிறைவேற்ற முடியாத துர்பாக்கிய நிலைமைக்கு ஆளானதை எண்ணி வருந்தினான்.... அப்போது தன் குதிரையில் அவன் முன் வந்து நின்ற வீரபாண்டியன், “என்ன சோழ இளவரசரே, எழ கூட முடியாத முடவனாக ஆகிவிட்டீர் போல.... உங்கள் சோழ சைன்யம் இப்போது மண்ணாகிவிட்டது போலும்.... இப்போதாவது என்னிடம் மன்னிப்பு கேட்டால் உனக்கு உயிராவது மிஞ்சும்” என்று கூறினான்.... “மன்னிப்பு கேட்டு உயிர்வாழ்வதைவிட, இந்த களத்தில் உயிர்விடுவதே மேல்.... உன் வாளுக்கு இரையாகிறேன், என்னை கொன்றுவிட்டே போ” என்றான் விக்கிரமன்..... “உன்னை நான் கொல்ல விரும்பவில்லை.... உன்னை உயிரோடு கொத்தித்தின்ன வானில் பறக்கும் கழுகுகள் ஆர்வமாக இருக்கின்றன.... அவைகளின் கையில் உன் உயிரை கொடுக்கிறேன்” என்று சிரித்தான் வீரபாண்டியன்.... “இதுவரை நல்ல நட்பென்றால் கோப்பெருஞ்சோழனும் , பிசிராந்தையாரும் தான் நினைவுக்கு வருவார்கள்.... அதேபோல கூடா நட்பென்றால் விக்கிரம சோழனும் வீரபாண்டியனும் நினைவுக்கு வரும் அளவிற்கு செய்துவிட்டாய்..... என் தந்தை, அமைச்சர்கள், நண்பர்கள், என்று யார் கூறியும் ஏற்காமல் உன் நட்பையும் காதலையும் நம்பிய எனக்கு நீ கொடுத்த பரிசு இந்த உலகில் எவருக்கும் கிடைத்திராத பரிசு..... நிச்சயமாக இதற்கு காளிதேவியும், காலபைரவனும்தான் விடை கூறவேண்டும்” என்று கூறியபோது விக்கிரமனின் கண்களில் இருந்து ஒரு துளி நீர் மண்ணில் விழுந்தது.... அந்த நொடியில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் புயல்போல தங்களை நெருங்கி வருவதை கவனித்தார்கள் இருவரும்..... அருகில் வர வர தான் அது புயல் இல்லை.... ஆயிரக்கணக்கான கபாலிகர்கள் வெறியோடு ஓடிவருவதை கவனித்தார்கள்.... பொதுவாக கபாலிகர்கள் போரில் ஈடுபட மாட்டார்கள்.... ஆனால், விக்கிரமனுக்காக அவர்கள் ஓடிவருவதை உணர்ந்த வீரபாண்டியன் அஞ்சி தன் குதிரையில் தப்பிக்க முயன்றான்.... அப்போது அருகில் கிடந்த ஒரு குத்தீட்டியை எடுத்து குறி எய்து பாண்டியன் மீது தொடுத்தான்.... அது அவன் முதுகில் குத்தி, நிலை குழைந்து விழுந்தான் பாண்டியன்..... போரில் புறமுதுகிட்டு மடிந்தான் வீரபாண்டியன்.... கபாலிகர்கள் வந்ததும் பின்வாங்கி சென்ற சோழ வீரர்கள் பலரும் களத்திற்கு வந்து போரிட தொடங்கினார்கள்..... சில நாழிகளில் சேரர் பாண்டியர் கூட்டுப்படை கபாலிகர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஓட தொடங்கினர்..... அந்த சமயம் விக்கிரமன் வலி பொறுக்காமல் மூர்ச்சையானான்...... மூர்ச்சை விலகி, கண்கள் விழித்து பார்த்தபோது மஞ்சத்தில் படுத்திருந்தான்..... அருகில் மன்னர் உட்பட முக்கிய சபையினர் அனைவரும் இருந்தனர்..... விழித்த விக்கிரமனை பார்த்த மன்னர், “விக்கிரமா! சாதித்துவிட்டாய் செல்வமே..... சோழர் புகழை உலகறிய வைத்துவிட்டாய்..... நம் புலிக்கொடியை பார் புகழ செய்துவிட்டாய்..... “ என்றார்.... கண்கள் கலங்கிய விக்கிரமன், “இவ்வளவு காலம் தங்களின் வார்த்தைகளின் உண்மை தெரியாமல் தங்களை மிகவும் வருத்திவிட்டேன்..... என்னை மன்னிக்கவும் தந்தையே.... நான் பிழைக்க காரணமாக கபாலிகர்களை உரிய நேரத்தில் தகவல் கொடுத்து அனுப்பி வைத்ததால்தான் நான் இப்போது உயிரோடவே இருக்கிறேன்.... ஒவ்வொரு முறை நான் தவறு செய்தபோதும், அந்த தவறுக்கான விளைவை நான் அனுபவிக்கும் முன்னரே என்னை காப்பாற்றிவிட்டீர்கள்....” என்றான்.....

“போரில் நம் சைன்யம் தோல்வியை நோக்கி செல்வதாக தகவல் வந்தது..... வேறு வழியின்றி கபாலிகர்களுக்கு தகவல் தெரிவித்தேன்.... போரில் ஈடுபடுவதில்லை என்ற தங்கள் கருத்தையே நமக்காக மாற்றிக்கொண்டு களத்திற்கு வந்தார்கள் அந்த வீரர்கள்.... இன்னொன்றை நான் உனக்கு தெளிவுபடுத்த வேண்டும் விக்கிரமா....நான் எப்போதுமே உன் காதலுக்கு எதிரானவன் இல்லை.... நீ தேர்வு செய்தவனிற்குத்தான் எதிராக இருந்தேன்..... இனி நீ யாரை மணம் முடிக்க கோரினாலும், நானே செய்துவைக்கிறேன்..... இன்று மாலை உனக்கு பட்டாபிஷேகம்..... மும்முடி சோழனாக நீ பட்டம் ஏற்க வேண்டும்..... இனி உன்னை நம்பி எவ்வித தயக்கமும் இன்றி நாட்டை ஒப்படைக்கலாம்..... நான் ஆன்மிக பணிகளில் ஈடுபட பல்வேறு புனித தளங்களுக்கு செல்ல உள்ளேன்..... மேலும், இன்று மாலை ஒரு புதிய அறிவிப்பும் வெளியிடப்போகிறேன்..... நம் சாம்ராஜ்யம் விரிந்துள்ள இடங்களில் எல்லாம் இனி ஒரு பால் திருமணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதுதான் அந்த அறிவிப்பு..... “ என்று கூறிய மன்னர் விக்கிரமனின் நெற்றியில் உச்சி முகர்ந்தார்..... மன்னரை கட்டிப்பிடித்த விக்கிரமன் வார்த்தைகள் வெளிவராமல் அழுதான்..... அந்த நேரத்தில் அவன் உள்ளத்தை வெளிக்காட்ட வார்த்தைகள் தேவைப்படவில்லை..... காதலுக்காக உயிரையே கொடுப்பது தவறில்லை.... ஆனால், உயிரையே கொடுக்கும் அளவிற்கு உங்கள் காதலும் காதலரும் உயர்ந்தவர்களா? என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.... உலகத்திலேயே அதிகம் ஏமாறுவதும், அதிகம் ஏமாற்றப்படுவதும் காதலில்தான் அதிகம்.... அதை உணர்ந்து புரிந்து நடந்துகொண்டால் வாழ்க்கை சிறப்பாக அமையும்..... நல்ல காதலரை தேர்ந்தெடுங்கள், உங்களுக்காகவே காத்திருக்கும் அந்த நபருக்காகவே உங்கள் வாழ்வை அற்பனியுங்கள்......

(இந்த வரலாற்று கதை முழுக்க முழுக்க கற்பனைதான்...... இதில் கூறப்பட்டுள்ள சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே...... யார் மனதையும் புண்படுத்துவது கதையின் நோக்கமல்ல....)